என் மலர்tooltip icon

    உலகம்

    • பயணிகள் யாரும் உயிரிழந்தார்களா என்பதை போலீசார் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தாய்லாந்தில் சுமார் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சென்ற பள்ளி பேருந்து ஒன்று பாங்காக் புறநகர் பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து பள்ளிப் பயணத்திற்காக 44 பேரை ஏற்றிக்கொண்டு அயுத்தாயாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து தலைநகரின் வடக்குப் புறநகர் பகுதியான பத்தும் தானி மாகாணத்தில் சென்று கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இந்த தீவிபத்தில் இருந்து 16 மாணவர்களும் 3 ஆசிரியர்களும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 25 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்துறை அமைச்சர் கவலை தெரிவித்துள்ளார். எனினும் பயணிகள் யாரும் உயிரிழந்தார்களா என்பதை போலீசார் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.

    மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சோய் சூன்-ஹ்வா தனது வெள்ளை முடி மற்றும் இளமை உணர்வுடன், சக போட்டியாளர்களிடையே தனித்து நிற்கிறார்.
    • சோய் மாடலிங்கில் வெற்றிகரமான வாழ்க்கையை தொடர்ந்தார்.

    தென்கொரியாவை சேர்ந்த 80 வயதான மாடல் அழகி சோய் சூன்-ஹ்வா மிஸ் யுனிவர்ஸ் கொரியா போட்டியில் மிகவும் வயதான போட்டியாளர் என்ற வரலாறு படைத்துள்ளார்.

    சோய் சூன்-ஹ்வா தனது வெள்ளை முடி மற்றும் இளமை உணர்வுடன், சக போட்டியாளர்களிடையே தனித்து நிற்கிறார். பல தசாப்தங்கள் இளையவர். ஆனால் அவர் வயது வெறும் எண் என்பதை நிரூபிப்பதில் உறுதியாக இருக்கிறார்.

    1952ம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு 1943-ல் சோய் பிறந்தார். வரும் நவம்பரில் மெக்ஸிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் இறுதிப்போட்டியில் தென் கொரியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினால் சரித்திரம் படைக்க உள்ளார். அவர் திங்கட்கிழமை உலக அழகி கிரீடத்திற்காக 31 பெண்களுடன் போட்டியிடுகிறார்.

    வயதான போதிலும் சோய் தனது திறன்களில் நம்பிக்கையுடன் இருக்கிறார். மற்றும் வரவிருக்கும் போட்டியில் கலந்து கொள்ள உற்சாகமாக இருக்கிறார்.

    80 வயதான ஒரு பெண்மணி எப்படி இவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறார்? அந்த உடலை அவள் எப்படி பராமரித்தாள்? உணவு முறை என்ன? என உலகையே திகைக்க வைக்க விரும்புகிறேன் என்று சோய் சூன்-ஹ்வா கூறினார்.

    சோய் மாடலிங்கில் வெற்றிகரமான வாழ்க்கையை தொடர்ந்தார். தனது 50 வயதில் நிதி சிக்கல்களை எதிர்கொண்டார். மருத்துவமனை பராமரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஒரு நோயாளியின் ஊக்கத்தால், 72 வயதில் அவர் மீண்டும் மாடலிங் பயிற்சியைத் தொடங்கி உள்ளார்.

    முதன்முறையாக வயது கட்டுப்பாடுகளை நீக்கி அனைத்து வயது பெண்களுக்கும் கதவுகளைத் திறந்திருக்கும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் நான் முயற்சித்துப் பார்க்க வேண்டும் என்று சோய் கூறினார்.

    • சீனா உள்பட 35 நாட்டினர் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்லலாம்.
    • 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இருக்கலாம்.

    இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்பட 35 நாட்டினர் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்ல இலவச விசா திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

    அதன்படி இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    • மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.
    • நமது இரு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் சமாதானமாக இருக்கும்.

    ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் கொல்லப்பட்டதை யடுத்து இஸ்ரேலை பழித் தீர்ப்போம் என்று ஈரான் தெரிவித்தது. இந்த நிலையில் ஈரான் அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு நேரடி எச்சரிக்கை விடுத்தும், ஈரான் மக்களுக்கு ஆதரவாக தெரிவித்தும் உள்ளார்.


    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:-

    இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களை அடி பணியச் செய்யும் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

    ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அரசு ஈரானை ஆழமான இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது.

    இந்த ஆட்சி உங்களை படுகுழிக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. பெரும் பாலான ஈரானியர்களுக்கு இந்த அரசாங்கம் தங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்பது தெரியும்.

    உங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால் மத்திய கிழக்கு முழுவதும் வீணான போர்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை நிறுத்திவிடும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தத் தொடங்கும்.

    அணு ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்காக விரயமாக்கப்பட்ட பணம் அனைத்தும் உங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும், நாட்டின் உள்கட்டமைப்பு, தண்ணீர், கழிவுநீர் மற்றும் உங்களுக்குத் தேவையான மற்ற எல்லா விஷயங்களிலும் முதலீடு செய்யப்பட்டதா என்று கற்பனை செய்து பாருங்கள்.

    ஈரான் சுதந்திரமாக இருக்கும் காலம், மக்கள் நினைக்கும் அந்த தருணம் மிக விரைவில் வரும். யூத மக்கள்-பாரசீக மக்கள் இறுதியாக சமாதானமாக இருப்பார்கள். நமது இரு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் சமாதானமாக இருக்கும்.

    ஹமாஸ் மற்றும் ஹிஸ் புல்லாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். உங்களுடன் இஸ்ரேல் துணையாக நிற்கிறது என்றார்.

    • இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையம் மூடப்பட்டது.
    • தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    லண்டன்:

    காலநிலை மாற்றம் என்பது இன்றைய உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால் புவி வெப்பமயமாதல், அதீத கனமழை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    எனவே காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கோரி உலகம் முழுவதிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனால் புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை குறைத்து, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த உலக நாடுகள் முயற்சிக்கின்றன.

    அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து ஆற்றலையும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெற இங்கிலாந்து இலக்கு நிர்ணயித்துள்ளது.

    எனவே தலைநகர் லண்டனில் செயல்படும் ராட்கிளிப் அனல் மின் நிலையத்தை மூட அரசாங்கம் முடிவு செய்தது. இதனையடுத்து 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அனல் மின் நிலையம் நேற்றுடன் அதன் பணியை நிறைவு செய்தது.

    இதன்மூலம் இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையமும் மூடப்பட்டது. இதுகுறித்து எரிசக்தி துறை மந்திரி மைக்கேல் ஷாங்க்ஸ் கூறுகையில், `2030-க்குள் நாட்டின் அனைத்து ஆற்றல்களும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தில் இருந்து பெறுவதற்கான முயற்சியில் இது ஒரு மைல்கல் ஆகும்' என பாராட்டு தெரிவித்தார்.

    இங்கிலாந்தில் 1990-ம் ஆண்டு நாட்டின் மின் உற்பத்தியில் சுமார் 80 சதவீதம் அனல் மின் நிலையம் மூலமே பெறப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு மின்சார தேவையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே அனல் மின் நிலையம் மூலம் பெறப்பட்டது.

    தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்கும் முதல் பெரிய பொருளாதார நாடாக இங்கிலாந்து மாறி உள்ளது.

    • மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் பற்றி பிரதமர் நேதன்யாகுவிடம் பேசினேன்.
    • சூழல் மோசமடையாமல் தடுத்து பிணைக்கைதிகள் பாதுகாப்பான முறையில் விடுதலை செய்யப்பட வேண்டும்

    லெபனான் 

    பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கடந்த ஒரே வாரத்தில் 1000 துக்கும் அதிகமான லெபனானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களைத் தேடியும், அண்டை நாடான சிரியாவுக்க்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கடந்த வெள்ளிக்கிழமைஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தலைநகர் பெய்ரூட்டில் உயிரிழந்தார். அவ்வமைப்பின் உயர் மட்டத் தலைவர்கள் 20 பேரும் உயிரிழந்தனர்.

    அமைதி 

    இருப்பினும் லெபனான் மீதான வான்வழி மற்றும் தாரைவழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிடம் நேற்றைய தினம் [செப்டம்பர் 30] அலைபேசியில் உரையாடியுள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மேற்குஆசியாவில் நிலவும் சூழல் பற்றி பிரதமர் நேதன்யாகுவிடம் பேசினேன். பயங்கரவாதத்துக்கு உலகத்தில் இடம் கிடையாது. பிராந்தியத்தில் நிலவும் சூழல் மோசமடையாமல் தடுத்து பிணைக்கைதிகள் பாதுகாப்பான முறையில் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும். அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    லெபனான் சூழல் கைமீறிச் சென்றால் ஹாமாஸ் அமைப்பினரிடம் பிணைக்கைதிகளாகச் சிக்கியுள்ள இஸ்ரேலியர்களுக்கு ஆபத்து நேரும் என்ற முகாந்திரத்தில் நேதன்யாகுவிடம் மோடி தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியதாகத் தெரிகிறது . 

    • லெபனானில் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர்
    • எங்களின் நிலத்துக்குள் இஸ்ரேல் வந்தால் அவர்களை எதிர்க்கத் தயாராகி உள்ளோம் என்று ஹிஸ்புல்லா துணைத் தலைவர் தெரிவிதுள்ளார்.

    லெபனான் சூழல் 

    லெபனானில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஹிஸ்புல்லாவினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு போர்க்கள சூழல் ஏற்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவினர் மட்டுமல்லாது குழந்தைகள் பெண்கள் உட்பட பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 1000 த்தை தாண்டியுள்ளது. 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கியும் அண்டை நாடான சிரியாவை நோக்கியும் இடம்பெயர்ந்து வருகின்றனர்.

    கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் அவரது மகள் ஜைனபும் கொல்லப்பட்டனர். மேலும் ஹிஸ்புல்லா உயர்மட்ட தலைவர்கள் 20 பேர் இதுவரை குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளனர்.

     

    தரைவழித் தாக்குதல்

    இதனால் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ள ஹிஸ்புல்லாவினர் மீண்டு வர அவகாசம் கிடைக்காதபடி இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன் தினம் நடந்த தாக்குதலில் 109 லெபனானியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் இதுவரை வான்வழியாக மட்டுமே தாக்கி வந்த இஸ்ரேல் நேற்று இரவு முதல் லெபனான் மீது தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

     

    கிராமங்கள் 

    தெற்கு லெபனானில் எல்லையை ஒட்டி உள்ள கிராமங்களில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது தங்களின் காவற்படைகள் தாக்குதல் நடத்திவருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கிடையே எல்லையில் நிலைகொண்டுள்ள இஸ்ரேல் படைகள் மீது ஹிஸ்புல்லாவும் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

    அமெரிக்கா எதிர்ப்பு 

    தரைவழித் தாக்குதலுக்கு மத்தியில் தலைநகர் பெய்ரூட்டில் 6 வான்வழித் தாக்குதலையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதற்கிடையே லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் போர் நிறுத்தத்துக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்துள்ளது.

     

    தயார் 

    இதற்கு மத்தியில் எங்களின் நிலத்துக்குள் இஸ்ரேல் வந்தால் அவர்களை எதிர்க்கத் தயாராகி உள்ளோம் என்று ஹிஸ்புல்லா துணைத் தலைவர் நைம் காசிம் [Naim Qassem] தெரிவித்துள்ளார். ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மறைவுக்குப் பிறகு அவ்வமைப்பு பொதுவெளியில் தோன்றி பேசுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • அதிநவீன டிரோனை ஏவுகணை மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

    மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

    இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

    அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

    அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

    ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், செங்கடலில் அமெரிக்காவுக்கு சொந்தமான டிரோனை ஹவுதி கிளர்ச்சியளர்கள் சுட்டு வீழ்த்தினர். எம்.கியூ-9 என்ற அதிநவீன டிரோனை ஏவுகணை மூலம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

    • அமெரிக்காவில் சூறாவளியால் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

    அமெரிக்காவை ஹெலன் சூறாவளி புயல் கடந்த வியாழக்கிழமை நெருங்கியது. இதனை தொடர்ந்து, புளோரிடா பகுதியில் சூறாவளி பலவீனமடைந்து வெள்ளி கிழமை கரையை கடந்தது.

    இதனால், பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றது. சூறாவளியால் மணிக்கு 225 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.

    பல வீடுகள், கட்டிடங்கள் சூறாவளியால் சேதமடைந்தன. மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்தனர். அவர்களில் மற்றவர்களை பாதுகாப்பதற்காக சென்ற தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். புளோரிடா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினாவும் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்காவில் ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இந்த பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்புவாசிகளில் 20 லட்சம் பேர் மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து, மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 800 மத்திய அவசரகால மேலாண் கழக அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சூறாவளியால் அமெரிக்காவில் மொத்தம் ரூ.7,96,002 கோடி முதல் ரூ.9,21,687 கோடி வரை பாதிப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனாவில் லீ என்ற பெண் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
    • வருக்கு யூட்ரஸ் டைடெல்ஃபிஸ் {Uterus didelphys} என்ற பாதிப்பு உள்ளது.

    சீனாவில் லீ என்ற பெண் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இதில் என்ன ஸ்பெஷல் என்று நீங்க கேட்கலாம்.

    அவருக்கு உலகத்திலயே அரிய வகையான மருத்துவ நிலை இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு யூட்ரஸ் டைடெல்ஃபிஸ் {Uterus didelphys} என்ற பாதிப்பு உள்ளது. இந்த நிலை உலகிலேயே வெறும் 0.3 சதவீத பெண்களுக்கு மட்டுமே ஏற்படும்.

    இந்த பாதிப்பு ஏற்பட்ட பெண்களுக்கு இரு கருப்பை இயற்கையாகவே இருக்கும். இதனால் லீ என்ற பெண்ணுக்கு இரு கருப்பையில் ஒரே சமயம் கருவுற்று, அவற்றில் குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு கருப்பையில் ஆண் குழந்தையும் {3.3 கிலோ} மற்றொரு கருப்பையில் பெண் குழந்தையும் {2.4 கிலோ} எடையில் மிக ஆராக்கியமாக பிறந்துள்ளன.

    இதைப்பற்றி மருத்துவர் கூறும்போது "இந்த நிகழ்வு கோடியில் ஒருவருக்கு தான் நடக்கும். அதுவும் இயற்கை முறையில் கருத்தரித்த பெண் இரண்டு கருப்பையில் கர்ப்பம் ஆவது மிகவும் அரிது," என கூறியுள்ளார். இந்த நிகழ்வு சீனா மட்டுமின்றி சர்வதேச மருத்துவ உலகில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    • தெளிவான புகைப்படங்களை கொண்டு இந்த தகவல் கிடைக்கப்பெற்றது.
    • இந்த புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என ஐ.நா. தெரிவித்தது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம் காசா போர் துவங்கியதில் இருந்து அந்தப் பகுதியில் இருந்த மூன்றில் இரண்டு கட்டிடங்கள் பகுதியாக சேதமடைந்து, அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா. சபை அறிவித்து இருக்கிறது.

    சேத மதிப்பீட்டை புதுப்பித்தும், ஐ.நா. செயற்கைக்கோள் மையம் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 6 ஆம் தேதி வரையிலான காலக்கட்டங்களில் சேகரிக்கப்பட்ட அதிக தெளிவான புகைப்படங்களை கொண்டு இந்த தகவல் கிடைக்கப்பெற்றது.

    அதன்படி, "காசா பகுதியில் உள்ள மொத்த கட்டமைப்புகளில் மூன்றில் இரண்டு பகுதி சேதம் அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. காசா பகுதியில் உள்ள சேதமடைந்த கட்டிடங்களில் 66 சதவிகிதம் மொத்தம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 778 கட்டமைப்புகளை கொண்டிருக்கிறது."

     


    "இதில் 52 ஆயிரத்து 564 கட்டமைப்புகள் அழிக்கப்பட்டுள்ளன, 18 ஆயிரத்து 913 கட்டிடங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன. 35 ஆயிரத்து 591 கட்டிடங்களில் கிட்டத்தட்ட சேதமடைந்துள்ளன. 56 ஆயிரத்து 710 அமைப்புகளில் மிதமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளன" என்று ஐ.நா. செயற்கைக்கோள் மையம் தெரிவித்தது.

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் நடத்திய முன்னறிவிப்பு இல்லாத அக்டோபர் 7 தாக்குதலின் விளைவாக 1,205 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் மற்றும் சிறைப் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகள் அடங்குவர்.

    இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் காசாவில் குறைந்தது 41 ஆயிரத்து 615 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்று ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் வழங்கிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் நம்பகமானவை என ஐ.நா. தெரிவித்தது.

    • ரஷியாவின் 28 கப்பல்கள் மற்றும் படகுகள், ஒரு நீர்மூழ்கி கபப்ல், 16 ஆயிரத்து 186 டிரோன்கள் அழிக்கப்பட்டுள்ளது.
    • 651,810 வீரர்களை 2022 பிப்ரவரிக்குப் பிறகு ரஷியா இழந்துள்ளது.

    ரஷியா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி படையெடுத்தது. அதில் இருந்து தற்போது வரை சண்டை நீடித்து வருகிறது. முதலில் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதியை இழந்த நிலையில் அமெரி்க்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆதரவுடன் உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.

    இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் இந்த சண்டையில் ரஷியாவுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஏறக்கறைய இந்த இரண்டு ஆண்களில் ரஷியா சுமார் 6 லட்சத்து 51 ஆயிரத்து 810 ராணுவ வீரர்களை இழந்துள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

    ரஷிய ராணுவத்தின் 8869 டாங்கிகள் (Tanks), 17,476 ஆயுத சண்டை வாகனம், 25,495 வாகனங்கள் மற்றும் எரிபொருள் டேங்குகளை அழித்துள்ளதாகவும் உக்ரைன தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 1,170 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர் எனவும் உக்ரைன் ஆயுத படை ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார்.

    28 கப்பல்கள் மற்றும் படகுகள், ஒரு நீர்மூழ்கி கபப்ல், 16 ஆயிரத்து 186 டிரோன்கள், 328 ஹெலிகாப்டர்கள், 369 விமானங்கள், 962 வான்பாதுகாப்பு சிஸ்டங்கள், 1204 பல ராக்கெட்டுகளை ஏவும் சிஸ்டம், 18 ஆயிரத்து 795 பீரங்கி சிஸ்டங்கள் ஆகியவற்றை அழித்ததாகவும் தெரிவித்துள்ளது.

    ×