search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் மருந்து கடைகளில் போதை மாத்திரை சப்ளை
    X

    திண்டுக்கல்லில் மருந்து கடைகளில் போதை மாத்திரை சப்ளை

    திண்டுக்கல்லில் மருந்து கடைகளில் போதை மாத்திரைகள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ஆர்.எம்.காலனி, கோவிந்தாபுரம், காட்டாஸ்பத்தரி ஆகிய பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் போதை தரும் அல்ப்ராக்ஸ் எனும் மாத்திரைகள் சாதாரணமாக விற்கப்படுகிறது. இந்த மாத்திரையின் வீரிய தன்மைக்கு ஏற்ப அதன் செயல்பாடு மாறுபடுகிறது. 10 மாத்திரைகள் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. இதனால் இந்த மாத்திரைகளை கூலித் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மாணவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். டாக்டர்கள் பரிந்துரை இல்லாமலேயே இந்த மாத்திரைகளை கடைக்காரர்கள் விற்பனை செய்வதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து மாத்திரையை பயன்படுத்தும் தொழிலாளர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடையில் மது பாட்டில் விலை ரூ.120-க்கு விற்கிறது. அதற்கும் கூடுதலாக தண்ணீர் பாக்கெட், இதர செலவுகள் ஏற்படுகிறது.

    ஆனால் மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த மாத்திரைகள் ரூ.50-க்கு விற்கப்படுகிறது. கூடுதல் செலவும் தேவையில்லை. முக்கியமாக மது அருந்துவதால் ஏற்படும் கெட்ட வாடை இருப்பதில்லை. 6 முதல் 8 மணி நேரம் வரை போதை இருப்பதால் ஏதோ ஒரு வகையில் உடல் வலியை போக்கிக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    மாத்திரைகளின் வீரியம் அறியாமல் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் கவலைப்படாமல இது போன்ற போதை மாத்திரைகளை வாங்கி ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இதனை தடுக்க அரசு மருத்துவ குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    Next Story
    ×