search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rishab pant"

    • ஐ.பி.எல் போட்டியில் குஜராத்தை மீண்டும் வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றியை பெற்றது.
    • ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது சிறந்ததை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது.

    கேப்டன் ரிஷப்பண்ட் 43 பந்தில் 88 ரன்னும் (5 பவுண்டரி, 8 சிக்சர்), அக்ஷர் படேல் 43 பந்தில் 66 ரன்னும் (5 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். சந்தீப் வாரியர் 3 விக்கெட்டும் நூர் முகம்மது 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன் எடுத்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சாய் சுதர்ஷன் 39 பந்தில் 65 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), டேவிட் மில்லர் 23 பந்தில் 55 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    ரஷிக்சலாம் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஆன்ரிச் நோர்க்யா, முகேஷ் குமார், அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    டெல்லி கேப்பிட்டல்சுக்கு 4-வது வெற்றி கிடைத்தது. அந்த அணி குஜராத்தை மீண்டும் தோற்கடித்தது. அகமதாபாத்தில் கடந்த 17-ந் தேதி நடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப்பண்ட் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு கட்டத்தில் 44 ரன்னில் 3 விக்கெட் இழந்தோம். அப்போது நானும், அக்ஷர்படேலும் மதன்மை சுழற்பந்து வீரர் களை அடித்து ஆட வேண்டும் என்று திட்ட மிட்டோம். முதல் சிக்சர் அடித்ததும் தன்னம்பிக்கை அதிகரித்தது. எனது அதிரடியான ஆட்டம் மகிழ்ச்சியை அளித்தது.

    20 ஓவர் போட்டி என்பது வேடிக்கையான விளையாட்டாகும். 2-வது பேட்டிங் செய்யும்போது 15 ஓவருக்கு பிறகு பந்து ஆடுவதற்கு ஏற்ற வகையில் நன்றாக அமைந்தது. 19-வது ஓவரை ரஷிக் சலாம் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் எனது சிறந்ததை வெளிப்படுத்தவே விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மொகித் சர்மா வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ரிஷப்பண்ட் 30 ரன்கள் (2,6,4,6,6,6) குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    குஜராத் அணி 5-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சுப்மன்கில் கூறும்போது, 'நாங்கள் சிறந்த கிரிக் கெட்டை வெளிப்படுத்தி னோம். இறுதியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. டெல்லி அணியை 200 முதல் 210 ரன் வரை கட்டுப் படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் கடைசி 2 ஓவரில் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத் தில் பந்து வீச்சாளர்கள் யார்க்கர்களை பயன்படுத்தி இருக்க வேண்டும்' என்றார்.

    • சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.

    சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி தீப்பிடித்த காரில் இருந்து காயத்துடன் தப்பிய அவருக்கு முதலில் டேராடூனிலும், பிறகு மும்பையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கால்முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டு இப்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார். ஆபரேஷனுக்கு பிறகு ரிஷப் பண்ட் தனது புகைப்படத்தை 'ஒரு படி முன்னேற்றம்' என்ற வாசகத்துடன் நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    கம்பூன்றி நடப்பது போல் உள்ள அந்த புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ள ரசிகர்கள் விரைவில் களம் திரும்ப வேண்டும் என்று வாழ்த்தி பதிவிட்டு வருகிறார்கள்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய் அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார். #Dhoni #Sehwag
    புதுடெல்லி:

    இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக அனைத்து நாட்டு அணிகளும் தயாராகி வருகின்ற்ன போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி அங்கு தொடர்ந்து 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது. 

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய் அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் டிவி பேட்டி ஒன்றில் கூறுகையில், இங்கிலாந்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்து அறிமுக டெஸ்டில் சதமடித்துள்ளார்.



    தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிஷப் பந்த், உலகக் கோப்பை போட்டிக்கு முன் 15  அல்லது 16 போட்டிகளில் விளையாட உள்ளார்.

    அவரை விட டோனிக்கு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்ல டோனி நிச்சயம் பங்களிப்பார். எனவே அதுவரை டோனி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். இது எனது சொந்த கருத்து மட்டுமே என தெரிவித்தார். #Dhoni #Sehwag
    ×