என் மலர்
நீங்கள் தேடியது "2025 ரீவைண்ட்"
- கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.
2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பல மாநிலங்களில் கடுமையான மழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டன.

குறிப்பாக, இந்த ஆண்டில் பலத்த மழையால் வட இந்தியப் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
வடமேற்குப் பிராந்தியம், குறிப்பாக இமயமலைப் பகுதிகளில் வழக்கத்தைவிட சுமார் 27% அதிக மழை பெய்தது. இது பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்குக் காரணமாக அமைந்தது.
இமாச்சலப் பிரதேசம்:
*மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இமாச்சலப் பிரதேசமும் ஒன்றாகும்.
*வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
*செப்டம்பர் 2025 நிலவரப்படி, 355-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

*1,200 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
*45 மேக வெடிப்புகள் (Cloudbursts) மற்றும் 132 பெரிய நிலச்சரிவுகள் இங்கு பதிவாகின.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்:
*பலத்த மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
*கிஷ்த்வாரில் ஏற்பட்ட மேக வெடிப்பில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

*கதுவா மற்றும் பிற பகுதிகளிலும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டன.
*லடாக் பிராந்தியத்தில் வழக்கத்தைவிட 342% அதிக மழை பதிவானது.
உத்தரகாண்ட்:
*உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
*பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டன, சாலைகள் சேதமடைந்தன.
*இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இயற்கைப் பேரழிவுகளால் 85 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப்:
*அண்டை மாநிலங்களில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும், கனமழை காரணமாகவும் மாநிலத்தின் 1,400 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
பிற மாநிலங்களில் பாதிப்பு
அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள்:
ஜூன் மாதத்தில் பிரம்மபுத்திரா மற்றும் பாராக் உட்பட பல ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு, 8 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டனர்.
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மழைப்பொழிவு இயல்பைவிட 20% குறைவாக இருந்தாலும், குறிப்பிட்ட பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தமிழ்நாடு:
வடகிழக்குப் பருவமழையின் தொடக்கத்தில் (அக்டோபர் 2025) இயல்பை விட 36% கூடுதல் மழைப்பொழிவு பதிவானது.
லா நினா (La Niña) காலநிலை காரணமாக வடகிழக்குப் பருவமழையில் கூடுதல் மழை மற்றும் புயல் ஆபத்துகள் நெருங்கியது.
இதில், ராமநாதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
- உலக கோப்பை செஸ் வரலாற்றில் இளம் வயதில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தரோவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தியாவின் திவ்யா தேஷ்முக் ஜார்ஜியாவின் பாடுமியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பையை வென்றார்.
2025-ம் ஆண்டில் செஸ் உலகில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன. இதோ சில முக்கியமான தகவல்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதன்படி முதலில் உலக கோப்பை செஸ் வரலாற்றில் இளம் வயதில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஜவோகிர் சிந்தரோவ் (Javokhir Sindarov) சாம்பியன் பட்டம் வென்றார். அவர் FIDE உலகக் கோப்பை 2025-ஐ வென்றார். இந்தியாவின் கோவாவில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 27 வரை நடந்த இந்தத் தொடரில், இறுதிப் போட்டியில் சீனாவின் வெய் யி (Wei Yi)-யை டைபிரேக்கரில் வீழ்த்தினார்.

பிரக்னானந்தா டாடா ஸ்டீல் சாம்பியன்:
இந்திய வீரர் ஆர். பிரக்னானந்தா (R Praggnanandhaa) ஜனவரி 17 முதல் பிப்ரவரி 2 வரை நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஸீயில் நடந்த டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் தொடரை வென்றார். உலக சாம்பியன் குகேஷ் (Gukesh Dommaraju)-ஐ ப்ளிட்ஸ் ப்ளேஆஃபில் 2-1 என்ற கணக்கில் வீழ்த்தினார். இது பிரக்னானந்தாவின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று.

மேக்னஸ் கார்ல்சனின் நார்வே செஸ் வெற்றி:
ஜூன் 6 வரை ஸ்டாவாங்கரில் நடந்த நார்வே செஸ் 2025-ஐ உலகின் நம்பவர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen) ஏழாவது முறையாக வென்றார்.

ஆனால், இந்தத் தொடரில் உலக சாம்பியனான அவரை கிளாசிக்கல் செஸ்ஸில் குகேஷ் முதல் முறையாக வீழ்த்தினார். இது ஒரு பெரும் பாராட்டை குகேஷ்-க்கு பெற்றுக் கொடுத்தது.

பெண்கள் உலக சாம்பியன்:
சீனாவின் ஜு வென்ஜுன் (Ju Wenjun) ஏப்ரல் 3 முதல் 16 வரை ஷாங்காய் மற்றும் சோங்கிங்கில் நடந்த பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2025-ஐ வென்று, தனது ஐந்தாவது உலக தலைப்பைத் தக்க வைத்தார். சீனாவின் டான் ஜோங்கி (Tan Zhongyi)-யை 6.5-2.5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

பெண்கள் உலகக் கோப்பை:
இந்தியாவின் திவ்யா தேஷ்முக் (Divya Deshmukh) ஜூலை 5 முதல் 29 வரை ஜார்ஜியாவின் பாடுமியில் நடந்த பெண்கள் உலகக் கோப்பை 2025-ஐ வென்றார். இறுதியில் கொனேரு ஹம்பி (Koneru Humpy)-யை 2.5-1.5 என்ற கணக்கில் வீழ்த்தினார். இது திவ்யாவின் முதல் உலகக் கோப்பை வெற்றி.

ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம்:
லெவன் ஆரோனியன் (Levon Aronian) டிசம்பர் மாதத்தில் நடந்த ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை 1.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ்:
ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 1 வரை ரியாத்தில் நடந்த ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் தொடரை மேக்னஸ் கார்ல்சன் வென்றார். இறுதியில் அலிரேசா ஃபிரௌஜாவை (Alireza Firouzja) வீழ்த்தினார்.
கிராண்ட் செஸ் டூர் 2025:
பல தொடர்களில், வெஸ்லி சோ (Wesley So) சின்க்ஃபீல்ட் கப்-ஐ வென்றார், மேலும் ஆண்டு முழுவதும் பல இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

- இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது
- இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.
திரையரங்குகளில் வசூல் எவ்வளவு, எத்தனை நாட்கள் ஓடியது என்ற கணக்குகளை விட, இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது
"இந்த படம் என்ன?", "யார் நடித்திருக்காங்க?", "கதை உண்மையா?" – இப்படிப் பல கேள்விகளோடே இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.
2025 REWIND-ல், கலெக்சனை ஒதுக்கி விட்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் எவை?
ஹிட்–ஃப்ளாப் எல்லையை தாண்டி மக்கள் மனசை கலக்கிய படங்கள் யாவை? இந்த லிஸ்ட், சினிமாவின் இன்னொரு பக்கமான Search Engine சொன்ன மக்கள் தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்

1. சயாரா
அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடிப்பில் உருவான காதல் படம் சயாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி ரூ.500 கோடி வசூலை கடந்தது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.
இளைஞர்கள் பெரும் ஆதரவை பெற்ற இப்படம் கூகுள் Search-லும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

2. காந்தாரா - சாப்டர் 1
காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்தது.
இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததால் இணையத்திலும் இப்படம் பேசுபொருளாகி இந்த பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

3. கூலி
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி படம் இந்தாண்டில் அதிக எதிர்பார்ப்போடு வெளியான படமாகும்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருந்தால் இந்த பட்டியலில் முதல் இடத்தை கூட இப்படம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

4. வார் 2
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்தது மற்றும் கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. திரையரங்குகளில் இப்படம் மீதான வரவேற்பு குறைந்தாலும் இணையத்தில் இப்படம் பெரும் பேசுபொருளாகி இப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

5. சனம் தேரி கசம்
சனம் தேரி கசம் இந்தாண்டு வெளியான படம் கிடையாது. 2016 ஆம் ஆண்டு வெளியான படம். அப்படியிருக்க இந்த படம் பட்டியலில் இடம்பெற காரணம் ரீரிலீஸ் தான்.
2016-ம் ஆண்டு ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான சனம் தேரி கசம் படம் ரூ.7 கோடி வசூலை ஈட்டி தோல்வி அடைந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 7-ம் தேதி இந்தப் படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. காதல் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுது. இந்தப் படம் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
தற்போது ரீரிலீஸ் கலாச்சாரம் இந்தியா முழுவதும் வைரஸ் போல பரவியுள்ளது. அதன் காரணமாக இப்படம் இந்த பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.

6. மார்கோ
மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்தி மொழியில் அதிக வசூலித்த மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்த இப்படம் மொத்தமாக 100 கோடி வசூலை கடந்தது. இந்தி பேசும் மக்களிடையே பெட்ரா வரவேற்பால் இந்த பட்டியலில் இப்படம் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.

7. ஹவுஸ்புல் 5
அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
ஹவுஸ்புல் 4 பாகங்கள் பெற்ற வெற்றியால் ஹவுஸ்புல் 5 படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பினால் தான் இப்படம் இந்த பட்டியலில் 7 அம இடம் பிடித்துள்ளது.
8. கேம் சேஞ்சர்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இந்த பட்டியலில் இப்படம் 8 ஆம் பிடித்துள்ளது.

9. மிசஸ்
Mrs' என்பது 2025-ல் அதிகம் பேசப்பட்ட இந்திய படங்களில் ஒன்று. மலையாளத்தில் வெளியான The Great Indian Kitchen படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன இந்த படம், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் சந்திக்கும் அதிகாரம், அடக்குமுறை மற்றும் அடையாள இழப்பு போன்ற பிரச்சினைகளை நுணுக்கமாக பேசுகிறது.
இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள சன்யா மல்ஹோத்ரா, பாரம்பரிய குடும்ப அமைப்பில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தையும், அவளின் மௌன எதிர்ப்பையும் மிக யதார்த்தமாக வழிபடுத்தியுள்ளார்.
பெரிய ட்விஸ்ட், அதிக வசனங்கள் இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் சமூக உண்மைகளை சொல்வதே 'Mrs' படத்தின் பலம். பெண்களின் உழைப்பு, சமத்துவம், திருமண வாழ்க்கையில் உள்ள மறைமுக வன்முறை போன்ற விஷயங்களை நேர்மையாக பேசும் இந்த படம், வசூலை விட விவாதத்திலும், தேடலிலும் அதிக கவனம் பெற்றது.

10. மகாவதார் நரசிம்மா
அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
வெறும் ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.
வட இந்தியாவில் இப்படம் பெற்ற பெரிய வெற்றியால் இந்த பட்டியலில் இப்படம் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.
- 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
- புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் பல்வேறு மாநிங்களில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பகிரங்கமாக ஆதாரங்களுடன் குற்றம்சாட்டினார்.
கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடக மாநிலம் ஆலந்து தொகுதியில் சுமார் 6 ஆயிரம் வாக்குகளை நீக்க முயற்சி செய்யப்பட்டது என்பது குறித்து ராகுல் காந்தி அப்போது செய்தியாளர்களை சந்தித்து ஆதாரங்களை வெளியிட்டார்.
அப்போது, வாக்கு திருட்டு புகாரில் ஆதாரங்கள் உள்ளது. யதார்த்த நிலையை முற்றிலும் அழிக்கப்போகும் ஹைட்ரஜன் குண்டை வெளிப்படுத்த போகிறோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதன்படி வாக்குத் திருட்டு பற்றிய ஹைட்ரஜன் குண்டை கடந்த நவம்பர் 5ம் தேதி அன்று ராகுல் காந்தி ஒவ்வொன்றாக வெளியிட்டார். இது தொடர்பாக 'THE H FILES' என்ற தலைப்பில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளும் ஹரியானாவில் காங்கிரஸ் தான் வெற்றி பெறும் என்று கூறின. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அஞ்சல் வாக்குகள் உண்மையான வாக்குகளிலிருந்து வேறுபட்டிருந்தன என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன்பு ஹரியானாவில் இது நடந்ததில்லை.
நீங்கள் பார்க்கப் போகும் இந்தத் தகவலை நான் முதன்முதலில் பார்த்தபோது, அதை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தகவல்களை நான் பலமுறை சரிபார்த்தேன்.
ஹரியானாவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இரண்டு கோடி. அதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்ட வாக்குகள் ஆகும். அதாவது எட்டு வாக்காளர்களில் ஒரு வாக்காளர் போலி வாக்காளராக இருந்திருக்கிறார்.

5 லட்சத்து 21 ஆயிரத்து 619 போலி வாக்காளர்கள் 93 ஆயிரத்து 174 வாக்குகள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் வாக்களித்திருக்கிறார், பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டமன்ற தொகுதியிலும் வாக்களித்திருக்கிறார்.
பாஜகவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தலைவர்கள் ஹரியானாவிலும் வாக்களித்திருக்கிறார்கள், உத்தரபிரதேசத்திலும் வாக்களித்திருக்கிறார்கள் எனக் கூறி அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டு குற்றம் சாட்டினார்.
மேலும் அவர், அரியானா தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜக கண்டிப்பாக ஆட்சியைப் பிடிக்கும் அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார் அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக gen z தலைமுறையினர் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள் ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் வாக்கு செலுத்தி இருக்கிறார். ஷிமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, விமலா என வெவ்வேறு பெயர்களில் இந்த பெண்மணி ஹரியானாவின் ஒரு தொகுதியில் 10 வெவ்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 22 வாக்குகளை செலுத்தி இருக்கிறார்.
பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்தப் பெண்மணி நினைத்தால் ஒவ்வொரு வாக்குப் பதிவு மையங்களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாக்களித்திருக்கலாம் அதனால்தான் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி காட்சிகளை வெளிவிடாமல் தேர்தல் ஆணையம் அளித்திருக்கிறது.
இதுபோல ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடி மையங்களில் இலட்சக்கணக்கான போலி வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு வயதுகளின் வெவ்வேறு அடையாள அட்டைகளை வெவ்வேறு முகவரிகளில் இருந்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக ராகுல் காந்தி வெளியிட்டார்.
ஹரியானாவில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது . இவர்கள் அனைவரும் முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தவர்கள். ஆனால் பாஜக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்துள்ளனர்.
ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜக நிர்வாகி வீட்டில் 66 வாக்குகள் உள்ளதாக மோசடி செய்துள்ளனர் என்று ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.
ஹரியானாவை தொடர்ந்து தரவுகளை பார்த்த பிறகு மத்தியபிரதேசம், மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

மேலும் அவர், "பா.ஜ.க மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குகளை திருடுகிறார்கள். வாக்கு திருட்டு தொடர்பாக எங்களிடம் கூடுதல் ஆதாரங்கள் உள்ளன. அவற்றை படிப்படியாக வழங்குவோம். இப்போது கொஞ்சம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் எனது பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அம்பேத்கரின் அரசியலமைப்பு தாக்கப்படுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆகியோர் கூட்டு கூட்டாண்மையை உருவாக்கி இதை நேரடியாக செய்கிறார்கள்.
இதன் காரணமாக நாடு அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறது. பாரத மாதாவுக்கு தீங்கு விளைவிக்கப்படுகிறது. பாரத மாதா சேதப்படுத்தப்படுகிறது.
வாக்கு திருட்டு என்பது முக்கிய பிரச்சினை. தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துடன் (எஸ்.ஐ.ஆர்) இணைத்து மறைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
எங்கள் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மோடி, அமித் ஷா மற்றும் தேர்தல் ஆணையத்திடம் எந்தப் பதிலும் இல்லை. ஏனெனில் உண்மை இப்போது மக்களுக்கு முன்னால் வந்துவிட்டது.

பிரதமரும் அமித் ஷாவும் அவர்கள் விரும்பிய இடத்திற்குச் செல்லலாம். ஆனால் அவர்கள் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதற்காக இறுதியில் பிடிபடுவார்கள்.
பீகாரில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முதல்வா் நிதீஷ் குமாருக்கு விருப்பமில்லை.
பிரதமரும், உள்துறை அமைச்சரும், தேர்தல் ஆணையமும் வாக்குகளைத் திருடுகிறார்கள். பீகார் மக்கள் விழிப்புடன் இருந்து ஒன்றுகூடி வாக்குத் திருட்டை தடுத்து நிறுத்தினால் இந்தியா கூட்டணி 100 சதவீதம் ஆட்சியமைப்பது நிச்சயம்" என்று ராகுல் காந்தி கூறினார்.
- சிஎஸ்கே அணி பந்து மாற்றியதாக நடந்த சம்பவம் சர்ச்சையானது.
- நடுவர் அவுட் கொடுக்காமலே இஷான் கிஷன் வெளியேறியது சர்ச்சையானது.
2025-ம் ஆண்டு ஐபிஎல் (IPL 18) தொடரில் பல சர்ச்சைகள் நடந்தன. இந்தத் தொடர் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, மே மாதம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது.
இந்த தொடரில் முக்கிய சர்ச்சைகளில் முதலாவதாக சிஎஸ்கே அணியின் பந்து மாற்றம் (Ball-Tampering)குற்றச்சாட்டு:
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கலீல் அகமது ஆகியோர் பந்து மாற்றியதாக சர்ச்சைகள் எழுந்தது. இது தொடர்புடைய வீடியோ ஒன்று வைரலாகி, பந்தை மாற்றியதாக சந்தேகம் எழுந்தது. இது தொடரின் தொடக்க வாரத்திலேயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அம்பயர் முடிவுகள் மற்றும் சர்ச்சைக்குரிய அவுட்டுகள்:
பல போட்டிகளில் அம்பயர்களின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின. உதாரணமாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அம்பயர் அவுட் கொடுப்பதற்கு முன்பே வெளியேறியது. அதுவரை அவுட் கொடுக்காமல் இருந்த அம்பயர் அவர் வெளியேறுவதை பார்த்ததும் அவுட் கொடுக்கலாமா வேண்டாமா என்பது போல அவுட் கொடுத்தார். இது மற்ற அணி ரசிகர்கள் அம்பானி காசு கொடுத்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகியது.
பிட்ச் மற்றும் ஹோம் அட்வான்டேஜ் சர்ச்சை:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரகானே, ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டதாக புகார் கூறினார். இது ஹோம் அட்வான்டேஜ் குறித்த விவாதத்தை தூண்டியது.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக தொடர் இடைநிறுத்தம்:
மே 9-ஆம் தேதி, எல்லைப் பதற்றம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தொடர் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டது. தர்மசாலாவில் ஒரு போட்டி நடுவில் கைவிடப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் முஸ்தபிஸுர் ரஹ்மான் ஒப்பந்தம்:
பங்களாதேஷ் வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை ரிப்ளேஸ்மெண்ட் வீரராக ஒப்பந்தம் செய்ததற்கு சமூக வலைதளங்களில் #BoycottDelhiCapitals என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி, அரசியல் பதற்றம் காரணமாக விமர்சனங்கள் எழுந்தன.
கொண்டாட்ட சோகம்:
RCB வெற்றிக்குப் பிறகு பெங்களூரு ஸ்டேடியம் வெளியே கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் நடந்தது – இது ஆண்டின் மிக மோசமான சம்பவமாக கருதப்பட்டது.
இவை தவிர, வீரர்கள் இடையே சண்டைகள், அம்பயர் கொண்டாட்டங்கள் போன்றவையும் சர்ச்சைகளை அதிகரித்தன. இந்தத் தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் சர்ச்சைகளையும் தந்தது.
- 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
- மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின.
செயற்கை நுண்ணறிவான ஏஐ தொழில்நுட்பம் இந்த ஆண்டு அசுர வளர்ச்சி கண்டது. கூகுள் ஜெமினி, ஓபன் ஏஐ சாடஜிபிடி, மெட்டா ஏஐ, பெரிப்ளெக்ஸிட்டி ஏஐ, டீப்சீக் என ரக ரகமாக வெகு ஏஐ மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
குறிப்பாக நிறுவனங்கள் தங்கள் பணிகளை எளிதாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கின.
இதனால் மனிதர்கள் செய்து வந்த பல தொழில்நுட்ப வேலைகளுக்கு ஏஐ ஆப்பு வைத்தது. நடப்பாண்டில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தன. இதனால் பலர் பாதிக்கப்பட்டனர்.

சர்வதேச பணிநீக்க கண்காணிப்பு வலைத்தளமான 'Layoffs.FYI' இன் தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள 218-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 1,22,000-க்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
அமேசான், இன்டெல், டிசிஎஸ், மைக்ரோசாப்ட் மற்றும் ஆக்சென்ச்சர் போன்ற பெருநிறுவனங்கள் அதிக பணிநீக்கங்களை மேற்கொண்டுள்ளன.
செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆட்டோமேஷனை நோக்கி பெரு நிறுவனங்கள் நகர்ந்து வருவதே இந்த பணிநீக்கங்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஏஐ மற்றும் மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பு ஆகிய காரணங்களை நிறுவனங்கள் வெளிப்படையாகவே பணிநீக்கங்களின்போது குறிப்பிடுகின்றன.
கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை AI, கிளவுட் கம்ப்யூட்டிங் மீது திருப்பின. இதன் விளைவாக, பாரம்பரிய பிரிவுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.

தொழில்நுட்பம் மட்டுமின்றி உற்பத்தி, நிதி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கியத் துறைகளில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு நடந்துள்ளது.
2025 இல் அதிக பணிநீக்கம் நடைபெற்ற நிறுவனங்களின் பட்டியல்
1) இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்தாண்டு 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
2)மைக்ரோசிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் (Intel) தனது 24,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
3) தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon) 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
4) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஏஐ மீது முதலீடு செய்வதால் செலவுகளை குறைக்கும் நோக்கில் பல்வேறு பிரிவுகளில் 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. குறிப்பாக இதில் பலர் சாப்ட்வேர் இன்ஜீனியர்கள் ஆவர்.
5) ஐ.டி. கம்பெனியான அக்சென்சர் (Accenture) ஏஐக்கு தங்களை தகவமைத்து கொண்டிராத 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
6) இந்தியாவை சேர்ந்த ஐ.டி. சேவை நிறுவனமான டி.சி.எஸ் (TCS) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இது அந்நிறுவனத்தின் வரலாற்றிலேயே ஓராண்டில் நடந்த மிகவும் அதிக பணிநீக்கம் ஆகும்.
7) எலக்ரானிக் உற்பத்தி நிறுவனமான பானாசோனிக் (Panasonic) 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.
8) எரிசக்தி துறையில் முக்கிய நிறுவனமான செவ்ரான் (Chevron) 8,000 முதல் 10,000 ஊழியர்களை நீக்கியது.
9) அழகுசாதனப் பொருட்கள்நிறுவனமான எஸ்டீ லாடர் (Estee Lauder) விற்பனைச் சரிவைச் சமாளிக்க 7,000ஊழியர்களை நீக்கியது.
10) தொலைத்தொடர்பு நிறுவனமான டெலிஃபோனிக்கா (Telefonica) 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
செலவுக் குறைப்பு மற்றும் செயல்திறனை அதிகரித்தல், ஏஐக்கு தகவமைத்துக் கொள்ளுதல் ஆகிய காரணங்களையே பெரும்பாலான நிறுவனங்கள் பணிநீக்கங்களுக்கு மேற்கோள் காட்டி உள்ளன.

இவை தவிர்த்து பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் கணிசமான பணிநீக்கங்களை இந்தாண்டு மேற்கொண்டுள்ளன. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், அசென்சர், அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய பிரிவில் பணியாற்றி வந்த ஊழியர்களும் இந்த பணிநீக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்டனர்.
ஏஐ மென்மேலும் வளர்ந்து வருவதால் இந்த பணிநீக்க போக்கு அடுத்தாண்டும் இன்னும் கூடுதலாக தொடரும் என்றே தொழிலுட்ப வட்டாரங்கள் கணிக்கின்றன. ஒட்டுமொத்தமாக மனிதர்களின் வேலைகளை தொழில்நுட்பங்கள் பறிக்கும் சைன்ஸ் பிக்ஷன் அதிபுனைவு நினைவாகி வருகிறது.
- லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன.
- இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.
பெரும் நட்சத்திரங்கள், நூறு கோடி பட்ஜெட், பிரம்மாண்ட விளம்பரம் அசெய்தால் தான் படம் வெற்றி பெறும் என்ற பார்முலாவை மாற்றி நல்ல கதை, சுவாரசியமான திரைக்கதை ஆகியவற்றால் 2025-ல் சில தமிழ் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்தன.
"சிறிய பட்ஜெட் = சிறிய வசூல்" என்ற பழைய கணக்கை முறியடித்து, லோ பட்ஜெட்டில் தயாராகி, பல மடங்கு லாபத்தை இந்தாண்டு சில படங்கள் குவித்தன. இந்த படங்கள், தயாரிப்பாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரே நேரத்தில் நம்பிக்கை ஊட்டின.
OTT, சிங்கிள் ஸ்க்ரீன், மல்டிப்ளெக்ஸ் என எல்லா தளங்களிலும் பொதுமக்களின் பாராட்டும், குடும்ப ஆதரவும் கிடைத்த படங்கள் தான் 2025-ன் உண்மையான பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள். அவ்வகையில் இந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் தயாராகி பல மடங்கு லாபம் கொடுத்த டாப் 5 வெற்றி படங்களை இந்த தொகுப்பில் காணலாம்

1. டூரிஸ்ட் பேமிலி:
பட்ஜெட்: ரூ.7 - 8 கோடி
வசூல்: ரூ.90 கோடி
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் உருவான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கிய இப்படம் உலக அளவில் பெரும் வரவெற்பிற் பெற்று வசூலை வாரி குவித்தது.
இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாயை வசூலில் கடந்தது. உலகளவில் சுமார் ரூ.90 கோடி வசூலை குவித்தது.கம்மியான பட்ஜெடில் திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட மில்லியன் டால்டர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு 10 மடங்கு லாபம் கொடுத்து மாபெரும் வெற்றியை கொடுத்துது.

2. தலைவன் தலைவி:
பட்ஜெட்: ரூ.25 கோடி
வசூல்: ரூ.100 கோடி
விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமாக உருவான 'தலைவன் தலைவி' படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ரூபாய் 25 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம், ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ஒரு மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியை இந்த ஆண்டு பதிவு செய்தது.

3. டிராகன்:
பட்ஜெட்: ரூ.35 கோடி
வசூல்: ரூ.150 கோடி
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் வெளியான டிராகன் திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்து சாதனை படைத்தது.
லவ் டுடே படத்தை தொடர்ந்து டிராகன் படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு வெற்றி படமாக அமைந்தது. இப்படம் மொத்தமாக உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது.
பட்ஜெட் அளவில் இப்படம் இந்த பட்டியலில் உள்ள மற்ற படங்களைவிட சற்றுக் கூடுதலானாலும், அதன் அபாரமான வசூல் காரணமாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது

4. மாமன்:
பட்ஜெட்: ரூ.10 கோடி
வசூல்: ரூ.50 கோடி
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக தயாரான இப்படம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.
ரூபாய் 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 50 கோடி வரை வசூல் செய்து கோலிவுட் சினிமா வட்டாரத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

5. குடும்பஸ்தன்:
பட்ஜெட்: ரூ.8 கோடி
வசூல்: ரூ.28 கோடி
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் 'குடும்பஸ்தன்'. இப்படத்தில் சான்வி மேகனா கதாநாயகியாக நடித்திருந்தார்.
ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டது.
வெறும் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.28 கோடி வசூலை குவித்து சிறிய படங்களும் பெரிய வசூலை குவிக்கும் என்று இந்தாண்டு தொடக்கத்தில் எடுத்துக்காட்டியது.
- கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
- அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.
கூட்ட நெரிசல்..!
கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவங்களை வடமாநிலங்களில் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் தமிழ்நாட்டில் நிகழ்ந்ததா என்றால் அது கடந்த ஆண்டு அக்டோபர் 6-ந் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
அதன்பிறகு அரசியல் வரலாற்றில் மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் இதுவரை இல்லாத மிகவும் சோகமான, கருப்பு நாளாக 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி மாறியது.
தமிழ்நாட்டில் புதிதாக கட்சி தொடங்கிய விஜய், சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி மக்கள் சந்திப்பு என்ற அரசியல் பரப்புரை கூட்டங்களை நடத்தி வந்தார். அதன்படி, 27-ந்தேதி சனிக்கிழமை மதியம் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விஜய் பங்கேற்று பொதுமக்களிடையே உரையாற்றுவதை காண காலை முதலே மக்கள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.

குறுகிய இடத்தில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். மேலும் காலை முதல் தண்ணீர், உணவு ஏதுமின்றி வெயிலில் இரவு வரை காத்திருந்ததுதான் கொடுமை. அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு வராத விஜய் பல மணி நேரம் தாமதமாக வந்து மக்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசும்போதே கூட்டத்தில் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விஜய் பேசிமுடித்துவிட்டு சென்றதும் அங்கு கூடியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் வெளியே செல்ல முற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் சம்பவ இடத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். இதற்கிடையே பரப்புரை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கூட்ட நெரிசல் குறித்து தெரிந்ததும் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்னைக்கு திரும்பியது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதலில் கரூர் நகர காவல்துறையினர் விசாரணை தொடங்கிய நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. எனினும் இவ்வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் ஒரு குழுவை அமைத்து விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, விசாரணையை தொடங்கி நடத்தி வரும் சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணையை நடத்தி முடித்துள்ளனர். மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையின் போது இறந்தவர்கள் கூட்டத்தில் மிதிப்பட்டு இறந்தார்களா, மூச்சுத் திணறி இறந்தார்களா, அல்லது அதிர்ச்சியில் இறந்தார்களா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு த.வெ.க.வினரே முழு காரணம் என்று குற்றம்சாட்டப்படும் நிலையில், த.வெ.க.வினரோ ஆளும் கட்சியின் சதிதான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என்று தொடக்கம் முதலே குற்றம்சாட்டி வருகிறது.
எது, எப்படியோ... கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தமிழ்நாட்டில் எவராலும் மறக்கமுடியாத துயர நிகழ்வாக மாறிவிட்டது. இந்நிகழ்விற்கு பிறகு மக்கள் தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் வேறு, சினிமா வேறு.. என்ற வகையில், பிரித்து பார்க்க வேண்டும்.
மேலும் அரசியல் சார்ந்த கூட்டமோ, இல்லை வேறு எந்த கூட்டமாக இருந்தாலும் சரி முதியவர்கள், கைக்குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் செல்வதை தவிர்ப்பது நல்லது.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கடந்து அரசியல் கட்சிகள், தலைவர்கள், மக்கள் என அனைவரும் அவரவர் பாதையில் பயணிக்க தொடங்கிவிட்டனர். எனினும், இத்துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் அதிலிருந்து மீண்டுவர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.
- ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
- "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது
கடந்த 2023 அக்டோபர் முதல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை மற்ற அரபு நாடுகள் வேடிக்கை பார்த்த நிலையில் ஈரான் அதற்கு எதிராக செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில்தான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. இது மத்திய கிழக்கில் போருக்கு வித்திட்டது.
சுமார் 12 நாட்கள் நீடித்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர், மேலும் பல கட்டமைப்புகள் சேதமடைந்தன.
போர்.. ஆமாம் போர்!
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல், தனது இருப்புக்கே நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இதனை சீர்குலைக்க இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அது போதாது என்று முடிவெடுத்தது. எனவே ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
சரியாக ஜூன் 13 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்களையும் ராணுவ வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், டிரோன்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பல போதும்மக்களும், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் வேறெந்த நாட்டையும் விட வலுவான ராணுவ கட்டமைப்பை கொண்ட ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கியது.
"ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது. இதனால் போர் மூண்டது. இதில் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா களமிறங்கியது.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசியது. மேலும் ஈரான், காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் என்ற மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

இதற்கிடையே இஸ்ரேலும் ஈரானும் இணைந்து தன்னை குறிவைப்பதை உணர்ந்த ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி தலைமறைவானார்.
ரகசியான நிலத்தடி மறைவிடத்தில் அவர் தஞ்சமடைந்தார். தான் ஒரு வேலை மரணித்தால் தனது உச்ச தலைவர் பொறுப்புக்கு 3 பேரின் பெயர்களை அவர் முன்மொழித்ததாகவும் தகவல் உள்ளது.

இஸ்ரேல் மீது மழையாக பொழிந்த ஈரான் ஏவுகணைகளை THAAD அமைப்பு இடைமறித்த அதே வேலையில், பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா நேரடியாக போரில் குதித்தது.
நிலத்தடியில் உள்ள ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை அனுப்பி 'பங்கர் பஸ்டர்' என்ற நிலத்தடி இலக்குகளை தாக்கும் சக்திவாய்ந்த குண்டுகளைவீச செய்தார் டிரம்ப்.
இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மூன்றும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் ஈரான் இதுநாள் வரை இதை மறுத்து வருகிறது.
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் க்ரோஸி கூறியதே இதற்கு சான்று.
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. இதனால் இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு சீனா, ரஷியா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரம் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆதரவளித்தன.
அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதுடன், இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, கத்தார் போன்ற நாடுகளின் சமரச முயற்சியுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன.
ஜூன் 23 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்தார்.

இருப்பினும், ஆரம்பத்தில் போர் நிறுத்த மீறல்கள் இருந்தன. ஜூன் 25 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. எனவே 12 நாட்கள் மோதலுக்கு பிறகு இந்த போரானது முடிவுக்கு வந்தது.
12 நாள் மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் தோராயமாக 1,190 பேர் வரை ஈரானில் பலியாகினர். அவர்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சரிசமமாக அடங்குவர்.
ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் மிக குறைவு என்றபோதும் இஸ்ரேலில் பல உள்கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் அழிக்கப்பட்டது.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து வார்த்தை மோதல்கள் தொடர்ந்தன. அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் தாக்க தயாராக இருந்ததாவதும், அவரை அசிங்கமான மரணத்திலிருந்து தான் காப்பாற்றியதாகவும் அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார்.

அதேநேரம், போர் நிறுத்தத்திற்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயத்துல்லா காமேனி, அமெரிக்காவின் செல்ல நாய் இஸ்ரேல், வேரிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் என்றும் அது ஈரானை தாக்கி பெரிய தவறுசெய்துவிட்டதாகவும் அதன் விளைவை அது அனுபவிக்கும் என்றும் எச்சரித்தார். மேலும் எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் புகட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில் மத்திய கிழக்கு தொடங்கி மூன்றாம் உலகப் போராக உருவாக வாய்ப்புகள் அதிகம் கொண்ட இந்த மோதல் முடிவடைத்திருந்தாலும், இந்த அமைதி தாற்காலிகமே என புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என பேச்சுகள் எழுந்தன.
- தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, கடந்த ஜூலை மாதம் 21ம் தேதி அன்று திடீரென ராஜினாமா செய்தது தேசிய அரசியலில் பெரும் சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.

அவரது ராஜினாமா கடிதத்தில் "உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக" தான் விலகுவதாகக் குறிப்பிட்டிருந்தார். எனினும், அவரது திடீர் முடிவு பல ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவுக்கு அவரது உடல்நலக்குறைவைத் தாண்டி, வேறு சில வலுவான காரணங்கள் இருந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசப்பட்டது.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்க தீர்மான நோட்டீஸை எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் தன்கரிடம் சமர்ப்பித்தன.

இதனை ஜெகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது. ஊழல் ஒழிப்பு குறித்து அரசு வேறு வழியில் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், தன்கரின் இந்த நடவடிக்கை, அரசுடன் அவருக்கு பிளவு ஏற்பட்டதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஆளும் கட்சி தன்கர் மீது அவநம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரத் தயாரானதாகக் கூறப்பட்டது. இதிலிருந்து தப்பிக்கவே அவர் ராஜினாமா முடிவை எடுத்ததாகவும் பரவலாக பேசப்பட்டது.
ராஜினாமா செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முக்கிய மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்கவில்லை. இது தன்கரை அவமதிக்கும் விதமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பீகார் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமாரை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வந்து அவருக்குத் துணை ஜனாதிபதி பதவியை அளிக்கும் திட்டம் ஆளும் கட்சிக்கு இருந்தது என்றும், அதற்காகவே தன்கர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டார் என்றும் செய்தி பரவியது.
இதற்கிடையே, ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
துணை ஜனாதிபதிக்கான தேர்தல்:
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், முன்னாள் மக்களவை உறுப்பினர் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர் ஆவார்.
இவருக்கு எதிராக, இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான பி.சுதர்சன் ரெட்டி போட்டியிட்டார். இதில், சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஜூலை 21 அன்று ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்த பிறகு, செப்டம்பர் 12 அன்று சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவியேற்றார்.
சர்ச்சைக்கிடமாக ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்றதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது உயர் அரசியலமைப்புப் பதவியான மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
- 2025-ம் ஆண்டில் 10 விளையாட்டு வீரர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.
- அதில் ஒரு விளையாட்டு வீரர் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு இந்த ஆண்டே விவாகரத்து பெற்றுக் கொண்டார்.
திருமணமான பலர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற கோர்ட்டுக்கு செல்வது அதிகமாக உள்ளது. பிரபலங்கள் முதல் ஏழை எளிய மக்களும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்வது தற்போதைய காலங்களில் எளிதாக மாறிவிட்டது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டில் விவாகரத்து பெற்ற விளையாட்டு வீரர்கள் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுஸ்வேந்திர சாஹல். அவர் அவரது மனைவி தனஷ்ரீ வர்மா (Dhanashree Verma, நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர்) உடனான திருமணம் வாழ்க்கை 2020-ல் தொடங்கியது. அவர்கள் 2023 முதல் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மார்ச் 2025-ல் விவாகரத்து உறுதிப்படுத்தப்பட்டது.

முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக். 2025 தொடக்கத்தில் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் (Aarti Ahlawat) உடனான திருமணத்தில் பிரிவு ஏற்பட்டதாக பல வதந்திகள் பரவின. அவர்கள் சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்க்கை வாழ்ந்த பிறகு, சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்ததாகவும், தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

ரியான் லோச்டே (Ryan Lochte): ஒலிம்பிக் நீச்சல் வீரர். அவரது மனைவி கெய்லா ரீட் (Kayla Reid) ஜூன் 4, 2025 அன்று விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

டைரீக் ஹில் (Tyreek Hill): NFL (அமெரிக்கன் கால்பந்து வீரர்) மியாமி டால்பின்ஸ் அணி. அவரது மனைவி கீடா (Keeta) ஏப்ரல் 2025 இல் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இது அவர்களது இரண்டாவது முறை விவாகரத்து முயற்சி.

டிராவிஸ் ஹண்டர் (Travis Hunter): NFL வீரர். அவரது மனைவி லீனா லெனீ (Leanna Lenee) ஆகஸ்ட் 2025-ல் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார், மேலும் $40 மில்லியன் இழப்பீடு கோரினார். இவர்கள் இந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மாட் கலில் (Matt Kalil): முன்னாள் NFL வீரர். அவரது மனைவி ஹேலி கலில் (Haley Kalil) நவம்பர் 2025 இல் விவாகரத்து கோரினார். அவர்களது பிரிவுக்கு அவரது உடல் அளவு தொடர்பான பிரச்சினைகள் காரணமாகக் கூறப்பட்டது.

இமான் ஷம்பெர்ட் (Iman Shumpert): முன்னாள் NBA (பாஸ்கெட்பால்) வீரர். மார்ச் 2025 இல் அவரது மனைவி டெயானா டெய்லர் (Teyana Taylor) உடனான விவாகரத்து இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

பாஸ்டியன் ஷ்வெயின்ஸ்டெய்கர் (Bastian Schweinsteiger): முன்னாள் கால்பந்து வீரர் (ஜெர்மன்). டிசம்பர் 2025-ல் அவரது மனைவி அனா இவானோவிச் (Ana Ivanovic) உடனான 9 ஆண்டு திருமணம் முடிவுக்கு வந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அனா இவானோவிச் (Ana Ivanovic): முன்னாள் டென்னிஸ் வீராங்கனை (செர்பியன், முன்னாள் உலக நம்பர் 1). மேலே குறிப்பிட்ட அதே வழக்கில், அவர் நவம்பர் 2025-ல் விவாகரத்து கோரினார்.

ஆஸ்கர் டி லா ஹோயா (Oscar De La Hoya): பாக்ஸிங் வீரர். நவம்பர் 2025-ல் அவரது மனைவி மில்லி கோரெட்ஜர் (Millie Corretjer) உடனான விவாகரத்து தீர்வு அடைந்தது. அவர்களது பிரிவு 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.

- இந்தாண்டு பல நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர்.
- இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்
2025 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களுக்கு மகழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் இந்த வருடம் புதிய வெளிச்சம் பெற்றது.
பல நடிகர், நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர். இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விதமும் அதற்கு ரசிகர்கள் பொழிந்த வாழ்த்து மழையும் இணையத்தை ஆக்கிரமித்தன.
அவ்வகையில் 2025-இல் குழந்தை பெற்ற இந்திய திரை பிரபலர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1. சினேகன் - கன்னிகா:
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு துவக்கத்தில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு காதல் கவிதை என நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டினார்.

2. பிரேம்ஜி:
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு இந்தாண்டு இறுதியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துனர். தனது 47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. விஷ்ணு விஷால்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இந்தாண்டு துவக்கத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டினார்.

4. மாதம்பட்டி ரங்கராஜ்... ஜாய் கிரிசில்டா
தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் அப்பா நான் தான் என்று ஒப்புக்கொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ், DNA பரிசோதனை தயார் என்று தெரிவித்துள்ளார்.

5. விக்கி கவுசல் - கத்ரீனா கைப்
பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதியில் அவர்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

6. கியாரா அத்வானி
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் நடிப்பில் இந்தாண்டு கேம்சேஞ்சர், வார் 2 படங்கள் வெளியாகின.
கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.
இதையடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்தாண்டு இறுதியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

7. பரினீதி சோப்ரா
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.

8. ராஜ்குமார் ராவ்
பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், 2021 ஆம் ஆண்டு பத்ரா லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்தாண்டு ராஜ்குமார் ராவ் - பத்ரா லேகா தம்பதிக்கு இந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதி தங்களது 4 ஆம் ஆண்டு திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.






