search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி அரசு"

    • கடந்த 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்
    • வெறுமென 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன்

     கடந்த 2021-22ம் ஆண்டு டெல்லியில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியில் மதுபான விற்பனை அரசிடம் இருந்து 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்று புகார் எழுந்தது.

    இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மறுபுறம் அமலாக்கத்துறையும் சட்டவிரோத பண பரிமாற்றம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. விசாரணைக்காக கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஒரே ஒரு சம்மனுக்கு கூட பதிலளிக்கவில்லை. .

    இதனையடுத்து, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் டெல்லி இகோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது. இதனையடுத்து கடந்த 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின் அவருக்கு 7 நாள் நிதிதிமன்ற காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்நிலையில், கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தினர்.

    அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கெஜ்ரிவால். அப்போது, இதுவரை எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று தீர்ப்பளிக்கவில்லை. இருப்பினும் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். 

    ஆம் ஆத்மி கட்சியை உடைக்கவே அமலாக்கத்துறை என்னை கைது செய்திருக்கிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடக்கிறது. சதியை முறியடிக்கும் வகையில் டெல்லி மக்கள் பாடம் புகட்டுவார்கள். மதுபான கொள்கை வழக்கில் என்னை வேண்டுமென்ற அமலாக்கத்துறை சிக்க வைத்திருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    செய்தியாளர் சந்திப்புக்கு பின்னர் கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அந்த வழக்கின் விசாரணையில்,

    அமலாக்கத்துறை: "கெஜ்ரிவால் தனது செல்போன் மற்றும் லேப்டாப்களின் பாஸ்வேர்ட்களை தெரிவிக்கவில்லை. எனவே எங்களால் டிஜிட்டல் ஆதாரங்களை கைப்பற்ற முடியவில்லை. விசாரணைக்கு பாஸ்வேர்ட்களை சொல்லாமல் இருந்தால், அதை ஹேக் செய்துதான் தகவல்களை எடுக்க வேண்டியது வரும். அரவிந்த் கெஜ்ரிவால் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதற்கு எங்களிடம் வலுவான ஆதாரம் உள்ளது. கோவா தேர்தலில் ஆம் ஆத்மி லஞ்சப் பணத்தைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது" என வாதிடப்பட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால்: "ரூ.100 கோடி ஊழல் நடந்திருந்தால், அந்த ஊழலின் பணம் எங்கே போனது? உண்மையில், ED விசாரணைக்குப் பிறகுதான் இந்த ஊழல் தொடங்கியது. அமலாக்கத்துறைக்கு இரண்டு நோக்கங்கள் மட்டும் தான் உள்ளது. ஒன்று ஆம் ஆத்மி கட்சியை அழிக்க வேண்டும். மற்றொன்று மறைமுகமாக சிலரை மிரட்டி பணம் வசூலிக்க வேண்டும்.

    இந்த வழக்கில் தொடர்புடைய சரத் ரெட்டி என்பவர் பாஜகவுக்கு ரூ.55 கோடி நிதி அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஏன் பாஜகவுக்கு நன்கொடை வழங்கவேண்டும்?

    இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. எந்த நீதிமன்றமும் என்னை குற்றவாளி என்று அறிவிக்கவில்லை. என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை, என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் நான் கைது செய்யப்பட்டேன்.

    மணிஷ் சிசோடியாவின் செயலாளராக இருந்த அரவிந்த், சிசோடியா சில கோப்புகளை என் முன்னிலையில் கொடுத்ததாக கூறினார். பல அமைச்சர்கள் எனது வீட்டிற்கு வந்து ஆவணங்களைத் தருகிறார்கள். பதவியில் இருக்கும் முதல்வரைக் கைது செய்ய இது மட்டும் போதுமா?"

    வெறுமென 4 பேர் என்னை பற்றி கூறியதால் நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன். இது போல், நானும் இந்த ஊழலில் மோடியும், அமித் ஷாவும் தொடர்பில் இருக்கிறார்கள் என்றால், அவர்களும் கைது செய்யப்படுவார்களா? என அவர் கேள்வியெழுப்பினார்

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறுதியாக, கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்களுக்கு காவல் நீட்டித்து உத்தரவிட்டது.

    • முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்
    • டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை மேலும் 7 நாட்கள் நீட்டிக்கக் கோரிய அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

    அந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் மேலும் 4 நாட்களுக்கு கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பதாக உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1-ம் தேதி அமலாக்கத்துறையின் காவலில் கெஜ்ரிவால் இருப்பார்.

    இதற்கு முன்னதாக, சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும், நீதிமன்றம் எவ்வாறு, இதில் தலையிட முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்
    • கைது செய்யப்பட்டாலும், டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 28-ந்தேதி (இன்று) வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அமலாக்கத்துறை காவல் முடிவடைவதை தொடர்ந்து இன்று மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    கைது செய்யப்பட்டாலும், டெல்லி முதல்-மந்திரியாக கெஜ்ரிவால் தொடர்வார் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிமன்றம், இவ்விவகாரத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க முடியும், நீதிமன்றம் எவ்வாறு, இதில் தலையிட முடியும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. 

    • சொத்துப் பதிவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையை தவிர்க்கும்.
    • ஊழலைத் தடுக்க வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும்.

    டெல்லியில் உள்ள சொத்துக்களை எந்த துணை பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்யலாம் என டெல்லி வருவாய்த்துறை அமைச்சர் அதிஷி இன்று அறிவித்துள்ளார், மேலும், அதற்கான 'எங்கும் பதிவு' என்கிற கொள்கையை அவர் அறிமுகம் செய்தார்.

    இந்தக் கொள்கையின் மூலம், சொத்துப் பதிவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையை தவிர்க்கும், ஊழலைத் தடுக்க வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

    இந்த கொள்கைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்து, அதற்கான கோப்பு துணை நிலை ஆளுனரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    கொள்கையின்படி, தங்கள் சொத்துக்களை பதிவு செய்ய விரும்பும் நபர்கள் டெல்லியில் உள்ள எந்த துணை பதிவாளர் அலுவலகத்திற்கும் செல்லலாம். சொத்துப் பதிவுக்காக தனிநபர்கள் ஒரு குறிப்பிட்ட துணைப் பதிவாளர் அலுவலகத்திற்கு வரம்பிடப்பட மாட்டார்கள்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "அலுவலகங்களுக்கு வெளியே பணம் கேட்கும் இடைத்தரகர்கள் உள்ளனர். அதே அலுவலகத்தில் தங்கள் பதிவேடு வேலைகளை செய்ய இந்த இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த பிரச்சினைகளை தீர்க்க, வருவாய் துறை இந்த புதிய கொள்கையை தொடங்கியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    டெல்லியில் உள்ள அனைத்து துணை பதிவாளர்களும் இப்போது கூட்டு துணை பதிவாளர்களாக செயல்படுவார்கள் மற்றும் அவர்களின் அதிகார வரம்பு டெல்லி முழுவதையும் உள்ளடக்கும். டெல்லியில் வசிக்கும் எவரும் டெல்லியின் 22 துணைப் பதிவாளர் அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றில் சொத்துப் பதிவுக்கான ஆன்லைன் வழியை மேற்கொள்ளலாம்.

    • நாட்டின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.
    • கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும்.

    டெல்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    சங்கம் விஹாரின் தியோலி பஹாரியில் புதிய பள்ளிக் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "நாட்டின் வளர்ச்சிக்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்" என்றார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்று பி.ஆர். அம்பேத்கர் எப்போதும் கூறிவந்தார். அவரும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் வெளிநாட்டில் இருந்து சிறந்த கல்வியைப் பெற்றவர்.

    டெல்லியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முதல் மூன்று புதிய அரசுப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. மேலும், பல ஏழை மற்றும் பின்தங்கிய குழந்தைகள் இப்போது அங்கு படிக்கிறார்கள்.

    கல்வி மட்டுமின்றி, சங்கம் விஹார் பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைகளும் விரைவில் தீர்க்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.
    • அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நீண்டகாலமாக அதிகாரப் போட்டி நிலவுகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிக அதிகாரம் இருப்பதாக தீர்ப்பு அளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில், டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

    தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (என்சிசிஎஸ்ஏ) உருவாக்குவதற்கான இந்த அவசர சட்டம், டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் மற்றும் டெல்லி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள், டாமன் டையு, தாத்ரா நாகர் ஹவேலி யூனியன் பிரதேசங்களின் குடிமைப் பணி (டிஏஎன்ஐசிஎஸ்) பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

    இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் அவசர சட்டத்தை நிறுத்திவைக்க உச்ச நீதிமனற்ம் மறுத்துவிட்டது.

    அதேசமயம், பதில் மனு தாக்கல் செய்யும்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    அப்போது கெஜ்ரிவால் அரசால் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 400 நிபுணர்களை கவர்னர் பணிநீக்கம் செய்தது தொடர்பான டெல்லி அரசின் மனுவையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

    • டெல்லியில் அதிகாரிகள் நியமன அதிகாரம்: மத்திய அரசு அவசர சட்டம் - ஆம்ஆத்மி குற்றச்சாட்டு
    • மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

    இதற்கு தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும், துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கடந்த 11-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    அரசியல் சாசன அமர்வு, நிலம், காவல், பொது உத்தரவு ஆகியவை தவிர அனைத்து விவகாரங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குத்தான் உரிமை உள்ளது என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று தீர்ப்பு வெளியான மறுதினமே சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது.

    இந்த நிலையில் உயர் அதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு நேற்று அவசர சட்டம் பிறப்பித்தது.

    யூனியன் பிரதேச உயர் அதிகாரிகளான டானிக்ஸ் பிரிவு குரூப் ஏ அதிகாரிகளின் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்வதை முடிவு செய்வதற்கான தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதில் டெல்லி முதல்-மந்திரி தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் இடம்பெறுவார்கள். பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி அரசின் பணி நியமன அதிகாரத்தை குறைக்கும் வகையில் இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

    இதுதொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிஷி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசின் அவசர சட்டம் அரசியலைமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை. டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் முயற்சியாகும். சுப்ரீம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.

    முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். அவர் (கெஜ்ரிவால்) அதிகாரம் பெற்றால் டெல்லிக்கு அசாதாரண பணிகளை செய்வார் என்று அவர்கள் பயப்படுவார்கள்.

    டெல்லி அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருப்பதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆணையத்தில் இருக்கும் தலைமை செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் ஆகியோர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள்.

    மத்திய அரசுக்கு பிடிக்காத எந்த ஒரு முடிவையும் எடுத்தால் அதை மாற்றுவதற்கு துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும். இந்த அவசர சட்டம் சுப்ரீம் கோர்ட்டு மூலம் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு கொரோனா பாதிப்பு 300-யை தொட்டுள்ளது.
    • கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனை நடத்துகிறது.

    கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்றைய நிலவரப்படி 300 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு 300-யை தொட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரிப்பை தொடர்ந்து டெல்லி அரசு இந்த அவசர ஆலோசனை நடத்துகிறது.

    சுகாதார மந்திரி சவுரப் பரத்வாஜ் இந்த அவசர சட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    • 2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு டெல்லி முழுவதும் 1,100 இடங்களில் சாத் பூஜைகளை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நகரத்தில் பெரிய அளவில் சாத் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லி மற்றும் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். தீபாவளிக்கு பிறகு கொண்டாடப்படும் சாத் பூஜை பூமியில் உயிர்கள் வாழ காரணமாக இருக்கும். சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பூஜைகள் எளிமையாக நடைபெற்றது. இந்நிலையில் வருகிற 30, 31-ந் தேதிகளில் சாத் பூஜையை பிரமாண்டமாக கொண்டாட அரசு ஏற்பாடு செய்து வருகிறது.

    இதுகுறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் இந்த ஆண்டு 1,100 இடங்களில் உள்ள நீர் நிலைகளை டெல்லி அரசு மேம்படுத்தும். மேலும் பூஜைக்கான ஏற்பாடு செய்வதற்கான செலவை அரசே ஏற்கும். 2 வருட கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு டெல்லி முழுவதும் 1,100 இடங்களில் சாத் பூஜைகளை பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விழாவை நகரில் கொண்டாட ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பூஜையை கொண்டாட தேவையான மின் வசதி, ஆம்புலன்ஸ்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.

    ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நகரத்தில் பெரிய அளவில் சாத் கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 69 இடங்களில் ரூ.2.5 கோடி செலவில் மட்டுமே சாத் பூஜை நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அரசு நிதி உதவியுடன் 1,100 இடங்களில் சாத் பூஜை கொண்டாட்டங்கள் நடத்தப்படும். டெல்லி காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும்.

    கொரோனா உள்ளிட்ட நோய் தொற்றில் இருந்து விடுவிக்கவும், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக மக்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்ச்சி பெற முடியாத மாணவனுக்கு இரண்டு மாதங்களுக்குள் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும்.
    • தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33% மதிப்பெண்கள் பெற வேண்டும்.

    டெல்லியில் ஆட்சி செய்யும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது.

    புதிய கல்விக் கொள்கை வழிகாட்டுதல்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் உள்ள தீவிரத்தன்மையை தொடக்க வகுப்புகளிலும் கொண்டு வருவதை தங்களது அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளி இறுதி தேர்வில் தோல்வி அடைந்தாலும் அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதில் திருத்தம் கொண்டு வருவது குறித்து ஆய்வு குழு ஒன்றை டெல்லி அரசு அமைத்துள்ளது.

    அதன்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்பில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற முடியா விட்டால், மறுதேர்வு மூலம் இரண்டு மாதங்களுக்குள் அந்த மாணவனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் புதிய மதிப்பீட்டு வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர் ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    யூனியன் பிரதேசங்களில் அதிகாரம் யாருக்கு என்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று வழங்கிய தீர்ப்பு டெல்லிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #KiranBedi
    புதுச்சேரி:

    நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும், புதுவை-டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டுமே சட்டசபை செயல்படுகிறது. ஆனால், இவை யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னருக்குத்தான் அதிகாரம் என்று கூறி புதுவை கவர்னர் கிரண்பேடி, டெல்லி கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் செயல்பட்டு வந்தனர்.

    இதை எதிர்த்து டெல்லியில் ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    இந்த தீர்ப்பு 100-க்கு 110 சதவீதம் புதுவைக்கும் பொருந்தும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் கவர்னர் கிரண்பேடி இனிமேலும் இதை மீறும் வகையில் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொட ரப்படும் என்றும் கூறினார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி நேரடியாக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் நேற்று கூறப்பட்ட தீர்ப்பில், புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு டெல்லி தீர்ப்பு பொருந்தாது என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது. 

    அதாவது டெல்லி மாநிலம் அரசியல் சாசன சட்டம் 239 ஏ.ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்கள் 239 ஏ. பிரிவின் கீழ் செயல்படுகிறது. எனவே, இப்போதைய தீர்ப்பு 239 ஏ.ஏ. பிரிவின் அடிப்படையில்  கூறப்பட்டுள்ளது. இதனால் புதுவை உள்ளிட்ட மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தாது என்று அந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை இன்று சந்தித்த கிரண்பேடி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வாசித்து காட்டி, டெல்லியின் தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
    டெல்லியில் நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என சுப்ரீம் கோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பு, மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #DelhiPowerTussle
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எனினும், யூனியன் பிரதேசங்களில் மத்திய மாநில அரசுகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    ‘டெல்லி மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி' என தீர்ப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறுகையில், “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இனி கோப்புகளை துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப தேவையில்லை. அவருக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது” என தெரிவித்துள்ளார்.
    ×