என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    பீகார் மாநிலம் அர்ரா என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நகைக்கடை ஒன்றில் இன்று சினிமா பாணியில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    நகைக்கடை இன்று வழக்கம்போல் காலை கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்துகொண்டிருந்தபோது, திடீரென 6க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் கையில் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்தனர்.

    கெள்ளையர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த நகைக்கடை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர், துப்பாக்கி காட்டி ஊழியர்களை மிரட்டிய கொள்ளையர்கள் நகைக்கடையில் இருந்து சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இதில், கெள்ளையர்கள் 6 பேரில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், கைதானவர்களிடம் இருந்து நகைகள், இருசக்கர வாகனங்கள், 10 தோட்டாக்கள், 2 துப்பாக்கிககளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

    இதற்கிடையே, தப்பியோடிய மற்ற 4 பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    • இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ' அஃகேனம் '
    • படத்தின் முதல் பாடலான மெல்லாலி மெல்லாலி பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

    படத்தின் முதல் பாடலான மெல்லாலி மெல்லாலி பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.

    இந்த நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அக்கேனம் என தலைப்பிடப்பட்ட இந்த பாடலை டிரியா பாண்டியன் மற்றும் டக்கால்டி இணைந்து சண்டி வரிகளில் பாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST
    • இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தெரிகிறது.

    விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று', 'மண்டேலா' போன்ற படங்களை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் எழுதி, இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் 'TEST. இந்தப் படத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இதற்கு முன் சித்தார்த், மாதவன், மீரா ஜாஸ்மின் ஆகியோர் ஆய்த எழுத்து, ரங் தே பசந்தி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் திரைப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இதில் சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும், மாதவன் பயிற்சியாளராகவும் நடித்து உள்ளதாக தெரிகிறது.

    இந்தப் படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலான தி அரேனா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடல் படத்தின் தீம் பாடலைப் போல் அமைந்துள்ளது. இப்பாடல் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு சமர்பணமாக அமைந்துள்ளது. பாடலை சக்திஸ்ரீ கோபாலன் இசையமைத்துள்ளார். பிரபல ராப் பாடகர் யோகி பி இதில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேர் கைது.
    • சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.

    ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 13 பேரை துப்பாக்கி முனையில் இலங்கை கடற்படை செய்து செய்தது.

    சிறைக்காவல் முடிந்து மல்லாகம் நீதிமன்றத்தில் காரைக்கால் மீனவர்கள் 13 பேர் அஜர் ஆகினர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திய இலங்கை நீதிபதி ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் காரைக்கால் மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

    • ரொமான்ஸ் ஜானரில் '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கினார்.
    • படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது.

    வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் "நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, ஈஸ்வரன்" உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

    இவர் தற்போது இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வை சொல்லும் படமாக, ரொமான்ஸ் ஜானரில் '2கே லவ் ஸ்டோரி' என்ற படத்தை இயக்கினார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    இன்றைய இளம் தலைமுறையின் காதல், நட்பு என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

    சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி வெளியீட்டை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் விரைவில் அமேசான் மற்றும் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜூக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.
    • தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    திருவைகுண்டம் அருகே 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் மீது நடத்திய கொலைவெறித் தாக்குதல் சம்பவத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அரியநாயகபுரம் கிராமத்தைச் சார்ந்த 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் தேவேந்திர ராஜ் மீது சாதிவெறியர்கள் நடத்தியுள்ள சாதிய கொலைவெறித் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    சில நாட்களுக்கு முன்னர் கட்டாரிமங்கலத்தில் அரியநாயகபுரம் அணிக்கும் கெட்டியம்மாள்புரம் அணிக்கும் நடைபெற்ற கபடி போட்டியில் அரியநாயகபுரம் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை அரியநாயகபுரம் அணியில் இடம் பெற்றிருந்த தேவேந்திர ராஜ் உள்ளிட்ட அனைவரும் கோப்பையுடன் கொண்டாடியுள்ளனர். இதனைப் பொறுத்துக் கொள்ள இயலாத காழ்ப்புணர்ச்சியால் தான் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என தேவேந்திர ராஜின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

    கெட்டியம்மாள்புரத்தைச் சார்ந்த மூன்று பேர் இன்று பள்ளிக்கு தேர்வு எழுத பேருந்தில் சென்ற மாணவன் தேவேந்திர ராஜை பேருந்திலிருந்து கீழே இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இத்தாக்குதலில் மாணவன் தேவேந்திர ராஜின் இருகைகளிலும் விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. நான்கு விரல்கள் துண்டாகியுள்ளன. அவற்றில் ஒரு விரல் கிடைக்கவில்லை. மற்ற மூன்று விரல்களையும் ஒட்டும் அறுவை சிகிச்சை தற்போது நடைபெற்று வருகிறது. தலையில் ஆறு இடங்களில் வெட்டியுள்ளனர். மண்டைஓடு வரை படுகாயம் பட்டுள்ளது. முதுகிலும் பல இடங்களில் வெட்டுக் காயம் உள்ளது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவன் தேவேந்திர ராஜூக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்கிட வேண்டும்.

    தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிவெறித் தாக்குதல்களும் படுகொலைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இத்தகைய சாதிவெறியாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

    சாதிய வன்கொடுமைகளை தடுத்திடும் வகையில் தமிழக அரசு இதற்கென காவல்துறையில் தனியே ஒரு நுண்ணறிவுப் பிரிவை உருவாக்கிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

    என திருமாவளவன் கூறியுள்ளார்.

    • மணிப்பூர் மாநில கலவரத்துக்கு பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ஆடியோ வெளியானது.
    • இதனைத் தொடர்ந்து பைரன் சிங் ராஜினாமா செய்தார். கடந்த மாதம் 13-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான ஒப்புதல் கோரும் சட்டப்பூர்வ தீர்மானத்தின் மீது மக்களவையில் ஒரு மணி நேர விவாதம் நடைபெறும் என மக்களவை சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற மக்களவை அலுவல் ஆலோசனைக் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், வருகிற 13-ந்தேதி ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்களவை கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அதை ஈடுகட்டும் வகையில் மார்ச் 29-ந்தேதி சனிக்கிழமை அவையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரெயில்வே குறித்த விவாதத்திற்கு 10 மணிநேரமும், ஜல் சக்தி அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் குறித்த விவாதங்களுக்கு தலா ஒரு நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி மசோதா குறித்த விவாதத்திற்கு 8 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி- குகி ஆகிய இரண்டு பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின்னர் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலத்திலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதற்கிடையே மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின. இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்தது.

    ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குகி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் கடந்த மாதம் 9-ந்தேதி ராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 13-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவதாக 13-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

    • சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
    • நடிக்கும் கதாப்பாத்திரங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.

    நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா. சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் நடிகை அபினயா விரைவில் அவரது நீண்ட நாள் காதலனை திருமண செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    யார் அந்த காதலன் என தெரியவில்லை? அனைவரும் பெரும்  எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டுள்ளனர்.

    இவர் பேச்சு மற்றும் செவி திறன் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இவர் நடிக்கும் கதாப்பாத்திரங்களில் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார்.

    தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உக்ரைன்- ரஷியா இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
    • ஒருவேளை போர் நிறுத்தம் ஏற்பட்டால் அதன்பின் ரஷியா மீண்டும் படையெடுத்தால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென படையெடுத்தது. தொடக்கத்தில் ரஷியா எல்லையில் உள்ள பகுதிகளை பிடித்தது. பின்னர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன பதிலடி கொடுத்தது. இதனால் பெரும்பாலான பகுதியில் இருந்து ரஷிய ராணுவம் பின்வாங்கியது.

    கடந்த 4 ஆண்டுகளாக இரு நாடுளுக்கும் இடையில் இந்த சண்டை நீடித்து வருகிறது. இரு நாடுகளும் ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்த நிலையில், மிகப்பெரிய அளவில் பொருட்சேதத்தையும் எதிர்கொண்டுள்ளன. உலகப் பொருளாதாரத்திற்கு ரஷியா-உக்ரைன் சண்டை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதிவி ஏற்றார். அதன்பின் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார். விரைவில் உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.

    இதற்கிடையே வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது டொனால்டு டிரம்ப்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்கும் உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார்.

    அதேவேளையில் பிரான்ஸ் ராணுவ உதவியை அதிகரிக்க முடிவு செய்தது. தற்போது போர் நிறுத்தம் ஏற்பட்டாலும், பிற்காலத்தில் ரஷியா மீண்டும் படையெடுக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தொடர்பான அச்சம் உக்ரைன் மற்றும் உலக நாடுகளுக்கு உள்ளது.

    இதனால் ரஷியா போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஒருவேளை படையெடுத்தால், உக்ரைனுக்கு உதவுவதற்காக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்க திட்டமிட்டுள்ளன.

    இது தொடர்பாக நாளை பாரீஸ் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதில் 30 நாட்டிற்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என பிரான்ஸ் ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டத்தின் முதற்பகுதியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து விவரிக்கப்படும். அதன்பின் மற்ற நாடுகளின் பாதுகாப்புப்டையில் பங்கேற்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

    திடீரென ரஷியா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் ஒரு சில மணி நேரத்திற்குள் அல்லது ஓரிடு நாட்களில் உக்ரைனுக்கு ராணுவ தளவாடங்களை அனுப்புவதுதான் பாதுகாப்புப் படையின் முதன்மையான நோக்கமாகும்.

    இந்தப் படையில் நாடுகள் பங்கேற்குமா? என்பது குறித்த இறுதி முடிவு அரசியல் மட்டத்தில், அரசாங்கத் தலைவர்களால் எடுக்கப்படும்.

    • என் பின்னால் என் கணவர் தான் உள்ளார். அவரின் உறுதுணையால் தான் அனைத்தும் என்னால் சாதிக்க முடிகிறது.
    • ஊடகம், யூடியூப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி தண்டிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாடகி கல்பனா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் தூக்க மாத்திரைகள் உட்கொண்ட தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் தவறானது. நான் தற்கொலைக்கு முயலவில்லை, அனைவரும் தவறாக பேசுகிறார்கள்.

    எனக்கும் கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் முற்றுலும் தவறானது.

    எனக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலம் சரியில்லை. மகா சிவராத்திரி வரை மிகவும் சிரமப்பட்டு தான் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.

    என் பின்னால் என் கணவர் தான் உள்ளார். அவரின் உறுதுணையால் தான் அனைத்தும் என்னால் சாதிக்க முடிகிறது.

    உடல்நிலை பாதிப்பு மற்றும் மன அழுத்தம் காரணமாக மாத்திரைகள் எடுத்து கொண்டேன். அது அதிகளவில் மாத்திரை எடுத்துக் கொண்டதால் ஓவர் டோசேஜ் ஆகி மயக்க நிலைக்கு சென்றுவிட்டேன்.

    என் கணவர் தான் காவல்துறையினர், மருத்துவரை அழைத்து வர செய்தார், என்னை காப்பாற்றினார்.

    ஆனால், என்னை பற்றியும், எனது கணவர் பற்றியும் தவறான செய்திகளை பரப்புகின்றனர்.

    பிரபலம் என்றால், சேற்றை வாரி அடிப்படி நியாயமா ?

    ஊடகம், யூடியூப்பில் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி தண்டிக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.
    • நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வில் பேசிய தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று தெரிவித்தார்.

    மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் "தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்" என குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    உலகின் மிக மூத்ததொல்குடி நாகரிகத்திற்கு சொந்தக்காரர்களான நம்மை பார்த்து நாகரிகமில்லாதவர்கள் என்று தரம் தாழ்ந்து நாடாளுமன்றத்திலேயே தமது எரிச்சலைக் கக்கியிருக்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

    தமிழ்நாட்டின் எம்.பி.க்களை பார்த்து அப்படி பேசுவது, அவர்களை வாக்களித்து தேர்ந்தெடுத்த ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொச்சைப்படுத்துவதாக தான் அர்த்தம்.

    திராவிட நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பும் அவருக்கு தெரியாது. நம் நாகரிகம் பற்றிய வரலாறு தெரியவில்லை என்றாலும் கூட பரவாயில்லை, நம்முடைய கடந்த ஒரு நூற்றாண்டு கால சமூக - அரசியல் வரலாற்றை தெரிந்திருந்தாலும் இதுபோன்று எல்லைமீறி அவர் பேசியிருக்க மாட்டார்.

    டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ அவர் நமக்கு "மேல்" என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறார்.

    தேசிய கல்விக் கொள்கையை அப்படியே முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது, மிரட்டலுக்கு நாம் பணியவில்லை என்றால் கோபத்தில் முறைதவறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல.

    நம் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்கு ஒன்றிய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் மொழியோடும் கல்வியோடும் உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்.

    கண்டிக்கிறோம், எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.

    • சிம்புவின் 51-வது படத்தின் அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
    • இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார்.

    சிம்புவின் 51-வது படத்தின்  அறிவிப்பு போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இவர் இப்படத்தில் காட் ஆஃப் லவ் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிராகன் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

    அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டிராகன். இத்திரைப்படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டடித்துள்ளது.

    டிராகன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியின் வெற்றியை தொடர்ந்து இந்தி மொழியிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் STR 51 படத்தை பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார் " படப்பிடிப்பு பணிகள் வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும். திரைப்படம் கண்டிப்பாக அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும். டிராகன் பட வெற்றியை கொண்டாடிவிட்டு அந்த படத்தின் வேலைகளை தொடங்கவுள்ளேன்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×