search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide try"

    • ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
    • ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் இடலாக்குடி புத்தன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெய்குமார் (வயது 26). திருமணமான இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.

    இவருக்கும் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஜெய்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஜெய்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே வந்துள்ளார்.

    அவர் கள்ளக்காதலி வீட்டுக்குத் தான் செல்வார் என கருதிய அவரது மனைவி, உறவினர் ஒருவர் துணையுடன் ஜெய்குமாரை பின் தொடர்ந்து வந்தார். கள்ளக்காதலி வீட்டுக்கு ஜெய்குமார் வந்த போது, திடீரென அவர் முன்பு மனைவி வந்துள்ளார். இதனால் ஜெய்குமார் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெய்குமாரை, மனைவியும் உறவினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் ஜெய்குமார் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வரவேற்பாளராக இருந்த அஜய் (21) விசாரணை மேற்கொண்டார். அப்போது திடீரென ஜெய்குமார், போலீஸ் நிலையத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார்.

    இதனை தடுக்க முயன்ற அஜய் மீதும் கண்ணாடியால் குத்தி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஜெய்குமார், தனது உடலிலும் கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.

    சம்பவம் குறித்து போலீஸ் நிலைய வரவேற்பாளர் அஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்குமார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.
    • உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டி மாவட்டம், ராஜம்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    வேலைக்குச் சென்ற சந்தோஷ் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    போதி ரெட்டி பள்ளி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை சந்தோஷ் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    சந்தோஷ் தங்களை வீடியோ எடுப்பதை கண்ட போலீசார் அவரது செல்போனை பறித்தனர். சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்று பாட்டிலில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு வந்தார்.

    போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

    உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

    அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சந்தோஷ் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இதனைக் கண்டு பதறிய போலீசார் சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சந்தோஷ் உடல் 50 சதவீதம் கருகி உள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வாலிபர் உடலில் தீயுடன் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

    இன்ஸ்பெக்டர் தரக்குறைவாக திட்டியதால் போலீஸ் நிலையத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு தேனியை சேர்ந்த சுபகுமார் என்பவர் இன்ஸ்பெக்டராக உள்ளார். இந்த காவல் நிலையத்தில் முருகேசன் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இன்ஸ்பெக்டர் அனைத்து காவலர்களையும் ஒருமையில் திட்டுவதும், தரக்குறைவாக பேசி வருவதாவும் தொடர்ந்து புகார்கள் வந்தன. சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகாதவார்த்தைகளால் இன்ஸ்பெக்டர் திட்டி உள்ளார். இதனால் முருகேசன் மிகுந்த வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இன்று காலை பணிக்கு வந்த முருகேசன் போலீஸ் நிலையத்தில் இருந்த நோட்டீஸ் போர்ட்டில் தனது உள்ள குமுறலை வெளிப்படுத்தி எழுதினார்.

    இன்ஸ்பெக்டர் அவதூறாக பேசியதால் தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக எழுதி வைத்து விட்டு மாடிக்கு சென்றார். மற்ற போலீசார் நோட்டீஸ் போர்ட்டில் வேறு ஏதோ எழுதுகிறார் என்று இருந்தனர். பின்னர் அங்கு வந்து பார்த்தபோது அவர் எழுதிய வாசகங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக மாடிக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்கிருந்த ஒரு அறையில் முருகேசன் தூக்குபோட்டு தற்கொலை செய்ய முயன்றார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கீழே கொண்டு வந்தனர்.

    பின்னர் இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் கொடைக்கானல் டி.எஸ்.பி. விசாரணை நடத்த விரைந்துள்ளார்.

    போலீஸ் நிலையத்திலேயே சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×