search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறு தேர்விலும் பழைய வினாத்தாள்
    X

    மறு தேர்விலும் பழைய வினாத்தாள்

    • திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொடரும் குளறுபடி
    • கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடியை அடுத்த சேர்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டின் கீழ் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 74 கலை, அறிவியல் உறுப்பு கல்லூரிகள் உள்ளன.

    நவம்பர் முதல் வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வரும் பல்கலைக்கழகப் பருவத் தேர்வின் போது முதுநிலை கணிதவியல் துறைக்கான 3-ம் ஆண்டு பருவத் தேர்வில் சிக்கலான பகுப்பாய்வு, கட்டமைப்பியல், வேறு பட்ட வடிவவியல் ஆகிய பாடங்களுக்கு 2021-ம் ஆண்டு வெளியான வினாத்தாள்கள் அப்படியே 2023 என ஆண்டை மட்டும் மாற்றி மறுபதிப்பு செய்து அளிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் குறித்து பல்கலைக் கழக நிர்வாகம் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு வினாத்தாள் குளறுபடி சம்பவம் வெளியாகி உள்ளது.

    அதன்படி, தற்போது நடை பெற்று வரும் பருவத் தேர்வில் முதுநிலை கணிதவியல் 2-ம் ஆண்டில் ரியல் அனலைசிஸ் பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான மறு தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பருவத் தேர்வின்போது அளிக்கப்பட்ட வினாத்தாளை அப்படியே மாதத்தை மட்டும் மாற்றி அச்சிட்டு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் பல்கலைக்கழகம், அதன் கட்டுப்பாட்டிலுள்ள உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தொடர்ந்து வினாத்தாள் குளறுபடி விவகாரம் வெளியாகி வருவதை யடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வு நடைமுறைகள், அவற்றில் காணப்படும் நிர்வாக முறைகேடுகள் குறித்து அரசு விரிவான விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    Next Story
    ×