என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நேற்று கோவையில் உள்ள மாலில் இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியானது
- இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
நேற்று கோவையில் உள்ள ப்ரோஸோன் மாலில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியான நிலையில், இப்படத்தின் கதை மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறு போல உள்ளது என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
குறிப்பாக டிரெய்லரில் தனுஷ் இருக்கும் புகைப்படங்களோடு மாதம்பட்டி ரங்கராஜின் புகைப்படங்களை இணைத்து இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டது வைரலாகி வருகிறது.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
- ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனம் ஆடினார்.
சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கர் (46) உடல் நலக்குறைவால் காலமானார். ரோபோ சங்கரின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
ரோபோ சங்கரின் உடலுக்கு வளசரவாக்கம் மின்மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதற்கிடையே, ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா சங்கர் நடனமாடினார். தனது துக்கத்தை நடனம் மூலம் அவர் வெளிப்படுத்திய காட்சி காண்பர்களை கண்கலங்க வைத்தது.
ஆனால், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது இணையத்தில் பேசுபொருளானது. பலரும் பிரியங்கா நடனம் ஆடி இருக்க கூடாது என்று அவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டனர். அதே சமயம், பிரியங்காவிற்கு ஆதரவாகவும் பலர் கருத்து பதிவிட்டனர்.
இந்நிலையில், ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி நடனமாடியதற்கு எதிரான பதிவுகளுக்கு பதிலளித்த தமிழ் பண்பாட்டு ஆய்வாளர் தமிழ் காமராசன், "ஒரு கட்டுக்கடங்காத துக்கம், ஒரு பெரும் இழப்பு, எதுவும் செய்ய முடியாத நிலையில் என்ன பண்ண முடியும்? அந்த நேரத்தில் மனிதனுக்கு இறுதியாக இருக்கக்கூடிய ஒன்று நடனமும், இசையும், பாட்டும்தான்.. அதுதான் அவர்களை ஆற்றுப்படுத்தும்" என்று தெரிவித்தார்.
- நேற்று கோவையில் உள்ள மாலில் இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியானது
- இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.
நேற்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தனுஷ், "9 மணிக்கு படம்னா 8 மணிக்கே சில ரிவ்யூக்கள் வரும், அதையெல்லாம் நம்பாதீங்க. 9 மணிக்கு படம் ரிலீஸ் ஆகி 12.30 மணிக்கு தான் படம் எப்படி இருக்குனே தெரியும். அதனால் சரியான ரிவ்யூக்களை பார்த்து படம் எப்படி இருக்கிறது என நீங்க முடிவு பண்ணுங்க" என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
- நேற்று கோவையில் உள்ள மாலில் இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியானது.
- இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.
நேற்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் பார்த்திபன், "விஜயம் யார் வேண்டுமானால் செய்யலாம்.. ஆனால், ஜெயம் உங்கள் கையில் தான் உள்ளது... ஆனால் நான்தான் 2026 இல் CM" என்று விஜயை மறைமுகமாக குடிப்பிடும்படியாக அரசியல் குறித்து கவிதை வாசித்தது அனைவரையும் கவர்ந்தது.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி பரப்புரையில் ஈடுபட்டுள்ள நடிகர் விஜயை குறிப்பிடும்படி பார்த்திபன் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
- இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது.
- பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்
துபாய்:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான் (ஏ பிரிவு), இலங்கை, வங்காளதேசம் (பி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் இரு இடங்களை பிடித்து 'சூப்பர்4' சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் 'சூப்பர்4' சுற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியனான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணி லீக் ஆட்டங்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் அடுத்தடுத்து எளிதில் தோற்கடித்தது. ஓமனுக்கு எதிரான கடைசி லீக்கில் 21 ரன் வித்தியாசத்தில் போராடி வென்றது. தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடத்தை சொந்தமாக்கி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
தங்களது வெற்றி உத்வேகத்தை தொடரும் ஆர்வத்துடன் இந்திய அணி உள்ளது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 127 ரன்னில் கட்டுப்படுத்திய இந்தியா இலக்கை 15.5 ஓவர்களில் எளிதில் எட்டிப்பிடித்தது. எனவே இந்த ஆட்டத்தில் இந்திய அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் எனலாம்.
இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் என்று அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. பந்து வீச்சில் பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தியும், ஆல்-ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஷிவம் துபேவும் பலம் சேர்க்கிறார்கள்.
ஓமனுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 15-வது ஓவரில் ஹமாத் மிர்சா அடித்த பந்தை பிடிக்க முயற்சிக்கையில் இந்திய அணியின் சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் அடைந்த அவர் உடனடியாக வெளியேறினார். அதன் பிறகு அவர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுவாரா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் நல்ல நிலையில் இருப்பதாக போட்டிக்கு பிறகு இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் டி.திலிப் தெரிவித்தார். இந்த தொடரில் இதுவரை 3 விக்கெட் வீழ்த்தி இருக்கும் அக்ஷர் பட்டேல் ஆட முடியாமல் போனால் அணிக்கு இழப்பாகும்.
சல்மான் ஆஹா தலைமையிலான பாகிஸ்தான் அணி 2 வெற்றி (ஓமன், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (இந்தியாவுக்கு எதிராக) தனது பிரிவில் 2-வது இடத்தை பெற்று அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது.
பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டகாரர் சைம் அயூப் மூன்று ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பேட்டிங்கில் பஹர் ஜமான், விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ், சகிப்சதா பர்ஹான், பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி ஆகியோர் ஓரளவு பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்த அணியின் மிடில் வரிசை தான் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது நல்ல நிலையில் உள்ளனர்.
லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முடிந்ததும், இந்திய அணியினர், பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக 'டாஸ்' போடும் நிகழ்வின்போது இரு அணியின் கேப்டன்களும் பரஸ்பரம் கைகொடுக்கவில்லை. இந்த சம்பவம் ஆட்டம் முடிந்ததும் சர்ச்சையாக வெடித்தது. டாசின்போது விதிமுறைக்கு மாறாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் கைகுலுக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆஹாவிடம் தகவல் பரிமாறிய போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட் (ஜிம்பாப்வே) மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாரை ஐ.சி.சி. நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அடுத்து நடந்த அமீகரத்துக்கு எதிரான லீக் ஆட்டத்துக்கு உரிய நேரத்தில் மைதானத்திற்கு வராமல் காலம் தாழ்த்தியதுடன் போட்டியை புறக்கணிக்க போவதாக மிரட்டல் விடுத்தது. அதன் பிறகு போட்டி நடுவர் பைகிராப்ட் தங்களிடம் மன்னிப்பு கேட்டதால் தொடர்ந்து விளையாடப்போவதாக அறிவித்ததுடன் ஒரு மணி நேரம் தாமதமாக களம் இறங்கி ஆடியது.
கைகுலுக்க மறுத்த சர்ச்சை அதைத்தொடர்ந்து அரங்கேறிய புறக்கணிப்பு மிரட்டல் பிரச்சனை ஓய்ந்த சில தினங்களில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துவதால் இந்த ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.
முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பரம எதிரிக்கு எதிரான தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்தியா 11 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் 3 ஆட்டங்களிலும் வென்று இருக்கின்றன. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அரங்கேறும் இந்த ஆட்டத்தில் நெருக்கடியை நேர்த்தியாக கையாளும் அணியின் கையே ஓங்கும். ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழலில் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் அல்லது ஹர்ஷித் ராணாஅல்லது அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: சகிப்சதா பர்ஹான், சைம் அயூப், பஹர் ஜமான், சல்மான் ஆஹா (கேப்டன்), ஹசன் நவாஸ், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி ஸ்போர்ட்ஸ் 1, 4, 5 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- நேற்று கோவையில் உள்ள மாலில் இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியானது.
- இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது.
நேற்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசிக்கொண்டிருக்கும்போதே பாதுகாப்பை மீறி ரசிகர் ஒருவர் மேடையில் ஏறி தனுஷை கட்டிபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது 'ஒரே ஒரு ஃபோட்டோ..' என ரசிகர் வைத்த கோரிக்கையை ஏற்று தனுஷ்அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் . பின்னர், பவுன்சர்கள் அந்த ரசிகரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் நிகழ்ச்சியில் சிறுதிநேரம் சலசலப்பு ஏற்பட்டது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். வருமானப் பற்றாக்குறை அகலும். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றும்.
மிதுனம்
இடமாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
கடகம்
குழப்பங்கள் அகலும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வீடு, வாங்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் உண்டு.
சிம்மம்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வழிவகை செய்துகொள்ளும் நாள். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்க போட்ட திட்டம் கைகூடும்.
கன்னி
சாமர்த்தியமானப் பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். கல்யாண முயற்சி கைகூடும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
துலாம்
தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். வாரிசுகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். நீண்ட நாளைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும்.
விருச்சிகம்
முன்னேற்றம் அதிகரிக்க முன்னோர்களை வழிபட வேண்டிய நாள் வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் உயரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
உற்சாகத்துடன் செயல்படும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் உங்கள் பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன்வருவர். உத்தியோக முயற்சியில் இருந்த தடை அகலும்.
மகரம்
கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். பிறருக்காக வாங்கிக் கொடுத்த தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் உருவாகலாம். நட்பு பகையாகும்.
கும்பம்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்கு மத்தியில் உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம். வரவைவிட செலவு இருமடங்காகும். பிறரை நம்பி செயல்பட இயலாது.
மீனம்
தொழில் முன்னேற்றத்திற்கு தொலைதூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
- ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-5 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை நள்ளிரவு 1.42 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : பூரம் காலை 10.56 மணி வரை பிறகு உத்திரம்
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று மகாளய அமாவாசை, கோவில்களில் தர்ப்பணம் செய்வது நன்று, திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்
இன்று சர்வ மகாளய அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது நன்று) திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-நட்பு
மிதுனம்-நம்பிக்கை
கடகம்-நன்மை
சிம்மம்-வெற்றி
கன்னி-ஆதாயம்
துலாம்- பக்தி
விருச்சிகம்-பாசம்
தனுசு- நற்செய்தி
மகரம்-ஓய்வு
கும்பம்-வெற்றி
மீனம்-சிறப்பு
- அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
- அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ.88 லட்சம்) செலுத்த வேண்டும் என்று டிரம்ப் அரசு உத்தரவிட்டது.
இந்த புதிய உத்தரவு இன்று (செப்டம்பர் 21) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு இது செயலில் இருக்கும் என்றும் உத்தரவை நீட்டிப்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு H-1B விண்ணப்பதாரர்களில் 71% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந்நடவடிக்கை அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவதில் இந்தியர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூ.88 லட்சமாக உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் வருடாந்திர கட்டணம் அல்ல, ஒரு முறை விண்ணப்ப கட்டணம் மட்டுமே என அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே H-1B விசாக்களை வைத்திருப்பவர்கள் மற்றும் தற்போது அமெரிக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் அமெரிக்கா வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் புதிதாக H-1B விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
- H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக அமெரிக்கா உயர்த்தியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு நாளை (செப்டம்பர் 22) அமெரிக்கா செல்ல உள்ளது.
இந்த பயணத்தின்போது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி, H-1B விசா கட்டணம் உயர்வு போன்ற பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும்.
குறிப்பாக, H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்தும் அமெரிக்காவின் முடிவு இந்திய தொழில்நுட்பத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தி, விரைவில் ஒரு சாதகமான ஒப்பந்தத்தை எட்ட வேண்டும் என்பதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஏற்கனவே பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார்.
கடந்த வாரம், அமெரிக்காவின் வர்த்தக பேச்சுவார்த்தை குழு இந்திய அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து பேசியது. அந்த சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்ததாக இரு நாடுகளும் தெரிவித்தன. இந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே பியூஷ் கோயல் அமெரிக்கா செல்கிறார்.
- இந்த குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி ஆகும்.
- இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம் என்ற இடத்தை மும்பை தக்க வைத்துள்ளது.
இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது.
Mercedes-Benz Hurun India Wealth Report 2025 வெளியிட்ட அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இருந்த 4,58,000 ஆக இருந்த கோடீஸ்வர குடும்பங்கள் 2025 ஆம் ஆண்டில் 8,71,700 ஆக அதிகரித்துள்ளது.
இந்த குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி ஆகும்.
1 கோடியே 8.5 லட்சம் ரூபாய், அதற்கு மேல் நிகர மதிப்புள்ள குடும்பங்கள் கோடீஸ்வர குடும்பங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம் என்ற இடத்தை மும்பை தக்க வைத்துள்ளது. இங்கு 1,42,000 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி (68,200) மற்றும் பெங்களூரு (31,600) உள்ளன.
மாநில அளவில், மகாராஷ்டிரா 1,78,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அமெரிக்கா முக்கிய இடமாக உள்ளது.
இந்த பணக்காரர்களில் 60% பேர் தங்கள் ஆண்டு செலவு ஒரு கோடி ரூபாய்க்குள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.






