என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.
- அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அழிவின் விளிம்பிலிருந்த ஓலைச்சுவடியிலான தமிழ் இலக்கியங்களை நூல் வடிவத்தில் அச்சிட்டு, தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகெங்கும் அறியச் செய்த, தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களது பிறந்த தினம் இன்று.
மூவாயிரத்துக்கும் அதிகமான ஓலைச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும், பண்டைத் தமிழ் இலக்கியங்களையும் மீட்டு, அச்சிட்டு வெளியிட்டவர். அடுத்த தலைமுறைக்கு தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சென்றவர்.
தமிழ் மொழியைக் காத்து வளர்த்த தமிழ்த் தாத்தா உ.வெ.சாமிநாத ஐயர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் என தெரிவித்துள்ளார்.
- பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.
- முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவுடன் துணை ஊட்டச்சத்துக்காக வழங்கப்படும் கடலை மிட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.
கடலை மிட்டாயில் சர்க்கரை மற்றும் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து, முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே துணை ஊட்டச்சத்துக்காக வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒழுங்காக சேமிக்கப்படாத கடலை மிட்டாய், காலாவதி தேதியை தாண்டிய கடலை மிட்டாய் குழந்தைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தார்வாட் கூடுதல் ஆணையர் கல்வித்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்த மற்றொரு கடிதத்தையும் இந்த உத்தரவில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மதிய உணவுடன் கடலைமிட்டாய் விநியோகிப்பதை நிறுத்துமாறும் அவர் துறைக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இதை பரிசீலித்த கல்வித்துறை துணை ஊட்டச்சத்துக்காக முட்டை மற்றும் வாழைப்பழங்களை மட்டுமே வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கடலை மிட்டாய் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக தனி வழிகாட்டுதல்களை வெளியிட துறை ஆணையர்களுக்கு உத்தரவிட்டது.
- ஆன்லைன் புக்கிங் தளத்தையும் குற்றம்சாட்டி இருந்தார்.
- கணக்கிட முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ளார்.
திரையரங்கில் நீண்ட நேரம் விளம்பரங்கள் ஒளிபரப்பியதால் ஆத்திரம் அடைந்த நபர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திரையரங்க நிர்வாகம் (PVR & INOX) தனது நேரத்தை 25 நிமிடங்கள் வரை வீணடித்தாக கூறிய நபர் திரையரங்கம் மட்டுமின்றி அதன் ஆன்லைன் புக்கிங் தளத்தையும் குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு சம்பவ நாளில் மாலை 4.05 மணிக்கு 'சாம் பகதூர்' என்ற படத்தை பார்க்க அபிஷேக் திரையரங்கத்திற்கு சென்றுள்ளார். திரைப்படம் மாலை 6.30 மணிக்குள் முடிந்திருக்க வேண்டும். இதன் பிறகு செய்வதற்கென சில வேலைகளை அபிஷேக் திட்டமிட்டிருந்துள்ளார்.
எனினும், 4.05 மணிக்கு தொடங்க வேண்டிய திரைப்படம் டிரெய்லர்களின் விளம்பரங்கள் மற்றும் டிரெய்லர்கள் ஒளிபரப்பிய பிறகு மாலை 4.30 மணிக்குத் தான் தொடங்கியுள்ளது. இதனால் தனக்கு கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் வரை வீணானது என அபிஷேக் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
"புகார்தாரரால் அன்றைய தினம் திட்டமிடப்பட்ட பிற ஏற்பாடுகள் மற்றும் சந்திப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை, இழப்பீடாக பணத்தின் அடிப்படையில் கணக்கிட முடியாத இழப்புகளைச் சந்தித்துள்ளார்," என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
"நேரம் பணமாகக் கருதப்படுகிறது" என்று கூறி, புகார்தாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய திரையரங்கு நிறுவனங்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திரையரங்குகள் நியாயமற்ற வர்த்தக நடைமுறை மற்றும் புகார்தாரரின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ.50,000, மன வேதனை ஏற்படுத்தியதற்கு ரூ.5,000 மற்றும் "புகாரைப் பதிவு செய்ததற்காக ரூ.10,000" செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்றம் திரையரங்கு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
இருப்பினும், டிக்கெட் முன்பதிவு தளம் விளம்பரங்களின் ஸ்ட்ரீமிங் நேரத்தை கட்டுப்படுத்தாது என்பதால், அது எந்த தொகையையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
- அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பென் கரண் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
- பென் கரணின் சகோதரர்களான டாம் கரண், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர்.
அயர்லாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்றது. இதில் முதல் 2 போட்டிகள் முடிவில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்திருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணி 39.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியதுடன் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது. இப்போட்டியில் சதமடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த பென் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் பென் கரண் குடும்பத்தில் முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையை பென் கரண் படைத்துள்ளார். பென் கரணின் சகோதரர்களான டாம் கரண், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர்.
- பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது.
கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று முன்தினம் பட்டாசுகள் வெடித்ததில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மலப்புரத்தில் உள்ள அரிக்கோடு அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் யுனைடெட் எப்சி நெல்லிக்குத் மற்றும் கேஎம்ஜி மாவூர் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நடந்துள்ளது.
கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தில் பட்டாசுகள் வெடித்துள்ளனர். பட்டாசுகள் வெடித்து பார்வையாளர்கள் இருந்த பகுதியில் சிதறின. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்,
கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு பட்டாசுகள் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்தது.
பட்டாசுகள் வெடித்து, மைதானத்திற்குள் போட்டியைப் பார்க்க மக்கள் அமர்ந்திருந்த பகுதியில் சிதறி வெடித்தது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
- ‘டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.
- 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.
நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்பட மாவட்டங்களில் 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற நடைபயணத்துக்கு வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை மண்டலத்தின் பாதுகாப்பையும், நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்த காலக்கட்டத்தில் வெப்பநிலை உயர்வு, வறண்ட சுற்றுச்சூழல் மற்றும் காட்டு தீ நிகழ்வுகள் அதிகரிப்பால் நடைபயணிகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் அபாயம் ஏற்படாமல் தடுக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டெல்லியின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
- பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாட்களை கடந்துவிட்டது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
எனினும், டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லாத சூழல் தான் நிலவுகிறது. இந்த நிலையில், டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் அடுத்த முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
அந்த வையில், இன்று மாலைக்குள் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடும் என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை (பிப்ரவரி 20) மாலை டெல்லி முதலமைச்சரின் பதவியேற்பு விழா ராம்லீலா மைதானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக மைதானத்தில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. டெல்லி புதிய முதல்வரின் பதவியேற்பு விழாவின் போது சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய ராம்லீலா மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்று தெரிகிறது.
நாளை (பிப்ரவரி 20) மாலை 4:30 மணியளவில் நடைபெறும் இந்த நிகழ்வில் புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பார்கள். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பனியன் நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
- கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.
திருப்பூர்:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தனது கணவன், குழந்தையுடன் திருப்பூர் அடுத்துள்ள தெக்கலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்துள்ளனர்.
பின்னர் அங்கு வேலை பிடிக்கவில்லை என்று அந்த தம்பதி மீண்டும் தங்கள் சொந்த ஊரான ஒடிசா மாநிலம் செல்ல திருப்பூர் ரெயில் நிலையம் வந்துள்ளனர். இந்த நிலையில் ரெயில் நிலையம் அருகில் புஸ்பா பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்து இருந்துள்ளனர்.
அப்போது அவர்களிடம் அறிமுகமான பீகார் மாநிலத்தை சேர்ந்த நதீம்(24), டானிஷ்(25) மற்றும் முர்சித் என்ற மூன்று வட மாநில இளைஞர்கள் நாங்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவனம் அருகில் தான் உள்ளது என கூறியுள்ளனர். அந்த நிறுவனத்தில் உங்கள் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி மற்றும் குழந்தை தங்க இடம் இல்லாததை அறிந்த இந்த மூன்று பேரும் அந்த தம்பதியை அவர்கள் தங்கும் லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு உணவு தயார் செய்த இவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் இவர்கள் ஆறு பேரும் ஒரே அறையில் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் அக்கம்பக்கதினர் தூங்கிய உடன் நதீம், டானிஷ் மற்றும் முர்சித் என மூன்று வட மாநில இளைஞர்களும் கையில் கத்தியை வைத்து பெண்ணின் கணவனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் அந்தப் பெண்ணை கணவன் மற்றும் குழந்தை கண் முன்பே ஒருவர் மாற்றி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கையில் கத்தியை வைத்து மிரட்டியதால் அந்த தம்பதி சத்தம் போடமுடியாமல் பயத்தில் உரைந்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த பெண்ணை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளனர். வெளியே வந்த அவர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் உடனே விரைந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள நதீம், டானிஷ் மற்றும் முர்சித் ஆகிய மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர் பின்னர் அவர்கள் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, உயிர் பயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வதந்திகளை பரப்ப வேண்டாம் என பிரதமர் அலுவலகம் வலியுறுத்தியதல்.
- உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும்.
ஹமாஸ் அமைப்பை சேர்ந்த மூத்த நபர் ஒருவர், சனிக்கிழமை ஆறு உயிருள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதாகவும், வியாழக்கிழமை நான்கு பேரின் உடல்களை திருப்பி அனுப்புவதாகவும் தெரிவித்துள்ளார். காசா பகுதிக்குள் மொபைல் வீடுகள் மற்றும் கட்டுமான பொருட்களை இஸ்ரேல் அனுமதிப்பதை அடுத்து ஹமாஸ் இவ்வாறு அறிவித்துள்ளது.
இந்த ஆறு பேர், இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்களுக்கு ஈடாக, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள கடைசி உயிருள்ள பணயக்கைதிகள் ஆவர்.
ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹய்யாவின் அறிவிப்பில், இறந்தவர்களில் "பிபாஸ் குடும்பம்" - இரண்டு இளம் சிறுவர்கள் மற்றும் அவர்களின் தாயார் அடங்கும். இஸ்ரேல் அவர்களின் மரணங்களை உறுதிப்படுத்தவில்லை. மேலும் ஹமாஸின் அறிவிப்புக்குப் பிறகு "புகைப்படங்கள், பெயர்கள் மற்றும் வதந்திகளை" பரப்ப வேண்டாம் என்று பிரதமர் அலுவலகம் பொதுமக்களை வலியுறுத்தியது.
போரின் ஆரம்பத்தில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறிய ஷிரி பிபாஸ் மற்றும் அவரது மகன்கள் கிஃபிர் மற்றும் ஏரியல் குறித்து இஸ்ரேல் நீண்ட காலமாக கவலையை வெளிப்படுத்தியுள்ளது. கணவரும் தந்தையுமான யார்டன் பிபாஸ் தனித்தனியாக கடத்தப்பட்டு இந்த மாதம் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட உள்ள ஆறு பணயக்கைதிகள் எலியா கோஹன், தல் ஷோஹாம், ஓமர் ஷெம் டோவ், ஓமர் வென்கெர்ட், ஹிஷாம் அல்-சயீத் மற்றும் அவேரா மெங்கிஸ்டு என்று பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் ஆறு பேரின் விடுதலையும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை துரிதப்படுத்தும். சனிக்கிழமை ஹமாஸ் உயிருள்ள மூன்று பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஒரு வாரம் கழித்து மேலும் மூன்று பேரை விடுவிக்கப்பட வேண்டும். ஒப்பந்தத்தின் படி, முதற்கட்டமாக இறந்தவர்களின் உடல்களை மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என்று அது கூறியது.
பணயக்கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பலர் கொடிய தாக்குதல்களுக்காக ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஆவர். மற்றவர்கள் குற்றச்சாட்டு இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, போர் தொடங்கியதிலிருந்து காசாவில் இருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நோவாக் ஜோகோவிச் மற்றும் மேட்டியோ பெரெட்டினி மோதினர்.
- இதில் முதல் செட்டை போராடி வென்ற மேட்டியோ பெரெட்டினி, 2-வது செட்டை எளிதாக வென்றார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டை போராடி வென்ற மேட்டியோ பெரெட்டினி, 2-வது செட்டை எளிதாக வென்றார். இதனால் முதல் சுற்றிலேயே செர்பியா வீரர் ஜோகோவிச் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜோகோவிச் முதல் சுற்றில் 4-7, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-7 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி (முழுவதும்)
நட்சத்திரம்: சுவாதி காலை 9.27 மணி வரை பிறகு விசாகம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் பவனி வரும் காட்சி. ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும் அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் உலா. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் தெப்ப உற்சவம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-இன்பம்
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-தனம்
கடகம்-பயணம்
சிம்மம்-போட்டி
கன்னி-சிறப்பு
துலாம்- பெருமை
விருச்சிகம்-செலவு
தனுசு- சுபம்
மகரம்-நட்பு
கும்பம்-உண்மை
மீனம்-ஆதரவு
- முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
- இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது.
அல் அமராட்:
உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தகுதி சுற்றின் ஒரு பகுதியான உலகக் கோப்பை கிரிக்கெட் லீக்2 ஓமனின் அல் அமராட் நகரில் நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா - ஓமன் இடையிலான ஒரு ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த அமெரிக்கா 35.3 ஓவர்களில் 122 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
அடுத்து 123 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய உள்ளூர் அணியான ஓமன் 25.3 ஓவர்களில் 65 ரன்னில் சுருண்டது. இதனால் அமெரிக்கா 57 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஓவர் எதுவும் குறைக்கப்படாமல் முழுமையாக நடந்த ஒரு நாள் போட்டி ஒன்றில் மிக குறைந்த ஸ்கோரை இலக்காக நிர்ணயித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை அமெரிக்கா படைத்துள்ளது. இதற்கு முன்பு 1985-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 125 ரன்களை இலக்காக நிர்ணயித்து எதிரணியை 87 ரன்னில் முடக்கி வென்றதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அந்த 40 ஆண்டு கால சாதனையாக அமெரிக்கா முறியடித்தது.
மேலும் ஓமன் தரப்பில் 5 பவுலர்களும், அமெரிக்கா தரப்பில் 4 பவுலர்களும் பந்து வீசினர். இவர்கள் அனைவரும் சுழற்பந்து வீச்சாளர்கள். ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில், முழுமையாக நடந்த ஒரு ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட பந்து வீசாதது இதுவே முதல் நிகழ்வாகும்.






