என் மலர்
நீங்கள் தேடியது "குமரி ஆனந்தன்"
- தமிழ்நாடு சட்டசபைப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
- பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர்வர முனைந்து வென்றவர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழக அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் இது...
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி பிறந்தவர் குமரி அனந்தன்.
பெருந்தலைவர் காமராஜரின் தீவிர ஆதரவாளராக விளங்கியவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 15.08.1984 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர்.

இலக்கியச் செல்வராகவும், மேடைப் பேச்சாளராகவும் எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாக திகழ்ந்தவர். 1977-ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பலமுறை அவையில் போராடி, பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டு, சோர்ந்துவிடாமல் அவரின் தொடர் முயற்சியால் 20.11.1978-ல் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, பாராளுமன்றத்தில் தொடர்ந்து தமிழிலேயே பேசியவர். இதுகுறித்து மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, "தனிமரம் தோப்பாகாது" என்ற பழமொழியை மாற்றி அமைத்து விட்டார் என்ற பாராட்டினைப் பெற்றவர்.
தமிழ்நாடு சட்டசபைப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.
தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர். செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தவர். எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு பாரதியார் பெயரிட உண்ணா நோன்பிருந்து கோரிக்கையில் வெற்றி பெற்றவர்.
பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர்வர முனைந்து வென்றவர். வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும் சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்தவர்.

பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள் என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும், தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர்.
நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன், பார் அதிரப் பாடிய பாரதி உட்பட 29 நூல்களை எழுதியவர்.
சென்னையில் உள்ள பெரும்பான்மை கல்லூரிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சென்று சொற்பொழிவாற்றியதோடு, மாணவ, மாணவிகளுக்கும் இக்கலையில் பயிற்சி அளித்ததோடு, மாணவர்களை மேடைகளில் பேச ஆக்கமும், ஊக்கமும் அளித்த சிறப்பிக்குரியவர்.
சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்ற பாரதியின் வாக்கை செயல்படுத்தியவர் என போற்றி, தமிழ் மக்கள் மனதில் தனக்கெனத் தனியிடம் பெற்ற, இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு 2024-ல் சுதந்திர தின விழாவில் 'தகைசால் தமிழர் விருது' வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதனை தொடர்ந்து வயது மூப்பின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி குமரி அனந்தன் தனது 93 வது வயதில் காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.
பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இவரது மகளாவார். மறைந்த தொழிலதிபர் எச். வசந்தகுமார் இவரது தம்பி ஆவார்.
நாமக்கல்லில் இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாமக்கல் கவிஞருக்கு சிலை வைக்க வேண்டும். சிலையை நாமக்கல்லிலும் வைக்கலாம். சென்னை போன்ற இடங்களிலும் வைக்கலாம். அவருடைய நினைவை போற்றுகின்ற வகையில் நினைவு மண்டபமும் கட்டலாம். முதல் முதலாக தொடங்க வேண்டியது நாமக்கல்லில் தான். அரசு விழாவாக அவருடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று வேண்டுகிறேன். இல்லையென்று சொன்னால் எங்களை போன்றவர்கள் அல்ல, நாமக்கல் கவிஞரை போற்றுகின்ற அத்தனை பேர்களும், சேர்ந்து நாமக்கல் கவிஞர் சிலையை நிறுவுவதற்கு முன்வரவேண்டும். அனுமதியை வேண்டுமானால் தாருங்கள்.
ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்கள் எந்த பதவியில் இருந்தாலும், பொறுப்பில் இருந்தாலும் அப்படி நடக்கவில்லை, மக்கள் நம்புகின்ற வகையில் ஆதாரங்களோடு வெளியில் சொன்னால், ஆதாரங்களை காட்டினால் அவர்கள் இருக்கின்ற பதவியிலேயே இருக்கலாம். இல்லையென்றால் பதவியில் இருப்பது கூட நியாயமில்லை.
இவ்வாறு அவர் கூறினார். #KumariAnanthan






