என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பல்லக்கு வாகனத்திலும் இரவு கருட வாகனத்திலும் மலையப்பசாமி உலா.
    • நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகனத்திலும் இரவு கருட வாகனத்திலும் மலையப்பசாமி உலா வந்தார்.இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவர் மலையப்பசாமி 'மோகினி அலங்கார'த்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     அதேபோல் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உடன் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகனங்களுக்கு முன்னால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து மாலை கருட சேவை நடந்தது. வழக்கமாக வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களின்போது இரவு 7 மணியளவில் கருடசேவை தொடங்கி இரவு 12 மணிவரை நடக்கும். ஆனால், தற்போது நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் மாலை 6.30 மணிக்கு கருடசேவை தொடங்கி இரவு 12 மணிவரை நடந்தது.

    தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுமன் வாகன வீதிஉலா, மதியம் 2 மணியளவில் வசந்தோற்சவம், மாலை 4 மணியளவில் புஷ்பக விமான வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • ஓலைக் குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார்.
    • பழமையான கோவில்களில், வடபழனி முருகன் கோவிலும் ஒன்று.

    சென்னையில் உள்ள பழமையான கோவில்களில், வடபழனி முருகன் கோவிலும் ஒன்று. இது தமிழ்நாட்டின் முருக பக்தர்களிடையே வெகு பிரசித்தம். 17-ம் நூற்றாண்டின் இறுதியில் முருக பக்தர் ஒருவரால் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. வறியவரான அந்த பக்தர், ஆரம்ப காலத்தில் ஒரு ஓலைக் குடிசையில் முருகன் சித்திரத்தை வைத்து பூஜித்து வந்துள்ளார்.

    தலபுராண கதைகளின்படி ஒரு நாள் அந்த பக்தர் பூஜை செய்து கொண்டிருந்தபோது, அவருள் தெய்வீக சக்தி பரவுவதை உணர்ந்துள்ளார். சொல்வதெல்லாம் சித்திக்கும் சக்தியையும் அக்கணத்தில் இருந்து பெற்றுள்ளார். இதன்பின்னர் அவர் திருத்தணி சென்று தனது நாக்கினை அறுத்து பலிகாணிக்கையாக செலுத்தி விட்டார்.

    இப்படியாக இவரது கீர்த்தி பரவ ஆரம்பித்து குடிசைக்கோவில் நாளடைவில் சிறிய கோவிலாக மாறி, தற்போது நாம் காணும் மிகப்பெரிய கோவிலாக வளர்ச்சியடைந்துள்ளது. கோவிலுக்கென்று பிரத்தியேக தீர்த்தக்குளம், பெரிய வளாகம் கொண்டு வடபழனி முருகன் கோவில் திகழ்கிறது.

    • தாயாரும், பெருமாளும் திருமணத்தடைகளை நீக்கி அருளுகிறார்கள்.
    • நினைத்தவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் அமைந்துள்ளது, நெடுமரம் என்ற பழம்பெருமை வாய்ந்த கிராமம். இங்கு வானுயர்ந்த கோபுரத்தோடும், மதில் சூழ்ந்தும் மகாவிஷ்ணு திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில், சுவாமி `ஆதிகேசவப் பெருமாள்' என்ற திருநாமத்துடனும், தாயார் `அம்புஜவல்லி' என்ற பெயருடனும் அருள்பாலிக்கின்றனர். சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையான இத்திருத்தலத்தின் ராஜகோபுரம் சமீபத்தில் கட்டப்பட்டுள்ளது.

     ஐந்துநிலை ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால், விளக்குத்தூண், பலிபீடம், கொடிமரம் உள்ளன. அதைத் தொடர்ந்து கருடாழ்வார் சன்னிதி இருக்கிறது. இந்த கருடாழ்வாருக்கு எதிரே இருபுறமும் நாகர்களும், விநாயகரும் காட்சி தருகிறார்கள். கருவறையில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். உற்சவரான ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் முன் மண்டபத்தில் காட்சி தருகிறார். வெளியே மூலவரை நோக்கி ஒரு சிறு சன்னிதியில் கருடாழ்வார் அருள்பாலிக்கிறார்.

    முன்மண்டபத்தில் ஒரு சிறிய சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார் எழுந்தருளியுள்ளார். தாயாரின் உற்சவர் திருமேனியும் அருகிலேயே அமைந்துள்ளது. மறுபுறத்தில் ஆண்டாள் காட்சி தந்து அருளுகிறார். அருகில் ஆண்டாளின் உற்சவ திருமேனி காணப்படுகிறது. லட்சுமிநாராயணர் மற்றொரு சன்னிதியில் எழுந்தருளியுள்ளார். இச்சன்னிதியில் ஸ்ரீசக்கரமும், ஸ்ரீகிருஷ்ணரும் உள்ளனர். இத்தலத்தில் விகனச முனிவருக்கு சிறு சன்னிதி உள்ளது. விகனசரின் உற்சவத் திருமேனியும் அருகில் இருக்கிறது.

    தமிழ்நாட்டில் விகனசருக்கு ஐந்து வைணவத்தலங்களில் மட்டுமே சன்னிதி அமைந்துள்ளது. அதில் ஒன்று இந்த ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாலயத்தில் உடையவர், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், மணவாளமாமுனிகள், விஷ்வக்சேனர் முதலான ஆழ்வார்களும், ஆச்சார்யார்களும் எழுந்தருளியுள்ளனர். அருகில் பக்த ஆஞ்சனேயர் காட்சி தருகிறார். வெளிச்சுற்றுப் பிரகாரத்திலும் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. வைகானச ஆகம முறை பின்பற்றப்படும் இத்தலத்தில், தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறுகிறது.

    தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களின் அனைத்து விதமான கோரிக்கைகளையும் இத்தலத்து ஆதிகேசவப் பெருமாள் நிறைவேற்றி வைக்கிறார். இத்தலத்து தாயாரும், பெருமாளும் திருமணத்தடைகளை நீக்கி அருளுகிறார்கள். இத்தலத்தினை ஒன்பது முறை வலம் வந்து தாயாரையும், பெருமாளையும் வேண்டிக்கொண்டால், நினைத்தவை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. விகனசரின் அவதார மகோத்சவம் இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரி, விஜயதசமி, பரிவேட்டை உற்சவம், வைகுண்ட ஏகாதசி, ஆண்டாள் உற்சவம், போகித்திருநாளில் திருமஞ்சனம், பங்குனி உத்திரம், கிருஷ்ண ஜெயந்தி முதலான பல விழாக்கள் இத்தலத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இத்தலம் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

     அமைவிடம்

    கல்பாக்கத்தில் இருந்து கூவத்தூர் மார்க்கமாக சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து ஏராளமான பேருந்துகள், நெடுமரம் கிராமம் வழியாகச் செல்லுகின்றன. கல்பாக்கத்தில் இருந்து செய்யூர் செல்லும் நகரப் பேருந்தில் பயணித்தும் நெடுமரத்தினை அடையலாம்.

    • பிரமோற்சவ விழாவில் 6-வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
    • ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 66 ஆயிரத்து 757 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரமோற்சவ விழாவில் 5-வது நாளான நேற்று இரவு கருட சேவை நடந்தது.

    தங்க கருட வாகனத்தில் உலாவந்த ஏழுமலையானை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    பிரமோற்சவ விழாவில் 6-வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து இன்று மாலை புஷ்பகவிமான வாகன உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு கஜ வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளுகிறார்.

    ஏழுமலையான் கோவிலில் நேற்று இரவு 66 ஆயிரத்து 757 பேர் சாமி தரிசனம் செய்தனர். 26 ஆயிரத்து 395 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
    • ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல்

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி-3 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சஷ்டி இரவு 9.32 மணி வரை. பிறகு சப்தமி.

    நட்சத்திரம்: மூலம் இரவு 7.40 மணி வரை. பிறகு பூராடம்.

    யோகம்: அமிர்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சஷ்டி விரதம், சுபமுகூர்த்த தினம். சரஸ்வதி ஆவாஹணம் ஸ்ரீமீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கொலுதர்பார் காட்சி. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம். உத்திரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- பரிசு

    ரிஷபம்- நிறைவு

    மிதுனம்- நற்செயல்

    கடகம்- உயர்வு

    சிம்மம்- பண்பு

    கன்னி- பணிவு

    துலாம்- நன்மை

    விருச்சிகம்- ஆக்கம்

    தனுசு- நிறைவு

    மகரம்- சாந்தம்

    கும்பம்- உதவி

    மீனம்- செலவு

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருட சேவை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் இன்று அதிகாலை முதலே 4 மாட வீதிகளில் காத்திருக்கின்றனர்.
    • திருப்பதியில் நேற்று 68,763 பேர் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் நேற்று இரவு சர்வ பூபால வாகனத்திலும், 5-வது நாளான இன்று காலை மோகினி அவதாரத்திலும் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது இரவு 7 மணிக்கு கருட சேவை நடைபெறுவது வழக்கம்.

    இன்று மாலை 6.30 மணிக்கு சூரிய அஸ்தமனம் முடிந்தவுடன் வழக்கத்திற்கு மாறாக 30 நிமிடத்துக்கு முன்னதாக 6.30 மணிக்கு ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

    கருட சேவை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் இன்று அதிகாலை முதலே 4 மாட வீதிகளில் காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பால், காபி உள்ளிட்டவைகளை தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 68,763 பேர் தரிசனம் செய்தனர். 28,377 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ 2.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேற்று நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலை பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இலவச தரிசனத்தில் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் மட்டுமே பக்தர்கள் உள்ளனர்.

    இதனால் சுமார் 5 மணி முதல் 6 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம்.
    • துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும்.

    திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. மிக தொன்மை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டமும், ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும். துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும் என்றும், கங்கை நதியில் குளித்ததற்கு சமம் என்றும் பழங்காலம் தொட்டு கருதப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இந்த ஆண்டு துலாஸ்நானம் நிகழ்ச்சியானது ஐப்பசி முதல் நாளான நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் மற்றும் சோமாஸ்கந்தர் பிரியாவிடை அம்மனும், மற்றொரு வெள்ளி வாகனத்தில் அம்மனும் எழுந்தருளினர். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து இந்தப் பகுதியில் உள்ள அகண்ட காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார்கள்.

    பின்னர் சிறிய பல்லக்கில் பூஜைகள் செய்து கொண்டு வரப்பட்ட அஸ்திர தேவருக்கு ஆற்றங்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அஸ்திர தேவர் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீரை ஊற்றிய பின்னர், அஸ்திர தேவர் அகண்ட காவிரி ஆற்றில் புனித நீராடினார்.

    அதனைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் நமசிவாயா..., நமசிவாயா... என்ற கோஷத்துடன் புனித நீராடினார்கள். காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்ட அம்மன், கோவில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி நேற்று மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.

    • பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்கார நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்சுவரர் கோவில் கடற்கரையில் நடக்கிறது.

    விழா நாட்களில் முத்தாரம்மன் வெவ்வேறு கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    நான்காம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு காவடி திருவீதி வலம் வருதல் நடைபெற்றது. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வீதிஉலா
    • கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. இன்று இரவு `கருடசேவை' நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, `ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 11 கலாசார குழுக்களை சேர்ந்த 281 கலைஞர்கள் குஸ்ஸாடி நடனம், லம்படா நடனம், சுக்கா பஜனை மற்றும் கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்களும், பெண்களும் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார் போன்ற வேடமிட்டு சென்றனர். வாகன வீதி உலா தொடங்கும் முன் பல்வேறு ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி பிரம்மோற்வ வழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கில் (மோகினி அலங்காரம்) வாகன வீதிஉலா, இரவு கருடசேவை நடக்கிறது.

    • சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி 2 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: பஞ்சமி இரவு 11.04 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: கேட்டை இரவு 8.27 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் சேவை. திருவாட்டாறு சிவபெருமான் பவனி. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ பிள்ளை லோகாச்சாரியார் புறப்பாடு. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-தாமதம்

    மிதுனம்-அன்பு

    கடகம்-புகழ்

    சிம்மம்-மாற்றம்

    கன்னி-உறுதி

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-பரிசு

    தனுசு- ஆதரவு

    மகரம்-வரவு

    கும்பம்-தெளிவு

    மீனம்-தாமதம்

    • காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.
    • காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம்.

    திருச்சி:

    துலா மாத பிறப்பை யொட்டி ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனத்திற்காக இன்று காவிரி ஆற்றிலிருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி அரங்கனை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என பெரியவர்கள் கூறுவர். இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.

    இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனிதநீர் கொண்டு செல்ல ப்படுகிறது.

    துலா மாத பிறப்பையொட்டி இன்று காலை காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், வெள்ளி குடங்களிலும் புனித நீர் எடுக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையொட்டி நம்பெரு மாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 3 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    துலா (ஐப்பசி) மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    • ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவே நவராத்திரி
    • ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    'நவம்' என்பதற்கு 'ஒன்பது' என்று பொருள். ஒன்பது நாட்கள் இரவு தேவியை வழிபாடு செய்யும் விழாவை, நவராத்திரி" என்று சிறப்பிக்கிறோம். இந்த விழாவில் ஒன்பது என்ற எண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி விழாவில் செய்ய வேண்டிய ஒவ்வொரு செயலையும், ஒன்பது என்ற எண்ணிக்கையில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படி ஒன்பது.. ஒன்பதாக சொல்லப்பட்ட சில விஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

     இசை

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் இசையை வாசிப்பார்கள். அதன் விவரம் வருமாறு:-

    முதல் நாள் - மிருதங்கம்

    இரண்டாம் நாள் - புல்லாங்குழல்

    மூன்றாம் நாள் - வீணை

    நான்காம் நாள் - கோட்டு வாத்தியம்

    ஐந்தாம் நாள் - ஜல்லரி வாத்தியம்

    ஆறாம் நாள் - பேரி

    ஏழாம் நாள் - படகம்

    எட்டாம் நாள் - கும்மி

    ஒன்பதாம் நாள் - கோலாட்டம்

     மங்கலப்பொருள்

    நவராத்திரி விழாவின்போது, வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பொருளை வழங்க வேண்டும். இதனால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். வழங்க வேண்டிய பொருட்களின் விவரம் வருமாறு:-

    முதல் நாள் -புனுகு

    இரண்டாம் நாள் - ஜவ்வாது

    மூன்றாம் நாள் - கஸ்தூரி

    நான்காம் நாள் - அரகஜா

    ஐந்தாம் நாள் - சந்தனம்

    ஆறாம் நாள்- குங்குமம்

    ஏழாம் நாள்-சாந்து

    எட்டாம் நாள் - ஸ்ரீ சூரணம்

    ஒன்பதாம் நாள் மை

     தியானம்

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு தேவியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். அந்த தேவியரின் பெயர்கள் விவரம்:-

    முதல் நாள் - நீலாயதாட்சி

    இரண்டாம் நாள் - காமாட்சி

    மூன்றாம் நாள் - மீனாட்சி

    நான்காம் நாள் - விசாலாட்சி

    ஐந்தாம் நாள் - ஜலஜாட்சி

    ஆறாம் நாள் - ராட்சி

    ஏழாம் நாள் - பத்மாட்சி

    எட்டாம் நாள் - வனஜாட்சி

    ஒன்பதாம் நாள் - பங்கஜாட்சி

     கோலம்

    நவராத்திரி விரதத்தின் ஒன்பது நாட்களுக்கும் போட வேண்டிய கோலங்கள் விவரம்:-

    முதல் நாள் - அரிசி மாவு கோலம்

    இரண்டாம் நாள் - கோதுமை மாவு கோலம்

    மூன்றாம் நாள் - முத்துக்கள் கொண்டு மலர் கோலம்

    நான்காம் நாள் - அட்சதை (அரிசி) கொண்டு படிக்கட்டு கோலம்

    ஐந்தாம் நாள் - கடலை பருப்பு கொண்டு பறவைக் கோலம்

    ஆறாம் நாள் - பருப்புகளைக் கொண்டு தேவியின் நாமத்தை கோலமாக எழுத வேண்டும்

    ஏழாவது நாள் - மலர்களைக் கொண்டு திட்டாணி கோலம்

    எட்டாவது நாள் - காசுகளை கொண்டு தாமரைப் பூ கோலம்

    ஒன்பதாம் நாள் - வாசனைப் பொடிகளை கொண்டு ஆயுதங்களை கோலமாக அமைக்க வேண்டும்.

     விளையாட்டுப் பொருட்கள்

    நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டுப் பொருளை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - சோழி

    இரண்டாம் நாள் - குன்றிமணி

    மூன்றாம் நாள் - தட்டைப் பவளம்

    நான்காம் நாள் - கிளிஞ்சல்

    ஐந்தாம் நாள் - மரச்சொப்பு

    ஆறாம் நாள் பொம்மை

    ஏழாம் நாள் - அம்மானைக் காய்

    எட்டாம் நாள் - பந்து

    ஒன்பதாம் நாள் - கழற்சிக் காய்

     பூக்கள்

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பூக்களால் மாலை தொடுத்து தேவிக்கு அணிவிக்க வேண்டும். அதன் விவரம் வருமாறு:-

    முதல் நாள் - மல்லிகைப் பூ மாலை

    இரண்டாம் நாள் - முல்லைப் பூ மாலை

    மூன்றாம் நாள் - சம்பங்கிப் பூ மாலை

    நான்காம் நாள் - ஜாதிப்பூ மாலை

    ஐந்தாம் நாள் - பாரிஜாதப் பூ மாலை

    ஆறாம் நாள் - செம்பருத்திப் பூ மாலை

    ஏழாம் நாள் - தாழம்பூ மாலை

    எட்டாம் நாள் - ரோஜாப்பூ மாலை

    ஒன்பதாம் நாள் - தாமரைப்பூ மாலை

     பெண் வழிபாடு

    நவராத்திரி விழாவின் போது நம் வீட்டிற்கு வரும் பெண்களை ஒவ்வொரு நாளும். ஒவ்வொரு பெயரில் தேவியாக நினைத்து வணங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - பாலா

    இரண்டாம் நாள் - குமாரி

    மூன்றாம் நாள்- கன்னிகை

    நான்காம் நாள் - தேவதை

    ஐந்தாம் நாள் - பிரவுடா

    ஆறாம் நாள் - முத்து

    ஏழாம் நாள் - சுமங்கலி

    எட்டாம் நாள் - தருணீ

    ஒன்பதாம் நாள் - மாதா

    நைவேத்தியம்

    முதல் நாள் - சுண்டல்

    இரண்டாம் நாள் - வறுவல்

    மூன்றாம் நாள் - துவையல்

    நான்காம் நாள் - பொரியல்

    ஐந்தாம் நாள் - அப்பளம்

    ஆறாம் நாள் - வடகம்,

    ஏழாம் நாள் - சூரணம்

    எட்டாம் நாள் - முறுக்கு

    ஒன்பதாம் நாள் - திரட்டுப் பால்

     பழங்கள்

    நவராத்திரி விழாவை நாம் கொண்டாடும் போது, நம் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பழத்தை வழங்க வேண்டும். அதன் விவரம்:-

    முதல் நாள் - வாழைப்பழம்

    இரண்டாம் நாள் - மாம்பழம்

    மூன்றாம் நாள் - பலாப்பழம்

    நான்காம் நாள் - கொய்யாப்பழம்

    ஐந்தாம் நாள்- மாதுளம் பழம்

    ஆறாம் நாள் - நாரத்தைப் பழம்

    ஏழாம் நாள் - பேரீச்சம் பழம்

    எட்டாம் நாள் - திராட்சைப் பழம்

    ஒன்பதாம் நாள் - நாவல் பழம்

     ராகங்கள்-9

    நவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு ராகத்தை இசைத்து தேவியை வழி பட வேண்டும். அதன் விவரம்:-

    முதல்நாள்- தோடிராகம்

    இரண்டாம் நாள் - கல்யாணி ராகம்

    மூன்றாம் நாள் - காம்போதி ராகம்

    நான்காம் நாள் - பைரவி ராகம்

    ஐந்தாம் நாள் - வராளி ராகம்

    ஆறாவது நாள் - நீலாம்பரி ராகம்

    ஏழாவது நாள் - பிலஹரி ராகம்

    எட்டாம் நாள் - புன்னாகவரளி ராகம்

    ஒன்பதாம் நாள் - வஸசந்தா ராகம்

     9 வகை சுண்டல்

    நவராத்திரி விழாவின் ஒவ்வொரு நாளிலும் ஒரு நைவேத்தியம் படைப்பது போல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை சுண்டலை அம்பாளுக்கு படைத்து வழிபட்டால் அதற்கான பலன் கிடைக்கும். அதன் விவரம்:-

    முதல் நாள் - வெள்ளைக் கடலை சுண்டல்

    இரண்டாம் நாள் - காராமணி சுண்டல்

    மூன்றாம் நாள் - மொச்சை சுண்டல்

    நான்காம் நாள் - பச்சைப் பட்டாணி சுண்டல்

    ஐந்தாம் நாள் - வேர்க்கடலை கண்டல்

    ஆறாம் நாள் - பச்சைப்பயறு சுண்டல்

    ஏழாம் நாள் - கொண்டைக் கடலை சுண்டல்

    எட்டாம் நாள் - மொச்சைப் பயறு சுண்டல்

    ஒன்பதாம் நாள் வேர்க்கடலை கண்டல்

    சர்க்கரை வியாதி உள்ளவர்கள், இது போன்ற நவதானிய கண்டல்களை செய்து சாப்பிடும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நம் முன்னோர்கள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாகவே இதுபோன்ற நவதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

     சித்ரான்னம்

    விதவிதமான சுவைகளின் சமைத்த உணவை 'சித்ரான்னம்' என்பார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தேவிக்கு படைத்து வணங்கி வேண்டிய சித்ரான்னங்களை இங்கே பார்க்கலாம்...

    முதல் நாள் - வெண் பொங்கல்

    இரண்டாம் நாள் - புளியோதரை

    மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

    நான்காம் நாள் - கதம்ப சாதம்

    ஐந்தாம் நாள் - தயிர் அன்னம்

    ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

    ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்

    எட்டாம் நாள் - பாயசம்

    ஒன்பதாம் நாள் - அக்காரவடிசல் (வெல்லம், பால், அரிசியில் செய்வது)

    சிறு பெண் வழிபாடு

    நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறு வயது பெண்களை, அம்மனாக பாவித்து, வளையல் போட்டு நலுங்கு வைத்து ஒவ்வொரு பெயரில் வழிபாடு செய்வார்கள். அதன் விவரம் மற்றும் அதன் பலன்கள் வருமாறு:-

    முதல் நாள் - 2 வயது பெண் (குமாரி) - வீட்டில் தரித்திரம் விலகும்

    இரண்டாம் நாள் - 3 வயது பெண் (திருமூர்த்தி) - மன மகிழ்ச்சி உண்டாகும் ராஜ்ஜிய சுகம் கிடைக்கும்

    மூன்றாம் நாள் - 4 வயது பெண் (கல்யாணி) - நல்வித்தை,

    நான்காம் நாள் - 5 வயது பெண் (ரோகிணி) - வியாதிகள் விலகும்

    ஐந்தாம் நாள் - 6 வயது பெண் (காளிகா) - பகை மறையும்

    ஆறாம் நாள் - 7 வயது பெண் (சண்டிகா) - ஐஸ்வரியங்கள் தேடி வரும்.

    ஏழாம் நாள் - 8 வயது பெண் (சாம்பவி) - ராஜயோகம் உண்டாகும்.

    எட்டாம் நாள் - 9 வயது பெண் (துர்க்கா) - காரியம் வெற்றியாகும்

    ஒன்பதாம் நாள்- 10 வயது பெண் (சுபத்ரா) - மனசாந்தி கிடைக்கும்

    ×