என் மலர்tooltip icon

    உலகம்

    • தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
    • ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார்

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி டிரம்ப் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைத்தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

    அதில், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள்.

    கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.

    இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரிஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

    ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். சமீப காலமாகவே அமெரிக்காவுடன் கனடா இணைய வேண்டும் என்ற வாதத்தை டிரம்ப் முன்வைத்து வருகிறார். கடந்த நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, இறுதியில் அவர் லியுவை விவாகரத்து செய்தார்.
    • ஜோவின் அசைக்க முடியாத காதல் இறுதியில் லியுவை வென்றது.

    சீனாவைச் சேர்ந்த 59 வயதான பெண், இரண்டு இனப்பெருக்க அமைப்புகளைக் கொண்டுள்ளார் . ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க அமைப்புகளை கொண்ட அவர் அரசு ஆவணங்களின்படி பெண் எனவே அறியப்படுகிறார்.

    தென்மேற்கு சீனாவின் பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்த பெண் லியு , 18 வயதில் டாங் என்ற நபரை மணந்தார். ஒரு வருடத்திற்கு பின் லியு ஆண் குழந்தையை பிரசவித்தார்.

    இருப்பினும், லியுவின் உடல் விரைவில் விவரிக்க முடியாத மாற்றங்களுக்கு உள்ளாகத் தொடங்கியது. ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன்களின் திடீர் எழுச்சி தாடியின் வளர்ச்சிக்கும், மார்பக அளவு குறைவதற்கும், ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது.  இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, இறுதியில் அவர் லியுவை விவாகரத்து செய்தார்.

     

    விவாகரத்துக்குப் பிறகு, லியு தனது மகனை தனது தந்தையுடன் விட்டுவிட்டு புதிதாகத் ஒரு வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். வேறொரு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த லியு , அங்கு ஒரு காலணி தொழிற்சாலையில் வேலை பார்த்து ஆணாக வாழ ஆரம்பித்தார்.

    இந்தச் சமயத்தில்தான் லியு, ஜோ [zhou] என்ற பெண் சக ஊழியரைச் சந்தித்தார். இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில், லியு தனது தனிப்பட்ட உடல் நிலை காரணமாக ஜோவை காதலிக்க தயங்கினார். இருப்பினும், ஜோவின் அசைக்க முடியாத காதல் இறுதியில் லியுவை வென்றது.

    லியுவின் நிலைமையால் சவால்கள் இருந்தபோதிலும், ஜோ அவரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், லியுவின் அடையாள அட்டையில் அவர் பெண் என அடையாளப்படுத்தியதால் அவர்கள் திருமணம் தடைப்பட்டது. சீனாவில் ஓரினச்சேர்க்கை திருமணம் அங்கீகரிக்கப்படாததால், சட்டப்படி இருவரும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

     

    பின்னர் அவர் உதவிக்காக தனது முன்னாள் கணவர் டாங்கி -இடம் சென்றார். டாங் ஜோவை திருமணம் செய்து கொள்வார். அவர்களுடன் லியு வாழ்வார் என்ற முடிவு எட்டப்பட்டது.  

     இதன் விளைவாக, டாங் மற்றும் ஜோ அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். அதே நேரத்தில் லியுவும் ஜோவும் தொடர்ந்து ஜோடியாக வாழ்ந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு லியு மூலம் ஜோ கர்ப்பமாகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தற்போது 59 வயதான லியு தாயாகவும், தந்தையாகவும் ஒரு அசாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். லியுவின் கதை சீன ஊடகங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் பேசுபொருளாகி வருகிறது. 

    • திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பீஜிங் நேரப்படி இன்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு நேபாள எல்லைக்கு அருகே திபெத் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத் நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.

    இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் திபெத் தின் ஜிசாங்க் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதால் அந்த பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.

    நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமாகும். இன்று காலை திபெத் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து 6 முறை நில அதிர்வு ஏற்பட்டது.

    முதல் நில அதிர்வு அதேபகுதியில் காலை 7.02 மணிக்கு 4.7 ரிக்டர் அளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. பிறகு காலை 7.07 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் 30 கி.மீ. ஆழத்திலும் நில அதிர்வு பதிவானது. அதன்பின் திபெத்தின் 2-வது பெரிய நகரமான ஷிகாட்சே நகரில் 6.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுபோன்று 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

    நேபாள நாட்டின் லொபுசே என்ற மலைப் பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் காலை 6.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் திபெத்தில் உள்ள ஷிகாட்சே நகரில் மையம் கொண்டு ஏற்பட்டது. இப்பகுதி நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே உள்ளது.

    நேபாள தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோல் நிலநடுக்கம் மேற்கு சீனாவின் சில பகுதிகளிலும் ஏற்பட்டது.

    திபெத் மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்ததால் அவர்கள் நிலநடுக்க பாதிப்புக்குள்ளானார்கள்.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற பீதியில் வீடுகளுக்கு செல்லாமல் சாலைகளிலேயே இருந்தனர்.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திபெத், நேபாளத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திபெத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. திபெத்தின் மலைப்பகுதியில் நிலநடுக்கம் உண்டானதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணியும் நடந்தது.

    திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்காளம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டியா, முங்கர், அராரியா, சீதாமர்ஹி, கோபால்கஞ்ச், வைஷாலி, நவாடா மற்றும் நாளந்தா உள்ளிட்ட பல பகுதிகளில், சுமார் 30 வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    இதேபோல் மற்ற பகுதிகளிலும் சில வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் வங்காளதேசம், பூடானிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.

    • இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது.
    • இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜார்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்ளார்.

    கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். மேலும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

    அவரது பொருளாதார நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பை சந்தித்தார். அவருக்கு எதிராக பெரும்பாலான எம்.பி.க்கள் உள்ளனர். இதையடுத்து பதவி விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கனடாவின் புதிய பிரதமராக யார் தேர்வு செய்யப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. பிரதமர் பதவி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உள்பட 8 பேர் உள்ளனர்.


    முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் பெயர் பிரதமர் பதவிக்கு அடிபடுகிறது. இவரது தந்தை ஆனந்த் தமிழ்நாட்டையும், தாய் சரோஜ் பஞ்சாப் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் டாக்டர்கள்.

    அனிதா ஆனந்த் 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக இருந்தார். கொரோனா காலத்தில் கோவிட்-19 தொற்றுநோயின் உச்சத்தில் மருத்துவ உபகரணங்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பங்காற்றினார்.


    அதேபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.யான ஜார்ஜ் சாகல், பிரதமர் பதவி போட்டியில் உள்ளார். இவர் இயற்கை வளங்களுக்கான நிலைக்குழுவின் தலைவராகவும், சீக்கிய காக்கசின் தலைவராகவும் உள்ளார்.

    மேலும் சில நாட்களுக்கு முன்பு துணைப் பிரதமர் பதவியில் இருந்து விலகிய கிறிஸ்டியா பிரீலேண்ட், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி, மூத்த அமைச்சர் டொமினிக் லெப்லாங்க், முன்னாள் பேங்க் ஆப் கனடா மற்றும் பேங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் மார்க் கார்னி மற்றும் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், கிறிஸ்டி கிளார்க் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    இப்போட்டியில் அனிதா ஆனந்த் முன்னணியில் உள்ளார். 57 வயதாகும் அனிதா ஆனந்த் 2010-ம் ஆண்டில் இருந்து அரசியலில் இருக்கிறார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டவியல், டல்ஹௌசி பல்கலைக்கழகத்தில் சட்டம், தொடர்ந்து டொராண்டோ பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டம் பயின்ற அவர் நோவாஸ்கோர்சியாவில் பிறந்தவர்.

    • அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தோனேசியா.
    • 2009 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.

    பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினராக இந்தோனேசியா இணைந்ததாக பிரேசில் அறிவித்து இருக்கிறது. தெற்கு ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தோனேசியா இருக்கிறது.

    இது தொடர்பாக பிரேசில் வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "தென்கிழக்கு ஆசியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு உலகளாவிய நிர்வாகத்தின் நிறுவனங்களை சீர்திருத்தும் விருப்பத்தை மற்ற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும், உலகளாவிய தெற்கிற்குள் ஒத்துழைப்பை வழங்கவும் சாதகமாக பங்களிக்கிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2025 ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை ஏற்றுள்ள பிரேசில், இந்தோனேசியாவை அமைப்பில் இணைப்பது தொடர்பான முயற்சிகள் கடந்த 2023 ஆம் ஆண்டு துவங்கியதாக தெரிவித்தது.

    2009 ஆம் ஆண்டு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இதற்கு அடுத்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பில் தென் ஆப்பிரிக்கா இணைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு, பிரிக்ஸ் அமைப்பில் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முழு உறுப்பினர்களாக இணைந்தன.

    • ஒரு மேடையில் வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் அவர் இசையை உருவாக்கும் காட்சிகள் உள்ளது.
    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற ஒரு இசையை தற்போது தான் பார்க்கிறோம் என பதிவிட்டனர்.

    இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய படிப்புகள் வந்து விட்டன. செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு போன்ற படிப்புகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதே போல இசை தொடர்பாகவும் புதிய படிப்புகள் அறிமுகமாகி உள்ளன.

    அந்த வகையில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தண்ணீர் இசையமைப்பு படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அவர் தனது திறமையை மேடையில் செய்து காட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    அதில், ஒரு மேடையில் வைக்கப்பட்ட தண்ணீர் கேனில் அவர் இசையை உருவாக்கும் காட்சிகள் உள்ளது. ஒவ்வொரு பொருளை வைத்தும், அந்த பொருளை தண்ணீரில் பயன்படுத்தியும் இளம்பெண் இசையை வெவ்வேறு விதமாக உருவாக்குவதை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

    இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற ஒரு இசையை தற்போது தான் பார்க்கிறோம் என பதிவிட்டனர். 



    • கண்டத்தின் நில பகுதிகளை 7 நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன.
    • துருவ பகுதியில் சூரிய கதிர்கள் சாய்வாக வந்து படுவதால் சூடு தெரியாது.

    அபுதாபி:

    நமது பூமி 23.5 டிகிரி சாய்வாண கோணத்தில் ஒரே அச்சில் சுழல்வதால் வட, தென்துருவ பகுதிகள் உருவாகின. இதில் தென் துருவ பகுதியில்தான் உலகின் 5-வது பெரிய கண்டமான அண்டார்டிகா உள்ளது. சுற்றி எங்கு பார்த்தாலும் பனிப்பாறைகள் சூழ்ந்து வெண்மையாக காணப்படும் சிக்கலான பகுதியாகும்.

    தென் துருவத்தில் வாழ தகவமைப்புகளுடன் கூடிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் மட்டுமே அங்கு வாழ முடியும். அந்த அண்டார்டிகா கண்டத்தில் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த 1959-ம் ஆண்டு 12 நாடுகள் இரு உடன்படிக்கையை ஏற்படுத்தியது.

    இதில் தற்போது 49 நாடுகள் இணைந்துள்ளன. இந்த பகுதியில் 28 நாடுகள் ஆங்காங்கே ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளன. கண்டத்தின் நில பகுதிகளை 7 நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. கோடை காலம் நிலவும் போது மொத்தம் 5 ஆயிரம் ஆராய்ச்சியாளர்கள் வந்து தங்கி இருப்பர். அண்டார்டிகா மண்ணில் கொடி நாட்டிய 13-வது நாடு இந்தியாவாகும்.

    துருவ பகுதியில் சூரிய கதிர்கள் சாய்வாக வந்து படுவதால் சூடு தெரியாது. அதேபோல சூரியன் வானின் உச்சிக்கு வருவதில்லை. இதில் தற்போது அமீரக தேசிய வானிலை மையம், பல்கேரியாவின் துருவ ஆராய்ச்சி பயிற்சி மையத்துடன் இணைந்து கூட்டு அறிவியல் பயணத்திற்கு ஏற்பாடு செய்தது.

    இதில் அமீரக தேசிய வானிலை மையத்தில் பணியாற்றும் அகமது அல் காபி மற்றும் பதர் அல் அமெரி ஆகிய 2 நிபுணர்கள் பூமியின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்து தங்கள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர். இதற்காக இருவருக்கும் தீவிர பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து வெற்றிகரமாக இருவரும் பூமியின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளனர். இந்த நிபுணர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் 2 வானிலை மற்றும் நிலநடுக்க கண்காணிப்பு மையங்கள் அமீரகம் சார்பில் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் துருவப்பகுதியில் வானிலை மாற்றங்கள் மற்றும் நிலநடுக்க செயல்பாடுகள் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்.

    இது உலகின் சுற்றுச்சூழல் நிலை குறித்த புரிதலை மேம்படுத்தும் என அமீரக தேசிய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குனரும், சர்வதேச வானிலை ஆராய்ச்சி அமைப்பின் தலைவருமான டாக்டர் அப்துல்லா அல் மண்டூஸ் தெரிவித்துள்ளார்.

    • இத்திட்டத்தில் சாதம், காய்கறிகள், பழங்கள், சிக்கன் ஆகியவை வழங்கப்படுகின்றன.
    • திட்டத்தின் தொடக்க நாளில் மட்டும் 5-லட்சத்துக்கும் அதிகமானோர் உணவருந்தினர்.

    இந்தோனேசியாவில் பள்ளிக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்குறைபாட்டை போக்க அந்நாட்டு அரசு முன்னெடுத்துள்ள இத்திட்டத்தில் சாதம், காய்கறிகள், பழங்கள், சிக்கன் ஆகியவை வழங்கப்படுகின்றன.

    இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோவின் பல திட்டங்களில் ஒன்று இலவச உணவு திட்டம். இத்திட்டமே கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரபோவோவின் தேர்தல் பிரசாரத்தின் மையமாக இருந்தது. விழா ஏதுவும் இன்றி சாதாரணமாக நேற்று இத்திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் 190 சமையல் அறைகளில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டது. இத்திட்டத்தின் தொடக்க நாளில் மட்டும் 5-லட்சத்துக்கும் அதிகமானோர் உணவருந்தினர்.



    இத்திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்படும் போது 2029 ஆம் ஆண்டில் நாட்டின் 280 மில்லியன் மக்கள்தொகையில் 82.9 மில்லியனை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்த திட்டத்தில் பயன் பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக மார்ச் மாதத்திற்குள் 3 மில்லியனாக அதிகரிக்கும் என்றார். 

    • சமீபத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
    • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அமெரிக்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்நாட்டில் பறவை காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல்முறை ஆகும்.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு சமீபத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அதிக தொற்று தன்மை கொண்ட எச்5.என்1. ரக வைரஸ் மூலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதனை லூசியானா மாகாண சுகாதார துறை தெரிவித்து உள்ளது. காட்டு பறவைகள் மற்றும் வளர்ப்பு பறவைகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    இவர் தவிர, அமெரிக்காவில் வேறு யாருக்கும் இந்த தொற்று ஏற்படவில்லை என்று லூசியானா மாகாண சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவில் முதன்முறையாக பறவை காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்திருப்பதாக லூசியானா மாகாண சுகாதார துறை தெரிவித்துள்ளது.

    • நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீதிகளுக்கு வந்தனர்.

    நேபாளத்தின் வடகிழக்கில் உள்ள லோபுச் பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் காலை 6.35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.

    நிலநடுக்கம் காரணமாக மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 



    • சட்ட விரோதமாக தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    கின்ஷாசா:

    ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் சட்ட விரோதமாக பல தங்கச்சுரங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றை கள்ளச்சந்தையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பலர் அதிகளவில் வருமானம் ஈட்டுகின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலையில் இது நாட்டின் பொருளாதாரத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இந்தநிலையில் அங்குள்ள கிவு மாகாணத்தில் சட்ட விரோதமாக தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 12 தங்கக்கட்டிகள் மற்றும் சுமார் ரூ.7 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அந்த காரில் இருந்த 3 சீனர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக ஜஸ்டின் ட்ரூடோராஜினாமா செய்ததாக தகவல்
    • அக்டோபரின் பிற்பகுதியில் கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது.

    கனடா நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அரசியல் நெருக்கடி மற்றும் சொந்த கட்சிக்குள்ளேயே நெருக்கடி காரணமாக அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் 9 ஆண்டுகளாக வகித்து வரும் கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    ட்ரூடோவின் விலகல், அக்டோபரின் பிற்பகுதியில் நடைபெற இருக்கும் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியிடம் லிபரல் கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    ×