search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் மருத்துவமனை"

    • டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
    • கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை:

    ஈரோடு பெரியார் நகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(வயது77). ம.தி.மு.க கட்சியை சேர்ந்த இவர் ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பியாகவும் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கணேசமூர்த்தியை பார்ப்பதற்காக அவரது மகன் கபிலன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் கணேசமூர்த்தி மயக்க நிலையில் இருந்தார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார். அப்போது அவர் தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. உடனடியாக அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறும் போது, கணேசமூர்த்தி எம்.பியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து எக்மோ கருவியை பொருத்தி அதன் மூலம் சிகிச்சை நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    இதற்கிடையே கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கணேசமூர்த்தியை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோ ஆகியோர் நேரில் பார்த்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடமும் கேட்டறிந்தனர்.

    கணேச மூர்த்தி எம்.பி. தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
    • தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும் அதிகரித்து உள்ளது. மழைக்காலம் என்பதால் தற்போது மதுரையில் பொதுமக்கள் பலருக்கும் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சல், உடல் வலி, சளி, தொடர் இருமல் போன்ற பாதிப்புகளால் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் தீவிர பாதிப்பு உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    இதில் கடந்த வாரம் மட்டும் 17 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனிவார்டில் 24 மணி நேரமும் டாக்டர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையில் நேற்று 15 பேருக்கும், இன்று 8 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோன்று தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்குவால் பாதிக்கப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மதுரை நகரில் நாளுக்குநாள் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர் மழை, சுகாதார சீர்கேடு போன்ற காரணங்களால் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், சுகாதார துறையும் மாநகராட்சியும் இணைந்து மதுரையில் டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய இடங்களில் மருத்துவ முகாம், டெங்கு விழிப்புணர்வு போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறை மூலம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் வார்டு வாரியாக கொசுமருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஆனாலும் சுகாதார சீர்கேடுகளை சரி செய்து நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தீவிர தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

    • தனியார் மருத்துவமனை முன்பு, பின்பு உள்ள பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்
    • வீடுகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வடசேரியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 19 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் மகேஷ் அதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    முன்னதாக இன்று காலை 2-வது வார்டுக்குட்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு, பின்பு உள்ள பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பின்புறம் உள்ள மகளிர் தங்கும் விடுதி முன்பு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து களியங்காடு 4 முக்கு ரோடு, விவேகானந்தர் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது களியங்காடு 4 முக்கு ரோடு பகுதியில் தண்ணீர் தேங்குவதாக புகார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மேயர் மகேஷ், இந்த பகுதியில் கல்வெட்டு (சிறிய பாலம்) அமைக்க உத்தரவிட்டார். மேலும் சாலையையும் உயர்த்தி காங்கிரீட் தளம் அமைக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பின்னர் தெருவில் வீடுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அதிக அளவு இருந்தது. இதனை பார்த்த மேயர் வீடுகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    அப்போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    மேலும் 44-வது வார்டுக்குட்பட்ட மறவன் குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் ரூ.60 லட்சத்தில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    • ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்புதத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.
    • தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும்.

    சென்னை:

    மருத்துவ துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது இயந்திரங்களின் பாகங்களை கழட்டி மாட்டுவது போல் மனிதர்களின் உறுப்புகளையும் கழட்டி பொருத்தி மருத்துவர்கள் சாதித்து வருகிறார்கள்.

    சிறுநீரகம், இதயம், கல்லீரல், கண் போன்ற உறுப்புகளில் மாற்று அறுவை சிகிச்சை சாதாரணமாகிவிட்டது. அதே போல் உடலில் அத்தியாவசிய தேவை எனும் போது ஒரு உறுப்புக்கு பதில் இன்னொரு உறுப்பை எடுத்து மாட்டும் அற்பு தத்தை மருத்துவர்கள் நிகழ்த்துகிறார்கள்.

    32 வயதான இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் தொழிற்சாலையில் எந்திரத்தில் கை சிக்கியதில் வலது கை கட்டை விரலும், சுட்டு விரலும் துண்டித்து விழுந்தது.

    தனியாக துண்டிக்கப் பட்ட அந்த 2 விரல்களுடன் அந்த வாலிபர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். துண்டித்த விரலை எப்படியாவது பொருத்திவிடுவார் கள் என்ற நம்பிக்கையில் சென்றுள்ளார்.

    அந்த விரல்களை பரிசோதித்த மருத்துவமனையின் முடநீக்கியல் துறை அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் டாக்டர் சீனிவாசன் ராஜப்பா விரல்கள் சிதைந்து பொருத்த முடியாத நிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.

    அதே விரல்களை மீண்டும் பொருத்துவது சாத்தியமில்லை என்று கூறியிருக்கிறார்.

    ஆனால் வலது கையில் விரல்கள் அவசியம். அதிலும் கட்டை விரல் கட்டாயம் தேவை என்பதால் மாற்று வழிகள் பற்றி மருத்துவர்களிடம் அந்த வாலிபர் கேட்டுள்ளார்.

    அதற்கு கால் விரலை எடுத்து கையில் பொருத்த முடியும் என்று டாக்டர் ராஜப்பா கூறியிருக்கிறார். காலில் ஒரு விரலை எடுப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதற்கு ஒத்துக் கொண்டார்.

    இதையடுத்து இந்த சிக்கலான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர் சீனிவாசன் ராஜப்பா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தொடங்கினார்கள்.

    அந்த வாலிபரின் இடது காலின் 2-வது விரலை துண்டித்து எடுத்து கை கட்டை விரலாக பொருத்த முடிவு செய்தனர். திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை செய்து அந்த வாலிபரின் கட்டை விரலுக்கு பதில் கால் விரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு தற்போது அவர் நல்ல நிலையில் தனது வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த அறுவை சிகிச்சை பற்றி டாக்டர் சீனிவாசன் ராஜப்பா கூறியதாவது:-

    இது மிகவும் சிக்கலான ரிஸ்க் நிறைந்த அறுவை சிகிச்சை. ஏனெனில் கால் விரல் பகுதியின் ரத்த நாளங்கள் மிகவும் நுண்ணியது. கிட்டத்தட்ட ஒரு தலைமுடி அளவு விட்டம் கொண்டது. அவற்றை துல்லியமாக கண்டறிந்து துண்டித்து கையில் மிக துல்லியமாக பொருத்த வேண்டும்.

    தசை பொருந்தாவிட்டால் விரல் அசையாது. ரத்த நாளம் வழியாக ரத்தம் சென்றால்தான் விரல் இயங்கும். எலும்பு பொருந்தினால்தான் பலம் இருக்கும். இல்லாவிட்டால் அடித்தளம் இல்லாத கட்டிடம் போல் ஆகிவிடும்.

    இத்தனை ரிஸ்க்கையும் சவாலாக ஏற்று மிக துல்லியமாக கால் விரலை துண்டித்து மருத்துவ நுண்ணோக்கியில் துல்லியமாக பார்த்து பார்த்து ரத்த நாளங்களை இணைத்தோம். 8 மணி நேரம் நடந்த இந்த ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது.

    விபத்து நேரிடும் போது உறுப்புகள் துண்டிக்க நேர்ந்தால் அதை சுத்தமான பிளாஸ்டிக் உரையில் வைத்து கட்டி, ஐஸ்கட்டிகள் நிரப்பிய பாத்திரத்தில் எடுத்து வர வேண்டும். துண்டிக்கப்பட்ட பாகங்களில் ஐஸ்கட்டியோ, தண்ணீரோ நேரடியாக படக்கூடாது. இந்த மாதிரி உறுப்புகளை மாற்றுவது சாத்தியமே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரெஜிக்கும் கிறிஸ்டோபர் ஜாணுக்கும் செங்கல் சூளை நடத்துவதில் தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
    • தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடவிளையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் ஜாண் (வயது 56) செங்கல் சூளை நடத்தி வருகிறார்.


    இவருக்கும் சிதறால் வருக்கவிளையை சேர்ந்த ரெஜி (43) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்டோபர் ஜாண் வீட்டின் காம்பவு ண்டின் உள்பகுதியில் நின்றபோது ரெஜி (43), ஆல்பர்ட் ராஜ் (42), சத்யன் (40), வர்கீஸ் (40) ஆகியோர் சேர்ந்து கிறிஸ்டோபர் ஜாணை கம்பியால் அடித்து உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் படுகாயமடைந்த கிறிஸ்டோபர் ஜாணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


    இது குறித்து மார்த்தா ண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். ரெஜி மார்த்தா ண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரெஜிக்கும் கிறிஸ்டோபர் ஜாணுக்கும் செங்கல் சூளை நடத்துவதில் தொழில் போட்டி உள்ளதாகவும், இதில் இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாலும் சம்பவத்தன்று ரெஜி தந்தையின் கல்லறையின் அருகாமையில் நின்றபோது கிரிஸ்டோபர் ஜாண், ரெஜியை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

    இதனையடுத்து போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 5 பேர் மீது ழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×