என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது.
    • இந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. மிகவும் செயல்படும் எரிமலையான இது சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது.

    இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது எரிமலையில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின. அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா வழியாக பாய்ந்தது.

    எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேசிய பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஈரான், இஸ்ரேலிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.
    • போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    நியூயார்க்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது இரு நாடுகளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேல்–ஈரான் இடையிலான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:

    இரு நாடுகளுக்கு இடையிலான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயைப் பற்றவைக்கும். அதை நாம் பரவ விடக்கூடாது.

    அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள். போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.

    போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளின் தலைவிதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்தின் தலைவிதியை மாற்ற உதவும்.

    போர் மேலும் மேலும் அதிகமாக நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மோதல் கணிக்க முடியாததாக உள்ளது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குள் ஒற்றுமை மற்றும் ஐ.நா.சாசனத்தைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    • உளவுத்துறையின் கண்டுபிடிப்புகள் எனது கூற்றுகளுக்கு முரணாக உள்ளன. ஆனால் எனக்கு கவலையில்லை
    • கப்பார்ட் முன்வைத்த மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது உளவுத்துறை சரியாக வேலை செய்யவில்லை என்றும், அதன் இயக்குனர் வழங்கிய தகவல்கள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளார்.

    ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி காப்பார்டின் நிலைப்பாட்டை அவர் நிராகரித்தார்.

    ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் அளித்த தகவல் தவறானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    முன்னதாக, ஈரான் தனது கைவிடப்பட்ட அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்வில்லை என்று அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தத் தகவல் தவறானது என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

    "தகவல் தவறாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் இருப்பதாக நான் சொன்னேன். ஆனால் உளவுத்துறையின் கண்டுபிடிப்புகள் எனது கூற்றுகளுக்கு முரணாக உள்ளன. ஆனால் எனக்கு கவலையில்லை" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    ஆனால் கப்பார்ட் முன்வைத்த மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

    • மாணவர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்த வழங்கிட வேண்டும்.
    • கொள்கைக்கு விரோதமான பதிவுகள் கண்காணிக்கப்படும்.

    அதிபர் டிரம்ப் கெடுபிடிகளால் அமெரிக்காவில் நிறுத்திவைக்கப்பட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகள் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்துடனான டிரம்ப்பின் சண்டைக்கு பிறகு வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த மாதம் அமெரிக்க அரசு அறிவித்தது.

    மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்து, அவர்களை பற்றிய பின்னணியை அறிய கால அவகாசம் தேவைப்படுவதால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

    இதனால், அமெரிக்காவில் படிப்பு என்ற கனவில் இருந்த வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்கும் பணியை அமெரிக்கா மீண்டும் தொடங்கி உள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

    மாணவர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை அமெரிக்க அரசு ஆய்வுக்கு உட்படுத்த வழங்கிட வேண்டும் என்றும் அப்படி ஆய்வு செய்ய அனுமதி மறுப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பதாரர்களின் சமூக வலைத்தள கணக்குகளில், அமெரிக்காவுக்கு விரோதமாகவோ, அதன் அரசாங்கம், கலாசாரம், அமைப்புகள், அடிப்படை கொள்கை ஆகியவற்றுக்கு விரோதமாகவோ ஏதேனும் பதிவுகளோ, செய்திகளோ இருக்கிறதா என்று தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

    ஒவ்வொரு தூதரக அதிகாரியும் தணிக்கை அதிகாரிகளாக செயல்படுவார்கள். மொத்த மாணவர் எண்ணிக்கையில் 15% குறைவான வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் பல்கலைக்கழகங்களில் விண்ணப்பித்துள்ள மாணவர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  

    • அதிபர் எப்போதும் ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார். அவர் அமைதியை விரும்பும் தலைவர்.
    • தேவைப்பட்டால் படைபலத்தைப் பயன்படுத்த அவர் தயங்க மாட்டார்.

    ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    ஈரானை தாக்கும் திட்டங்களுக்கு கொள்கையளவில் டிரம்ப் தனது ஆதரவை தெரிவித்ததாகவும், ஆனால் இன்னும் இறுதி உத்தரவுகளை வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

    "எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதால், போருக்குச் செல்வதா இல்லையா என்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களில் எனது முடிவை அறிவிப்பேன்" என்று டிரம்ப் கூறியதாக வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லெவிட் செய்தியாளர்களிடம் கூறினார்.

    ஈரான் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதை தடுப்பதே அவரது முதன்மையான குறிக்கோள் என்று லெவிட் கூறினார். எட்டப்பட்ட எந்தவொரு ஒப்பந்தமும் தெஹ்ரானின் யுரேனியம் செறிவூட்டலைத் தடைசெய்யும் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்கும் அதன் திறனை முடக்கும் நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

    "அதிபர் எப்போதும் ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார். அவர் அமைதியை விரும்பும் தலைவர். அவரது தத்துவம் படைபலத்தால் அமைதியை அடைவது. எனவே ராஜதந்திரத்திற்கான வாய்ப்பு இருந்தால், அவர் நிச்சயமாக அதை ஏற்றுக்கொள்வார். இருப்பினும், தேவைப்பட்டால் படைபலத்தைப் பயன்படுத்த அவர் தயங்க மாட்டார் " என்று லெவிட் விளக்கினார்.

    முன்னதாக ஈரானை தாக்க முடிவு செய்துள்ளாரா என்று கேட்டபோது, டிரம்ப், "நான் இருக்கலாம் அல்லது செய்யாமல் போகலாம். அடுத்த வாரம் மிகவும் முக்கியமானது. அநேகமாக ஒரு வாரத்திற்கும் குறைவான நேரம்" என்று கருத்து தெரிவித்தார்.

    இதற்கிடையில், வியாழக்கிழமை ஈரானில் அணுசக்தி தொடர்பான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதல்களில் இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள ஒரு மருத்துவமனை சேதமடைந்தது.  

    • சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் டிக்டாக் செயலியை நிர்வகித்து வருகிறது.
    • அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தினர்.

    வாஷிங்டன்:

    டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது. இன்ஸ்டா ரீல்ஸ்க்கு முன்னோடியாக டிக் டாக்கையே சொல்லலாம். வயது வித்தியாசம் இன்றி பல்வேறு தரப்பினரும் இதை பயன்படுத்துகின்றனர்.

    சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலிக்கு முன்னாள் அதிபர் ஜோ பைடன் தடை விதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என தெரிவித்தது.

    அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 19 முதல் அமலில் உள்ளது. இதனால் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை மூன்றாவது முறையாக மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

    • ஸ்டார்ஷிப் என்பது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.
    • ஸ்பேஸ்எக்ஸ் அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமானது.

    அமெரிக்காவின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியது. இதனால் அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு உருவானது

    ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.

    அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்பு பலமுறை ராக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன. 

    • இஸ்ரேல் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை
    • ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

    இதற்கு ஈரானின் உச்ச தலைவர் அபயதுல்லா அலி காமேனி, "ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு டொனால் டிரம்ப் "நான் அதை செய்யலாம். ஒருவேளை செய்யாமல் இருக்கலாம். நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது." எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புக்காக கூடுதல் போர் விமானங்கள், கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளது.

    இந்த வார இறுதியில் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் ஆனால் இறுதிமுடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் மதிய உணவு அருந்தினார்.
    • எனக்குப் பாகிஸ்தானைப் பிடிக்கும்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.

    இன்று (ஜூன் 18), பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் தனது ஐந்து நாள் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் மதிய உணவு அருந்தினார்.

    இந்த சந்திப்புக்குப் பிறகு வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரைத் தான் நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.

    டிரம்ப் தனது உரையில், "இந்தியா-பாகிஸ்தான் போரை நான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தினேன். எனக்குப் பாகிஸ்தானைப் பிடிக்கும். மோடி சிறந்த மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நேற்று இரவு நான் பேசினேன்.

    மோடியுடன் நாங்கள் வணிக ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். பாகிஸ்தான் போரை நிறுத்துவதற்கு அசீம் முனீர் முக்கிய காரணம். இதேபோன்று இந்தியா தரப்பில் போரை நிறுத்த மோடி முக்கியமானவர். போரை நிறுத்த இவர்கள் இருவருமே செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர். இரு முக்கிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நான் போரை நிறுத்தியுள்ளேன்," என்று குறிப்பிட்டார்.

    முன்னதாக, 'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் எந்தவித மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தம் செய்யப்பட்டது, இதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப்பிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஈரான் ஒருபோதும் சரண் அடையாது.
    • இஸ்ரேல் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்- காமேனி

    இஸ்ரேல்- ஈரான் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என டொனால்டு டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

    இதற்கு ஈரானின் உச்ச தலைவர் அபயதுல்லா அலி காமேனி, "ஈரான் ஒருபோதும் சரண் அடையாது. இஸ்ரேல்- ஈரான் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்" எனக் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துமா? என்ற கேள்விக்கு டொனால் டிரம்ப் "நான் அதை செய்யலாம். ஒருவேளை செய்யாமல் இருக்கலாம். நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது. ஈரான் ஏராளமான சிக்கலில் சிக்கியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.

    • ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு ஈரான் என்றும் அது கூறியது.
    • F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இஸ்ரேலின் நான்காவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா புதிய F-35 போர் விமானங்களுக்கான ஆர்டரை பாதியாகக் குறைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    போர் விமான உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுக்கு 48 ஜெட் விமானங்களுக்கான ஆர்டரை 24 ஆகக் குறைத்து திருத்தப்பட்ட உத்தரவை பென்டகன் பிறப்பித்துள்ளது.

    ஈரான்-இஸ்ரேல் போர், அமெரிக்க விமானப்படையின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான F-35 இன் பலவீனங்களை வெளிப்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA, திங்களன்று மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு ஈரான் என்றும் அது கூறியது.

    இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்த கூற்றை மறுத்தாலும், வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த ஆயுதத் திட்டமான F-35 இலிருந்து அமெரிக்கா பின்வாங்கும் முடிவை எடுத்துள்ளது.

    F-35 விமானத்தின் பயணத் திறன் 2025 ஆம் ஆண்டளவில் 51.5 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    பாகங்களைப் பெறுவதில் உள்ள சிரமம், சிக்கலான பராமரிப்பு மற்றும் அதிக விலை ஆகியவை இந்த விமானத்தின் முக்கிய குறைபாடுகளாகக் கூறப்படுகின்றன.

    டிரோன் போர் அதிகரித்துள்ள காலகட்டத்தில் F-35 காலாவதியானது என்று எலோன் மஸ்க் உட்பட பலர் விமர்சித்த நிலையில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு போர் நிறுத்தம் அல்ல, நீடித்த தீர்வைக் காண்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

    • "காமேனி எளிதான இலக்கு, ஆனால் அவரை இப்போதைக்கு வீழ்த்தப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.
    • போர் நிறுத்தத்தை விட சிறந்ததை தேடுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்,

    ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை அமெரிக்காவால் வீழ்த்த முடியும் (கொல்ல முடியும்) என்று அச்சுறுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் படைகளுக்கு எதிராகப் பதிலடி வருவதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறிய டிரம்ப், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

    "காமேனி எளிதான இலக்கு, ஆனால் அவரை இப்போதைக்கு வீழ்த்தப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.

    முன்னதாக ஜி7 மாநாட்டைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பிய டிரம்ப், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருக்கும் 95 லட்சம் மக்களை வெளியேறுமாறு பதிவிட்டிருந்தார்.

    இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களால் ஈரான் கணிசமான சேதங்களைச் சந்தித்துள்ளதாகவும், அமெரிக்காவின் உதவியுடன் அதன் அணுசக்தி வசதிகளை இஸ்ரேல் நிரந்தரமாகத் தாக்கும் வல்லமை பெற்றுள்ளதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

    இந்த மோதலுக்கு உண்மையான முடிவைக் காண விரும்புவதாகவும், போர் நிறுத்தத்தை விட சிறந்ததை தேடுவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவும் அவர் கூறினார்.  

    ×