என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arun Pandian"

    • தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன்.
    • இது தொடர்பான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    தமிழ் சினிமாவில் உள்ள மூத்த நடிகர்களில் ஒருவர் அருண் பாண்டியன். 80 மற்றும் 90களில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார், 2000 களுக்குப் பின்னர் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகினார்.

    அதற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். சில மாதங்களுக்கு முன் டிமான்ட்டி காலனி 2 படத்தில் நடித்து இருந்தார். தற்பொழுது அவரும் அவர் மகள் கீர்த்தி பாண்டியனும் இணைந்து நடித்த அக்கேனம் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

    இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி 60வது கல்யாண விழா கொண்டாடப் பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    மாலையும் கழுத்துமாக அருண் பாண்டியன் மற்றும் அவரது மனைவி விஜயா பாண்டியன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது

    கீர்த்தி பாண்டியனுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'அஃகேனம்
    • இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் கீர்த்தி பாண்டியன் ஒரு டாக்சி டிரைவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜுலை 4 ஆம் தேதி வெளியாகிறது.

    பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.

    • நடிகர் அசோக் செல்வன் வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    இந்நிலையில், நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகையை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    இதற்கு முன்பு ஒரு நேர்காணலில் அசோக் செல்வன் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட்டாகாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ' அஃகேனம் '
    • படத்தின் முதல் பாடலான மெல்லாலி மெல்லாலி பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் - என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் மற்றும் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'அஃகேனம் ' என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இயக்குநர் உதய் கே இயக்கத்தில் உருவாகி வரும் ' அஃகேனம் ' எனும் திரைப்படத்தில் அருண்பாண்டியன், கீர்த்தி பாண்டியன், பிரவீண் ராஜா , ஆதித்யா ஷிவ்பிங்க், ரமேஷ் திலக், ஜி. எம். சுந்தர், ஆதித்யா மேனன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    விக்னேஷ் கோவிந்தராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை திவேத்தியன் கவனிக்க, கலை இயக்கத்தை ராஜா மேற்கொண்டிருக்கிறார். அத்துடன் இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் 'அஃகேனம்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

    படத்தின் முதல் பாடலான மெல்லாலி மெல்லாலி பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

    பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ & பி குரூப்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன் தயாரித்திருக்கிறார்.

    இந்த நிலையில் படத்தின் டைட்டில் டிராக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அக்கேனம் என தலைப்பிடப்பட்ட இந்த பாடலை டிரியா பாண்டியன் மற்றும் டக்கால்டி இணைந்து சண்டி வரிகளில் பாடியுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் அருண் பாண்டியனின் மகள், புதிய படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார். #ArunPandian #Keerthi
    நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி, கனா புகழ் தர்ஷன் நடிக்கும் பேண்டஸி படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார். 

    இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, "பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை" என்கிறார்.

    மேலும், "நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்" என்றார். 



    இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது தந்தையான அருண் பாண்டியனுடன் விநியோகத் தொழிலில் உதவியாக இருந்தார். சிங்கப்பூரில் சொந்தமாக விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    கீர்த்தி பாண்டியன் நடிப்பு திறனையும் தாண்டி, சிறந்த சல்சா மற்றும் பாலே நடன கலைஞராகவும் உள்ளார். 
    ×