என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்தார்.
- உங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் கூட நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள்
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் கடந்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் அக்கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இணைந்தார்.
கூட்டணி முறிந்ததில் இருந்து சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இதற்கிடையே நிதிஷ் குமாரின் கடந்த கால தவறுகளை மன்னித்து அவர் எங்கள் கூட்டணியில் இணையும் நேரம் வந்துவிட்டது, அவருக்கு எங்கள் கதவுகள் திறந்தே உள்ளன என்று லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை நிதிஷ் குமார் நிராகரித்தார்.
இந்நிலையில் பீகாரில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தின்போது நிதிஷ் குமாருக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 2005 வரை இருந்த லாலு பிரசாத் ஆட்சியோடு தற்போதைய ஆட்சியை ஒப்பிட்ட தேஜஸ்வி, இந்த அரசாங்கம் 40 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், 2005க்கு முந்தைய காலத்தையே குறை கூறிக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார்.

இதனை இடைமறித்து பேசிய நிதிஷ் குமார், முன்பு பீகாரில் என்ன இருந்தது? உன் (தேஜஸ்வி யாதவ்) தந்தை உருவாவதற்கு நான்தான் காரணம். உங்கள் சாதியைச் சேர்ந்தவர்கள் கூட நான் ஏன் இதைச் செய்கிறேன் என்று என்னிடம் கேட்டார்கள், ஆனாலும் நான் அவரை ஆதரித்தேன்.
பீகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிக்கப்படுவதை லாலு யாதவ் எதிர்த்தபோது, அது தவறு என்று நான் சொன்னேன். அந்த நேரத்தில் நான் அவரை எதிர்த்தேன் என்று தெரிவித்தார்.
- மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன்
- இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். இவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ஆபிஸர் ஆன் டியூட்டி திரைப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை அறிமுக இயக்குனரான ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். குஞ்சக்கோ போபன் உடன் பிரியாமணி, ஜெகதீஷ் மற்றும் விஷாக் நாயர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை கன்னூர் ஸ்குவாட் புகழ் ராபி வர்கீஸ் ரா, ஜேக்ஸ் பிஜாயின் இசை, மற்றும் படத்தொகுப்பை சமன் சாக்கோ மேற்கொண்டுள்ளனர்.
மலையாளத்தில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் திரைப்படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியிட படக்குழு திட்டமிடுள்ளனர். தெலுங்கு மொழியில் வரும் மார்ச் 7 ஆம் தேதியும் தமிழில் மார்ச் 14 ஆம் தேதியும் திரைப்படம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
- 8-ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை கடற்கரை- எழும்பூர் இடையில் 4-ஆவது வழித்தட இணைப்பு பணிகள் காரணமாக எழும்பூர் ரெயில் நிலைய ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி,
காரைக்குடி- சென்னை எழும்பூர் இடையிலான பல்லவன் விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
8-ஆம் தேதி நெல்லையில் இருந்து புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேரமாக செங்கல்பட்டு- எழும்பூர் வரை ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு ரெயில் நிலையத்துடன் நின்றுவிடும்.
8-ஆம்தேதி புறப்படும் ஐதராபாத்- சென்னை தாம்பரம் சாமினார் எக்ஸ்பிரஸ் சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
மண்டபத்தில் இருந்து 8-ஆம் தேதி இரவு புறப்படும் மண்டபம்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (22662) தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
தூத்துக்குடியில் இருந்து 8-ஆம் தேதி புறப்படும் தூத்துக்குடி- சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மாம்பலம் வரை இயக்கப்படும்.
மண்டபத்தில் இருந்து 8-ஆம் தேதி மாலை புறப்படும் மண்டபம்- சென்னை (16752) எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை தாம்பரம் வரை இயக்கப்படும்.
புதுச்சேரியில் இருந்து 8ஆம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் புதுச்சேரி- சென்னை எழும்பூர் (66052) மெமு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து புறப்படும் வைகை விரைவு ரெயில் மார்ச் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
எழும்பூரில் இருந்து புறப்படும் சேது விரைவு ரெயில் 8-ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
9ஆம் தேதி (66051) சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி புறப்படும் மெமு ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
தாம்பரம்- ஐதராபாத் (12759) சாமினார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 9-ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
- சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
- அங்கு மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றியது.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 10 மேயர் தொகுதிகளையும் கைப்பற்றி பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதைத்
தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின.
இங்கு மொத்தமுள்ள 49 நகராட்சி கவுன்சில் தலைவர் பதவிகளில் 35 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வென்றது. 114 நகர பஞ்சாயத்துகளில் பா.ஜ.க. 81 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும் வென்றது. நகராட்சி வார்டுக்கு நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.
இதற்கிடையே, சத்தீஸ்கரின் பரஸ்வாரா கிராமத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் நேற்று பதவியேற்றனர். இதில் தேர்வான 6 பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், பெண் உறுப்பினர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றது குறித்து விசாரணை நடத்துப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
- தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா.
- கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.
தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் வாகா. இதில் கதாநாயகியாக கன்னட நடிகை ரன்யா ராவ் (31) நடித்திருந்தார். இவர் தற்போது தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் நடிகை ரன்யா ராவ் சுமார் 14.8 கிலோ தங்கத்துடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூரு வந்திறங்கிய அவர் உடலில் அதிகபடியான நகைகளை அணித்திருந்ததை கண்டு சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்ககட்டிகள் இருப்பது கண்டரியப்பட்டது. கடந்த 15 நாட்களில் 4 முறை அவர் துபாய் சென்று வந்துள்ளார்.

இதனை கண்காணித்த அதிகாரிகள் இந்த முறை அவர் வருவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே விமான நிலையத்தில் காத்திருந்து அவரை மடக்கிப்பிடித்து சோதனை செய்து நகைகளை கைப்பற்றினர்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து நடிகை ரன்யா ராவிடம் இருந்த நகை, தங்கக்கட்டி என்று மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நடிகை ரன்யா ராவை கைது செய்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
கடத்தலின் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரியான ரன்யா ராவின் தந்தை கர்நாடகாவில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி வெற்றி பெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
- பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார்.
புதுடெல்லி:
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 264 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி 46-வது ரன்னை கடக்கும்போது சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதில் ஷிகர் தவான் 701 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம்.
- மார்ச் 21-ஆம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டம்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் கடந்த 5 நாட்களாக மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தை தங்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
மேலும், மார்ச் 21-ஆம் தேதி அனைத்து கட்சிக்கும் அழைப்பு விடுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
- ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியானது பேபி அண்ட் பேபி திரைப்படம் .
- ஜெய் அடுத்ததாக அறிமுக இயக்குனரான பாபு விஜய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார்.
ஜெய் நடிப்பில் சமீபத்தில் வெளியானது பேபி அண்ட் பேபி திரைப்படம் . இப்படத்தை பிரதாப் இயக்கினார். ஜெய் உடன் இப்படத்தில் யோகி பாபு, சத்யராஜ், பிரக்யா, மற்றும் பலர் நடித்தனர். திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் ஜெய் அடுத்ததாக அறிமுக இயக்குனரான பாபு விஜய் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை பாபு விஜய் BV Frames நிறுவனத்தின் கீழ் தயாரிக்கவுள்ளது.
விஜய் பாபு இதற்குமுன் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய சர்கார் மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி ஆற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படம் ஒரு ரொமாண்டிக் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் சென்னை, கொடைக்கானல், நெல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கபடவுள்ளது. இதனை குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2023 ஆம் ஆண்டு வெளியான பிரபல இந்தி வெப் சீரிஸானா லஸ்ட் ஸ்டோரீஸ் 2 இல் தம்மனா நடித்திருந்தார்.
- கடைசியாக தம்மனா மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் தமன்னா. இவர் கடந்த சில வருடங்களாக இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். 2023 ஆம் ஆண்டு வெளியான பிரபல இந்தி வெப் சீரிஸான லஸ்ட் ஸ்டோரீஸ் 2 இல் தமன்னா நடித்திருந்தார்.
இதில் உடன் நடித்த இந்தி நடிகர் விஜய் வர்மாவுடம் தமன்னா காதல் வயப்பட்டார். நியூ இயர் சமயத்தில் இருவரும் கோவாவில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து அவர்களது உறவு வெளிச்சத்துக்கு வந்தது.

அதன்பின்னர் வெளிப்படையாக பல நிகழ்ச்சிகளில் சேர்ந்தே வளம் வந்தனர். இடையில், அவர்களின் திருமண திட்டங்கள் பற்றிய செய்திகளும் வெளிவந்தன. ஆனால் இருவரும் சில வாரங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரபல இந்தி சினிமா இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமன்னாவும் விஜய்யும் சில வாரங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டனர் என்று சினிமா வட்டாரம் கூறியதாக தெரிவித்துள்ளது.
ஆனால் அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருப்பார்கள். இருவரும் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதோடு, அடுத்த படங்களுக்காக கடினமாக உழைக்கிறார்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை டெலிட் செய்ததாக கூறப்படுகிறது. கடைசியாக தம்மனா மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்திய அணி வெற்றிபெற 265 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
- இந்திய அணி முதல் 16 ஓவரில் 82 ரன்களை எடுத்துள்ளது.
துபாய்:
சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 73 ரன்னிலும், அலெக்ஸ் கேரி 61 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்தியா சார்பில் ஷமி 3 விக்கெட்டும், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், அக்சர் படேல், பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் இறங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக ஆடினார்.
அணியின் எண்ணிக்கை 30 ஆக இருந்தபோது சுப்மன் கில் 8 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து ரோகித் சர்மா 28 ரன்னில் வெளியேறினார்.
விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து பொறுப்புடன் ஆடினார்.
இந்திய அணி 16 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 82 ரன்களை எடுத்துள்ளது.
- பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது.
- ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
செர்பியா நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கண்ணீர் குண்டுகள், புகைகுண்டுகளை வீசியதால் 3 எம்பிக்கள் காயமடைந்தனர்.
இன்று (மார்ச் 04) கூடிய மக்களவை கூட்டத்தின்போது சேர்பியன் ப்ராக்ரசிவ் கட்சி தலைமயிலான ஆளும் கூட்டணி (SNS) யை எதிர்த்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகங்களுக்கான நிதி அதிகரிப்பு குறித்த வாக்கெடுப்பு இன்று நடைபெற இருந்தது. ஆனால் இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜினாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் எதிர் கட்சி எம்பிக்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடினர். அவர்களுக்கும் அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே மற்ற சில எதிர்கட்சி உறுப்பினர்கள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை மக்களவைக்குள் வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சுமார் 3 எம்பிக்கள் காயமடைந்துள்ளனர் என்றும் ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் சபாநாயகர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன் ரெயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 15 பேர் பலியான விபத்தின் பின்னணியில் உள்ள ஊழலை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். ஆனால் அவரது ராஜிநாமா மக்களவையில் உறுதி செய்யப்படாமல் மற்ற வேலைகளில் ஈடுபட்டதினால் எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
- உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் விழா மற்றும் இஃப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும், ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.
இந்த விழாவில் மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன், கலந்து கொண்டனர்.






