என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug store"

    • வனத்துறையினர் நடவடிக்கை
    • மருந்து சீட்டு மூலம் கண்டுபிடித்தனர்

    வேலூர்:

    பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக- ஆந்திரா எல்லையான பத்தலப்பல்லி வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு காலாவ தியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து சமூக வலைத ளங்களில் வைரலானது.

    தகவலறிந்த வேலுார் மாவட்ட வன அதிகாரி கலாநிதி உனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

    அதன்பேரில் பேரணாம்பட்டு வனச்சரகர் சதீஷ் குமார் தலைமையில் வனவர் இளையராஜா, வனகாப்பாளர்கள் அரவிந்தசாமி, சிவன் ஆகியோர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட வனப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.

    மருத்துவ கழிவுகளில் இருந்த மருந்து சீட்டு கண்டெடுக்கப்பட்டு, அதில் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு வனத்துறையினர், நைசாக பேசி அந்த நபரை பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்துக்கு வரவழைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள கோரமண்டல் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் ராஜேந்திர பிரசாத் (வயது 48) என்றும் 5 நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து பத்த லப்பல்லி வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து ராஜேந்திர பிரசாத்தை வனத்து றையினர் கைது செய்து செய்தனர்.

    • குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ரவுடி சிலம்பரசன் தனது கூட்டாளிகள் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது.
    • தப்பி ஓட முயன்ற போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது.

    வண்டலூர்:

    வண்டலூரை அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் வினோத் (வயது45). இவர் அதே பகுதியில் 2 மெடிக்கல் கடைகளை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வினோத்தை மர்ம கும்பல் சரமாரியா வெட்டி கொலை செய்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் நடத்திய விசாரணையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடியான சிலம்பு என்ற சிலம்பரசன் என்பவர் மாமூல் கேட்டு மிரட்டிய தகராறில் போலீசில் புகார் செய்ததால் வினோத் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ரவுடி சிலம்பரசன் தனது கூட்டாளிகள் மூலம் கொலை திட்டத்தை அரங்கேற்றி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது.

    இந்நிலையில் மண்ணிவாக்கம் பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகளான சிலம்பரசனின் உறவினர் சூர்யா, திருவேற்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சரத் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    அப்போது தப்பி ஓட முயன்ற போது அவர்கள் வழுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து கைதான 3 பேருக்கும் கை, காலில் மாவு கட்டு போடப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பும் ரவுடி சிலம்பரசன் மீது கொடுத்த புகாரை திரும்ப பெற கோரி ரவுடி கும்பல் வினோத்தை மிரட்டி உள்ளது. இதன் தொடர்ச்சியாக வினோத் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

    வினோத்குமாரை, ரவுடி சிலம்பரசன் மிரட்டியதாக ஆரம்பத்தில் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்த போதே போலீசார் ரவுடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்து இருந்தால் வினோத் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்று வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    ×