search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து கடை"

    • குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ரவுடி சிலம்பரசன் தனது கூட்டாளிகள் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது.
    • தப்பி ஓட முயன்ற போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் (வயது45). இவர் அதே பகுதியில் 2 மெடிக்கல் கடைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வினோத்தை மர்ம கும்பல் சரமாரியா வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடியான சிலம்பு என்ற சிலம்பரசன் என்பவர் மாமூல் கேட்டு மிரட்டிய தகராறில் போலீசில் புகார் செய்ததால் வினோத் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ரவுடி சிலம்பரசன் தனது கூட்டாளிகள் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது.

    இந்நிலையில் மண்ணிவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான சிலம்பரசனின் உறவினர் சூர்யா, திருவேற்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சரத் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அப்போது தப்பி ஓட முயன்ற போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கைதான 3 பேருக்கும் கை, காலில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பும் ரவுடி சிலம்பரசன் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற கோரி ரவுடி கும்பல் வினோத்தை மிரட்டி உள்ளது. இதன் தொடர்ச்சியாக வினோத் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    வினோத்குமாரை, ரவுடி சிலம்பரசன் மிரட்டியதாக ஆரம்பத்தில் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்த போதே போலீசார் ரவுடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து இருந்தால் வினோத் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்று வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் சிறார்களுக்கான அதிகளவு போதை மாத்திரை மற்றும் போதை டானிக் பயன்படுத்துவதால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மதுரை மாவட்ட குழந்தைகள் நல வாரியம் சார்பில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சிறார்கள் போதைக்கு அடிமையாகுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை மாத்திரை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது.

    இந்நிலையில், மதுரையில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் சிசிடிவி பொருத்துவது கட்டாயம் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    சிசிடிவி பொருத்தாவிட்டால் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வனத்துறையினர் நடவடிக்கை
    • மருந்து சீட்டு மூலம் கண்டுபிடித்தனர்

    வேலூர்:

    பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக- ஆந்திரா எல்லையான பத்தலப்பல்லி வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காலாவ தியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து சமூக வலைத ளங்களில் வைரலானது.

    தகவலறிந்த வேலுார் மாவட்ட வன அதிகாரி கலாநிதி உனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ் குமார் தலைமையில் வனவர் இளையராஜா, வனகாப்பாளர்கள் அரவிந்தசாமி, சிவன் ஆகியோர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட வனப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

    மருத்துவ கழிவுகளில் இருந்த மருந்து சீட்டு கண்டெடுக்கப்பட்டு, அதில் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வனத்துறையினர், நைசாக பேசி அந்த நபரை பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்துக்கு வரவழைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள கோரமண்டல் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் ராஜேந்திர பிரசாத் (வயது 48) என்றும் 5 நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து பத்த லப்பல்லி வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ராஜேந்திர பிரசாத்தை வனத்து றையினர் கைது செய்து செய்தனர்.

    • நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டது.
    • மருத்துவம் பயிலாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில், சுகாதார நலப் பணிகள் இயக்குனர் மருத்துவர் பிரேமலதா போலி மருத்துவர்களையும், போலி மருத்துவமனைகளையும் ஒழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வீ.கே.புதூர் அருகே கழுநீர்குளம் பகுதியில் உள்ள ஒரு மெடிக்கலில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரேமலதா அங்கு திடீர் ஆய்வு நடத்தினார்.

    அதில் நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து மருந்து கடை உரிமம் மட்டும் பெற்று கொண்டு கிளினிக் நடத்தியதாகவும், மருத்துவ ஸ்தபன சட்டத்தின்படி பதிவு சான்று பெறாமல் மருத்துவம் பயிலாத நபர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி வந்ததாகவும் அதனை தடுக்கும் வகையில், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர், மருத்துவர் அருள் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் அருண் மற்றும் ஆனந்தராஜ், தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் மீனா, ஆர்.ஐ. மாலினி, கிராம நிர்வாக அலுவலர் சேர்மப்பாண்டி மற்றும் போலீசார் முன்னிலையில் அந்த மருத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கூறுகையில், மருத்துவம் பயிலாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனை என சுகாதார கட்டமைப்பு தமிழகத்தில், குறிப்பாக தென்காசி மாவ ட்டத்தில் செயல்பட்டு வரு கிறது. பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திட வேண்டும் என்றார்.

    • மாவட்ட சுகாதாரத்துறை குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
    • 18-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அருள்புரம் உப்பிலிபாளையத்தில் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இளையராஜா என்பவர் மெடிக்கல் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் மருந்துக்கடையில் தானே நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும், குளுக்கோஸ் போடுவதாகவும், காயங்களுக்கு மருந்து வைத்து கட்டுப்போடுவதாகவும் சுகாதாரத்துறைக்கு அதிகமான புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி உத்தரவின் பேரில் தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண்பாபு கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் அடங்–கிய குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இளையராஜா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் மெடிக்–கல்ஸ் கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்காக நாளை 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    • உணவு சாப்பிட மருந்து கடை உரிமையாளர் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் பிரத்திவிகா நகர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் மதன் (வயது 29). இவர் நல்லிக்கவுண்டன் நகரில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வெளியூர் சென்ற நிலையில் நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட மதன் வீட்டிற்கு வந்துள்ளார். சாப்பிட்ட பின்னர் வீட்டை பூட்டிவிட்டு மருந்து கடைக்கு சென்று உள்ளார்.

    பின்னர் இரவு வழக்கம்போல் மருந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்த மதன் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மதன் ஊத்துக்குளி போலீசில் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.  

    • தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு பகுதி குமாரர் தெருவை சேர்ந்த சாகுல்அமீது அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.
    • சாகுல்அமீது கடைக்கு வந்து பார்த்த போது ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெரு பகுதியில் குமாரர் தெருவை சேர்ந்த சாகுல்அமீது(வயது 45).இவர் அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார்.

    வழக்கம்போல நேற்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததும் சாகுல் அமீதுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து அவர் கடைக்கு வந்து பார்த்த போது ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.
    • கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 5லட்சம் பேர் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேர் என 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    பெரும்பாலான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களிலும் மற்ற தொழிலாளர்கள் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்திற்குட்பட்ட பல்லடம், அவிநாசி உள்பட பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூர் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு சென்று வரும் தமிழகம் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படவே அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தது தெரியவந்தது. தவறான உறவால் கர்ப்பமான இளம்பெண்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் இருக்க மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அதனை மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1000, ரூ.1500 என கூடுதல் விலைக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் திருப்பூர் வீரபாண்டி, பல்லடம் சாலை உள்பட மாநகர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சில மருந்துக்கடைகளில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் எச்சரிக்கையும் விடுத்தனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி கூறுகையில், டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. மேலும் பெண்களும் அதனை பயன்படுத்தக்கூடாது. அதனை பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படும். எனவே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்தால் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    • திருச்சி அருகே நள்ளிரவில் பேக்கரி மற்றும் மருந்து கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்
    • கார்த்திகேயன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்


    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே காட்டூர் பகுதியில் பேக்கரி மற்றும் அதனை ஒட்டி தனியார் மருந்தகம் செயல்பட்டு வருகிறது.

    இதில் திருவெறும்பூர் கன்னிமார் கோவில் தெரு வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 39) என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    வழக்கம்போல் நேற்று இரவு மேற்கண்ட பேக்கரி மற்றும் மருந்தகங்களை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார்.

    மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது பேக்கரி மற்றும் மருந்தகங்களின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பேக்கரி கடையின் கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.58 ஆயிரம் மற்றும் மருந்தகத்தில் வைத்திருந்த ரூ.6,000, ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து கார்த்திகேயன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    பிரபல பேக்கரி மற்றும் மருந்தகத்தின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அனுமதியின்றி செயல்பட்ட மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய போலி டாக்டர் அசாருதீனை தேடி வருகிறார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா கடலூர் ஊராட்சி மோர்ப்பண்ணை கிராமத்தில் அசாருதீன் என்பவர் பேபி என்ற பெயரில் மருந்து கடை நடத்தி வந்தார்.

    அரசு அனுமதி பெறாமல் இந்த கடையை நடத்தி வந்ததாக தெரிகிறது. மேலும் அசாருதீன் நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்கும் வீடியோ ராமநாதபுரம் கலெக்டருக்கு கிடைத்தது.இதைத்தொடர்ந்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சகாய ஸ்டீபன்ராஜ் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் சேகர், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், திருவாடானை முதன்மை மருத்துவ அலுவலர் எட்வின், உப்பூர் கிராம நிர்வாக அலுவலர் மலர்விழி ஆகியோர் சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய சென்றனர்.

    இதனை முன்கூட்டியே அறிந்த போலி டாக்டர் அசாருதீன் கடையை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து மருத்துவ அதிகாரிகள் திருப்பாலைக்குடி போலீஸ் உதவியுடன் கடையின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தபோது அரசு அனுமதி பெறாமல் மருந்துகளை விற்பனை செய்து வந்ததும், பொதுமக்களுக்கு ஊசி செலுத்தி சிகிச்சை அளித்ததும் கண்டறியப்பட்டது.

    பின்னர் அந்த மருந்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்,கடையின் உள்புறத்தை வீடியோ எடுத்து அங்கிருந்த ரூ.10 ஆயிரத்து 210-ஐ கைப்பற்றினர். மேலும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வீடியோ காட்சியை திருப்பாலைக்குடி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய போலி டாக்டர் அசாருதீனை தேடி வருகிறார்.

    • வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு பரிந்துரைக்கப்படும் டானிக் அதிக அளவில் விற்பனையாவதாக, சுகாதாரத்துறை மருந்து கண்காணிப்பு பிரிவுக்கு புகார்.
    • ஒரே நேரத்தில் 5 மி.லி.,க்கு அதிகமாக உட்கொண்டால், போதைதருவது போல் இருக்கும்.

    திருப்பூர் :

    இருமலுக்கு பரிந்துரைக்கப்படும் 'டானிக்'கை,சிலர் போதைப்பொருள்போன்று பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, திருப்பூரில் உள்ள மருந்துக்கடைகளில் அதிகாரிகள் திடீர்ஆய்வு மேற்கொண்டனர்.வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலிக்கு பரிந்துரைக்கப்படும் டானிக் திருப்பூரில் அதிக அளவில் விற்பனையாவதாக, சுகாதாரத்துறை மருந்து கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து,அவிநாசி ரோடு, பி.என்.,ரோடு மற்றும் பல்லடம்ரோடு தென்னம்பாளையம், காட்டுவளவு ஆகியபகுதிகளிலுள்ள மருந்துகடைகளில், தெற்குபோலீஸ் உதவி கமிஷனர்கார்த்திகேயன், மாவட்டமருந்துகள் கள ஆய்வாளர்கள் ராமசாமி, மகாலட்சுமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்துபோலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன் கூறுகையில், "இருமலுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் குறிப்பிட்ட மருந்து, கடைகளில் எவ்வளவு இருப்பு வைத்துள்ளனர். பில்களை பராமரிக்கின்றனரா என ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.யாராவது மீண்டும் மீண்டும் அதே மருந்தை கேட்டுவந்தாலோ, கூடுதலாகவாங்க முனைந்தாலோ தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    மருந்துகள் கள குழுவினர் கூறுகையில்,இந்தமருந்து, டாக்டர்கள் பரிந்துரைக்கக்கூடியது தான்.ஆனால் ஒரே நேரத்தில் 5 மி.லி.,க்கு அதிகமாகஉட்கொண்டால், போதைதருவது போல் இருக்கும். இந்த போதைக்காக யாராவது கூடுதலாக மருந்துகள் வாங்கி சென்று உள்ளனரா எனதொடர்ந்து ஆய்வு நடத்தப்படும்என்றனர்.

    திண்டுக்கல்லில் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனி, கோவிந்தாபுரம், காட்டாஸ்பத்தரி ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் போதை தரும் அல்ப்ராக்ஸ் எனும் மாத்திரைகள் சாதாரணமாக விற்கப்படுகிறது. இந்த மாத்திரையின் வீரிய தன்மைக்கு ஏற்ப அதன் செயல்பாடு மாறுபடுகிறது. 10 மாத்திரைகள் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இதனால் இந்த மாத்திரைகளை கூலித் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமலேயே இந்த மாத்திரைகளை கடைக்காரர்கள் விற்பனை செய்வதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து மாத்திரையை பயன்படுத்தும் தொழிலாளர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில் விலை ரூ.120-க்கு விற்கிறது. அதற்கும் கூடுதலாக தண்ணீர் பாக்கெட், இதர செலவுகள் ஏற்படுகிறது.

    ஆனால் மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த மாத்திரைகள் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. கூடுதல் செலவும் தேவையில்லை. முக்கியமாக மது அருந்துவதால் ஏற்படும் கெட்ட வாடை இருப்பதில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை போதை இருப்பதால் ஏதோ ஒரு வகையில் உடல் வலியை போக்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    மாத்திரைகளின் வீரியம் அறியாமல் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல இது போன்ற போதை மாத்திரைகளை வாங்கி ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதனை தடுக்க அரசு மருத்துவ குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    ×