search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt exam"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வை எவ்வித குழப்பம் இல்லாமல் நடத்த தேர்வுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளது.

    குறிப்பாக வினாத்தாள் கசியாமல் பாதுகாப்பாக வைக்கவும் அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது. அதில் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு அறையிலும் 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் கேள்விகளின் வரிசை மாற்றப்பட்டு இருக்கும். ஒரு தேர்வு மையத்தில் உள்ள மாணவர்களுக்கு ஏ, பி, என 2 வகையான வினாத்தாள் வழங்கப்படும்.

    இந்த 2 வகையான வினாத்தாள் வரிசை எண் மாற்றப்பட்டு இருக்கும். இதனால் மாணவர்கள் அருகருகே இருந்தாலும் விடைத்தாளை பார்த்து எழுத முடியாது.

    இது குறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்ட போது இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.

    • விருதுநகரில் மத்திய அரசு தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
    • தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

    விருதுநகர்

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் எஸ்.எஸ்.சி., சி.எச்.எஸ்.எல். தேர்விற்கு அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 4500 பணி காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்து மேலும் அறிந்து கொள்ள www.ssc.nic.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

    விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி ஆகும். இந்த தேர்வுக்குரிய இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் கடந்த 6-ந் தேதி முதல் நேரடியாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

    போட்டித்தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை நேரில் அணுகலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விவரங்களுக்கு 04562 - 293613 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்திட ஏதுவாகவும் திருச்சி மாவட்டம், செம்புளிச்சாம்பட்டி கிராமத்தில் இலவச பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.
    • இந்த மையத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறலாம்

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :

    திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்பற்ற பழங்குடியினத்தவர்கள் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் சேர்வதை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் வங்கி போன்ற போட்டி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்திட ஏதுவாகவும் திருச்சி மாவட்டம், செம்புளிச்சாம்பட்டி கிராமத்தில் இலவச பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளது.

    இப்பயிற்சி மையத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 50 பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெறலாம். 50 நபர்களுக்கு மேல் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தகுதியின் அடிப்படையிலும், முன்னுரிமையின் அடிப்படையிலும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து 50 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    இப்பயிற்சிக்கான கையேடுகள் அனைத்தும் பயிற்சி மையத்தில் உள்ளன. இப்புத்தகங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணைய தகுதித் தேர்விற்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு பயிற்சி மையத்திலேயே வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ள பழங்குடியின இனத்தவர்கள் திருச்சி மாவட்ட, துறையூர் பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்திச் செய்து அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    எனவே, திருச்சி மாவட்டத்தில் வசிக்கும், பழங்குடியின இனத்தை சார்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×