search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nabi"

    • இஸ்லாம்-சிந்தனையின் மார்க்கம்.
    • மனிதர்களால் மாற்றப்பட்ட, புகுத்தப்பட்ட நெறிகளாகத்தான் உள்ளன.

    இஸ்லாம்-சிந்தனையின் மார்க்கம். உலகில் பல்வேறு சிந்தனையோட்டங்கள், சித்தாந்தங்கள், வாழ்க்கை நெறிகள் இருந்தாலும் அத்தனையும் மனிதர்களால் இயற்றப்பட்ட அல்லது மனிதர்களால் மாற்றப்பட்ட, புகுத்தப்பட்ட நெறிகளாகத்தான் உள்ளன. இஸ்லாம் மட்டுமே இறைவனால் அருளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட வாழ்க்கை நெறியாகும். இது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் தீர்க்கமான, தெளிவான, துல்லியமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்த வாழ்வியல் நெறி ஏக இறைவன் அல்லாஹ்வால் அருளப்பட்டது.

    ஆணும் பெண்ணும் ஒரே ஆன்மாவிலிருந்து படைக்கப்பட்டவர்கள். இருவருமே ஒரே இறைவனின் அடிமைகள். ஆணும் பெண்ணும் பிறப்பில் தூய்மையானவர்கள். இறைவனின் பிரதிநிதிகள் எனும் சிறப்பை இஸ்லாம் வழங்குகிறது. இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல் மட்டுமே பெண் விடுதலை, பெண்களுக்கான நீதி சாத்தியம் என்பதை இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்கள் போதித்ததோடு மட்டுமின்றி அத்தகைய ஒரு சமுதாயத்தையும் உருவாக்கிக் காட்டினார்கள்.

    `பெண்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்' என்று மக்களிடம் உபதேசம் செய்ததுடன் அத்தகைய வாழ்வை வாழ்ந்துகாட்டி `உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே, உங்களில் சிறந்தவர். நான் என் மனைவியரிடத்தில் சிறந்தவன்' என்றும் பிரகடனப்படுத்தினார்கள்.

    பெண்களின் மானம், மரியாதைக்கு இஸ்லாம் மிக முக்கியத்துவம் வழங்குகிறது. இஸ்லாம் வழங்கிய பெண் உரிமைகள் அவர்கள் போராடிப் பெற்றதல்ல. இஸ்லாம் இயல்பாகவே இந்த உரிமைகளை, சலுகைகளாக வழங்காமல் கடமையாகவே பெண்களுக்கு வழங்கியுள்ளது.

    ஆண்களும், பெண்களும் சிறிய பெரிய பிரச்சினை களுக்குக் கலந்தாலோசித்து தீர்வு காண வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதை நபிகளாரின் வாழ்வில் நடந்த இந்த நிகழ்வு மூலம் அறியலாம்.

    மதீனாவில் இருந்து மக்காவிற்கு உம்ரா செய்வதற்காக நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் சென்றனர். அப்போது அவர்களை தடுத்து எதிர்த்த குறைஷிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையில் `இந்த ஆண்டு உம்ரா செய்ய அனுமதி இல்லை' என்று மறுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் உடன்படிக்கையைப் பேணும் விதத்தில் உம்ரா செய்யாமலேயே திரும்பிவிட முடிவு செய்தார்கள். தோழர்கள் உம்ரா செல்லாமல் மதீனா திரும்பி செல்ல தயங்கினார்கள்.

    இந்த சூழலில் நபி (ஸல்) அவர்கள், தம் மனைவி உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் ஆலோசித்தார்கள். அவர்கள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் தமது பலிப்பிராணியை முதலில் அறுத்துவிட்டு தலை முடியை மழித்தபோது, அதுவரை தயங்கி நின்ற தோழர்கள் மறு விநாடியே தாங்களும் அவ்வாறே செய்துவிட்டு மதீனா திரும்பினார்கள். பெண்களின் ஆலோசனைக்கும், அறிவுக்கும், கருத்துக்கும் இஸ்லாம் வழங்கிய முக்கியத்துவத்தை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

    பெண் பாதுகாப்பு

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பில் இஸ்லாம் எப்போதும் சமரசம் செய்து கொள்ளவில்லை. பெண்களுக்கு எதிராக, உண்மைக்கு புறம்பாக, அநீதியாக யார் செயல்பட்டாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க இஸ்லாம் கட்டளையிடுகிறது. எவர்கள் கற்பில் சிறந்த பெண்கள் மீது அவதூறு கூறி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ அவர்களுக்கு எண்பது கசையடி அடியுங்கள். மேலும் (இதன்பின்) ஒருபோதும் அவர்களது சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இன்னும் அவர்கள் தான் பாவிகள். (திருக்குர்ஆன் 24:4)

    `நிச்சயமாக எவர்கள் இறை நம்பிக்கையாளர்களான களங்கமற்ற கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுவிட்டனர். அவர்களுக்குக் கடுமையான வேதனை உண்டு". (திருக்குர்ஆன் 24:23)

    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிய வேண்டுமென்றால் கடுமையான சட்டங்கள் வேண்டும். தண்டனைகள் கடுமையானால், ஒரு தவறை மீண்டும் செய்வதிலிருந்தும், அதைப் பற்றிய எண்ணத்திலிருந்தும் ஒரு மனிதனை தூரப்படுத்தும். ஆதலால் பாலியல் வன்புணர்வுக்கு இஸ்லாம் மரண தண்டனையைக் குறிப்பிடுகிறது. கடுமையான தண்டனை வழங்காவிட்டால் அவற்றை என்றுமே ஒழிக்க முடியாது.

    இதையே திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது: 'இன்னும் திருடுபவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவருடைய கைகளைத் துண்டித்து விடுங்கள். இது அவர்கள் சம்பாதித்தவைக்கான கூலியாக, மேலும் அல்லாஹ் வழங்கும் படிப்பினை மிக்க தண்டனையுமாகும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவுள்ளோனும் ஆவான்'. (திருக்குர்ஆன் 5:38)

    பொருளீட்டுரிமை

    சொத்தில் ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணுக்கு ஒரு பங்கும் வழங்க வேண்டும் என்பது இஸ்லாம் வகுத்த கட்டளையாகும். கணவரின் அனுமதியோடு பெண்கள் பொருள் ஈட்டுவதில் தவறில்லை எனக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.

    `பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச்சென்ற சொத்தில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. அவ்வாறே, பெற்றோரோ நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு' என்று திருக்குர்ஆன் (4:7) குறிப்பிடுகிறது.

    அன்னை கதீஜா (ரலி) அவர்கள் சிறப்புக்குரிய பெரும் வணிகராகத் திகழ்ந்தார். தோலை பதனிட்டு அவற்றில் வண்ணங்களை ஏற்றித்தரும் தொழில் செய்தார். கிடைத்த வருவாயில் பெரும்பகுதியை இறைவனின் பாதையில் செலவிட்டார். இதன் மூலம் பெண்களும் பொருளாதாரத்தை ஈட்டவும் செலவழிக்கவும் உரிமை படைத்தவர்கள் என இஸ்லாம் நடைமுறைப்படுத்திக் காட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.

    ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான முகமது நபி மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #BigBash
    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் முகமது நபி. இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக 2-வது முறையாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    20 ஓவர் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள் ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் ஏற்கனவே பல லீக் தொடரில் விளையாடி வருகிறார்கள். ரஷித் கான் சராசரியாக ஒரு ஓவருக்கு 5.65 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். நபி 5.76 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார்.



    கடந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கெதிராக 30 பந்தில் 52 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். நபி இறுதிப் போட்டிக்கான நேரத்தில் சர்வதேச போட்டிக்கு திரும்பினார். அந்த போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
    ×