என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார்.
    • நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .

    ஈரோடு மாவட்டம் கோபி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக அலுவலகத்தை தமிழக வெற்றி கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே .ஏ .செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தைப்பூச நாளன்று இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது .இதற்காக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எந்த திசையை காண்பிக்கிறாரோ அதைநோக்கி செல்ல தயாராக இருக்கிறோம்.

    தமிழகத்தில் புதிய மாற்றம் ஏற்பட உள்ளது. அவருடைய வெற்றி உறுதி என்ற நிலையில் உள்ளது.

    தமிழகத்தில் தற்பொழுது ஆளும் கட்சி, ஆண்ட கட்சிக்கு மாற்றாக தமிழக வெற்றி கழகம் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராவது உறுதியாகிவிட்டது. அவர் செல்லும் இடமெல்லாம் அவர் முகத்தை காண வேண்டும் என்ற ஆவலோடு மக்கள் இருக்கின்றனர்.

    ஆயிரம் கோடி வருமானத்தை உதறித் தள்ளிவிட்டு மக்களுக்காக பணியாற்றுவதற்காக வந்துள்ளார். கூட்டணியில் யார் வரவேண்டும் என்பதை தலைவர் விஜய் தான் முடிவு செய்வார். மேலும் அவர் எந்த தேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். விரைவில் மாற்றுக் கட்சியிலிருந்து இக்கட்சியில் ஏராளமானோர் சேர உள்ளனர். நான் அதிமுகவில் இருந்த பொழுது எம்ஜிஆர், ஜெயலலிதா படம் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது பிரதமர் படத்தை வைத்துள்ளனர் .

    அந்த கட்சி தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை. ஈரோடு புறநகர் மாவட்டத்திற்கு இன்னும் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரே நியமிக்கப்படவில்லை. மேலும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு எம்எல்ஏ தான் தற்பொழுது பொறுப்பு வகித்து வருகிறார். இதிலிருந்து அந்த கட்சியினுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வீடுகளிலும் மகன், மகள், மனைவி ஆகியோர் விஜய்க்கு தான் ஓட்டு போட வேண்டும் என முடிவு செய்து விட்டனர் என்றார்.

    பேட்டியின் போது மேற்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜம்பு கார்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழரசு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.
    • போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை.

    மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தலைகுனிந்து நிற்கும் தமிழகம் என்றும் தமிழ்நாட்டை தலைநிமிர வைப்பேன் என்று வாய சவடால் பேசும் ஸ்டாலினுக்கு கண்டனம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி மக்கள்

    கேள்விப்பட்டிருப்பார்கள்; சரித்திரப் புத்தகங்களில் படித்திருப்பார்கள். ஆனால், இந்த சர்வாதிகாரிகளின் மொத்த உருவமாக, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள்.

    `நடு இரவில் ஒரு பெண் தனியாக, பாதுகாப்பாக நடந்துசெல்கிறாரோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்

    பெற்ற நாள்' என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால்,

    கடந்த 56 மாத தி.மு.க. ஆட்சியில் காவல் துறையை தனது ஏவல் துறையாக, முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி வைத்துள்ளதால் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. 6 வயது சிறுமி முதல் மூதாட்டிகள் வரை ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.

    போதை ஆசாமிகள் எந்த நேரம் இவர்களை சீரழிப்பார்கள், கொலை செய்வார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில்,

    தீய சக்தி தி.மு.க-வின் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், `ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில்

    வாசித்தது போல்' மகளிர் மாநாடு நடத்துகிறார்.

    56 மாதங்களாக நிர்வாகத் திறனற்ற ஆட்சி செய்து, இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிவிட்டு, நிதியே இல்லாமல் மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு, கோடிக்கணக்கான ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    சென்னை தரமணியில் வெளி மாநில இளம்பெண், போதை ஆசாமிகளால் சீரழித்து கொல்லப்பட்டுள்ளார். கண்முன்னே மனைவி பலாத்காரம் செய்யப்படுவதை தடுத்த கணவனும்; இந்த கொடுஞ்செயலைப் பார்த்து அழுத இரண்டு வயது

    குழந்தையும் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

    சென்னையில் உள்ள நந்தனம் அரசு கலைக் கல்லூரி கேன்டீனில் பணியாற்றும் அரியலூரைச் சேர்ந்த பெண், திமுக பிரமுகரால் சீரழிக்கப்பட்டுள்ளதோடு; அவரது நண்பர்களுக்கும் விருந்தாக்கப்பட்டுள்ள கொடுமை அரங்கேறியுள்ளது.

    கொடுஞ்செயலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசை கண்டு பயமில்லாத நிலை இருப்பதற்கு ஆட்சியாளர்களின் செயல்பாடுகளே காரணம்.

    குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆளும் கட்சியினர் அடைக்கலம் அளிப்பதுதான்,

    தற்போது தமிழகம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறி உள்ளதற்குக் காரணம் என்று அவதியுறும் மக்கள்

    புலம்புகிறார்கள்.

    பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை தடை இல்லாமல் போதைப் பொருட்கள் கிடைப்பதும், அவைகளை கொண்டு செல்வதில் ஆளும் கட்சியினரில் சிலர் ஈடுபட்டு வருவதும், பெரும் சீரழிவுக்கு காரணமாக உள்ளது.

    பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை, போதையின் பிடியில் சிக்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதும், பள்ளி மாணவிகளில் சிலர் சீருடையிலேயே மது அருந்துவது போன்ற காணொளிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாவதும், விடியா தி.மு.க-

    வினர் நடத்தும் ஆட்சியின் லட்சணத்தைப் பறை சாற்றுகிறது.

    சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் மு.க.

    ஸ்டாலினைக் கண்டித்து வீதியில் இறங்கி நாள்தோறும் போராடி வருகிறார்கள்!

    போராடுபவர்களின் கோரிக்கைகளை

    நிறைவேற்றுவதற்கு பதில், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் வேலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினின் விடியா திமுக அரசு ஈடுபட்டுள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் மக்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து தங்கள் பரம்பரையின் வாழ்வை மட்டுமே வளப்படுத்தும் நோக்கில், அல்லும் பகலும் `கரப்ஷன், கமிஷன், கலக்ஷன்' என்று செயல்படும் ஸ்டாலினின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் நெருங்கிவிட்டது.

    விடியா திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள் அதை பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும் என்பதை,

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரன்றே

    செல்வத்தைத் தேய்க்கும் படை...

    என்று, இரு வரிகளில் திருவள்ளுவர் கூறியிருப்பதை, தன்னிலை மறந்து செயல்படும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு

    நினைவூட்டுகிறேன். நம்மை கேள்வி கேட்க யாருமில்லை; நம்மை வெல்லும் சக்தி எங்குமில்லை என்ற மமதையோடு சுற்றித் திரியும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே,

    `ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே,

    பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே..

    ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு,

    அந்த மாறுதலை செய்வதற்கு தேறுதல் (தேர்தல்) உண்டு'

    என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளையும் நினைவூட்டுகிறேன்.

    விரைவில் தேர்தலை தமிழகம் சந்திக்கும்; மக்கள் மாறுதலை தருவார்கள். ஏய்த்து பிழைக்கும் தொழிலை இதுநாள்வரை செய்து வந்த தீயசக்தி தி.மு.க. கூட்டம்

    மூலைக்கு மூலை அடக்கி ஒடுக்கி வைக்கப்படும். தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் சுதந்திரம் பெறுவார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் விளக்கினர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சமீபத்தில் நம் இந்திய நாட்டிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் பிரதிநிதிகள் என்னைத் தொடர்பு கொண்டு, இந்த வர்த்தக ஒப்பந்தம் தங்களுக்கு எத்தகைய நன்மைகளை பயக்கவுள்ளது என்பதை விளக்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தொடர்ந்து இதுபோன்ற நல்ல திட்டங்களை மத்திய அரசு சார்பிலும், விரைவில் தமிழ்நாட்டில் அமையவுள்ள அ.தி.மு.க. அரசு சார்பிலும் அளித்திட தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

    இத்தருணத்தில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த வர்த்தக ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய மாண்புமிகு இந்தியப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



    • அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    எம்ஜிஆரின் 109வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    இவ்வாறு அவர் கூறினார்:-

    காங்கிரஸ் கை கொடுக்கும் என்றார் உதயநிதி. ஆனால், இப்போது காங்கிரஸ் கை நழுவிவிட்டது.

    அதிமுக பலமான கூட்டணி அமைத்துள்ளது, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

    ஜெயலலிதா மறைவிற்கு பிறகு முதல்வராக பதவியேற்றதும், 10 நாள் கூட ஆட்சி நிற்காது என்றார்கள், சிறப்பான ஆட்சியை கொடுத்தோம்.

    இன்னும் 2 அமாவாசைகள் தான் உள்ளது. திமுகவின் ஆட்சிகாலம் முடியப்போகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது.
    • ஓ.பன்னீர் செல்வம் நாடகமாடுகிறார்.

    மதுரை:

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பல்வேறு முறை சட்டசபையில் பேசியிருக்கிறேன். தொகுதி வாரியாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மதுரை மேற்கு தொகுதியில் 10 திட்டங்களை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் ஒரே ஒரு திட்டம் மட்டும் செயல்முறைக்கு வந்துள்ளது.

    தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தி.மு.க. அரசுக்கு எதிராக சுனாமி போல தமிழக மக்கள் வெகுண்டு எழுந்து உள்ளனர்.

    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.

    நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால் நாங்களும் அவரை விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். மக்கள் துயரங்களில் பங்கெடுத்தார். மக்களுக்கான திட்டங்களை செய்தார்.

    ஆனால் அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை. இது வினோதமாக இருக்கிறது. அவரை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.

    கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது. 1991-ல் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார். பின்பு அவரும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் தொடர்ந்து பத்திரிகைகளில் தனது உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தார். எனவே தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. பேசக்கூடாது.

    அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம். வருகிற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிகைகள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர், அ.தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகள் தெரிந்து எப்படி நடக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா? இதை முறைப்படி எப்படி தெரிவிக்க வேண்டும்.

    எனவே ஓ.பன்னீர் செல்வம் இந்த விஷயத்தில் நாடகமாடுகிறார். கருணாநிதி, ஸ்டாலின் நாடகங்களை எல்லாம் பார்த்து விட்டோம். எனவே ஓ.பன்னீர் செல்வத்தின் நாடகம் எங்களிடம் எடுபடாது என்றார். 

    • ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
    • கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில்,

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த விடியா திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி.

    தினந்தோறும் "இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?" என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். "இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது" என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

    தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல — தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான்.

    இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான

    விசாரணை நடத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.



    • எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை.
    • அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?

    தமிழக வெற்றிக் கழக கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    எம்.ஜி.ஆர் தொண்டர்கள் எங்கிருந்து வந்தார்கள்? அதே புள்ளியில் தான் பூத்திருக்கிறது இன்றைய வெற்றிப் படை. அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் ஆகியோரை மறந்து விட்டீர்களா?

    அன்று உண்மையை உரக்கப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும்—இன்று தீயசக்தி தி.மு.க-வின் திடீர் ஊதுகுழல் போலத் தான் பேசியதையே மாற்றிப் பேசும் அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் எத்தனை வித்தியாசங்கள்? இந்த மாற்றத்தின் பெயர்தான் 'தடுமாற்றம்'!

    மக்கள் தலைவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். தெரியாதது போல நடிக்கும் உங்களுக்கும் அது தெரியும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ள ஒரே தலைவர், எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான்! இதை காலம் விரைவில் புரிய வைக்கும் என கூறியுள்ளார்.

    • யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்.
    • யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.

    விஜய் சிறந்த நடிகர், ஆனால் சிறந்த அரசியல்வாதி நாங்கள் தான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர்," எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்துவிட்டதாக விஜய் கூறுகிறார். யாருக்காக அவர் வந்தார்? என கரூர் துயர சம்பவத்தை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி எழுப்பினர்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இன்று 41 உயிர்களை இழந்துவிட்டோம், யாருக்காக 41 உயிர்கள் போனது? அவர் என்ன செய்திருக்க வேண்டும்

    விஜய் பேச்சை கேட்பதற்காக வந்த கூட்டம்; நேரடியாக அங்கு சென்று பார்த்திருக்க வேண்டும், அதைக் கூட அவர் செய்யவில்லை

    நாங்கள் நேரடியாக ஓடிச்சென்று ஆறுதல் கூறினோம்; ஆறுதல் கூட சொல்ல முடியாத விஜய் கட்சி நடத்தி என்ன பயன்?

    விஜய் சிறந்த நடிகராக இருக்கலாம்; ஆனால் நாங்கள் சிறந்த அரசியல்வாதிகள்.

    யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை, ஒரு அரசாங்கத்தை நடத்த அனுபவம் தேவை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்.
    • தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை.

    ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    அதிமுகவில் இணைய நான் தயார் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்த நிலையில் அதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்,"ஓபிஎஸ்-ஐ கட்சியை விட்டு நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்பதால் அவரை சேர்க்க முடியாது.

    கட்சிக்கு துரோகம் இழைத்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்.

    ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கும் முடிவு அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்டது. இன்னும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இறுதியான பின்னர் தெரிவிக்கப்படும்.

    தேமுதிகவுடன் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை" என்றார்.

    • பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.
    • அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.

    சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் 22 வயது பெண்ணை 5 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நந்தனம் அரசுக் கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள கேண்டினில் பணிக்கு சேர்ந்த பெண் ஒருவரை, கல்லூரி வளாகத்திலேயே வைத்து கேண்டின் மாஸ்டர் மற்றும் பலர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

    தமிழ்நாட்டில் நாள்தோறும் கொடுரமான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை இந்த பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்த்து வருவது வெட்கக்கேடானது.

    சென்னையில் நேற்று பீகாரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அவரும் அவரது கணவரும் குழந்தையும் கொடூரமாக கொல்லப்பட்ட, இந்தியாவை பதைபதைக்க செய்த சம்பவத்தின் பதட்டமே இன்னும் ஓய்வுறாத நிலையில்,

    இன்று மீண்டும் ஒரு பெண், அரசுக் கல்லூரியின் கேண்டினில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளாரே, என்பது குறித்து கேட்டால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதே தெரியாது என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள்.

    அக்கறையற்ற அமைச்சரின் பேச்சு வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியதும் கூட.

    ஆயிரம் முறை நான் மீண்டும் மீண்டும் கூறிவருவதை போல திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிப்போயுள்ளதையே இந்த தொடர் சம்பவங்கள் அழுத்தமாக நிரூபித்துள்ளது. இனியும் பொம்மை போன்று செயல்படாது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்த விடியா அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * தி.மு.க.வை பற்றி மக்கள் நன்றாக தெரிந்து கொண்டார்கள். வரும் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

    * 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும்.

    * அ.தி.மு.க. ஆட்சியில் கடன் அதிகமாகி விட்டது என தி.மு.க. கூறுவது அனைத்தும் பொய்.

    * மக்களின் வரிப்பணத்தில் பலகோடி ரூபாய் விளம்பரம் செய்யப்படுகிறது.

    * உதயநிதி முதலமைச்சராக வருவது ஒருபோதும் நடக்காது.

    * வரும் சட்டசபை தேர்தல் தான் தி.மு.க.விற்கு இறுதித்தேர்தல், மக்கள் சரியான தண்டனை கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.
    • தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?

    சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

    * மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்பினால் அதற்கு சரியான பதில் இல்லை.

    * காலை பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும்.

    * அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.

    * தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது.

    * தி.மு.க. ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடனாளி என்ற பட்டம் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது.

    * தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலே பார்க்காமல் கால்களை மட்டுமே பார்த்தால் சூரியன் எப்படித் தெரியும்? என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×