search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகப்பேறு"

    • உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.
    • மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    சென்னை:

    இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள தொழில் சார்ந்த ஏற்றுமதிகள், பொறியியல் சம்பந்தமான ஏற்றுமதிகள் மகப்பேறுக்கு பின் கவனிப்பு, கணினி பொருட்கள் ஏற்றுமதி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய 7 பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் மத்திய அரசின் நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது.

    அதில் மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்று உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022-23-ம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது.

    இறக்குமதி - ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023-ம் ஆண்டிற்கான விவரங்களை – ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம் தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் குஜராத் 12.72 புள்ளிகளையும், பிகார் 29.75 புள்ளிகளையும், உத்தரபிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.

    ஆண்டு வாரி சுகாதார ஆய்வு மக்கள்தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின்படி நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக் கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம்.

    அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டு உள்ளது.

    குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

    மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

    இதில் தமிழ்நாடு மாநிலம் தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.

    வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023-ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது.

    மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

    இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புக்களையும் உள்ளடக்கி வளர்ச்சியை எய்தியுள்ளதாக ஒன்றிய அரசின் ஆவணங்களே இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குவதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

    அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே மகப்பேறு சுற்றுலாவாக வெளிநாட்டில் இருந்து பல கர்ப்பிணிகள் இங்கு வருகின்றனர் என அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். #Birthright #UScitizenship #birthtourism #Trump
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் உள்ள கொலம்பியா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப், அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காகவே உலகம் முழுவதிலும் இருந்து கரிப்பிணிப் பெண்கள் அமெரிக்காவுக்கு வருகின்றனர்.

    இங்கு வந்து குழந்தை பெற்றுகொண்டால் அந்த குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதுடன் அவர்களுக்கு தேவையான அனைத்தும் உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இங்கு ‘பிரசவ சுற்றுலா’ வரும் வெளிநாட்டினரின் என்ணிக்கை பெருகி விட்டது என டிரம்ப் குற்றம் சாட்டினார்.

    சீனாவில் இருந்தும் இன்னும் சில ஆசிய நாடுகளில் இருந்தும் இதுபோல் அதிகமான பெண்கள் வருகின்றனர். இது இப்போது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. அவர்கள் நமது நாட்டின் எதிரியாக இருக்கலாம். நம்மீது போர் தொடர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருக்கலாம். ஒருவர் நம்மை வெறுப்பவராகவும் தனது நாட்டின் சர்வாதிகாரியாகவும் இருக்கலாம். 

    ஆனால், அவரது மனைவி அமெரிக்காவில் குழந்தை பெற்றுவிட்டால் அவரது மகனுக்கோ, மகளுக்கோ அமெரிக்க குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

    நமது நாட்டின் மண்ணில் கால்பதித்த சில வினாடிகளில் அந்த பெண்களுக்கு குழந்தை பிறந்து விட்டாலும் அன்னியர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் விரும்புகிறார்கள்.

    இதுபோன்ற கேலிக்கூத்தான, பைத்தியக்காரத்தனமான கொள்கையால் சட்டவிரோதமாக வருபவர்களுக்கு பிறக்கும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் நாம் குடியுரிமை அளிக்க வேண்டியுள்ளது. இந்த முறைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #Birthright #UScitizenship #birthtourism #Trump
    ×