என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசை தசரா திருவிழா"

    • திருப்பதி சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்து.
    • தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு சிறப்பு பேருந்து.

    திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், நாகை, செங்கோட்டையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

    அதேபோல், தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசைக்கு அக்டோபர் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    http://tnstc.in என்ற இணையதளத்தில் சிறப்பு பேருந்துகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    • தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான்.
    • தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

    இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    தென் மாவட்டத்தை பொறுத்தவரை நவராத்திரி என்றாலே குலசேகரன்பட்டினம் தான். இதனை சுருக்கி 'குலசை' என்பார்கள்.

    குலசை தசரா பெருந்திருவிழாவில் பங்கேற்பதற்காக, தூத்துக்குடி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டு குலசை தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் நாள் திருவிழாவான அக்டோபர் 2-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த கோவிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞான மூர்த்தீஸ்வரரும், அம்பிகை முத்தாரம்மனும் வீற்றிருக்கிறார்கள்.

    பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் என அழைக்கப்பட்டதாக வரலாறு உண்டு.

    இந்த கோவில் முன்பு சாதாரண ஒரு தெருக் கோவிலாக இருந்து வந்தது. ஆனால் இன்று உலகப் பிரசித்தி பெற்ற கோவிலாக சிறப்பு பெற்று வளர்ச்சி பெற, அம்பாளின் மீதுள்ள பக்தர்களின் அளவு கடந்த நம்பிக்கை தான் காரணம்.

    முன்பெல்லாம் அம்மை நோய் குணமாக வேண்டி மட்டுமே அம்மனுக்கு விரதம் மேற்கொள்வார்கள். ஆனால் தற்போது கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை என சகல துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனின் அருளை பெறப் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்கு ஆண்டு லட்சக்கணக்கில் அதிகரித்து கொண்டே வருகிறது.

    கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லோரும் அருள் பெறும் சக்தி தலமாகவே இந்த கோவில் விளங்கி வருகிறது. முற்காலத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் மாறு வேடத்தில் சென்று மக்களிடம் தர்மம் எடுத்ததாக ஐதீகம் உள்ளதாம்.

    இந்த ஐதீகப்படி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் நலம் பெற வேண்டியும், நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டியும் மாறுவேடம் பூண்டு மக்களிடம் முத்தாரம்மனுக்கு காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இதனை அம்மனே நேரில் வந்து கேட்பதாகக் கருதி மக்கள் தர்மம் செய்கிறார்கள்.

    தசராவில் பக்தர்கள் அணியும் ஒவ்வொரு வேடத்துக்கும் ஒவ்வொரு பலன்களை முத்தாரம்மன் தருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். காளி, சிவன், பார்வதி, பிரம்மா, விஷ்ணு, விநாயகர், முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, நர்சு, போலீஸ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று, அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து, கோவில் உண்டியலில் செலுத்துவது தான் இதன் சிறப்பு ஆகும். முனிவர் வேடமானது முன் ஜென்ம பாவங்களை தீர்ப்பதாகவும், குறவர் வேடமானது மன குறைகளை தீர்க்கும் எனவும், பெண்கள் வேடமானது திருமண குறையை தீர்க்கும் எனவும், காளி வேடம் காரிய சித்தியை தரும் எனவும் கூறப்படுகிறது.

    ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப வேடங்களை அணிந்து வருவர். காவல்துறை வேடம் முதல் செவிலியர், மருத்துவர், எமதர்மன், சித்திரகுப்தன் என பல்வேறு வேடங்களை பக்தர்கள் அணிந்து வருவர்.

    அம்மன் அருளின்படி , காளி வேடம் அணிபவர்கள் 41 நாட்களுக்கு மேலாக விரதம் இருக்க தொடங்குவார்கள். அவர்கள் வீட்டருகே, குடில் அமைத்து அதில் அம்மனின் புகைப்படம் வைத்து தினமும் பூஜை செய்து அங்கேயே விரதம் இருந்து தங்கி இருப்பர். மற்ற வேடம் அனுபவர்கள் காளி வேடம் அணிபவர்களிடம் காப்பு கட்டி கொள்வர். மற்ற வேடம் அணிபவர்கள் குடியேறும் நாள் அன்று மாலை அணிந்து 11 நாள் விரதம் இருப்பர்.

     

    ஒவ்வொரு வேடத்திற்கும் ஒவ்வொரு பலன் இருப்பது போல, ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பலன் இருப்பதாக நம்பப்படுகிறது. பச்சை வண்ண மாலையானது பசுமையான வாழ்வை தரும் எனவும், மஞ்சள் வண்ண மாலை மங்கல நிகழ்வை தருவதாகவும், கருங்காலி மாலை நல்லெண்ணத்தை தருவதாகவும், துளசி மாலை புனிதத்தை தருவதாகவும், ருத்திராட்ச மாலை சன்னியாச வாழ்வையும் அளிப்பதாகவும் நம்பப்படுகிறது.

    ஒவ்வொரு வேடம் அணிந்தவர்களும், அது எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், அருகில் வீடுகளில் யாசகம் பெற்று, அந்த காணிக்கையுடன் சூரசம்காரம் நடக்கும் நாளன்று கோவில் சென்று தங்கள் வேடத்துடன் அம்மனை தரிசித்து பின்னர் கடலில் சென்று நீராடிவிட்டு வருவர்.

    பின்னர் இரவு 10 மணி அளவில் முத்தாரம்மன் எழுந்தருளி, சூரனை வீழ்த்தும் சூரசம்கார நிகழ்வு கடற்கரையில் நிகழும். இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்து இருப்பார்கள். சூரசம்காரம் முடிந்து அம்மன் சன்னதி தேரில் ஊர்வலம் வருவார்.

    அம்மன் சன்னதியை அடைந்த பிறகு காப்பு தரிக்கப்படும். காளி வேடம் அணிந்தவர்கள் மட்டும் கோவிலில் காப்பு தரிப்பார்கள். மற்ற வேடம் அணிந்தவர்கள் காளி வேடம் அணிந்தவர்களிடம் காப்பு தரித்து கொள்வர். அதன் பிறகே குலசை முத்தாரம்மன் தசரா விரத காலம் நிறைவுபெறும்.

    இந்த ஆண்டு தசரா திருவிழாவுக்காக 61 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த மாதம் 4-ந் தேதியே மாலை அணிந்தனர். 51 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த மாதம் 14-ந் தேதியும், 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 17-ந் தேதியும், 41 நாட்கள் விரதம் இருப்பவர்கள் 24-ந் தேதியும் விரதம் தொடங்கினர்.

     

    கோவிலில் இன்று விரதம் தொடங்கிய பக்தர்கள்.

    31 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் கடந்த 3-ந் தேதியும், 21 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கடந்த 13-ந் தேதியும் விரதம் தொடங்கினர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமல்லாது நெல்லை, தென்காசி, விருதுநகர் மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குலசை வந்து கடற்கரையில் நீராடி அம்மன் முன்பு மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர். இதனால் உடன்குடி, குலசை, திருச்செந்தூர் பகுதிகளில் எங்கு திரும்பினாலும் மாலை அணிந்த பக்தர்கள் காட்சியளிக்கின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு சுமார் 7 லட்சம் பக்தர்கள், 2023-ம் ஆண்டு 8 லட்சம் பக்தர்கள், கடந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் வேடம் அணிந்திருந்த நிலையில், இந்த ஆண்டு இருமடங்கிற்கும் அதிகமான அளவில் பக்தர்கள் வேடம் அணிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் உண்டியல் வசூலே, மாலை அணியும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதை உறுதிபடுத்துவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு சூரசம்ஹாரம் நாளில் மட்டும் 20 லட்சம் பேர் திரண்ட நிலையில், இந்த ஆண்டு அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், வாகன நிறுத்துமிட வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    • பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா.
    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம்:

    குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பார்வதி கோலத்தில் முத்தாரம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிசாசூரசம்கார நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு சிதம்பரேஸ்சுவரர் கோவில் கடற்கரையில் நடக்கிறது.

    விழா நாட்களில் முத்தாரம்மன் வெவ்வேறு கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் நலம் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்றைய தினம் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    நான்காம் திருநாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு காவடி திருவீதி வலம் வருதல் நடைபெற்றது. மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை சமய சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா.
    • இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும்.

    தூத்துக்குடி:

    பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

    5-ம் நாளான நேற்று முன்தினம் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் கோலத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இ்க்கோலத்தில் அம்மனை தரிசித்தால் வாழ்நாள் கூடும் என்பது ஐதீகம். இதனால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து அம்மனை வழிபட்டனர்.

    6-ம் நாளான நேற்று காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

     தசரா திருவிழாவையொட்டி பல்வேறு நாட்கள் விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள், நேர்த்திக்கடனாக சிவன், பிரம்மன், விஷ்ணு, முருகபெருமான், கிருஷ்ணர், ராமர், லட்சுமணர், நாராயணர், அனுமர், காளி போன்ற பல்வேறு சுவாமி வேடங்களையும், அரசன், குறவன், கரடி, கிளி உள்ளிட்ட வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர்.

    மேலும் ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருக்கும் பக்தர்கள், அங்குள்ள கோவிலில் பிறை அமைத்து குழுவாக தங்கியிருந்து அம்மனை வழிபடுகின்றனர். அவர்கள் பல்வேறு வேடங்களையும் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் வேடம் அணிந்த தசரா பக்தர்கள் வீதி வீதியாக சென்று காணிக்கை வசூலிக்கின்றனர். இதனால் தசரா திருவிழா களைகட்டியது.

    10-ம் நாளான வருகிற 24-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 12 மணியளவில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து காணிக்கை வசூலித்த பக்தர்கள், கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி, கடலில் புனித நீராடி விரதத்தை முடித்து கொள்கின்றனர்.

    • நேற்று காலை அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது.
    • பக்தர்கள் வேடங்களை அணிந்து அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

    மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழா, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்தாண்டுக்கான தசரா திருவிழா, இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    விழா நாள்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து அருள்பாலிப்பார்.

    கொடியேற்றத்தைத் தொடர்ந்து காப்பு அணியும் பக்தர்கள், தசரா குழுவினர் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள் தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள்.

    சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வரும் 12ம் தேதி நள்ளிரவு நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பாக சிம்ம வாகனத்தில் எழுந்தருளும் அம்மன், பல்வேறு வேடங்களில் வலம் வரும் மகிசாசூரனை வதம் செய்வார். கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    அக்.13ம் தேதி காலையில் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளும் அம்மன் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தவுடன் காப்பு களைதல் வைபவம் நடைபெறும்.

    • குலசேகரபாண்டிய மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்பட்டது.
    • முத்து+ஆறும்+அம்மன் என்பதால் முத்தாரம்மன் என ஆயிற்று.

    நவராத்திரி விழாவில் தசரா கொண்டாட்டங்கள் என்றதும் நம்மில் அனைவரும் பட்டென்று நினைப்பது இந்தியாவில் நான்கு இடங்களில் நடைபெறும் தசரா விழா கொண்டாட்டங்களை தான்.

    கர்நாடக மாநிலத்தில் மைசூரில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நடைபெறும் பிரமாண்ட பூஜைகள், யானை அணிவகுப்புகள்...

    குஜராத் மாநிலத்தில் தாண்டியா நடனத்துடன் தசரா கொண்டாட்டங்கள்...

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் துர்க்கா தேவி பூஜை.


    தமிழகத்தில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் வேடம் புனைந்து கடற்கரையில் முத்தாரம்மனோடு மகிஷாசுர வதத்திற்காக செல்லும் ஊர்வலம்.

    இந்த நான்கு தசாரா கொண்டாட்டங்கள் இந்தியாவில் புகழ் பெற்ற நவராத்திரி விழாக்கால கொண்டாட்டங்கள் என அழைக்கபடுகிறது.

    இந்த நான்கில் நம்மூர் தாய் குலசை முத்தாரம்மன் தசரா கொண்டாட்டத்தை பற்றி நான் திரட்டிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு...

    சங்க காலத்தில் குலசேகரப்பட்டினம் தென் மறைநாடு, வீர வளநாடு என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது.

    கொற்கை என அழைக்கப்பட்ட பாண்டியர்களின் துறைமுக நகரமே இன்றைய குலசேகரபட்டினம் ஆகும்.

    குலசேகரபட்டினம் ஊர் கடல் பகுதி. இயற்கையாகவே மிகப் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் அளவிற்கு ஆழமான கடற்பரப்பை கொண்டது.

    பாண்டிய மன்னன் சடைய வர்ம சுந்தரபாண்டியனின் மகன் மாற வர்ம குலசேகர பாண்டியன் கொற்கை பகுதியை கி.பி.1268 ம் ஆண்டு முதல் கி.பி 1311 வரை சுமார் 43 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

    1274 -ம் ஆண்டு கேரள மன்னனை வெல்ல குலசேகரப்பாண்டியன் படையெடுக்க செல்லும் முன் தன் குல தெய்வமான முத்தாரம்மனை வேண்டி கொண்டான்.

    மன்னன் கனவில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தோன்றி போரில் வெற்றி கிட்டும் என அருளாசி வழங்கினாள்.

    சேரனோடு நடந்த போரில் வெற்றி பெற்று கொல்லம் பகுதியை கைப்பற்றிய குலசேகரப்பாண்டியன் "கொல்லம் கொண்ட பாண்டியன்" என்ற அடைமொழியை பெற்றான்.

    கி.பி. 1279 ஆம் ஆண்டு நடந்த மற்றொரு போரில் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திர சோழன் மற்றும் போசளர் இன தலைவனையும் ஒரே போரில் தோற்கடித்தான் மன்னன் குலசேகர பாண்டியன்.

    பின் 1284 ல் இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று நிறைய செல்வங்களோடு வந்தான் மன்னன் குலசேகரன்.

    வெற்றி மேல் வெற்றியை முத்தாரம்மனின் அருளால் பெற்ற குலசேகர பாண்டிய மன்னன் முத்தாரம்மனின் உத்தரவுப்படி கொற்கை துறைமுகத்தை சீர்படுத்தி, அம்மனின் ஆலயத்தையும் புனரமைத்து ஊரையும் விரிவு படுத்தினான்.

    அன்று முதல் இந்த ஊரின் பெயர் குலசேகரபாண்டிய மன்னனின் பெயரால் குலசேகரப்பட்டினம் என அழைக்கப்பட்டது.


    குலசேகர பட்டினத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் முத்தாரம்மனின் பெயர் காரணத்தை சொல்லுடேய் சில் வண்டு என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.

    முன்னொரு காலத்தில் சக்தி முனி என்ற முனிவர் பூலோகத்தில் இருந்து அஷ்டமா சித்திகள் பெற வேண்டி யாகம் வளர்த்தார்.

    யாகத்தீயின் வெம்மை விண்ணுலகம் வரை பரவுகிறது. சிவனாரின் உத்தரவின் படி சக்தி முனிவன் வளர்த்த யாகத்தை நிறைவு செய்ய சென்ற பார்வதி தேவியின் நெற்றியில் வேள்வி தீ வெக்கையால் முத்து போன்ற வியர்வை துளிகள் அரும்புகின்றன.

    நெற்றியில் அரும்பிய வியர்வை துளிகளை யாக குண்டத்தில் வீசி எறிகிறாள் அன்னை பார்வதி தேவி.

    சிவனின் வியர்வையில் தோன்றிய சிவ அம்சமான வியர்வை புத்திரனை போல் பார்வதிதேவி வேள்வி குண்டத்தில் வீசி எறிந்த வியர்வை துளிகளில் இருந்து சக்தியின் அம்சமாக அஷ்டமா சக்திகள் பிறக்கின்றனர்.

    முத்தாரம்மன்,வடபத்திரகாளியம்மன்,முப்பிடாரியம்மன், பொன்னியம்மன், உலகளந்தாள், அரியநாச்சி, செண்பகவல்லி, சந்தனமாரி என்ற பெயர் கொண்ட அஷ்ட காளிகளில் (பேச்சு வழக்கில், அட்டகாளி) மூத்தவள் முத்தாரம்மன் என்பதால் மூத்தமாரி (முத்துமாரி) என அன்னையை அழைப்பதாகவும் பக்தர்கள் கூறுவர்.

    எத்தனை பெயர்கள் இருப்பினும் அத்தனை பெயர்களுக்கும் அன்னையானவள் அர்த்தம் கற்பிப்பவளாகவே இருக்கிறாள் என்பது அம்பிகையின் பெரும் சிறப்பு தானே.

    தூத்துக்குடியை ஒட்டியுள்ள கடலில் தாராளமாக கிடைத்த முத்துக்களை எடுத்து அதை ஆரங்கள் (மாலை) ஆக்கி பாண்டிய மன்னர்கள் தங்கள் அன்னைக்கு அணிவித்து அழகு பார்த்ததால் அம்பிகையானவள் முத்தாரம்மன் (முத்துக்களை ஆரமாக அணிபவள்) என்று பெயர் பெற்றதாக சொல்வார்கள்.

    முத்துகள் எனும் அம்மை நோய் அன்னையை வழிபட்டால் ஆறி விடும். உடலில் ஏற்படும் அம்மை முத்துக்கள் குணமாக அன்னையை வேண்டி வழிபட்டால் உடனே ஆற்றுபவள் என்பதால் முத்துகளை ஆற்றும் அம்மன்.

    முத்து+ஆறும்+அம்மன் என்பதால் முத்தாரம்மன் என அம்மன் பெயர் பெற்றதாக அம்பாளின் பெயருக்கான காரணத்தை கூறுவர்.

    வேள்வியில் தனது அம்சமாக பிறந்த அஷ்ட காளிகளை தன்னுடன் அழைத்து கொண்டு கயிலைக்கு வந்தாள் அன்னையான பார்வதி தேவி.

    மகாதேவரான சிவனாரை வணங்கி தொழுது நின்ற அஷ்ட மாகாளிகள் அனைவரும் சிவனிடம் தங்களை பிறவி செய்த காரணத்தை வினவினர்.

    மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் கொடிய மகிஷாசுரனை வதம் செய்யவே பார்வதியின் அம்சமாய் உங்களை பிறவி செய்தேன் என சிவன் பதிலுரைத்தார்.

    சிவனாரிடம் வேண்டிய வரங்களை பெற்று அஷ்டமாகாளிகள் எட்டு பேரும் மகிஷனோடு போர் புரிய வருகின்றனர்.

    அஷ்ட மாகாளிகள் மற்றும் மகிஷாசுரன் இடையே துவந்த யுத்தம் நடக்கிறது.

    சிவனாரிடம் பெற்ற வரத்தின் மகிமையால் மகிஷன் அஷ்ட காளிகளை எதிர்த்து மூர்க்கமாய் போரிடுகிறான்.

    எட்டு பேரும் தனி தனியாக நிற்பதை விட ஒரு சேர நின்றால் தங்களின் அஷ்ட மா சித்திகளுக்கு வலிமை அதிகம் என்பதை அஷ்ட காளிகள் உணர்கின்றனர்.

    அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு தேவியாய் இணைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர்.

    உயிர் பிரியும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன் தன் தவறை உணர்கிறான்.

    அன்னை சாமுண்டீஸ்வரி தாயே! என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை அசுர குலத்தில் ராஜாவாக இருந்தேன்.


    என்னை மன்னித்து மறு பிறப்பு தந்து வனத்தில் வாழும் உயிரினங்களின் ராஜாவான சிங்கமாக என்னை பிறவி செய்து தாயே! உன்னை சுமக்கும் பாக்கியத்தை தந்தருள வேண்டும் என அன்னையிடம் வேண்டினான் மகிஷன்.

    ஆங்கார ரூபிணியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த சொரூபிணியாக மாறி மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக பிறவி செய்து மகிஷனை தனது வாகனமாக்கி "சிம வாகிணி" என பெயர் பெற்றாள்.

    எல்லாம் சரிடேய்!! சில் வண்டு...

    குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயில் தசாரா கொண்டாட்டங்களின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியான கடற்கரையில் நடைபெறும் மகிஷாசுர சம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பல்வேறு வேஷம் போட்டு அம்மனோடு செல்வதற்கான காரணம் என்னன்னு கேக்குறீங்க .. சரி தானே.

    மகிஷாசுரனோடு அன்னை முத்தாரம்மன் யுத்தம் நிகழ்த்திய போது அன்னைக்கு துணையாக நிறைய பரிவார தெய்வங்களும் பூதப்படைகளும் கலந்து கொண்டன.

    அன்னைக்கு துணையாக நாங்களும் இருக்கிறோம் என அன்று பரிவார தெய்வங்கள், பூதப்படையினர் கலந்து கொண்டதை நினைவுபடுத்தும் வகையில் பக்தர்கள் விரதமிருந்து வேடம் அணிந்து மகிஷாசுர சம்ஹாரத்தின் போது அன்னையின் படையினராக கலந்து கொள்கின்றனர்.

    பக்குவமான ஆன்மீக மன நிலைக்கு மனிதனை செல்ல விடாமல் தடுப்பது அவனின் அகந்தையும், ஆணவமும்.

    விரதமும், பணிவும் மனிதனையும், மனித மனத்தையும் பக்குவபடுத்தும்.

    இவ்வாறு வேடம் அணியும் பக்தர்கள் ஜாதி, மதம், அந்தஸ்து பாராமல் அனைவரின் வீடுகளுக்கு சென்று தனது ஆணவம், அகந்தையை விட்டு பணிவோடு முத்தாரம்மைக்கு காணிக்கை தாங்க.. என கேட்பார்கள்.

    அவ்வாறு சேகரிக்கும் காணிக்கையை அன்னையிடம் சமர்பித்து தாயே ! எனது அகந்தையை விட்டு விட்டேன். உன்னோடு என்னையும் சேர்த்துக் கொள் அம்மா! என வேண்டிக்கொள்வதன் அர்த்தமாக வேடம் அணிந்த பக்தர்கள் அன்னையோடு அசுர சம்ஹாரத்திற்கு செல்லும் நிகழ்வு கருதப்படுகிறது.

    அகந்தையை விட்டு விரதம் இருந்து வேடம் அணிந்து வரும் தனது பக்தர்களின் வேண்டுதல்களை அடுத்த தசாரா விழா கொண்டாட்டங்களுக்கு முன்பே அன்னை நிறைவேற்றி விடுவதாக ஐதீகம்.

    வேடம் அணிந்த பக்தர்களின் வேண்டுதலை மட்டுமல்ல வேடம் அணியாமல் உண்மையான பக்தியோடு தன்னை நோக்கி கை கூப்பி அம்மா.. முத்தாரம்மா.. தாயே என்னை காப்பாற்று! என வேண்டுவோர்களின் வேதனைகளையும் தீர்த்து வைக்கிறாள் திரிபுரம் எனும் முப்புரத்தில் குடியிருந்த முப்புரநாயகியாகிய முத்தாரம்மன்.

    இந்த நவராத்திரி விழா காலங்களில் மட்டும் அல்லாது அன்னையின் அருள் என்றென்றும் நம்மை காக்கட்டும்... ஓம் சக்தி...

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    ×