search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போர் விமானங்கள்"

    ஜப்பான் கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரஷியாவின் இரு Su-34 ரக போர் விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலியான ஒரு விமானியின் உடல் மீட்கப்பட்டது. #Su34 #Su34crash
    மாஸ்கோ:

    ரஷியா விமானப்படைக்கு சொந்தமான இரு Su-34 ரக போர் விமானங்கள் ஜப்பான் பெருங்கடல் பகுதியின் மீது நேற்று (பயிற்சி) கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தன.

    கடலோரத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் வானத்தில் வட்டமிட்டு பறந்தபோது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் ஒன்றோடொன்று மோதி கடலில் விழுந்தது.

    இந்த விபத்தில் இரு விமானிகளும் அவசர வாசல் வழியாக குதித்து உயிர் பிழைத்ததாக நேற்று தகவல் வெளியானது. 

    3 விமானங்கள், ஹெலிகாப்டர் மற்றும் 5 கப்பல்களில் சென்று விபத்து நிகழ்ந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்ட மீட்புப்படையினர் ஒரு விமானியின் உடலை கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு விமானியை தேடும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Su34 #Su34crash 
    அமெரிக்காவில் இருந்து எப்.16 ரக போர் விமானங்களை வாங்குமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககன் தெரிவித்துள்ளார். #USAmbassador #India #US
    மும்பை:

    ரஷியாவிடம் இருந்து எஸ்.400 ரக ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கு இந்தியா–ரஷியா இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நாட்டிடம் இருந்து எப்.16 ரக போர் விமானங்களையும் வாங்குவதற்கு இந்தியாவை வற்புறுத்துவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககனிடம், இது குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், ‘அமெரிக்காவிடம் இருந்து எப்.16 ரக போர் விமானங்களோ அல்லது வேறு எந்த தளவாடங்களோ வாங்க வேண்டும் என இந்தியாவை நாங்கள் வற்புறுத்தப்போவதாக கூறப்படும் தகவல்களில் உண்மை இல்லை.



    இந்தியாவோ அல்லது பிற நாடுகளோ வாங்கும் வகையில் மிகப்பெரிய திறமையை அமெரிக்க ராணுவ அமைப்பு பெற்றிருப்பதாக நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.

    உண்மை என்றவென்றால், இந்தியா 15 பில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) அதிக மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்கி இருக்கிறது என்று கூறிய ககன், இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவ உறவுகள் விரிவடைந்திருப்பது குறித்து பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.

    ஆயுத கொள்முதல் தொடர்பாக இந்தியா எடுக்கும் சொந்த முடிவுகளை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் அவர் கூறினார். #USAmbassador #India #US
    சிரியா அதிபரின் ஆட்சிக்கு எதிராக போராடிவரும் சுமார் 88 ஆயிரம் போராளிகளை ரஷியப் படைகள் கொன்று குவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Russianforceskilled #88000Syriarebels #rebelsinSyria
    மாஸ்கோ:

    சிரியா நாட்டில் அதிபர் பஷர் ஆசாத் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சில பகுதிகளை கைப்பற்றி, போட்டி அரசாங்கம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது சிரியா ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியா நாட்டின் விமானப்படைகளும் கிளர்ச்சியாளர்கள் முகாம்மீது வான்வழி தாக்குதல்களை நடத்துகிறது.

    மேலும்,சிரியா நாட்டின் கிழக்கே ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டின் அரசுப் படைகள் உச்சகட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களுக்கு துணையாக அரஷியா நாட்டின் போர் விமானங்களும் வான்வழி தாக்குதலை நடத்தின.

    இந்நிலையில், சிரியாவில் கடந்த மூன்றாண்டுகளில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து 1411 குடியிருப்பு பகுதிகள் உள்பட 95 சதவீதம் நிலப்பரப்பு மீட்கப்பட்டதாகவும், இதற்கான தாக்குதலில் 87 ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமான கிளர்ச்சியாளர்களை ரஷியப் படையினர் கொன்றதாகவும் ரஷிய ராணுவ மந்திரி செர்கே ஷோய்கு தெரிவித்துள்ளார். #Russianforceskilled #88000Syriarebels #rebelsinSyria 
    பல நாடுகள் உரிமை கோரிவரும் தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது. # SChinaSea #Chinaairforce
    பீஜிங்:

    சீனாவின் தென்பகுதியில், பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாக அமைந்துள்ள தென் சீனக்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்தும், ஆண்டுதோறும் சுமார் ஐந்து லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சரக்குகள் பரிமாற்றமும் இந்தப் பகுதி வழியே நடைபெறுவதாலும், இந்த கடலில் அடிப்பகுதியில் எண்ணெய், இயற்கை எரிவாயு வளம் இருப்பதாக சொல்லப்படுவதாலும் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ஆனால், ‘‘தென் சீனக்கடலில் எங்களுக்கும் பங்கு இருக்கிறது’’ என்று பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் போன்ற நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. கடந்த 2012-ம் ஆண்டில் இந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதிக்குட்பட்ட ஒரு தீவில் சான்ஷா என்ற மாதிரி நகரத்தை சீனா உருவாக்கியது.

    இந்த நிலையில், சீனாவுக்கு எதிராக தி ஹேக் நகரில் ஐ.நா. சட்டதிட்டங்களின்படி அமைக்கப்பட்டுள்ள சர்வதேச அளவிலான மத்தியஸ்தம் செய்வதற்கான நிரந்தர தீர்ப்பாயத்தில் பிலிப்பைன்ஸ், 2013-ம் ஆண்டு வழக்கு தொடுத்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது.

    தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்புக்கு பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்தன. ஆனால், இந்த தீர்ப்பை ஏற்க முடியாது என சீனா திட்டவட்டமாக கூறிவிட்டது.

    இந்நிலையில், தென் சீன கடல் பகுதியில் அதிநவீன போர் விமானங்களை நேற்று இறக்கி சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டது.



    தென் சீனக்கடல் எல்லைக்குட்பட்ட தீவுகள் மற்றும் பவளப்பாறைகள் பகுதிகளில் H-6K ரகத்தை சேர்ந்த குண்டு வீச்சு விமானங்களின் மூலம் நடைபெற்ற இந்த போர் பயிற்சியின் மூலம் கடல் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த இலக்குகள் வெற்றிகரமாக தாக்கி அழிக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #SChinaSea #Chinaairforce 
    ×