என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இத்துடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப் டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும்.
விவோ நிறுவனம் தனது T4 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர், 90W அதிவேக சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி மற்றும் 6.77-இன்ச் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. புகைப்படங்கள் எடுக்க 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா கொண்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஜெமினி லைவ், AI கேப்ஷன்ஸ் மற்றும் AI இமேஜ் எக்ஸ்பாண்டர் போன்ற AI அம்சங்களுடன் வருகிறது.
அம்சங்கள்:
விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் (1,080×2,392 பிக்சல்கள்) AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 12GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 இல் இயங்குகிறது, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனில் OIS உடன் 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் உடன் 50MP சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2MP பொக்கே லென்ஸ் ஆகியவை அடங்கும். இத்துடன் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப் டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 மற்றும் IP69 சான்று பெற்றிருக்கிறது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 27,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 31,999 விலையில் கிடைக்கின்றன.
புதிய விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளேஸ் கோல்ட் மற்றும் நைட்ரோ ப்ளூ வண்ணங்களில் விற்கப்படுகிறது.
- உலகம் முழுவதும் என்னை பிரபலமாக்கிய தெருநாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
- இந்த வழக்கை எனக்கு ஒதுக்கியதற்காக நமது தலைமை நீதிபதிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இந்நிலையில், தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதித்த நீதிபதிகளில் ஒருவரான விக்ரம் நாத், தெருநாய் வழக்கு தன்னை உலகம் முழுவதும் பிரபலமடைய வைத்துள்ளதாக தெரிவித்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையம் ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய நீதிபதி நாத், "நீண்ட காலமாக, நான் எனது சிறிய வேலைகளுக்காக சட்டத்துறையில் அறியப்பட்டிருக்கிறேன், ஆனால் இந்த நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் அளித்ததற்காக தெருநாய்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மேலும் இந்த வழக்கை எனக்கு ஒதுக்கியதற்காக நமது தலைமை நீதிபதிக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
2027 இல் இந்தியாவின் தலைமை நீதிபதியாக விக்ரம் நாத் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி கோயம்பத்தூர், கொச்சி, ஐதராபாத் என பல இடங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க இருக்கிறது.
சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் கூறியதாவது " நான் கத்தி திரைப்படத்திற்கு பிறகு விஜய் சாரை யாரும் பார்க்காத ஒரு தோற்றத்தில் திரைப்படம் இயக்க நினைத்தேன். ஒரு இலங்கை அகதி ஊர் ஊராக தப்பித்து தப்பித்து செல்கிறான் போன்ற ஒன் லைன் அது முதலில் விஜய் ஒப்புக்கொண்டார் அதன் பிறகு அரசியல் ரீதியாக ஒரு கதைக்களம் ரெடி பண்ணுங்க என கூறினார். அப்படி தான் சர்கார் திரைப்படம் உருவானது"
- டெஸ்லாவின் மினிமலிஸ்ட் டிசைனை வழங்குவதோடு பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகின்றன.
- புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" டூயல் மோட்டார் AWD அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
டெஸ்லா நிறுவனம் முற்றிலும் புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் டெஸ்லா நிறுவனம் தனது அதிகம் விற்பனையாகும் மின்சார SUVயின் உயர் செயல்திறன் மாடலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. ஜூனிபர் அப்டேட் என்றும் அழைக்கப்படும் புதிய வேரியண்ட், இப்போது டெஸ்லாவின் உலகளாவிய போர்ட்ஃபோலியோவில் புதுப்பிக்கப்பட்ட RWD மற்றும் நீண்ட தூர வேரியண்ட்களின் மேல் அமர்ந்திருக்கிறது.
ஸ்டான்டர்டு மாடல்களுடன் ஒப்பிடும்போது, "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள், கார்பன் ஃபைபரால் ஆன பின்புற ஸ்பாய்லர், பிரத்யேகமாக 21-இன்ச் அராக்நிட் 2.0 அலாய் வீல்கள் மற்றும் சிவப்பு நிற பிரேக் காலிப்பர்கள் கொண்ட வெளிப்புற தொகுப்பைப் பெறுகிறது. இது காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்துகிறது. குறைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட காற்றியக்கவியல் அதன் செயல்திறன் சார்ந்த நிலைப்பாட்டை மேலும் வலியுறுத்துகின்றன.

உள்ளே, கார்பன் ஃபைபர் அசென்ட்கள், அல்ட்ரா HD தெளிவுத்திறனுடன் கூடிய பெரிய 16-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே மற்றும் ஹீட்டிங், கூலிங் வசதியுடன் எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் முன்புற இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை டெஸ்லாவின் மினிமலிஸ்ட் டிசைனை வழங்குவதோடு பிரீமியம் அனுபவத்தையும் வழங்குகின்றன.
புதிய "மாடல் Y பெர்ஃபார்மன்ஸ்" டூயல் மோட்டார் AWD அமைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இது சுமார் 460bhp பவர் மற்றும் 751Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இது SUV மணிக்கு 0–100 கிலோமீட்டர்கள் வேகத்தை மூன்று வினாடிகளுக்குள் எட்டிவிடும். இந்த கார் அதன் பிரிவில் வேகமான மாடல்களில் ஒன்றாகும்.
- இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது.
- தற்போதைய மாடலின் ஆக்ரோஷமான வடிவமைப்பை முன்னோக்கி கொண்டு செல்கின்றன.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அதன் 450 அபெக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு குரூயிஸ் கன்ட்ரோல் வசதியை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அம்சம் 450 S, 450 X மற்றும் 450 அபெக்ஸ் உள்ளிட்ட 450 சீரிசில் உள்ள அனைத்து மாடல்களுடனும் இணக்கமாக உள்ளது. இந்த அறிவிப்பு ஏத்தர் சமூக தின கொண்டாட்டத்தின் போது பகிரப்பட்ட பல அறிவிப்புகளின் ஒரு பகுதியாகும்.
"இன்ஃபினைட் க்ரூஸ்" என்று அழைக்கப்படும் இந்த அம்சம், ஹேண்டில்பார்களின் வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு சுவிட்சால் இயக்கப்படுகிறது. அனைத்து வேக வரம்புகளிலும் செயல்படும் திறன் காரணமாக இது தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது, அதே நேரத்தில் குறைந்த வரம்பு மணிக்கு 10 கிலோமீட்டர் ஆகும். மேலும், நிறுத்துதல் மற்றும் செல்லுதல் போக்குவரத்தில் கூட இந்த அமைப்பு பயணக் கட்டுப்பாட்டை அணைக்காது. அதற்கு பதிலாக, அது ஒரு கணம் நின்று, ஸ்கூட்டர் மீண்டும் வேகத்தைப் பிடித்தவுடன் மீண்டும் தொடங்குகிறது.
பயணக் கட்டுப்பாட்டின் திறன்களைப் பயன்படுத்தி, ஏத்தர் 450 அபெக்ஸ் ஹில் கன்ட்ரோல் வசதியையும் (ஏறுவதற்கும் இறங்குவதற்கும்) பெறுகிறது. டிராக்ஷன் கண்ட்ரோல் அம்சம் மட்டுமின்றி, இந்த மாடல் "கிரால் கண்ட்ரோல்" வசதியையும் வழங்குகிறது. இது சாலைக்கு வெளியே உள்ள சூழ்நிலைகளிலும் பயணக் கட்டுப்பாட்டை செயல்படுத்துகிறது. இது மணிக்கு 10 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இவை அனைத்தையும் கொண்டு, தினசரி பயணத்தின் போது சவாரி செய்வதை எளிதாக்குவதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
குரூயிஸ் கண்ட்ரோல் வசதியை தவிர, ஏத்தர் 450 அபெக்ஸ் அதே நிலையில் உள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை, இது 7-இன்ச் TFT தொடுதிரை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், இழுவைக் கட்டுப்பாடு, மேஜிக் ட்விஸ்ட் மற்றும் பலவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, வடிவமைப்பு விவரங்கள் அப்படியே உள்ளன, தற்போதைய மாடலின் ஆக்ரோஷமான வடிவமைப்பை முன்னோக்கி கொண்டு செல்கின்றன.
ஏத்தர் 450 அபெக்ஸ் 26 Nm டார்க் வெளிப்படுத்தும் 7.0 kW மின்சார மோட்டாரில் இருந்து சக்தியைப் பெறுகிறது. இந்த மோட்டார் 3.7 kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்டுள்ளது, இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 157 கிலோமீட்டர் வரை செல்லும். இதை 5 மணி நேரம் 45 நிமிடங்களில் 0-100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
- அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.
- டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.
இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் டி20 போட்டிகளில் 14,000 ரன்கள் குவித்த 3வது வீரர் என்ற சாதனையை படைத்தார்
அண்மையில் இந்த மைல்கல்லை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பொல்லார்ட் எட்டியிருந்தார்.
டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 14,562 ரன்களுடன் கெய்ல் முதலிடத்தில் உள்ளார்.

- சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது.
- விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.
எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில், சென்னையின் சில இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு மேகவெடிப்பே காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மணலி, விம்கோ நகர், கொரட்டூர் ஆகிய இடங்களில் நள்ளிரவு, மேகவெடிப்பால் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விம்கோ நகர் பகுதியில் 1 மணி நேரத்தில் 16 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் ருக்மிணி கோயம்பத்தூர், கொச்சி, ஐதராபாத் என பல இடங்களில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்க இருக்கிறது.
- மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்தது.
- அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
கேரளா மாநிலம் எர்ணாகுளம், கோட்டப்பாடியில் இரவு நேரத்தில் ஒரு காட்டு யானை வீட்டுக் கிணற்றில் விழுந்தது.
மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் கிணற்றில் யானை விழுந்ததால் அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை மீட்க போராடி வருகின்றனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சிவா மனசுல சக்தி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டானது. மேலும் திரைப்படமும் ப்ளாக்ப்ஸ்டர் திரைப்படமாக உருவானது.
படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் பலரின் மனதில் இருக்கும். மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன், தெரியல மச்சி, அவ போய் 6 மாசம் ஆகுது போன்ற வசனங்கள் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அப்படத்திற்கு பிறகு ஜீவாவும் ராஜேஷும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் இந்த மெகா வெற்றி கூட்டணி 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைகின்றனர். ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.
- மதுரையில் வருகிற 4-ந்தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை:
கடந்த ஜூலை 14-ந்தேதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் மதுரையில் வருகிற 4-ந்தேதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிகாரப்பூர்வமாக அந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "14-07-2025 அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 04-09-2025 அன்று மதுரையில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்திற்கு குமாரசம்பவம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தை இசையை அச்சு ராஜமணி மேற்கொள்ள, ஒளிப்பதிவு ஜெகதீஷ் செய்துள்ளார்.
இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம தயாரித்துள்ளது. இதற்கு முன் இந்த நிறுவனம் யாத்திசை திரைப்படத்தை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.






