search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajesh M"

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன்.
    • இதைத் தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார்.

    இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில், ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு உள்ளது.


    ஜெ.ஆர்.30 படக்குழு

    இதைத்தொடர்ந்து, இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி புதிய படத்தில் நடிக்கிறார். ஜெ.ஆர்.30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் இணைந்துள்ளார். மேலும், இதில் நட்டி, வி.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஜெ.ஆர்.30 படக்குழு

    இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில், ஜெயம் ரவி நடிக்கும் 30-வது படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதன் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இப்படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

    ‘வேலைக்காரன்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.



    சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதில் நயன்தாரா பேசும் ‘லோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது’ என்ற வசனம் வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. சிவகார்த்திகேயன் - நயன்தாராவுக்கும் இடையே நடக்கும் மோதலை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். 

    இப்படம் மே மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. #Sivakarthikeyan #MrLocal #Nayanthara
    சீமராஜா படத்தை முடித்து அடுத்த படத்தில் பிசியாகி இருக்கும் சிவகார்த்திகேயனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Sivakarthikeyan
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் சீமராஜா படம் வருகிற செப்டம்பரில் ரிலீசாக இருக்கிறது. 

    சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கதையிலும், ராஜேஷ் இயக்கத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இரு படங்களின் படப்பிடிப்பும் அடுத்தடுத்து துவங்கிய நிலையில், படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில், சமீபத்தில் கோர்ட் அணிந்து தாடி, மீசையுடன் தோற்றமளித்த புகைப்படம் ஒன்றை சிவகார்த்திகேயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் தனது மற்றொரு கூலிங் கிளாஸ் அணிந்தபடியான மற்றொரு தோற்றத்தை சிவகார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரவிக்குமார் படத்தில் சிவகார்த்திகேயன் விஞ்ஞானியாக நடிப்பதால், அந்த படத்திற்காக எடுக்கப்பட்டதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். #Sivakarthikeyan

    ×