search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்துக்குளி அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை
    X

    கோப்புபடம்.

    ஊத்துக்குளி அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை

    • உணவு சாப்பிட மருந்து கடை உரிமையாளர் வீட்டிற்கு வந்துள்ளார்.
    • 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் பிரத்திவிகா நகர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரது மகன் மதன் (வயது 29). இவர் நல்லிக்கவுண்டன் நகரில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வெளியூர் சென்ற நிலையில் நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட மதன் வீட்டிற்கு வந்துள்ளார். சாப்பிட்ட பின்னர் வீட்டை பூட்டிவிட்டு மருந்து கடைக்கு சென்று உள்ளார்.

    பின்னர் இரவு வழக்கம்போல் மருந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை பார்த்த மதன் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து மதன் ஊத்துக்குளி போலீசில் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×