என் மலர்tooltip icon

    உலகம்

    • இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதில் என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார்.
    • பிரதமர் மோடி, இது போருக்கான சகாப்தம் இல்லை என்று சொன்னதை நாங்களும் நம்புகிறோம்

    இஸ்ரேலின் போர்கள் 

    பால்ஸ்தீனத்தில் இஸ்ரேல் கடந்த 11 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பாலஸ்தீன விவகாரம் மத்திய கிழக்கு நாடுகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் அமரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் எச்சரிக்கையால் அமைதி காத்து வந்தது. ஆனால் தற்போது அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 1500 க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பொறுமையிழந்த ஈரான் 

    காசாவைப் போன்ற சூழல் லெபனானிலும் உருவாகி வரும் நிலையில் ஈரான் பொறுமையை இழந்து இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மரணம், லெபனானில் போர் சூழல் இந்த தாக்குதலுக்கு உடனடி காரணம் என்றாலும் பாலஸ்தீன போர் தொடங்கியதில் இருந்தே ஈரான் இஸ்ரேலை தாக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தது.

    மேலும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மக்களை அதன் அரசிடம் இருந்து தாங்கள் காப்பாற்றுவோம் என்று வீடியோ மூலம் பேசியதும் இந்த உடனடி நடவடிக்கைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. நேற்றைய தினம் முதல் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உட்பட பல்வேறு இடங்களில் 200 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது.

     

    சியோனிச அடாவடித்தனம் 

    இந்த தாக்குதல் இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்குக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதில் என்று ஈரான் ஆளும் சீர்திருத்தக் கட்சி அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார். ஈரானின் பாதுகாப்புக்காகவும், அமைதியை நிலைநாட்டவும் சியோனிச வல்லாதிக்கத்தை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட தீர்க்கமான பதிலாக ஈரானின் தாக்குதலை அதிபர் பெசஸ்கியார் வர்ணித்துள்ளார்.

     

    அமெரிக்கா- ரஷியா 

    இதற்கிடையே இஸ்ரேலின் பாதுகாக்க அமெரிக்க ராணுவத்தை அந்நாட்டின் அதிபர் முடுக்கி விட்டுள்ளார். இஸ்ரேலின் லெபனான் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வந்த ரஷியா, தற்போது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசின் தோல்வியே காரணம் என்று தெரிவித்துள்ளது.

    புது டெல்லி 

    ஈரான் தாக்குதல் குறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் இலாஹி டெல்லியில் வைத்து பேசியுள்ளார். அவர் கூறியாவது, எங்கள் நாடு மீண்டும் இஸ்ரேலைத் தாக்கும். தற்போதைய தாக்குதல் பழிக்குப்பழி நடவடிக்கை ஆகும். மத்திய கிழக்கில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேலின் தெற்காசிய விரோத செயல்களைப் பார்த்து வருகிறது. காசாவிலும் தெற்கு லெபனானிலும் ரத்தம் சிந்தப்படுத்தவை உலகம் பார்த்து வருகிறது. மக்கள் கோபத்தில் உள்ளனர். மனித உரிமை ஒப்பந்தங்களையும் சர்வதேச சட்டங்களையும் இஸ்ரேல் மீறிவிட்டது. அந்நாட்டின் பிரதமர் நேதன்யாகு 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.

     

    ஒரு உதவி 

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் செயல்களுக்கு எதிராக உலகமே போராடி வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. இஸ்ரேலுடன் இந்தியா நல்ல உறவைப் பேணுகிறது. பிரதமர் மோடியும் இது போருக்கான சகாப்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

     

    ஈரான் அதைத்தான் நம்புகிறது. ஆனால் நாட்டின் இறைத்தன்மையை ம மற்றொருநாடு மீறும்போது என்ன செய்ய முடியும். எனவே இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டுக்கும் நெருக்கமாக உள்ள இந்தியா, இஸ்ரேலுடன் பேசி அவர்களின் இந்த மிருகத்தனத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஈரான் தங்கள் மீது தங்குதல் நடத்தி மிகப்பெரிய தவறு செய்துவிட்ட்டது, அதற்கான விலையை ஈரான் செலுத்தும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • லெபனானில் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

    நியூயார்க்:

    இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதன்படி ஈரானில் இருந்து 100க்கும் அதிகமான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டுள்ளன. இதனால் ஏவுகணை தாக்குதலை குறிக்கும் வகையில் இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரான் இந்த பதிலடி தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடையும் மோதல்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைந்த பிறகு விரிவடைவதை நான் கண்டிக்கிறேன். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். எங்களுக்கு முற்றிலும் போர் நிறுத்தம் தேவை" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் பதிவிட்டுள்ளார்.

    தனது மற்றொரு பதிவில், "லெபனானில் மோதல்கள் தீவிரமடைந்து வருவதைப் பற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். உடனடி போர் நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    லெபனானில் போர் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். லெபனானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும்" என்று அதில் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

    • தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
    • இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய பிரஜைகளும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றமாறு இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    உள்ளூர் அதிகாரிகளால் (https://www.oref.org.il/eng) அறிவுறுத்தப்பட்ட பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    தயவு செய்து எச்சரிக்கையுடன் இருங்கள், தேவையற்ற பயணங்களை நாட்டிற்குள் தவிர்க்கவும் மற்றும் பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு அருகில் இருக்கவும். தூதரகம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் எங்கள் நாட்டவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.

    ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24 x7 ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளவும்:

    தொலைபேசி எண்கள்:

    A. +972-547520711

    B. +972-543278392

    மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in

    இந்தியப் பிரஜைகள் யாராவது தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யவில்லை என்றால், தயவுசெய்து இதற்கான இணைப்பில் (https://forms.gle/ftp3DEXgJwH8XVRdA) பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல்:

    இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.

    ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

    இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது.

    இதையடுத்து ஈரான் ஏவிய ஏவுகணைகள் இஸ்ரேலில் விழாத வகையில் வானிலேயே அயன் டோம் இடைமறித்து அழிக்கிறது.

    மழையாக பொழியும் ஏவுகணைகளை தடுத்து இஸ்ரேல் இரும்பு கோட்டையாக இருந்து காக்கிறது.

    • ஒரு தெருவில் சடலங்கள் உள்ளன.
    • கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    இஸ்ரேல்:

    பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஈரான் ஏவுகனை வீசி வரும் நிலையில் டெல் அவிவ் நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

    அந்த இடத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஒரு தெருவில் சடலங்கள் கிடப்பதைக் காணப்பட்டது அதேபோல் துப்பாக்கிச் சூடும் சத்தங்கள் சமூக ஊடகங்களில் பலரால் பகிரப்பட்ட வீடியோக்களில் கேட்கப்பட்டன. கொல்லப்பட்டவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை.

    • ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
    • மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.

    இஸ்ரேல்:

    இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.

    ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

    இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகி வருகிறது.

    இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவி செய்ய அமெரிக்க ராணுவத்திற்கு ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    இஸ்ரேலை குறிவைத்து ஏவப்படும் ஏவுகணைகளை தகர்க்குமாறு அமெரிக்க படைகளுக்கு பைடன் உத்தரவிட்டுள்ளார்.

    • மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
    • ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

    இஸ்ரேல்:

    பாலஸ்தீனத்தின் காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த நிலையில் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

    இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்டு ஆஸ்டின் கூறியதாவது:-

    இஸ்ரேலை பாதுகாப்பதற்கான உரிமை அந்நாட்டுக்கு இருக்கிறது. இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களைப் போன்று, இஸ்ரேலின் வடக்கு எல்லைகளில் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நடத்தாமல் இருப்பதை உறுதிசெய்ய, அதன் கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

    மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கு, ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு இயக்கங்களிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதில் அமெரிக்கா வலுவாக உள்ளது.

    அதேபோல, போர் பதற்றத்தை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளை தடுப்பதிலும் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ராணுவ தாக்குதல்களை நிகழ்த்தினால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

    இந்நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    மத்திய இஸ்ரேல் முழுவதும் வான்வழி தாக்குதல் நடத்த எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு இருக்கிறது.

    ஈரானில் இருந்து இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

    இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    லெபனானில் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாகிறது.

    • பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் இன்று உலகளவில் முடங்கி போனது.
    • சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கும் முன் வந்த மாடல்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது.

    பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் இன்று உலகளவில் முடங்கி போனது. சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கும் முன் வந்த மாடல்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது. நெட்வொர்க் முடங்கிய காரணத்தால் உலகளவில் உள்ள மக்களால் பிளே ஸ்டேஷனில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.

    சோனியின் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் முடங்கியதை அடுத்து, பலரும் அவர்களது இணைய பக்கத்தில் பதிவிட்டனர். இதற்கு பதிலளித்த சோனி நிறுவனம், "நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் நீங்கள் கேம், ஆப்ஸ் போன்றவற்றை பிளே ஸ்டேஷனில் இயக்குவதில் சிக்கல் ஏற்படலாம்."

    "எங்களது தொழில்நுட்ப குழு கூடிய விரைவில் இதை சரி செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன," என கூறியுள்ளது. இதனால் பிளே ஸ்டேஷன் உபயோகிக்கும் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.


    • அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
    • குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அதிபர் தேர்தலுக்கான பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் அருகே முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் 43 அடி உயர நிர்வாண சிலை 2 நாட்களுக்கு முன்பு நிறுவப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தன.

    இந்நிலையில் சர்ச்சைக்குரிய அந்த சிலை இன்று அகற்றப்பட்டுள்ளது. ஆனால் யார் இந்த சிலையை வைத்தார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. 

    • நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

    தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியது.

    பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாயமானோரை தேடும் பணியும் நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விரைவில் தனது அமைச்சரவையை இஷிபா அறிவிக்க இருக்கிறார்.
    • லிபரல் டெமாக்ரடிக் கட்சி இஷிபாவை கட்சி தலைவராக தேர்வு செய்தது.

    ஜப்பானின் 102-வது பிரதமராக இஷிபா ஷிகெரு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கிஷிடா தனது அமைச்சரையுடன் ராஜினாமா செய்த நிலையில், ஜப்பான் பிரதமராக இஷிபா ஷிகெரு பதவியேற்றார். விரைவில் தனது அமைச்சரவையை இஷிபா அறிவிக்க இருக்கிறார்.

    இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கிஷிடா மற்றும் அவரது அமைச்சர்கள் பதவி விலகியதாக அமைச்சரவை செயலர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்தார் என்று ஜப்பான் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் ஊழியர்கள் கிஷிடாவுக்கு கரகோஷம் எழுப்பி, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    ஜப்பான் பிரதமராக இருந்த பியூமியோ கிஷிடா பதவி விலகியதை அடுத்து, லிபரல் டெமாக்ரடிக் கட்சி இஷிபாவை கட்சி தலைவராக கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்தது.

    • ஓஷோ ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும்.
    • எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன்.

    இந்தியாவில் பிறந்து, தனது ஆன்மீக சொற்பொழிவுகளால் உலகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் ஓஷோ.

    இந்தியாவில் ஆசிரமம் தொடங்கி பின்னர் அமெரிக்காவில் உள்ள ஓரேகானில் குடியேறி அங்கேயே ஒரு ஆசிரமத்தையும் அமைத்தார். பாலியல் சுதந்திரம் குறித்து ஓஷோவின் சொற்பொழிவுகள் மிக புகழ்பெற்றவை.

    இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான பிரேம் சர்கம் என்ற பெண் ஓஷோவின் ஆசிரமத்தில் 50க்கும் மேற்பட்ட முறை பலாத்தகாரம் செய்யப்பட்டேன் என்று பரபரப்பு குற்றசாட்டை கூறியுள்ளார்.

    இது தொடர்பாக பேசிய பிரேம் சர்கம், 6 வயதில் எனது தந்தையுடன் இங்கிலாந்தில் இருந்து புனேவில் உள்ள ஓஷோவின் ஆசிரமத்தில் சேர்ந்தேன்

    ஆசிரமத்தில் உள்ளவர்கள் உடலுறவு வைத்து கொள்வதை குழந்தைகள் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும் பெண்கள், பருவமடைந்தவுடன் பாலியல் வழிகாட்டுதலுக்காக வயது வந்த ஆண்களைத் தேட வேண்டும் என்று கற்பிக்கப்பட்டது.

    தன்னுடைய 7 வயதில் முதல்முறையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளானேன். எனது 7 முதல் 11 வயதுவரை ஆசிரமத்தில் உள்ள வயது வந்த ஆண்களுடன் பாலியல் செயல்களைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டேன். 12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்.

    பின்னர் புனேவில் இருந்து அமெரிக்காவிற்குச் சென்று ஒரேகானில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தாயுடன் சேர்ந்தேன். அங்கு குறைந்தது 50 முறைக்கு மேல் பலாத்காரம் செய்யப்பட்டேன். 16 வயதில் தான் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து எனக்கு புரிந்தது

    ஓஷோ ஆசிரமத்தில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்ட 2 பிரிட்டிஷ் பெண்களின் கதையுடன் என்னுடைய கதையையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள சில்ட்ரன் ஆஃப் தி கல்ட் ஆவணப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கும் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×