என் மலர்
உலகம்
- பதவியை ராஜினாமா செய்வதாக கிறிஸ்டியா அறிவித்துள்ளார்.
- முதல் முறையாக பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கனடா நாட்டின் துணை பிரதமர் மற்றும் அந்நாட்டின் நிதியமைச்சரான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்நாட்டின் வருடாந்திர நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கிறிஸ்டியா அறிவித்துள்ளார்.
துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் என இரு பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ள கிறிஸ்டியா, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு எதிரான கருத்து வேறுபாட்டை முதல் முறையாக பொது வெளியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் கனடாவை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 250 கனடா டாலர்களை காசோலையாக வழங்குவதற்கான கொள்கை தொடர்பாக பிரதமர் ட்ரூடோ மற்றும் துணை பிரதமராக இருந்த கிறிஸ்டியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் நீண்ட காலமாக ட்ரூடோவின் லிபரல் கட்சியில் மிக முக்கிய தலைவராக இருந்து வருகிறார். 2020 ஆம் ஆண்டில் இருந்து கனடா நாட்டின் நிதியமைச்சராகவும் கிறிஸ்டியா பதவியில் இருந்து வந்தார். இந்த நிலையில், துணை பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ள கிறிஸ்டியா கனடாவின் நிதி வருவாயை கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தி இருக்கிறார்.
தனது ராஜினாமா கடிதத்தில் டிரம்ப்-இன் அச்சுறுத்தல் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று கிறிஸ்டியா குறிப்பிட்டுள்ளார். கிறிஸ்டியா தொடர்ந்து லிபரல் உறுப்பினராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தொடர்ந்து இருக்க வரும்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், வரவருக்கும் கனடா தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இறக்குமதி செய்யப்படும் கனடா நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருக்கிறார். இது கனடாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது.
- பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியாகி வருகின்றன.
இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கி உள்ளது. இதனால் வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப மாணவர் ஜோடி ஒன்று துடிப்பாக நடனமாடி அசத்தினர்.
- வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஜூனியர் என்.டி.ஆர்., ஜான்வி கபூர் ஆகியோர் நடிப்பில் பான்-இந்தியா படமாக வெளியாகி வரவேற்பு பெற்ற சினிமா தேவரா. இதில் சுட்டமல்லே என்ற பாடலுக்கு கதாநாயகன், நாயகி இருவரும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தனர். இளசுகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு 'ரீல்ஸ்' வீடியோ ஆடி கொண்டாடினர்.
இந்தநிலையில் அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கல்லூரி விழா நடந்தது. அப்போது அங்கு பட்டம் படித்து வரும் இந்திய மாணவர்கள் சுட்டமல்லே பாடலுக்கு நடனமாடினர். அந்த பாடலில் ஆடப்பட்ட அதே நடன அசைவுகளுக்கேற்ப மாணவர் ஜோடி ஒன்று துடிப்பாக நடனமாடி அசத்தினர். சக மாணவர்கள் கரகோஷத்தை எழுப்பி இதனை வெகுவாக ரசித்தனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி 1¼ கோடி பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
- மாரத்தான் ஓட்டம் என்றாலே டிசர்ட் - கால்சட்டை அணிந்து ஓடுவது வழக்கம்.
- தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை மற்றும் பாவாடை-தாவணி அணிந்து ஓடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர்.
அபுதாபி:
அபுதாபியில் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சார்பில் மாரத்தான் தொடர் ஓட்ட போட்டி, கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமையகத்தில் தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஓடினர். பல பிரிவுகளில் நடந்த இந்த நீண்ட தொலைவு ஓட்டப்போட்டியில் அமீரகத்தில் வசிக்கும் தமிழகத்தின் நாகர்கோவிலைச் சேர்ந்த லிடியா ஸ்டாலின் மற்றும் விபின் தாஸ் தம்பதியினர் கலந்து கொண்டு உற்சாகமாக ஓடினர்.
மாரத்தான் ஓட்டம் என்றாலே டிசர்ட் - கால்சட்டை அணிந்து ஓடுவது வழக்கம். ஆனால் இவர்கள் வழக்கமான தடகள வீரர்கள் அணியும் உடைகளை தவிர்த்து தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டை மற்றும் பாவாடை-தாவணி அணிந்து ஓடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தனர். மொத்தம் 42.2 கிலோ மீட்டர் தொலைவை பாரம்பரிய உடை அணிந்து 4 மணி நேரத்தில் நிறைவு செய்து சாதனை புரிந்தனர். முடிவில் நிறுவனத்தின் சார்பில் தம்பதியினருக்கு பதக்கம் மற்றும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இது குறித்து லிடியா ஸ்டாலின் தினத்தந்தி நிருபரிடம் கூறுகையில், "தற்காலத்தில் இதுபோன்ற ஓட்டப்போட்டிகளில் பொது நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் தங்கள் பாரம்பரியங்களை மறந்து மேற்கத்திய கலாசாரத்திலான உடையை அணிந்து கலந்து கொள்கின்றனர். எனவே நமது தமிழக பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் நீண்ட தொலைவானாலும் நமது பாரம்பரிய உடை அணிந்தபடி ஓடினோம்" என்று தெரிவித்தார்.
- நம்பிக்கை வாக்கெடுப்பனது வரும் பிப்ரவரியில் விரைவான தேர்தலுக்கு வழி வகுத்துள்ளது.
- 394 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் கூட்டணி அரசாங்கம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பனது வரும் பிப்ரவரியில் விரைவான தேர்தலுக்கு வழி வகுத்துள்ளது.

394 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தனர். அரசாங்கத்திற்கு ஆதரவாக 207 பேர் வாக்களித்தனர்.
பட்ஜெட் தொடர்பான சர்ச்சைகளைத் தொடர்ந்து ஷோல்ஸுடனான கூட்டணி அரசாங்கத்திலிருந்து சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) வெளியேறிய பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இறந்தவர்கள் அனைவரும் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்துள்ளனர்.
- இந்திய உணவகத்தின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜார்ஜியாவின் குடாரியில் உள்ள ஒரு உணவகத்தில் கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியதில 11 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்ததை அடுத்து, ஜார்ஜிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் வன்முறைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இறந்தவர்கள் அனைவரும் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 12 பேரும் பணிபுரிந்த இந்திய உணவகத்தின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதுகுறித்து திபிலிசியில் உள்ள இந்தியத் தூதரகம், "ஜார்ஜியாவின் குடாரியில் துரதிர்ஷ்டவசமாக பதினொரு இந்தியர்கள் உயிரிழந்திருப்பதை அறிந்து வருத்தமடைகிறது. மேலும் அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது" என குறிப்பிட்டிருந்தது.
மேலும், இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் கொண்டு, உயிரிழப்புகள் தொடர்பான தகவல்களை உடனடியாக தெரிவித்து வருகிறது.
இறந்தவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என்றும், சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க உறுதிபூண்டுள்ளோம்" என்றும் ஜார்ஜியாவில் உள்ள இந்திய மிஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 14 அன்று ஜார்ஜிய உள்நாட்டு விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, "பாதிக்கப்பட்டவர்கள் மீது வன்முறை அல்லது உடல் காயங்கள் எதுவும் இல்லை.
ஜார்ஜியாவின் குற்றவியல் சட்டத்தின் 116 வது பிரிவின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, அறையின் ஒன்றின் உட்புறப் பகுதியில், படுக்கையறைகளுக்கு அருகில் மூடப்பட்ட இடத்தில், ஒரு மின் ஜெனரேட்டர் இருந்துள்ளது. இது டிசம்பர் 13 வெள்ளிக்கிழமை, மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், விஷ வாயு வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- சிரியா அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- இஸ்ரேலின் தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிரியா மீது இஸ்ரேல் நிலநடுக்க வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிரியா அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதே ஒரே நடவடிக்கையாக இருந்தது
சிரியாவில் அதிபர் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சிக் குழுவினர் நாட்டின் பெரும்பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டுக் கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனால் சிரியாவில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆசாத் நாட்டை விட்டுச் சென்ற பிறகு அவரது ஆட்சியில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் பெரும்பாலான உயர் அதிகாரிகளும் வெளியேறிவிட்டனர். அதேசமயம், பிரதமர் முகமது காஜி ஜலாலி தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், புதிய தலைமையை கொண்டு வருவதற்காகவும் கிளர்ச்சிக் குழுவினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்து, அங்கிருந்து தப்பிக்கத் தான் திட்டமிட்டிருந்ததாக வெளியான தகவலுக்கு அதிபர் பஷர் அல்-அசாத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சிரியாவிலிருந்து நான் வெளியேறியது திட்டமிடப்பட்டதோ அல்லது போரின் இறுதி நேரத்தில் நடந்ததோ அல்ல. மாறாக, நான் டமாஸ்கஸில் இருந்தேன், டிசம்பர் 8, 2024 அன்று அதிகாலை வரை எனது வேலைகளை செய்தேன்.
பின்னர் தனது ரஷிய கூட்டாளிகளுடன் இணைந்து ஹெமிமிம் விமான தளத்தில் 'போர் நடவடிக்கைகளை மேற்பார்வையிட' லதாகியாவிற்கு சென்றேன். அங்கு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து மாஸ்கோவில் உள்ள தலைமை எங்களை ரஷ்யாவிற்கு வெளியேற்ற உத்தரவிட்டது.
இந்த சம்பவத்தின் போது எந்த நேரத்திலும் நான் பதவி விலகுவதையோ அல்லது அடைக்கலம் தேடுவதையோ நினைத்து பார்க்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதே ஒரே நடவடிக்கையாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
- எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார்.
- டுவிட்டர் பெயரை எக்ஸ் என்று எலான் மஸ்க் மாற்றம் செய்தார்.
டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு டுவிட்டர் சமூக வலைத் தளத்தை விலை கொடுத்து வாங்கினார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என்று மாற்றம் செய்தார்.
இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்கின் எக்ஸ் மெயில் பயன்பாட்டிற்கு வந்தால் ஜிமெயிலுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியது. இதன்மூலம் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.
- கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை பிடித்துள்ளதால் அதிபர் ரஷியாவுக்கு தப்பி ஓட்டம்.
- டமாஸ்கஸ் அருகில் உள்ள கிராமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சீரியாவில் அதிபருக்கு எதிராக போராடிய கிளர்ச்சிக்குழு டாமஸ்கஸை பிடித்தது. இதனால் தலைநகரில் இருந்து அதிபர் பஷர் ஆசாத் தப்பியோடினார். ரஷியா அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் டமாஸ்கஸ் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் கொள்ளையர்கள் புகுந்து சூறையாடி வருகின்றனர். பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் கண்ணில் பட்டதையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடுகிறார்கள். இதனால் கிளர்ச்சிக்குழு அந்த கிராமத்தில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
டமாஸ்கஸ் அருகில் உள்ள ஹுசைனியா கிராமம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் பறிகொடுத்த நபர் ஒருவர் கூறுகையில் "எங்களுடைய பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப்படடன. என்னுடைய 25 வருட வீடு கொள்ளைக்கு உள்ளானது. அவர்கள் கொள்ளை அடிக்கவில்லை என்றால், வீட்டை தீ வைத்து கொளுத்துகின்றனர். வீட்டில் உள்ள எல்லாவற்றையும் கொள்ளையடித்து விடுகிறார்கள்" என்றார்.
மற்றொரு நபர் (பள்ளி முதல்வர்) "என்னுடைய வீடு கொள்ளைடிக்கப்பட்டது. என்னால் தடுக்க முடியவில்லை. செக் பாயிண்ட் அமைத்து கொள்ளையர்களை தடுப்போம் என கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அருகில் உள்ள கிராமத்தில் இருந்து அதிக அளவில் கொள்ளை அடிக்க இங்கே வருகிறார்கள்" என்றார்.
கொள்ளையடிக்கும் நபர்கள் வெடிகுண்டுகளை வீசி குடியிருப்புகளை தீ வைத்து கொளுத்தி வருவதாகவம் தெரிவித்துள்னர். இந்த குடியிறுப்புகள் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் தங்கிய இடமாகும்.
கொள்ளையடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பல கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளனர். பலர் கொள்ளையடித்த பொருட்களை கையில் வைத்துக் கொண்டு மறைந்து இருந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர்.
- இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர்.
- சின்மோய் கிருஷ்ண தாஸ் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் கொல்லப்பட்டார்
இட ஒதுக்கீடும் மாணவர்கள் போராட்டமும்
பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காகக் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற வங்கதேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருப்பதாக மாணவர்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்தனர். எனவே இட ஒதுக்கீடு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பு
இருப்பினும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்தது. நிலைமை மோசமான நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

பிரதமர் மாளிகை போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை என போற்றப்பட முஜிபுர் ரகுமானின் மகள் ஷேக் ஹசீனா 2009 முதல் தொடர்ச்சியாகப் பிரதமராக இருந்த நிலையில் அவரது 16 ஆண்டுகால ஆட்சி வெறும் 3 மாதகால மாணவர் போராட்டங்களால் முடிவுக்கு வந்தது.


இந்த கலவரத்தில் மொத்தமாக 650 பேர் வரை உயிரிழந்தனர். வங்கதேச பிரச்சனையால் அங்கிருந்து சாறை சாரையாக மக்கள் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதும், நிலைமையை சமாளிக்க அங்கு குவிக்கப்பட்ட எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திருப்பி அனுப்பிய சம்பவங்களும் அரங்கேறின.
முகமது யூனுஸ்
ஷேக் ஹசீனாவால் அடக்குமுறையை சந்தித்த பலர் அவரது ரகசிய சிறையான கண்ணாடிகளின் வீட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக முகமது யூனுஸ் என்ற 84 வயது முதியவர் சிறையில் இருந்து விடுதலையானார். இவர் ஏழை மக்களை முன்னேற்ற பொருளாதார, சமூக முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காக 2006ஆம் ஆண்டில் அமைதிகான நோபல் பரிசை பெற்றவர். முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தில் உருவானது.

ஆனால் வங்கதேசத்தின் மறு உருவாக்கம் முற்றிலும் மகிழ்ச்சியானதாக அமைந்துவிடவில்லை. இஸ்லாமிய பெரும்பாண்மை நாடான வங்கதேசத்தின் மக்கள் தொகையில் 22 சதவீதம் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்பட்டது.
சிறுபான்மையினர் மீதான வன்முறை
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசும் இதற்கு கண்டனம் கூறுவதை தவிர மேலதிக நடவடிக்கை எடுத்தற்கான சுவடுகள் எதுவும் இல்லை. சிறுபான்மையினரின் [இந்துக்களின்] வழிபாடு தளங்கள் குறிவைக்கப்பட்டன. அக்டோபர் தொடக்கத்தில் துர்கா பூஜை முதல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தது. இந்துக்கள் பரவி வாழும் இடங்களில் இன்றைய தேதியும் பதற்றமான சூழலே நிலவுகிறது.
சிறுபான்மையினரின் மீதான வெறுப்பு வெகு மக்கள் இடையே பரப்படுவதும், பெரும்பான்மையினரின் பிரதிநிதிகளாக தங்களை வரையறுத்துக்கொள்ள்ளும் மத அடிப்படைவாத அமைப்புகளும் இந்த வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமாக அமைகின்றன.


இதற்கு எதிராக இந்துக்கள் திரண்டு போராட்டம் நடத்தாமலும் இல்லை. அப்படி இந்துக்களை போராட்டங்களுக்கு தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த மதகுரு சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் நீதிமன்றம் வந்தபோது நடந்த கலவரத்தில் வக்கீல் ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கொல்லப்பட்டார்.

தற்போது அவருக்காக எந்த வக்கீலும் ஆஜராக முன்வராத நிலையில் அவரது ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் குறிவைக்கப்படுவதற்கு இந்தியாவும் சர்வதேச நாடுகளும் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளன.
ஐ.நா. இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்பதே வங்கதேச இந்துக்களின் கோரிக்கையாக உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதையே வலியறுத்தி உள்ளார்.
- மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது.
- இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு மயோட்டே. இந்தத் தீவு பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் பேரை மக்கள்தொகையாகக் கொண்டுள்ள மயோட்டே தீவை நேற்று சிண்டோ என்ற புயல் தாக்கியது.
கனமழையுடன் வீசிய இந்த புயலால் பல வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள், சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த புயலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்றும் 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மயோட்டே புயல் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ஏறக்குறைய ஒரு நூற்றாண்டில் மிக சக்திவாய்ந்த சூறாவளியாக மயோட்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பாதிப்பில் சிக்கி பல நூறு பேரில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று உள்ளூர் பிரெஞ்சு அதிகாரி தெரிவித்தார்.
"உயிரிழந்தோர் எண்ணிக்கை நிச்சயமாக நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன், ஒருவேளை இந்த எண்ணிக்கை பல ஆயிரங்களை கூட கடக்கலாம்" என்று ஃபிரான்கோஸ் சேவியர் பெய்வில் கூறினார்.
அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறும் போது, "பாதிக்கப்பட்டவர்களை கண்கெடுப்பது கடினமாகவே இருக்கும். தற்போதைய சூழலில் உறுதியான எண்ணிக்கையை கூற முடியாது," என்று தெரிவித்தது.






