search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "40 பவுன் நகை கொள்ளை"

    சீர்காழி அருகே ஊர்காவல் படை கமாண்டர் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 48). இவர் ஊர்காவல்படை கமாண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் மணிமாறன், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று நள்ளிரவில் அவர் வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை திருட்டு போய் இருந்ததை கண்டு அவர் திடுக்கிட்டார். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் அகும்.

    இதுபற்றி வைத்தீஸ்வரன் கோவிலில் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கொள்ளை கும்பலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ஊர்காவல்படை கமாண்டர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியின் மகன் தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. #ED #DayanidhiAzhagiri
    புதுடெல்லி:

    தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் அழகிரி. இவர் தி.மு.க.வில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டார். இவரது மகன் தயாநிதி அழகிரி.

    இந்நிலையில், தயாநிதி அழகிரிக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

    இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பணமோசடி தடுப்பு சட்டம், 2002ன் கீழ் ஒலிம்பஸ் கிரானைட்ஸ் தனியார் நிறுவனத்திற்கு உரிய மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலம், கட்டிடங்கள் மற்றும் வைப்பு தொகைகள் என மொத்தம் ரூ.40.34 கோடி மதிப்பிலான தயாநிதி அழகிரியின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றில் 25 அசையும் மற்றும் அசையா சொத்துகள் அடங்கும்.  சட்டவிரோத முறையில் இந்த சொத்துகள் ஈட்டப்பட்டு உள்ளன.

    இந்த தனியார் நிறுவனத்தின் பங்குதாரர்களான எஸ். நாகராஜன் மற்றும் தயாநிதி அழகிரி உள்ளிட்ட பிற குற்றவாளிகள், சட்டவிரோத முறையில் குத்தகை நிலத்தில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பலன் பெற்று, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

    பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நடந்த விசாரணையில், இவர்கள் லாப நோக்குடன் தொடர்ச்சியாக குற்றத்தில் ஈடுபட்டது, சட்டவிரோத முறையில் குவாரி நிறுவனம் நடத்தி, அதன்வழியே வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளது. #ED #DayanidhiAzhagiri
    40 தொகுதிகளிலும் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    பெங்களூரு:

    மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ரிஸ்வான் ஹர்‌ஷத்தை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா என்று பார்க்காமல் தீய சக்தி, நல்ல சக்தி என்று தேர்தலை பார்க்க வேண்டும். பா.ஜனதா என்றாலே தீய சக்தி தான்.

    பிரதமர் மோடி கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். கியாஸ் விலை உயர்ந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் கியாஸ் சிலிண்டரின் விலை என்ன?. மோடியின் ஆட்சியில் அதன் விலை என்ன என்பதை நீங்கள் தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.

    பொதுவாக தாய்மார்கள் கணவர்களுக்கு தெரியாமல் சமையல் அறையில் பணத்தை மறைத்து வைப்பார்கள். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு ஒரே இரவில் பணம் அனைத்தும் செல்லாது என கூறி அனைத்து பணத்தையும் குப்பையாக மாற்றினார்.

    பின்னர் பணத்துக்காக மக்கள் ஏ.டி.எம். வாசலில் காத்து நின்றனர். அவ்வாறு வரிசையில் காத்து நின்றபோது 100-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

    பா.ஜனதா என்றால் மோடி மட்டுமே. ஆனால் காங்கிரஸ் என்பது ஒரு கூட்டம். மோடி தமிழ்நாடு என்றாலே வெறுக்கிறார். தமிழ் நாட்டில் புயல் பாதிப்பின் போது மோடிக்கு தமிழ்நாடு மீது அக்கறை வரவில்லை. தற்போது தேர்தல் வருவதால் மோடி தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பது போல் நடித்து வருகிறார்.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பிரதமர் மோடி அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என கூறினார். இதுவரை ஒருவர் வங்கி கணக்கிலும் ஒரு பைசா கூட செலுத்தவில்லை. அதனால் பொய் கூறிவரும் மோடியை வீட்டுக்கு அனுப்புங்கள்.

    ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி புயல் பாதித்தபோது எங்கே இருந்தார்? முருகனுக்கு அரோகரா என்று கோ‌ஷம் எழுப்புவதால் தமிழக மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்களா?

    கேரளாவிற்கு சென்று ஐயப்பா என்று கூறுவதாலும் பா.ஜனதாவுக்கு வாக்குகள் கிடைத்து விடாது. பிரதமர் நரேந்திர மோடியின் இந்த நடிப்பை தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் நம்பப் போவதில்லை.

    தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிட்டு உள்ள 5 தொகுதிகளிலும் நோட்டாவை விட குறைவான வாக்கே கிடைக்கும்.

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை, தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் என்ற ரீதியில் கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சமீபத்தில் கூறி இருந்தார்.

    அ.தி.மு.க.வில் விஞ்ஞானிகள் அதிகம். ஏரி நீர் ஆவியாக மாறுவதை தடுப்பதற்கு தெர்மாகோல் தடுப்பு அமைக்க நடந்த முயற்சி அனைவருக்கும் தெரியும். அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்துள்ளதால் தமிழிசைக்கும் அதன் பாதிப்பு வந்துவிட்டது.

    எந்த காலத்திலும் தமிழகத்தில் பா.ஜனதா கால் ஊன்றாது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மத்தியில் காங்கிரஸ் பதவியேற்ற 10 மணி நேரத்தில் விவசாய கடன் ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Kushboo
    கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி என்று நடிகர் விசு கூறினார். #LokSabhaElections2019 #ADMK
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் விசு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்துகணிப்புகள் கூறுவதாக சொல்கிறார்கள். நான் எத்தனையோ கருத்துக்கணிப்புகளை பார்த்தவன். கருத்துக்கணிப்புகளை கண்டு பயப்படப்போவதில்லை. கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி.

    காஷ்மீரில் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் குண்டு போட்டது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வருத்தம் தான் தெரிவித்தார். ஆனால் இப்போது நடந்த தாக்குதலுக்கு அடுத்த 15 நாளில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக மாறி நமது நாட்டையும், பிரதமரையும் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் இவர்களை ஏதோ ஒரு அன்னிய சக்தி இயக்குகிறது உறுதியாகி விட்டது. அடுத்து 5 ஆண்டுகளுக்கு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியா உலக அளவில் நம்பர் ஒன் நாடாக விளங்கும். எனவே நீங்கள் பா.ஜ.க.வை ஆதரியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #ADMK

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
    பாக்தாத்:

    ஈராக் நாட்டில் உள்ள குர்திஷ் இன மக்கள் தங்கள் புத்தாண்டை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடினர். இந்நிலையில் புத்தாண்டை கொண்டாட 40-க்கும் மேற்பட்டோர் ஒரு படகில் மொசூல் நகர் அருகே உள்ள டைகரிஸ் ஆற்றை கடந்து சென்றனர்.

    அப்போது அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்ததால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த 40 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த 4 நாட்களில் பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.40 கோடி சிக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    தேர்தல் வந்தாலே கூடவே பணப்பட்டுவாடாவும் வந்து விடும். எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கும் சில அரசியல் கட்சி பிரமுகர்கள், அதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது காலம், காலமாக வழக்கத்தில் உள்ளது. தேர்தல் முடிவையே இது மாற்றி விடுவதால் பணப்பட்டுவாடாவை தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    என்றாலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்வது தொடர்ந்த படிதான் உள்ளது. அதோடு தேர்தல் பணப்பட்டு வாடா அதிகரித்தப்படியும் இருக்கிறது.

    கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது பணப்பட்டு வாடாவுக்காக கொண்ட செல்லப்பட்ட ரூ. 100 கோடி சிக்கியது. 2014-ம் ஆண்டு இந்த தொகை ரூ. 313 கோடியாக உயர்ந்தது,

    இந்த தடவை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்படும் பணப் பட்டுவாடா பல நூறு கோடியை எட்டி விடும் நிலை உள்ளது. அந்த பணப்பட்டுவாடாவை தடுக்க அதிரடி குழுக்கள் மூலம் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் பயனாக ரொக்கப் பணம் கட்டு கட்டாக பிடிபட்டு வருகிறது. உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்றத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டது. மறுநாள் (திங்கட்கிழமை) முதல் நாடு முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    கடந்த 4 நாட்களில் நாடு முழுவதும் வாகன சோதனையில் சுமார் ரூ.40 கோடி சிக்கியுள்ளது. அதிகபட்சமாக ஆந்திராவில் ரூ.29 கோடி பிடிபட்டது. தமிழ்நாட்டில் ரூ.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ரொக்கப் பணம் தவிர தேர்தல் அதிகாரிகளின் வாகன சோதனைகளில் 13.57 கிலோ தங்கமும் 31.5 கிலோ வெள்ளியும் பிடிபட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 70 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDhinakaran #ParliamentElection
    சேலம்:

    சேலத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் குற்றவாளி என்பதால் நினைவிடம் கட்டக்கூடாது எனவும், உயிரோடு இருந்திருந்தால் சிறைக்கு சென்று இருப்பார் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விட்டு வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சி ஊழல் ஆட்சி எனக்கூறி கவர்னரை சந்தித்து மனுவும் கொடுத்தனர்.

    இவ்வாறு பேசியவர்களுடன் கூட்டணி வைக்கும் இவர்களை (எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்) ஜெயலலிதாவின் ஆன்மா கூட மன்னிக்காது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.

    இந்த கூட்டணி பலவீனமான கூட்டணி. 40 தொகுதிகளிலும் படுதோல்வி அடையும். அவர்களின் கூட்டணி தற்கொலைக்கு சமமான கூட்டணி. அ.தி.மு.க.வின் கூட்டணி அறிவிப்பு தோற்றுப்போகிறவர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகும். சந்தர்ப்பவாதிகளான இவர்கள் வெற்றி பெறுவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். தேர்தலுக்கு பின்னர் இவர்களுடன் (அ.தி.மு.க.) கூட்டணி சேர்ந்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள்.



    டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சமூகநீதி போராளிகள் என்று நினைத்தேன். அவர்கள் இவ்வாறு செய்வார்கள் என்று நினைக்கவில்லை. மேலும் பா.ம.க.வினர் என்ன நினைப்பார்கள்? என்பது தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்காக ஒன்றாக சேர்ந்துள்ள இவர்கள் இடுப்பில் கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றில் குதிக்கப்போகிறார்கள்.

    அ.ம.மு.க. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறேன். கூட்டணி அமையவில்லை என்றால் 40 தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெறுவோம். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் 95 சதவீதம் பேர் எங்களுடன் தான் உள்ளனர். எங்களுக்கு கிளைகள் இல்லாத ஊர் எதுவும் இல்லை. அந்த வகையில் கட்சியை வளர்த்துள்ளோம்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது. இதனால் பிரதமர் யார்? என்பதை தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #ParliamentElection

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.

    வழக்கம்போல அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் உருவாகி உள்ளது.

    கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எந்த அணியில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாக நிலவியது. அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் சேர மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்த கமல்ஹாசன் காங்கிரஸ் பக்கம் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    டெல்லி சென்று ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் பேசியதால் காங்கிரஸ் அணியில் நிச்சயமாக அவர் இருப்பார் என்று கருதப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக அவர் எந்த அணியிலும் சேராமல் தனித்து போட்டியிட தயாராகி வருவது உறுதியாகி இருக்கிறது.

    இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று எண்ணியவன் அல்ல. ஆனால், நான் அரசியலுக்கு வர வேண்டிய கால சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இது ஒரு கடினமான பணி என்று எல்லோரும் நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. சினிமாவும் கூட கடினமான பணிதான். இருந்தாலும் அதில் நான் அனுபவித்து பணிகளை செய்தேன். சினிமா வாழ்க்கை சிறப்பாக அமைந்தது.

    அதே போன்று அரசியலும் இருக்கும். மக்கள் என் மீது அளவு கடந்த அன்பு காட்டுகிறார்கள். எங்கள் எண்ணத்தை நிறைவேற்றும் நிலை உருவாகும்.

    மக்கள் நீதிமய்யம் கட்சியின் பெயர், சின்னம், கொடி போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று நினைத்தோம். ஆனால், அதை முறியடித்து இருக்கிறோம்.

    இப்போது அனைத்து கிராமங்களிலும் கூட நாங்கள் பிரபலம் அடைந்து இருக்கிறோம். அதாவது எல்லா இடங்களிலும் எங்களது கட்சி சென்றடைந்துள்ளது.

    கிராம சபை கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி நேரடியாக மக்களை சந்தித்து வருகிறோம். இதன் மூலம் அடிமட்ட மக்களை சென்றடைந்து வருகிறோம். எங்கள் திட்டங்களைத்தான் இப்போது பல கட்சிகளும் காப்பி அடிக்கின்றன.

    எங்களுக்கு தடை ஏற்படுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. எங்களது கூட்டத்துக்கு அனுமதி தருவது போன்றவற்றில் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்.

    அதே நேரத்தில் நான் எங்கு சென்றாலும் என்னை பார்க்க மக்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் பல லட்சம் மக்களை நான் சந்தித்து விட்டேன்.

    நான் சிறு வயதில் இருந்தே இது போன்ற கூட்டங்களை பார்த்து பழக்கப்பட்டு உள்ளேன். கடந்த காலங்களில் மக்கள் என்னை சந்தித்ததற்கும், இப்போது சந்திப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    அன்று என்னை சினிமா நடிகர் என்ற அடிப்படையில் பார்ப்பதற்கு கூடினார்கள். இப்போது அதில் மாற்றம் உள்ளது. என்னை முக்கிய தலைவராக கருதி பார்க்கிறார்கள்.

    பல மக்கள் என்னை ஒரு தலைவராக பார்த்ததால் தான் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை உருவானது. என்னை தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது உறுதி. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்கிறோம். நம்பிக்கையோடு களம் இறங்குகிறோம்.

    எங்களுடைய சக்தி இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று நம்புகிறோம். நிச்சயமாக சாதனை செய்வோம்.

    எங்களுடனும் கூட்டணி சம்பந்தமாக பலர் பேசுகிறார்கள். சில கட்சிகளை பொறுத்தவரை எங்களால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களுடன் கூட்டணி வைப்பதை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    மக்கள் ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கலாம். ஆனால், யாரையும் எங்கள் தோளில் சவாரி செய்ய அனுமதிக்க மாட்டோம்.

    தி.மு.க.வுடனோ அல்லது அ.தி.மு.க.வுடனோ கூட்டணி கிடையாது என்பது எங்களது உறுதியான எண்ணம்.

    காங்கிரஸ் கூட்டணியில் நாங்கள் இடம்பெறுவோமா? என்பது பற்றிய வி‌ஷயத்தில் தமிழ்நாடு நலன் தான் எங்களுக்கு முக்கியம்.

    மாநில நலனுக்கு எதிராக எந்த ஒரு முடிவையும் நாங்கள் எடுக்க மாட்டோம். எதுவாக இருந்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை மையமாக வைத்து முடிவுகள் இருக்கும்.

    நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடத்தான் விரும்புகிறோம். இதில், எந்த மாற்றமும் இருக்காது. நாங்கள் மற்றவர்களுக்காக தியாகம் செய்ய முடியாது.

    நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சொன்னது எனது கட்சியை குறிப்பிட்டு தான் சொன்னேன். நான் போட்டியிடுவேனா? இல்லையா? என்பது சூழ்நிலைகளை பொறுத்தது. தேவைப்பட்டால் நானும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.

    எங்கள் கட்சியில் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வேட்பாளராக நிறுத்துவோம்.

    தேர்தலில் எங்களுக்கு எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது பற்றிய வி‌ஷயத்தில் மற்ற கட்சிகளுக்கு நாங்கள் கடுமையான சவால் ஏற்படுத்துவோம். நாங்கள் ஆழமாக ஊடுருவி செல்வோம்.

    ஊழல் புகார் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, அ.தி.மு.க.- தி.மு.க. இருகட்சிகளுமே தவறு செய்துள்ளன.

    அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரை இது அகற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த அரசால் தமிழ்நாட்டில் பேரழிவும், தோல்விகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    அதேபோல் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மதச்சார்பற்ற தன்மையையும், சகிப்புத்தன்மையையும் சீரழித்து வருகிறது. நாட்டின் நிலைமையே இந்த ஆட்சியால் சீர்குலைந்து இருக்கிறது.

    பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் நான் விமர்சிக்கவில்லை. ஆனால், அந்த கட்சி, ஆட்சியின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு காரணமாக இருக்கின்றன.



    ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டுமா? என்ற வி‌ஷயத்தில் நான் தனிப்பட்ட முறையில் ஒருநபரை முன்னிறுத்தி எதுவும் சொல்ல முடியாது.

    ஆனால், ஒரு மனிதன் மட்டுமே நாட்டை நடத்தி சென்று விட முடியாது. அது ஒரு இயக்கமாக இருக்க வேண்டும். அதற்கு ராகுல்காந்தியை பயன்படுத்தி கொள்ளலாம். சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு கருவி வேண்டும்.

    அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமைந்தால் அது எங்களுக்கு சாதகமான வி‌ஷயம்தான். சிறந்த தமிழ்நாட்டை உருவாக்குவது தான் எங்களது ஒரே நோக்கம்.

    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை பழைய கட்சிகள் செய்கின்றன. அவர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இருந்து பணத்தை சுரண்டி வைத்து இருக்கிறார்கள். அவர்களுடைய செயல்பாடுகள் சாதாரண மக்களுக்கு எதிராக இருக்கின்றன. அந்த மக்களின் ஆதரவு எங்களை நோக்கி இருக்கும்.

    தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள்தான் சாதிக்க முடியும் என்று சொல்வது தவறான கருத்து. அன்றைய கால கட்டத்தில் அவர்களுடைய கொள்கைகள் தேவைப்பட்டு இருக்கலாம். எங்களை பொறுத்தவரையில் இந்தியை எதிர்க்கவில்லை. அதை திணிப்பதை மட்டும்தான் எதிர்க்கிறோம்.

    ஊழல் அனைத்து மட்டத்திலும் ஒழிக்கப்பட வேண்டும். மக்களுக்கு வழங்கப்படும் இலவசம் என்பது கல்வி, சுகாதாரம், குடிநீர் போன்றவற்றில் மட்டும்தான் இருக்க வேண்டும். மது வியாபாரம் மூலம் சாராய மாபியாக்கள் ஆழமாக காலூன்றி இருக்கிறார்கள்.

    மதுவிலக்கு அமலுக்கு கொண்டு வருவது அவசியமானது. இதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அழிக்க முடியும்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சம்பந்தமான வி‌ஷயத்தில் அதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அது அவருடைய தனிப்பட்ட வி‌ஷயம்.

    ஜெயலலிதா மரணம் சில சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. ஜெயலலிதா மரணம் மட்டும் அல்ல, கொடநாடு கொலை விவகாரம் உள்ளிட்ட அனைத்து சம்பவங்கள் பற்றியும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு வயதான பெண் என்னிடம் நடந்து வந்து மற்றவர்களை போல் நீயும் என்னை ஏமாற்றி விடாதே? என்று கூறினார்.

    இதேபோல் மக்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக என்னை சந்திக்கிறார்கள். மாநிலத்தில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறோம். அதை சிறப்பாக செயல்படுத்துவது எங்களது ஒரே நோக்கமாக இருக்கும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார். #ParliamentElection #KamalHaasan #MakkalNeedhiMaiam

    இந்திய கடற்படைக்காக தேவைப்படும் நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பாதுகாப்புத்துறை கவுன்சில் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. #DefenceMinistry
    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் கவுன்சில் கூட்டம் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில், இந்திய கடற்படைக்காக தேவைப்படும் 6 நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானம் தொடர்பான திட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. #DefenceMinistry
    தஞ்சையில் ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். #Sterlite
    தஞ்சாவூர்:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதுடன் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் ஆலையைத் திறப்பதற்கான வழிமுறைகளை வகுத்து, ஆலை இயங்குவதற்கான அனுமதியை மூன்று வார காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பினர் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். அனுமதியின்றி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 40 பேரை தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கைது செய்தனர். #Sterlite

    சென்னையில் இருந்து 40 பெண்கள் வருகிற 22-ந் தேதி சபரிமலை பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த பயணத்துக்கான பாதுகாப்பு கேட்டு கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறார்கள். #Sabarimala #WomenDevotees
    சென்னை:

    பெண்கள் சபரிமலைக்கு செல்லலாமா? செல்ல கூடாதா? என்ற சர்ச்சை பல ஆண்டுகளாக எழுந்து வருகிறது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ‘சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை அமல்படுத்துவதில் கேரளா மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேவேளையில் ‘கோவில் புனிதம் கெட்டுவிடாதா?’, என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், இந்து அமைப்புகளும் ஐயப்ப பக்தர்களும் அங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு ஐயப்பனை தரிசிக்க வரும் பெண்களும் விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். இதனால் புனித தலமான சபரிமலை தற்போது போராட்ட தலமாக மாறியிருக்கிறது.

    இந்தநிலையில் ‘மனிதி’ எனும் சமூக நல அமைப்பு சார்பில் 40 பெண்கள் அடங்கிய குழு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்க முடிவு செய்திருக்கின்றனர். இதுகுறித்து ‘மனிதி’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வசுமதி வசந்த் (வயது 39), செல்வி (44) ஆகியோர் கூறியதாவது:-

    சபரிமலை என்பது ஒரு திருத்தலம். அது ஒரு பொது இடம். வழிபடும் இடத்தில் ஒரு சாராருக்கு இடமில்லை என்பது தீண்டாமை போன்றது தான். ஐயப்பனை காணவேண்டும், தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கும் உண்டு. ஆனால் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி சபரிமலையில் பெண்களின் வழிபடும் உரிமைக்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்கள். இந்த முட்டுக்கட்டையை சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பால் தகர்ந்து எறிந்திருக்கிறது. இதனை நாங்கள் மனதார வரவேற்கிறோம். இதன்மூலம் நீண்ட நாளாக முடங்கியிருந்த எங்களின் வழிபாட்டு உரிமை திரும்ப கிடைத்திருக்கிறது.

    எதையுமே போராடி பெறுவது என்பதே பெண்களின் தலையெழுத்தாகி விட்டது. சபரிமலையிலும் அந்த நிலை மாறவேண்டும். எங்களின் வழிபாட்டு உரிமையை தடை செய்வது மிகப்பெரிய தவறு. சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுப்பது, விரட்டுவது போன்றவற்றை இனியும் பார்த்து கொண்டிருக்க முடியாது.

    அதனால் தான் ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பெண்களை எங்கள் அமைப்பு ஒருங்கிணைத்தது. ‘சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்புகிறோம், எனவே உரிய பாதுகாப்பு செய்து தாருங்கள்’, என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு மின்னஞ்சலில் கடிதம் அனுப்பினோம். அவரும் எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தருவதாக பதில் கடிதம் மூலம் உறுதி அளித்திருக்கிறார். எனவே திட்டமிட்டபடி எங்கள் பயணத்தை ஏற்படுத்தி ஐயப்பனை தரிசிக்க செல்வோம்.



    இந்த பயணத்தில் தமிழகம், கேரளா, ஒடிசா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 40 பேரை ஒருங்கிணைத்திருக்கிறோம். இதில் ஆன்மிக சிந்தனை உடையவர்கள் ஏராளம். பாதி பேர் 5 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டிவர இருக்கிறார்கள். திட்டமிட்டபடி சென்னையில் இருந்து 22-ந் தேதி புறப்பட்டு மறுநாள் காலை 10 மணியளவில் கேரளா மாநிலம் கோட்டயத்தில் கூடுகிறோம். பின்னர் அங்கிருந்து பம்பை வழியாக ஐயப்பனை தரிசிக்க செல்கிறோம். எங்களில் ஒருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் தான்.

    1990-க்கு முன்பாக சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கான சான்றுகள் உள்ளன. எனவே பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டவும், இழந்த உரிமையை பெறவும் தான் இந்த பயணம். மற்றபடி நாத்திகமோ, முற்போக்கு சிந்தனையோ இந்த பயணத்திலோ அல்லது எங்கள் அமைப்பிலோ இல்லை. கடவுளை வழிபட பாலின வேறுபாடு பார்ப்பது நியாயமற்ற செயலாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஏற்கனவே சபரிமலைக்கு செல்லும் பெண்கள் ஒரு சிலரால் தடுக்கப்பட்டும், விரட்டப்பட்டும் வரும் நிலையில் சென்னையில் இருந்து 40 பெண்கள் குழுவாக செல்வது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  #Sabarimala  #WomenDevotees


    17 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற வழக்கில் போலீசார் 3 பேருக்கு தலா 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து பிலிப்பைன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. #PhilippinesPolice #StudentMurder #DrugsWar
    மணிலா:

    ஆசிய நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்சில் பிற நாடுகளை காட்டிலும் அதிக அளவில் போதை பொருள் புழங்குகிறது. எனவே போதைப்பொருளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அதிபர் ரோட்ரிகோ துதர்தே கடுமையான போக்கை கையாண்டு வருகிறார்.

    அந்த வகையில் போதை பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கும் நபர்களை பார்த்த இடத்தில் சுட்டு கொல்லும் அதிகாரத்தை போலீசாருக்கு அவர் வழங்கி உள்ளார். அதன்படி 2016-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 5000 பேர் போலீசாரின் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டு இருக்கிறார்.

    ஆனால் இது முற்றிலும் மனித நேயமற்ற செயல் என்றும் அப்பாவி மக்கள் மீது தொடுக்கப்படும் போர் என்றும் மனித உரிமை அமைப்புகள் சாடின. அதிபர் ரோட்ரி கோ துதர்தே மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

    இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு போதை பொருள் விவகாரத்தில் கியான் டெலோஸ் சாண்டோஸ் என்கிற 17 வயது சிறுவனை போலீசார் சுட்டுக்கொன்றனர். இது அங்கு பெரிய அளவிலான போராட்டத்துக்கு வித்திட்டது.

    அதன் எதிரொலியாக சிறுவனை சுட்டுக்கொன்ற 3 போலீசார் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில் 3 பேரின் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டது.

    இதையடுத்து, குற்றவாளிகள் 3 பேருக்கும் தலா 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார்.  #PhilippinesPolice #StudentMurder #DrugsWar
    ×