என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவே நவராத்திரி
    • ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    'நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்று பொருள். ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவை, நவராத்திரி" என்று சிறப்பிக்கிறோம். இந்த விழாவில் ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும், ஒன்பது என்ற எண்ணிக்கையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்பது.. ஒன்பதாக சொல்லப்பட்ட சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     இசை

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் இசையை வாசிப்பார்கள். அதன் விவரம் வருமாறு:-

    முதல் நாள் - மிருதங்கம்

    இரண்டாம் நாள் - புல்லாங்குழல்

    மூன்றாம் நாள் - வீணை

    நான்காம் நாள் - கோட்டு வாத்தியம்

    ஐந்தாம் நாள் - ஜல்லரி வாத்தியம்

    ஆறாம் நாள் - பேரி

    ஏழாம் நாள் - படகம்

    எட்டாம் நாள் - கும்மி

    ஒன்பதாம் நாள் - கோலாட்டம்

     மங்கலப்பொருள்

    நவராத்திரி விழாவின்போது, வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை வழங்க வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வழங்க வேண்டிய பொருட்களின் விவரம் வருமாறு:-

    முதல் நாள் -புனுகு

    இரண்டாம் நாள் - ஜவ்வாது

    மூன்றாம் நாள் - கஸ்தூரி

    நான்காம் நாள் - அரகஜா

    ஐந்தாம் நாள் - சந்தனம்

    ஆறாம் நாள்- குங்குமம்

    ஏழாம் நாள்-சாந்து

    எட்டாம் நாள் - ஸ்ரீ சூரணம்

    ஒன்பதாம் நாள் மை

     தியானம்

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு தேவியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அந்த தேவியரின் பெயர்கள் விவரம்:-

    முதல் நாள் - நீலாயதாட்சி

    இரண்டாம் நாள் - காமாட்சி

    மூன்றாம் நாள் - மீனாட்சி

    நான்காம் நாள் - விசாலாட்சி

    ஐந்தாம் நாள் - ஜலஜாட்சி

    ஆறாம் நாள் - ராட்சி

    ஏழாம் நாள் - பத்மாட்சி

    எட்டாம் நாள் - வனஜாட்சி

    ஒன்பதாம் நாள் - பங்கஜாட்சி

     கோலம்

    நவராத்திரி விரதத்தின் ஒன்பது நாட்களுக்கும் போட வேண்டிய கோலங்கள் விவரம்:-

    முதல் நாள் - அரிசி மாவு கோலம்

    இரண்டாம் நாள் - கோதுமை மாவு கோலம்

    மூன்றாம் நாள் - முத்துக்கள் கொண்டு மலர் கோலம்

    நான்காம் நாள் - அட்சதை (அரிசி) கொண்டு படிக்கட்டு கோலம்

    ஐந்தாம் நாள் - கடலை பருப்பு கொண்டு பறவைக் கோலம்

    ஆறாம் நாள் - பருப்புகளைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக எழுத வேண்டும்

    ஏழாவது நாள் - மலர்களைக் கொண்டு திட்டாணி கோலம்

    எட்டாவது நாள் - காசுகளை கொண்டு தாமரைப் பூ கோலம்

    ஒன்பதாம் நாள் - வாசனைப் பொடிகளை கொண்டு ஆயுதங்களை கோலமாக அமைக்க வேண்டும்.

     விளையாட்டுப் பொருட்கள்

    நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டுப் பொருளை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - சோழி

    இரண்டாம் நாள் - குன்றிமணி

    மூன்றாம் நாள் - தட்டைப் பவளம்

    நான்காம் நாள் - கிளிஞ்சல்

    ஐந்தாம் நாள் - மரச்சொப்பு

    ஆறாம் நாள் பொம்மை

    ஏழாம் நாள் - அம்மானைக் காய்

    எட்டாம் நாள் - பந்து

    ஒன்பதாம் நாள் - கழற்சிக் காய்

     பூக்கள்

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பூக்களால் மாலை தொடுத்து தேவிக்கு அணிவிக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:-

    முதல் நாள் - மல்லிகைப் பூ மாலை

    இரண்டாம் நாள் - முல்லைப் பூ மாலை

    மூன்றாம் நாள் - சம்பங்கிப் பூ மாலை

    நான்காம் நாள் - ஜாதிப்பூ மாலை

    ஐந்தாம் நாள் - பாரிஜாதப் பூ மாலை

    ஆறாம் நாள் - செம்பருத்திப் பூ மாலை

    ஏழாம் நாள் - தாழம்பூ மாலை

    எட்டாம் நாள் - ரோஜாப்பூ மாலை

    ஒன்பதாம் நாள் - தாமரைப்பூ மாலை

     பெண் வழிபாடு

    நவராத்திரி விழாவின் போது நம் வீட்டிற்கு வரும் பெண்களை ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பெயரில் தேவியாக நினைத்து வணங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - பாலா

    இரண்டாம் நாள் - குமாரி

    மூன்றாம் நாள்- கன்னிகை

    நான்காம் நாள் - தேவதை

    ஐந்தாம் நாள் - பிரவுடா

    ஆறாம் நாள் - முத்து

    ஏழாம் நாள் - சுமங்கலி

    எட்டாம் நாள் - தருணீ

    ஒன்பதாம் நாள் - மாதா

    நைவேத்தியம்

    முதல் நாள் - சுண்டல்

    இரண்டாம் நாள் - வறுவல்

    மூன்றாம் நாள் - துவையல்

    நான்காம் நாள் - பொரியல்

    ஐந்தாம் நாள் - அப்பளம்

    ஆறாம் நாள் - வடகம்,

    ஏழாம் நாள் - சூரணம்

    எட்டாம் நாள் - முறுக்கு

    ஒன்பதாம் நாள் - திரட்டுப் பால்

     பழங்கள்

    நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பழத்தை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - வாழைப்பழம்

    இரண்டாம் நாள் - மாம்பழம்

    மூன்றாம் நாள் - பலாப்பழம்

    நான்காம் நாள் - கொய்யாப்பழம்

    ஐந்தாம் நாள்- மாதுளம் பழம்

    ஆறாம் நாள் - நாரத்தைப் பழம்

    ஏழாம் நாள் - பேரீச்சம் பழம்

    எட்டாம் நாள் - திராட்சைப் பழம்

    ஒன்பதாம் நாள் - நாவல் பழம்

     ராகங்கள்-9

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு ராகத்தை இசைத்து தேவியை வழி பட வேண்டும். அதன் விவரம்:-

    முதல்நாள்- தோடிராகம்

    இரண்டாம் நாள் - கல்யாணி ராகம்

    மூன்றாம் நாள் - காம்போதி ராகம்

    நான்காம் நாள் - பைரவி ராகம்

    ஐந்தாம் நாள் - வராளி ராகம்

    ஆறாவது நாள் - நீலாம்பரி ராகம்

    ஏழாவது நாள் - பிலஹரி ராகம்

    எட்டாம் நாள் - புன்னாகவரளி ராகம்

    ஒன்பதாம் நாள் - வஸசந்தா ராகம்

     9 வகை சுண்டல்

    நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளிலும் ஒரு நைவேத்தியம் படைப்பது போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டலை அம்பாளுக்கு படைத்து வழிபட்டால் அதற்கான பலன் கிடைக்கும். அதன் விவரம்:-

    முதல் நாள் - வெள்ளைக் கடலை சுண்டல்

    இரண்டாம் நாள் - காராமணி சுண்டல்

    மூன்றாம் நாள் - மொச்சை சுண்டல்

    நான்காம் நாள் - பச்சைப் பட்டாணி சுண்டல்

    ஐந்தாம் நாள் - வேர்க்கடலை கண்டல்

    ஆறாம் நாள் - பச்சைப்பயறு சுண்டல்

    ஏழாம் நாள் - கொண்டைக் கடலை சுண்டல்

    எட்டாம் நாள் - மொச்சைப் பயறு சுண்டல்

    ஒன்பதாம் நாள் வேர்க்கடலை கண்டல்

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள், இது போன்ற நவதானிய கண்டல்களை செய்து சாப்பிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்ற நவதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

     சித்ரான்னம்

    விதவிதமான சுவைகளின் சமைத்த உணவை 'சித்ரான்னம்' என்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவிக்கு படைத்து வணங்கி வேண்டிய சித்ரான்னங்களை இங்கே பார்க்கலாம்...

    முதல் நாள் - வெண் பொங்கல்

    இரண்டாம் நாள் - புளியோதரை

    மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

    நான்காம் நாள் - கதம்ப சாதம்

    ஐந்தாம் நாள் - தயிர் அன்னம்

    ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

    ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்

    எட்டாம் நாள் - பாயசம்

    ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல் (வெல்லம், பால், அரிசியில் செய்வது)

    சிறு பெண் வழிபாடு

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறு வயது பெண்களை, அம்மனாக பாவித்து, வளையல் போட்டு நலுங்கு வைத்து ஒவ்வொரு பெயரில் வழிபாடு செய்வார்கள். அதன் விவரம் மற்றும் அதன் பலன்கள் வருமாறு:-

    முதல் நாள் - 2 வயது பெண் (குமாரி) - வீட்டில் தரித்திரம் விலகும்

    இரண்டாம் நாள் - 3 வயது பெண் (திருமூர்த்தி) - மன மகிழ்ச்சி உண்டாகும் ராஜ்ஜிய சுகம் கிடைக்கும்

    மூன்றாம் நாள் - 4 வயது பெண் (கல்யாணி) - நல்வித்தை,

    நான்காம் நாள் - 5 வயது பெண் (ரோகிணி) - வியாதிகள் விலகும்

    ஐந்தாம் நாள் - 6 வயது பெண் (காளிகா) - பகை மறையும்

    ஆறாம் நாள் - 7 வயது பெண் (சண்டிகா) - ஐஸ்வரியங்கள் தேடி வரும்.

    ஏழாம் நாள் - 8 வயது பெண் (சாம்பவி) - ராஜயோகம் உண்டாகும்.

    எட்டாம் நாள் - 9 வயது பெண் (துர்க்கா) - காரியம் வெற்றியாகும்

    ஒன்பதாம் நாள்- 10 வயது பெண் (சுபத்ரா) - மனசாந்தி கிடைக்கும்

    • நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும்.
    • மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் சிறப்பு வாய்ந்தவை.

    நடராஜர் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது சிதம்பரம் தான். இத்தல நடராஜருக்கு ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனித் திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் சிறப்பு வாய்ந்தவை. நடராஜருக்கு அமைந்த மற்றுமொரு சிறப்பு மிகுந்த கோவில்தான், நெய்வேலியில் உள்ள 'அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என்னும் நடராஜர் கோவில். இங்கும் நடராஜருக்கு ஆண்டு தோறும் 6 மகா அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன.

    கோவில் அமைப்பு

    கோவில் நுழைவு வாசலின் வலது புறத்தில் ஆராய்ச்சி மணி என்ற பெயரில் ஆலய மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே மனுநீதி முறைப் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களின் குறைகளையும், நியாயமான விருப்பங்களையும் ஒரு தாளில் நடராஜருக்கு கடிதமாக எழுதி, மனுநீதி முறைப் பெட்டியில் போட வேண்டும். பின்னர் ஆராய்ச்சி மணியை 3 முறை ஒலிக்க செய்து விட்டு கோவிலை வலம் வந்து வீட்டிற்குச் செல்கின்றனர்.

    பின்னர் அந்த கோரிக்கை கடிதங்கள், காலை நேர பூஜையில் தீட்சிதர்களால் நடராஜர் முன்பு ரகசியமாக படிக்கப்பட்டு பின்னர் எரியூட்டப்படும். அதைக்கேட்டு பக்தர்களின் குறைகளை இறைவன் நீக்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாறு குறை நீங்கியவர்கள், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நன்றி கடிதத்தையும் எழுதி அந்த மனுநீதி முறைப் பெட்டியில் போடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    நாம் இன்று படிக்கும் `திருவாசகம்' என்னும் நூலானது, மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, சிதம்பரம் கோவிலில் வைத்து சிவபெருமானே தன் கரங்களால் எழுதியது. அந்த நூலின் இறுதியில் `திருச்சிற்றம்பலமுடையான்' என்று இறைவன் கையெழுத்திட்டு இருப்பதே இதற்கு சான்று. அந்த பெயரை நினைவுகூரும் வகையில்தான், நெய்வேலியில் உள்ள ஆலயத்திற்கு `அழகிய திருச்சிற்றம்பலமுடையான் தியானசபை' என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. நடராஜர்

    இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் சிவகாமி அம்பாள் `ஓசை கொடுத்த நாயகி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இந்த ஆலயத்தில்தான் உலகிலேயே மிக உயரமான ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை உள்ளது. இந்த சிலை 10 அடி ௧ அங்குல உயரமும், 8 அடி 4 அங்குல அகலமும், 2 ஆயிரத்து 420 கிலோ எடையும் கொண்டது.

    நடராஜர் அருகே வீற்றிருக்கும் சிவகாமி அம்பாள் சிலை, 7 அடி உயரமும், சுமார் 750 கிலோ எடையும் கொண்டது. எல்லா கோவில்களிலும் நடராஜரின் பாதத்தில் மாணிக்கவாசகர் இருப்பார். ஆனால், இந்தக் கோவிலில் நடராஜர் பாதத்தில் திருமூலர் இருக்கிறார். மேலும், வலப்புறம் வியாக்ரபாதரும், இடப்புறம் பதஞ்சலி முனிவரும் உள்ளனர். இந்த இரு முனிவர்களின் பெருந்தவத்திற்கு இறங்கிதான் நடராஜர், தனது ஆனந்த நடனத்தை காட்டி அருளினார்.

    நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையங்களில் பணியாற்றிய பக்தர்கள் சிலர், 1980-ம் ஆண்டு சைவத்தை வளர்க்கும் நோக்கத்துடன் பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இதன் தலைவராக அப்போதைய நகர தந்தை ராமலிங்கம் பிள்ளை பொறுப்பேற்றுக்கொண்டார். இக்கழகத்தினர் சிறு அளவிலான வழிபாடுகள், திருமுறை இசை நிகழ்ச்சிகள், திருமுறை பயிற்சிகள், முற்றோதல்கள், தல யாத்திரைகள், உழவாரப்பணிகள் என்று தெய்வீக பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

    பல ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டு வந்த பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினர், தங்கள் ஊரிலும் சிவன் கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்தனர். பளிங்கு கோவில் ஒன்றை கட்டி, அதில் நடராஜரின் திருமேனியை நிறுவ எண்ணினர். 1986-ம் ஆண்டு சித்திரை மாதம் வளர்பிறையில் மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகளால் இக்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பலரின் கடுமையான உழைப்பால் ஒரே ஆண்டில் இந்த ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது.

    இக்கோவில் கட்டப்பட்டபின் இப்பகுதி சிவ புரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானின் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் புரியும் வடிவமான திரிமூர்த்தி வடிவம், கோவிலின் முகப்பு பகுதியில் உள்ளது. நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சி கழகத்தின் வேண்டுகோளை ஏற்று, குடந்தை அருணஜடேஸ்வர ஸ்தபதி உலகிலேயே மிகப்பெரிய அழகிய திருச்சிற்றம்பல முடையானை வடிவமைக்க ஒப்புக்கொண்டார். 8-9-1986 அன்று குடந்தையை அடுத்த மேலக்கொற்கை என்ற ஊரில் போகர் கூறியபடி பலவகையான மூலிகைகளை கொண்டு, ஓதுவாமூர்த்திகளின் தெய்வத்தமிழ் தேவார பாடல்களுடனும், தில்லைவாழ் அந்தணர்களின் வேத கோஷத்துடனும், மயிலை குருஜி சுந்தரராம் சுவாமிகள் மேற்பார்வையில் திருச்சிற்றம்பலமுடையாரின் ஐம்பொன் செப்புத் திருமேனி வார்க்கப்பட்டது. அதுவே, அழகிய திருச்சிற்றம்பல முடையான் ஆலயத்தில் உள்ள தற்போதைய நடராஜர் சிலையாகும்.

    நடராஜப் பெருமானுக்கு `பஞ்ச சபைகள்' என்ற ஐந்து சபைகள் உண்டு. அவை ரத்தின சபை, வெள்ளி சபை, சித்திர சபை, தாமிர சபை, பொற்சபை ஆகியனவாகும். அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலமுடையான் கோவிலில் உள்ள நடராஜர் சன்னிதி `பளிங்கு சபை' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தக்கோவிலுக்குள் நுழைந்தவுடன் நந்தி பகவான் கம்பீரத்துடன் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்து விட்டு உள்ளே சென்றதும், தியான மண்டபம் என்னும் பளிங்கு சபையில் நடராஜர், சிவகாமி அம்பாளுடன் காட்சி தருகிறார். அவர்களை தரிசனம் செய்துவிட்டு, வெளியே வந்தவுடன் கோவில் சுற்றுச்சுவரில் திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட `விதியை வெல்வது எப்படி?' என்ற புத்தகத்தில் உள்ள அனைத்து தேவாரப் பாடல்களும், பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தினரால் கல்வெட்டுகளில் பதிக்கப்பட்டிருக்கின்றன.

    பளிங்கு சபையின் மேற்கு புறத்தில் செம்பொற்ஜோதி நாதர் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தின் பாணமானது நர்மதை ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த சிவலிங்கத்தின் மேற்பகுதியில் இயற்கையாக விபூதி ரேகைகள் அமைந்திருப்பது பக்தர்களை பரவசப்படுத்துகிறது.

    மேலும் இக்கோவிலில், விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அண்ணாமலையார், அறம் வளர்த்தநாயகி, சனீஸ்வரர், சூரியன், சந்திரன், வள்ளி தெய்வானை முருகன், கால பைரவர் உள்ளிட்ட சாமிகள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனர்.

    இந்த கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபம் சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரே கல்லில் நவக்கிரக சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தாமரை பீடத்தில், பெரிய வட்ட வடிவிலான தேரில் சூரிய பகவான் நடுநாயகமாக வீற்றிருக்கிறார். இந்த தேரை, பாகன் ஓட்ட, 7 குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரை சுற்றி அஷ்டதிக்கு பாலகர்கள் உள்ளனர். மற்ற கிரகங்கள் எட்டு திசையை நோக்கி, தவக்கோலத்தில் உள்ளனர். இவ்வாலயத்தில் `திருத்தொண்டர் திருக்கோவில்' என்ற பெயரில் 63 நாயன்மார்களுக்கு என்று தனிச் சன்னிதி அமைந்துள்ளது.

    ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1-ந்தேதி அறுபத்து மூவர் விழா சிறப்பாக நடைபெறும். அன்றைய தினத்தில் சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி வீதிஉலா செல்வர். இவர்களுடன் 63 நாயன்மார்களும் வீதிஉலா வருவது கண்கொள்ளாக்காட்சியாகும். இது தவிர பிரதோஷம், ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம், ஐப்பசி மாத அன்னாபிஷேகம், கார்த்திகை மாத சோமவார வழிபாடு-சங்கு அபிஷேகம், மாசி மாத சிவராத்திரி வழிபாடு போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு ௯ மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    கடலூரில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்தாசலத்தில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.

    • பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது.
    • ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம்.

    இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் சிறப்புக்குரியது. ஒன்பது இரவுகள் அம்பாளை வழிபடுவதனை 'நவராத்திரி' என்கிறோம். தீமையை அகற்றி நன்மையை பரவச் செய்வதை கருப்பொருளாகக் கொண்டு, இந்தியா முழுவதும் இந்த விழா கொண்டாடப்பட்டாலும், உள்ளூர் பழக்க வழக்கம் மற்றும் மரபுகளின்படி, மாநிலங்களுக்கு மாநிலம் இந்த விழா மாறுபடுகிறது.

    வட மாநிலங்களில் நவராத்திரி விழா துர்க்கை தேவிக்கு முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டாலும், தென்னிந்தியாவில் சரஸ்வதி சாமுண்டி உன் ளிட்ட சில தெய்வங்களை இணைத்து கொண்டாடப்படுவது சிறப்புக்குரியது. நவராத்திரியை வெவ்வேறு விதமாக கொண்டாடும் இந்தியாவில் உள்ள சில மாநிலங்கள் பற்றி இங்கே...

     தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் துர்க்கை மட்டுமின்றி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய முப்பெரும் தேவியரின் வழிபாடு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என்று மூவருக்கும் சமமான வழிபாட்டு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் 10 நாட்களிலும் வீடு மற்றும் கோவில்கள், பொது இடங்களில் 'கொலு அமைப்பது என்பது விசேஷமானது. நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள். அதில் மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த பொருட்களையும், கலைஞர்கள் தங்களின் கலை சார்ந்த பொருட்களையும், ஒவ்வொரு உழைப்பாளர்களும் தங்கள் உழைப்பை முன்னிறுத்தும் பொருட்களையும் சரஸ்வதியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 10-ம் நாளில் மகிஷனை வதம் செய்த துர்க்கையின் வெற்றி தினமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

    தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலகப்புகழ்பெற்ற திருவிழாவாக இந்த தசரா திருவிழா உள்ளது.

     கேரளா

    பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக புராணங்கள் சொல்லும் கேரள மாநிலம் 'கடவுளின் தேசம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட 108 பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. நவராத்திரி விழாவின் போது இந்த ௧௦௮ கோவில்களும் துர்க்கையின் ஆலயங்களாக பாவித்து, அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தியாவில் கல்வி அறிவு அதிகம் பெற்ற மாநிலமாகத் திகழும் கேரளாவில், தங்களின் கல்வி சார்ந்த பொருட்கள், வீட்டு விலங்குகள், வாகனங்களை வழிபடுவதை மக்கள் விரும்புகிறார்கள்.

    நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறார்கள். அப்போது மாணவர்கள் கரும்பு அல்லது வெல்லம் போன்ற நைவேத்தியங்களுடன், தங்களின் கல்வி சார்ந்த பொருட்களை சரஸ்வதி தேவியின் உருவத்திற்கு முன்பாக வைத்து வணங்குகிறார்கள்.

     ஆந்திரா

    நவராத்திரி பண்டிகையானது 'பதுக்கம்மா பண்டிகை' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த திருமணமான பெண்கள் பலரும். இனிமையான தாம்பத்ய வாழ்க்கை அமைய அன்னை கவுரி தேவியை வழிபடும் நிகழ்வாக இது இருக்கிறது. திருமணமாகாத பெண்கள் தங்கள் மனதிற்கு பிடித்த மண வாழ்க்கை அமைய வேண்டும் என்று இந்த வழிபாட்டில் இணைகிறார்கள். இந்த பண்டிகையின் இறுதிநாள் விழாவில், ராமலீலா நிகழ்வு நடத்தப்படும். அதாவது ராவணனின் உருவ பொம்மை செய்து, அதை நெருப்பு மூட்டி எரியூட்டுவார்கள்.

    இந்த நிகழ்வில் ஆண்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அன்னை கவுரி தேவியின் வழிபாட்டிற்காக உள்ளூரில் உருவாகும் மலர்களைக் கொண்டு மலர் அடுக்குகளை உருவாக்குவார்கள். இது பன்னெடுங்காலமாக நடை பெறும் வழக்கமாகும். திருவிழாவின் இறுதிநாளில் இந்த மலர் அடுக்கானது, ஒரு ஏரி அல்லது ஆற்றில் விடப்படும்.

     குஜராத்

    நவராத்திரி விழாவானது. குஜராத் மாநிலத்தில் ஒரு தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. குஜராத் மக்கள், நவராத்திரியின் ஒன்பது நாட்களும், துர்க்கை மற்றும் துர்க்கையின் வெவ்வேறு ஒன்பது அவதாரங்களையும் போற்றும் வகையில் ஒன்பது நாட்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். நவராத்திரி நாளில் குஜராத் மக்கள் ஆடும் ஒரு வகை நடனம் பிரசித்தி பெற்றதாகும். இந்த நடனத்திற்கு "கர்பா நடனம்" என்று பெயர்.

    நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலை வேளையிலும் நோன்பு இருக்கும் பெண்கள், பானைக்குள் ஏற்றிவைக்கப்பட்ட மெழுகுவர்த்தி முன்பாக நின்று தங்கள் பிரார்த்தனைகளை, வேண்டுதல்களை சொல்லி வழிபடுவார்கள். "கார்போ" என்று அழைக்கப்படும் இந்த பானை, வாழ்க்கையின் மூலத்தையும் ஒளி, சக்தியையும் குறிக்கும். 'கார்போ' என்பதே மருவி 'கர்ப என்றானதாக சொல்கிறார்கள்.

    கர்பட் என்ற வார்த்தைக்கு "கருப்பை" என்றும் பொருள். பானைக்குள் உள்ள மெழுகுவர்த்தியும், அதன் ஒளியும்கருப்பையில் இருக்கும் உயிரை குறிக்கிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாள் மாலையிலும் ஆண்களும், பெண்களும், துர்க்கா தேவி சிலையை சுற்றி ஆடும் பாரம்பரிய நடனமாக கரிபா நடனம் இருக்கிறது.

     கர்நாடகா

    கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெறும் தசரா உலகப் புகழ் பெற்றதாகும். இது ஒரு மாநில விழாவாகும். மைசூர் நகரின் மையத்தில் மிகவும் கண்கவர் நிகழ்ச்சிகளுடன் இந்த விழா கொண்டாடப்படுகிறது. கி.பி. 1610-ம் ஆண்டு முதல் அப்போதைய மன்னன் முதலாம் ராஜா உடையார் கடைப்பிடித்த சடங்குகளைப் பின்பற்றியே, இன்றளவும் இந்த மைசூர் தசரா நடைபெற்று வருகிறது. ஒன்பதாம் நாள் திருவிழாவான, மகாநவமி அன்று அரச வாள் ஒரு சிம்மாசனத்தில் வைத்து வணங்கப்படும்.

    அதன்பின்னர் யானைகள் மற்றும் குதிரைகள் மூலமாக அந்த வாள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். 10-ம் நாள் தசமி அன்று. யானை மேல் தங்க பல்லக்கில், சாமுண்டீஸ்வரியின் (துர்க்கையின் வடிவம்) உருவத்தை வைத்து, நடனக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் சூழ்ந்துவர பிரமாண்டமான ஊர்வலம் நடைபெறும்.

     இமாச்சலப் பிரதேசம்

    நாட்டின் பிற மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டம் முடியும் பத்தாம் நாளில், இமாச்சலப் பிரதேசத்தில் இந்த விழா தொடங்குகிறது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர், அயோத்தி திரும்பியதை குறிக்கும் வகையில் இந்த கொண்டாட்டம் இருக்கும். பத்தாம் நாளில் `குலு தசரா' என்ற பெயரில் இந்த நிகழ்வை நடத்துகிறார்கள். குலு பள்ளத்தாக்கில் மிகப் பிரபலமான திருவிழா இதுவாகும்.

    இந்த நாளில் குலு பள்ளத்தாக்கு முழுவதும் உள்ள தெருக்கள் வண்ண விளக்குகளால் பிரகாசமாக மின்னும். தெய்வங்களின் சிலைகளை பிரதான மைதானத்திற்கு எடுத்துச்செல்லும் பெரிய ஊர்வலம். அந்த ஊர்வலத்துடன் கலந்த மக்களின் உற்சாகம் மற்றும் ஆடல். பாடல் ஆகியவை இந்த விழாவின் சிறப்பம்சமாகும். பல்வேறு நடனம், கலாசார நிகழ்ச்சிகள் இந்த நாளை அழகாக்கும்.

    இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளூர் தெய்வமான ரகுநாதரின் சிலை, அழகாக வடிவமைக்கப்பட்டு ஒரு தேரில் வைக்கப்படும். அந்த தேரை உள்ளூர் மக்கள் கயிறுகளால் இழுத்து நகரத்தின் பல பகுதிகளிலும் வலம் வருவார்கள்.

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    • ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா.

    தூத்துக்குடி:

    பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் முத்தாரம்மன் கற்பக விருச்சிக வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளர்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    மூன்றாம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை கலையரங்கத்தில் சமய சொற்பொழிவும், இரவு 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் முத்தாரம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். அப்போது பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    • புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று சன்னிதானத்தில் நடைபெறும்.
    • ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் அனுமதி.

    திருவனந்தபுரம்:

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று (புதன்கிழமை) சன்னிதானத்தில் நடைபெறும்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    இன்று முதல் 5 நாட்கள் தினமும் அதிகாலை கோவிலில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனையொட்டி சபரிமலைக்கு வரும்

    பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையமும் செயல்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடைபெற்றது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     வாகன வீதி உலாவுக்கு முன் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலாவும், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வபூலபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

    • திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணிய கோலத்துடன் காட்சி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி-1 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி நள்ளிரவு 12.13 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: அனுஷம் இரவு 8.52 மணி வரை. பிறகு கேட்டை.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். சதுர்த்தி விரதம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணிய கோலத்துடன் காட்சி. தேவக்கோட்டை முத்தாநதிக்கு அவ்வூர் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளி விஷு உற்சவ தீர்த்தவாரி. உத்திரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சுவாமி சந்திரசேகர் புறப்பாடு திருவனந்தபுரம் சிவபெருமான் பவனி. தேரெழுந்தூர் ஞானசம்பந்தர் புறப்பாடு. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நலம்

    ரிஷபம்-வாழ்வு

    மிதுனம்-உற்சாகம்

    கடகம்-முயற்சி

    சிம்மம்-புகழ்

    கன்னி-தனம்

    துலாம்- தெளிவு

    விருச்சிகம்- போட்டி

    தனுசு- உழைப்பு

    மகரம்- கடமை

    கும்பம்- முயற்சி

    மீனம்- பயணம்

    • இஸ்லாம்-சிந்தனையின் மார்க்கம்.
    • மனிதர்களால் மாற்றப்பட்ட, புகுத்தப்பட்ட நெறிகளாகத்தான் உள்ளன.

    இஸ்லாம்-சிந்தனையின் மார்க்கம். உலகில் பல்வேறு சிந்தனையோட்டங்கள், சித்தாந்தங்கள், வாழ்க்கை நெறிகள் இருந்தாலும் அத்தனையும் மனிதர்களால் இயற்றப்பட்ட அல்லது மனிதர்களால் மாற்றப்பட்ட, புகுத்தப்பட்ட நெறிகளாகத்தான் உள்ளன. இஸ்லாம் மட்டுமே இறைவனால் அருளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தீர்க்கமான, தெளிவான, துல்லியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வாழ்வியல் நெறி ஏக இறைவன் அல்லாஹ்வால் அருளப்பட்டது.

    ஆணும் பெண்ணும் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இருவருமே ஒரே இறைவனின் அடிமைகள். ஆணும் பெண்ணும் பிறப்பில் தூய்மையானவர்கள். இறைவனின் பிரதிநிதிகள் எனும் சிறப்பை இஸ்லாம் வழங்குகிறது. இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல் மட்டுமே பெண் விடுதலை, பெண்களுக்கான நீதி சாத்தியம் என்பதை இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் போதித்ததோடு மட்டுமின்றி அத்தகைய ஒரு சமுதாயத்தையும் உருவாக்கிக் காட்டினார்கள்.

    `பெண்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்' என்று மக்களிடம் உபதேசம் செய்ததுடன் அத்தகைய வாழ்வை வாழ்ந்துகாட்டி `உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே, உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியரிடத்தில் சிறந்தவன்' என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.

    பெண்களின் மானம், மரியாதைக்கு இஸ்லாம் மிக முக்கியத்துவம் வழங்குகிறது. இஸ்லாம் வழங்கிய பெண் உரிமைகள் அவர்கள் போராடிப் பெற்றதல்ல. இஸ்லாம் இயல்பாகவே இந்த உரிமைகளை, சலுகைகளாக வழங்காமல் கடமையாகவே பெண்களுக்கு வழங்கியுள்ளது.

    ஆண்களும், பெண்களும் சிறிய பெரிய பிரச்சினை களுக்குக் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதை நபிகளாரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு மூலம் அறியலாம்.

    மதீனாவில் இருந்து மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் சென்றனர். அப்போது அவர்களை தடுத்து எதிர்த்த குறைஷிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் `இந்த ஆண்டு உம்ரா செய்ய அனுமதி இல்லை' என்று மறுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையைப் பேணும் விதத்தில் உம்ரா செய்யாமலேயே திரும்பிவிட முடிவு செய்தார்கள். தோழர்கள் உம்ரா செல்லாமல் மதீனா திரும்பி செல்ல தயங்கினார்கள்.

    இந்த சூழலில் நபி (ஸல்) அவர்கள், தம் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசித்தார்கள். அவர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் தமது பலிப்பிராணியை முதலில் அறுத்துவிட்டு தலை முடியை மழித்தபோது, அதுவரை தயங்கி நின்ற தோழர்கள் மறு விநாடியே தாங்களும் அவ்வாறே செய்துவிட்டு மதீனா திரும்பினார்கள். பெண்களின் ஆலோசனைக்கும், அறிவுக்கும், கருத்துக்கும் இஸ்லாம் வழங்கிய முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

    பெண் பாதுகாப்பு

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் இஸ்லாம் எப்போதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. பெண்களுக்கு எதிராக, உண்மைக்கு புறம்பாக, அநீதியாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க இஸ்லாம் கட்டளையிடுகிறது. எவர்கள் கற்பில் சிறந்த பெண்கள் மீது அவதூறு கூறி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு எண்பது கசையடி அடியுங்கள். மேலும் (இதன்பின்) ஒருபோதும் அவர்களது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இன்னும் அவர்கள் தான் பாவிகள். (திருக்குர்ஆன் 24:4)

    `நிச்சயமாக எவர்கள் இறை நம்பிக்கையாளர்களான களங்கமற்ற கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுவிட்டனர். அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு". (திருக்குர்ஆன் 24:23)

    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் வேண்டும். தண்டனைகள் கடுமையானால், ஒரு தவறை மீண்டும் செய்வதிலிருந்தும், அதைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒரு மனிதனை தூரப்படுத்தும். ஆதலால் பாலியல் வன்புணர்வுக்கு இஸ்லாம் மரண தண்டனையைக் குறிப்பிடுகிறது. கடுமையான தண்டனை வழங்காவிட்டால் அவற்றை என்றுமே ஒழிக்க முடியாது.

    இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது: 'இன்னும் திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவருடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்கள் சம்பாதித்தவைக்கான கூலியாக, மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவுள்ளோனும் ஆவான்'. (திருக்குர்ஆன் 5:38)

    பொருளீட்டுரிமை

    சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்த கட்டளையாகும். கணவரின் அனுமதியோடு பெண்கள் பொருள் ஈட்டுவதில் தவறில்லை எனக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.

    `பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. அவ்வாறே, பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு' என்று திருக்குர்ஆன் (4:7) குறிப்பிடுகிறது.

    அன்னை கதீஜா (ரலி) அவர்கள் சிறப்புக்குரிய பெரும் வணிகராகத் திகழ்ந்தார். தோலை பதனிட்டு அவற்றில் வண்ணங்களை ஏற்றித்தரும் தொழில் செய்தார். கிடைத்த வருவாயில் பெரும்பகுதியை இறைவனின் பாதையில் செலவிட்டார். இதன் மூலம் பெண்களும் பொருளாதாரத்தை ஈட்டவும் செலவழிக்கவும் உரிமை படைத்தவர்கள் என இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

    • உன் பாதுகாப்பு எப்போதும் என் முன்னே இருக்கிறது.
    • நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்காக சந்தோஷப்படுங்கள்.

    அன்பானவர்களே திக்கற்ற, நம்பிக்கையற்ற, மனிதர்களைப் பார்த்து இயேசு கூறுகிறார், `ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ?. அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன். உன் பாதுகாப்பு எப்போதும் என் முன்னே இருக்கிறது" என்று கூறுகிறார். எவ்வளவு சந்தோஷமான, ஆறுதலான வார்த்தைகள் பாருங்கள்.

    பிரியமானவர்களே! இந்த அன்பான, ஆறுதலான, நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்காக சந்தோஷப்படுங்கள். உங்களைப் பார்த்து, உங்களை நினைத்து, உங்களை விசாரித்து, உங்கள் எண்ணங்களை அறிந்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.

    இன்றைக்கு நாம் அனேக இக்கட்டான சமயங்களிலே, `எனக்கு உதவி செய்ய யாருமில்லை. உறவினர்கள் யாவரும் என்னை கைவிட்டு விட்டனர். நண்பர்கள் யாருமே என்னை நினைப்பதில்லை. என்னை யாரும் கண்டு கொள்வதில்லை. எனக்கென்று இந்த உலகத்தில் யார் இருக்கிறார்கள்?' என்று புலம்புவதுண்டு.

    இப்படி தனிமை சோர்வோடு, தவிப்போடு காணப்படுகிற அன்பு சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, `இயேசு உங்களை நேசிக்கிறார், இயேசு உங்களுக்கு உற்ற நண்பராய் இருக்கிறார், அவர் உங்களை தேற்றுகிறார். இயேசு ஒரு போதும் நம்மை மறப்பதேயில்லை. நம் ஒவ்வொருவரையும் அனுதினமும் அவர் நடத்துகிறார், ஒரு நொடி கூட நாம் அவரால் மறக்கப்படுவதில்லை'.

    ஏன் தெரியுமா? இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் தன் சொந்த ஜீவனையே கொடுத்திருக்கிறார். ஒருவன் தன் சிநேகிதருக்காக தன் ஜீவனைக் கொடுப்பதிலும் பெரிய அன்பு இந்த உலகத்தில் ஒன்றுமில்லை.

    இயேசு நம்மைப் பார்த்து கூறுகிறார், `நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். என் அன்பு மகனே, மகளே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை'. (ஏசா.44:21)

    `தாய் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை' ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். குழந்தையின் அசைவுகள், பார்வை மூலமாக அதற்கு என்ன தேவை என்பதை அறிவாள். நேரத்திற்கு நேரம் என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பாள். எப்போதும் தன் குழந்தையைப் பற்றிய நினைவுகளோடு தன் அன்றாட வேலைகளை செய்து கொண்டிருப்பாள்.

    குழந்தை எப்போது அழுதாலும் உடனே அதை ஆறுதல்படுத்தி, தாலாட்டி, சீராட்டி தன் சுகம் பாராமல் அதன் தேவைகளை பூர்த்தி செய்வாள். அப்படிப்பட்ட அன்பு நிறைந்த தாய் கூட சில நேரங்களில் தன் பிள்ளைகளை மறந்து, தன் சொந்த ஆசைகளை நிறைவேற்றுவதற்காக, குழந்தைகளை அனாதையாய் தவிக்க விட்டுச் செல்வதையும், அல்லது சில சூழ்நிலைகளில் தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுவதையும் செய்திகள் மூலம் அறிகிறோம். அப்படிப்பட்ட ஒரு கொடிய, அன்பில்லாத காலத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    அதனால் தான் இயேசு கூறுகிறார், `அன்பு மகனே, மகளே, தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்'. ஒருநாளும், எந்த சூழ்நிலையிலும் அவர் நம்மை மறப்பதுமில்லை, நம்மை விட்டு விலகுவதுமில்லை. நமக்கு எந்த நேரத்தில் என்ன தேவை என்பதை அறிந்து அனுதினமும் நம்மை நடத்துகிறார்.

    மகா வறட்சியான காலங்களிலும் நீர்ப்பாய்ச்சல் அருகிலுள்ள மரங்கள் போல் நம்மை ஓங்கி வளரச்செய்கிறார். ஒருநாளும் அவர் கைவிடுவதே இல்லை. சில நேரங்களில் நாம் கேட்கும் காரியங்கள் தாமதமாகிறது அல்லது கிடைக்காமல் போகிறது. ஆனால் அதிலும் ஒரு நன்மை நிச்சயமாக இருக்கும். நமக்கு எந்த நேரத்தில் என்ன தேவை, எதைத்தர வேண்டும், எதைத் தரக்கூடாது என்பது நம் பரம தகப்பனுக்கு நிச்சயமாக தெரியும்.

    நாம் நம்பிக்கை வைக்கிற மனிதர்கள் சில நேரங்களில் நமக்கு உதவி செய்யாமல் போகலாம். சில நேரங்களில் நாம் நினைக்கலாம், `எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும், என்ன முயற்சி செய்தும் பலன் எனக்கு கிடைக்கவில்லையே. குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய் பார்க்கிறார்களே. என்னை தரக்குறைவாய் பேசுகிறார்களே, நெருங்கிப் பழகிய நண்பர்களும் என்னை விட்டு காரணமில்லாமல் விலகுகிறார்களே, என்று நீங்கள் புலம்பலாம்.

    ஆனாலும் பிரியமானவர்களே, நீங்கள் படுகிற பாடுகளை, வேதனைகளை, கவலைகளை, துன்பங்களை, அவமானங்களை, பழிச்சொற்களை தேவன் அறிந்திருக்கிறார். அவர் சரியான நேரத்தில் உங்களுக்கு ஆறுதல் செய்வார். இயேசுவிடம் உங்கள், பிரச்சினைகளை, கவலைகளை, தேவைகளை கூறுங்கள். தேவன் ஒருபோதும் உங்களை மறக்கவே மாட்டார்.

    `கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்'. (சங்.115:12)

    பிரியமானவர்களே, சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து, உங்கள் மேல் தன் கண்ணை வைத்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.

    • பாரம்பரிய உடையணிந்து, மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவர்.
    • நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும்.

    மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. எருமைத் தலை கொண்ட மகிஷாசுரனை, துர்க்கா தேவி வதம் செய்து வெற்றி கொண்ட தினமான விஜயதசமி, மேற்குவங்காள மக்களின் முக்கியமான திருவிழாவாகும்.

    விநாயகர் சதுர்த்தியைப் போன்று. இந்த விழாவின் போது, மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும். நவராத்திரி விழாக்களின் போது மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு மாநில மக்கள். பாரம்பரிய உடையணிந்து, மாலை நேரத்தில் மண் விளக்குகளில் தீபம் ஏற்றி சிறப்பு நடனம் ஆடுவார்கள்.

    இந்த நவராத்திரி நாட்களில் வண்ணமயமான கலாசார நிகழ்வுகள் நகரத்தை அலங்கரிக்கும் பிரகாசமான விளக்குகள் இடம்பெறும். பத்தாம் நாளில், நவராத்திரி கொலு வைக்கப்பட்ட துர்க்கை சிலைகள் அனைத்தும் பல்வேறு பகுதிகளிலும் ஊர்வலமாகக் கொண்டு சென்று, பின்னர் அதனை கடலில் கரைப்பார்கள்.

    • கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான்.
    • பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான்.

    தனு என்ற அசுரனுக்கு மிகவும் பராக்கிரமசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த புத்திரர்களை பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தனர். கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், 'இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து' என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.

    யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான். தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.

    அப்போது அக்னி தோன்றி, `உனக்கு வரம் தருகிறேன். இவ்வாறு செய்யாதே" என்றார். ரம்பன் மகிழ்ந்து, `எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்" என்றான். அதற்கு அக்னி தேவன், 'நீ முதலில் எந்த உயிரினத்தை பார்க்கிறாயோ, அதன் மூலம் உனக்கு புத்திரன் பிறப்பான்' என்று வரம் கொடுத்தார்.

    இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் முதலில் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையை பார்த்தவுடன் அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எருமைத்தலையும் மனித உடலுமாக பிறந்த அந்த பிள்ளை மக்ஷாகரன்' என்று அழைக்கப்பட் டான்.

    மகிஷாசுரன் மகாமேரு என்ற மலையை அடைந்து அங்கு பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. வேறு வரம் கேள்" என்றார். அதற்கு அவன். "தேவர்களாலும் பூதங்களாலும். ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றான்.

    பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால். பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.

    மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும். தாம்ரன் என்பவன் தளபதியாகவும் இருந்தனர். அசிலோமா, பிடாலன், பாஷ்களன், காலபந்தகன், உதர்க்கன், த்ரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் அவனுடன் இருந்தனர்.

    அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் மிக அழகிய மாஹிஷம் என்ற பட்டினத்தை அஞ்சனம் என்ற மலையில் நிர்மாணித்தான். தேவர்களை தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.

    மும்மூர்த்திகளும். தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.

    புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இந்த பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள். இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள். தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து மகிஷாகரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த இன்னை மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்பட்டாள். எந்த இடத்தில் தேவர்களின் சத்ருவான மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் `தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றிபெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

    இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மகிஷாசுர மர்த்தினிக்கு, "துர்க்கா தேவி" என்ற பெயர் எப்படி வந்தது என்று ஒரு சமயம் துர்கமன் என்ற அசுரன், தேவர்கள், மகரிஷி, முனிவர்கள், வேதியர்கள் போன்றவர்களிடம் இருந்த மந்திரங்களை தன் சக்தியால் கவர்ந்து சென்றான். இதனால் உலகில் ஜபம், யாகம் எதுவும் நடைபெறவில்லை.

    இதனால் மழை பொழியாமல் பயிர்கள் வாடின. பசுமையான மரங்கள் கூட உதிர்ந்தன. கிணறு, குளம், நதி ஆகியவை வற்றியது. இவ்வாறு நூறு ஆண்டு காலம் மக்கள் பஞ்சத்தில் தவித்தனர். இதையடுத்து தேவர்கள், அன்னை பராசக்தியை துதித்து வழிபட்டனர். அப்போது தேவி அங்கு தோன்றினாள். இவர் பல கண்களைக் கொண்டிருந்ததால், 'சதாட்சி' என்று பெயர் பெற்றாள்.

    புஷ்பம், தளிர் கீரை, காய்கறிகள், கிழங்குகளுடன் தோன்றியதால், இந்த தேவியை `சாகம்பரி' என்றும் பெயரிட்டு அழைத்தனர். இந்த அன்னை, துர்கமனுடன் சண்டையிட்டு அவனை வீழ்த்தினாள். அவன் இறந்த பிறகு அவனுடைய உடலில் இருந்து அவன் கவர்ந்து சென்ற மந்திரங்கள் பேரொளியோடு அன்னையை வந்து சரணடைந்தன. அதைக்கண்ட தேவர்கள் ஜெய ஜெய' என்று கோஷமிட்டனர்.

    துர்கமன் என்னும் அசுரனை அழித்ததால் அன்னை `துர்க்கா' என்று அழைக்கப்பட்டாள். சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரி துர்க்கா என நவ துர்க்கைகளாகவும் இருந்து அன்னை அருள்புரிகிறாள்.

    இந்த தேவியின் பெருமைகளை கூறும் தேவி மாகாத்மியத்தை, ஒன்பது நாளும் பாராயணம் செய்வது சிறப்பான பலனைத் தரும். அப்படி முடியாவிட்டால் துர்க்கைக்கு மிக- விசேஷமான துர்க்காஷ்டமி அன்றாவது பாராயணம் செய்வது நல்லது. தேவர்கள் மகிஷனை வதம் செய்த போது மகிஷாசுர மர்த்தினியை துதித்த துதிக்கு மகிஷாசுரமர்த்தினி சுலோகம் என்று பெயர் வந்தது.

    • சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
    • மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சங்கு-சக்கரதாரியுடன் பத்ரிநாராயணர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துக் கொண்டு செல்லப்பட்டன. மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.

    ×