என் மலர்
நீங்கள் தேடியது "Qatar Open tennis"
- போபண்ணா ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
- போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.
தோகா:
கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.
இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது.
பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.
- கோகோ காப்- மார்டா ஒலேஹிவ்னா கோஸ்ட்யுக் ஆகியோர் மோதினர்.
- முதல் செட்டை மார்டா எளிதாக வென்றார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் மற்றும் உக்ரைன் வீராங்கனையான மார்டா கோஸ்ட்யுக் ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டை மார்டா எளிதாக வென்றார். இதனையடுத்து 2-வது செட் பரபரப்பாக சென்றது. இதிலும் மார்டோ 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் 2-6, 5-7 என்ற கணக்கில் கோகோ காப் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நோவாக் ஜோகோவிச் மற்றும் மேட்டியோ பெரெட்டினி மோதினர்.
- இதில் முதல் செட்டை போராடி வென்ற மேட்டியோ பெரெட்டினி, 2-வது செட்டை எளிதாக வென்றார்.
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் மற்றும் இத்தாலி வீரரான மேட்டியோ பெரெட்டினி ஆகியோர் மோதினர்.
இதில் முதல் செட்டை போராடி வென்ற மேட்டியோ பெரெட்டினி, 2-வது செட்டை எளிதாக வென்றார். இதனால் முதல் சுற்றிலேயே செர்பியா வீரர் ஜோகோவிச் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜோகோவிச் முதல் சுற்றில் 4-7, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- காலிறுதி ஆட்டம் ஒன்றில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) மோதினர்.
- முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.
தோகா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோகாவில் நடைபெற்று வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா (செக்) உடன் மோதினார்.
இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை ஜிரி லெஹெக்கா கைப்பற்றி அல்காரசுக்கு அதிர்ச்சி அளித்தார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 3-6, 6-3 மற்றும் 4-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
ஜிரி லெஹெக்கா அரையிறுதியில் ஜாக் டிராப்பர் உடன் மோத உள்ளார்.






