என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
- தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர்.
தேர்தல் ஆணைய கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்க கோரி விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், அனைத்துக்கட்சி கூட்டங்களுக்கு தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் அமைப்பில் முக்கிய பங்குதாரர்.
பதிவு பெற்ற கட்சி என்ற அடிப்படையில் தவெகவிற்கும் அழைப்பு விடுக்க வேண்டும்.
ஜனநாயக நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு குடிமகனின் குரலையும் தவெக பதிவு செய்ய விரும்புகிறது என தேர்தல் ஆணையத்திற்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
- இணைய தளம் வழியாக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி. பி.எஸ். இடங்களை நிரப்ப 3 கட்டமாக கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் 400 எம்.பி.பி.எஸ். இடங்கள் இன்னும் காலியாக இருக்கின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லுரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 58 நிரப்பப்படாமல் உள்ளன. நீலகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லுரிகளில் தலா ஒரு எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு முடிவுகள் வெளியாக தாமதம் ஆவதால் சிறப்பு கலந்தாய்வு தேதி மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்வதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அவகாசம் இன்று மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இடங்கள் ஒதுக்கீட்டு நடைமுறை நாளை (16-ந்தேதி) இறுதி செய்யப்பட்டு 17-ந்தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்கக மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது. இணைய தளம் வழியாக ஒதுக்கீட்டு ஆணைகளை பதிவிறக்கம் செய்து கொண்டு வருகிற 20-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் அரசு நிர்ணயித்துள்ளதை விட அதிகமாக வசூலிப்பதால் புகார் எழுந்துள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கட்டண குழுவிடம் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரதமர் மோடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
- கோவைக்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
கோவை:
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 19-ந்தேதி கோவை வருகிறார். கோவை கொடிசியாவில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாயம் குறித்த மாநாடு நடக்கிறது.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக அவர் வருகிற 19-ந் தேதி கர்நாடக மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை வர உள்ளார். பின்னர் கொடிசியா செல்லும் அவர் இயற்கை விவசாய மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
மாநாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரம் இயற்கை விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 இயற்கை வேளாண் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்
கோவைக்கு வரும் பிரதமருக்கு பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பா.ஜ.கவினர் செய்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி கோவைக்கு வர உள்ளார். அன்றைய தினம் அவர் கோவை மத்திய சிறைச்சாலை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை திறந்து வைக்கிறார்.
கோவைக்கு வரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் தயாராகி வருகிறார்கள்.
ஒருவார கால இடைவெளியில் அடுத்தடுத்து பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கோவைக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீசார் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இதில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அதேபோன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க கூடிய நிகழ்ச்சி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா பகுதி முழுவதையும் போலீசார் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்த உள்ளனர். மேலும் பிரதமர் மோடி வந்து செல்லும் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது.
- அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர்.
ஆஷ்லே மேடிசன் யூகோவ் உடன் இணைந்து நடத்திய புதிய சர்வதேச ஆய்வில், பத்து பேரில் நான்கு பேர் இந்தியர்கள் ஒரு சக ஊழியருடன் டேட்டிங் செய்திருக்கிறார்கள் அல்லது தற்போது டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, மெக்சிகோ மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 11 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, 13,581 வயதானவர்களையும் உள்ளடக்கியது. மேலும் பணியிடத்தில் காதலை ஒப்புக்கொள்ளும் நபர்களை பொறுத்தவரை உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மெக்சிகோ முன்னணியில் உள்ளது. ஆய்வில் 43 சதவீத பேர் சக ஊழியருடன் காதல் கொண்டிருந்ததாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் இந்தியா 40 சதவீத பேர் நெருக்கமாக உள்ளனர். தொழில்முறை எல்லைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், பணியிட உறவுகள் இந்தியாவில் நவீன அலுவலக கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க பகுதியாகவே உள்ளன என்பதை கண்டுபிடிப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
பெண்களை விட (36%) ஆண்கள் (51%) சக ஊழியரை டேட்டிங் செய்ததற்கான வாய்ப்புகள் அதிகம். தொழில்முறை விளைவுகளுக்கு பயந்து அலுவலக உறவுகளைத் தவிர்ப்பதாக 29% பெண்கள் கூறியுள்ளனர். ஆண்கள் 27% தனிப்பட்ட விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது 26% பெண்கள் கவலைப்படுகின்றனர்.
இளைஞர்கள் குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்கள், மிகவும் எச்சரிக்கையுடன் உள்ளனர். 34% பேர் அத்தகைய உறவுகள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்து கவலை தெரிவித்தனர். இது இளைஞர்களிடையே வளர்ந்து வரும் தொழில்முறை உணர்வு மற்றும் எல்லை விழிப்புணர்வு ஆகியவற்றைக் குறிக்கிறது.
இந்தியாவின் உயர் தரவரிசை, சமூக மதிப்புகள் மாறி வருவதாலும், பாரம்பரியமற்ற உறவுகளை நோக்கிய வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதாலும் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
திருமணமானவர்களுக்கான டேட்டிங் செயலியான க்ளீடனின் மற்றொரு ஆய்வில், 35% இந்தியர்கள் தற்போது வெளிப்படையான உறவுகளில் இருப்பதாகவும், 41% பேர் தங்கள் துணை பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் போக்கு பெருநகரங்களுக்கு அப்பாலும் பரவியுள்ளது. தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் போன்ற நகரங்கள் திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்களில் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
பணியிட காதல்கள் சாதாரணமாகி வரும் நிலையில், அவை ஆர்வ மோதல்கள் முதல் தொழில்முறை அபாயங்கள் வரை இன்னும் சவால்களைக் கொண்டுள்ளன.
இந்தியாவின் வளர்ந்து வரும் உறவு கலாச்சாரம், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்கும் இடையிலான கோட்டை எவ்வாறு தொடர்ந்து மங்கலாக்குகிறது, வேலையில் காதலை பொதுவானதாகவும் சிக்கலானதாகவும் ஆக்குகிறது என்பதை இந்த ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
- சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர்.
- சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
சென்னை:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த பணிகளை கண்டித்து த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவின் பேரில், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வழிகாட்டுதலின் பேரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு அனுமதி கேட்டு த.வெ.க.வில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் போலீசாரிடம் முறைப்படி கடிதம் கொடுத்து உள்ளனர்.
சென்னையில் கட்சி ரீதியாக தமிழக வெற்றிக் கழகத்துக்கு 13 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஆனால் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இடவசதி போதாது. எனவே அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்து உள்ளனர். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம், சிவானந்தா சாலை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்யுமாறு கூறினார்கள்.
அதன்படி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு கொடுத்தனர். ஆனால் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து சென்னை சிவானந்தா சாலையில் நாளை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மாவட்ட செயலாளர்கள் தி.நகர் க.அப்புனு, அம்பத்தூர் பால முருகன், இ.சி.ஆர்.சரவணன், பூக்கடை குமார், பழனி, கட்பீஸ் விஜய், சபரிநாதன், தாமு உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரள்கிறார்கள்.
பின்னர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
- செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது.
- ஏழை ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்?
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி உயர்த்தப்பட்டன. அதன்படி ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணமாக 1.8 கி.மீக்கு 25 ரூபாயும், அதன் பின்னர் ஒரு கிலோ மீட்டருக்கு 12 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் 12 ஆண்டுகள் நிறைவடைந்து 13-ம் ஆண்டு நடைபெற்று வரும் நிலையில், இன்று வரை கட்டணம் உயர்த்தப்படவில்லை.
கடைசியாக கட்டணம் உயர்த்தப்பட்ட நாளில் இருந்து இன்று வரை பெட்ரோல், டீசல் விலை இரு மடங்காக உயர்ந்து விட்டது; காப்பீடு, உரிமம் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்கள் கணிசமாக அதிகரித்து விட்டன. வாகனங்களின் வயர்கள், பேட்டரிகள் உள்ளிட்ட உதிரிபாகங்களின் விலைகள் 2 முதல் 3 மடங்கு அதிகரித்து விட்டன. இதனால் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்து விட்டன. ஆனால், அதற்கு இணையாக வாகன வாடகை உயர்த்தப்படாததால், அவற்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் ஏழை ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது.
செலவுக்கு ஏற்ற வருவாய் இல்லாததால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் தினமும் 15 மணி நேரம் உழைக்க வேண்டியுள்ளது.
எரிபொருள் விலை உயர்வு, பிற கட்டணங்களின் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களின் குறைந்தபட்சக் கட்டணத்தை ரூ.50 ஆகவும், அதன்பின், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.25 வீதமும் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதுவரை 10 மாதங்களாகிவிட்டன. சட்டப்பேரவைக் கூட்டங்கள், அமைச்சரவைக் கூட்டங்கள், அரசு விழாக்கள் என பல தருணங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்தித்துள்ளார். ஆனால், வாடகை ஊர்திக் கட்டணங்கள் மட்டும் இன்னும் உயரவில்லை; ஓட்டுனர்கள் துயரமும் தீரவில்லை.
ஏழை ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய ஆட்டோ கட்டணத்தை மட்டும் உயர்த்த மறுப்பது ஏன்?
இனியாவது இந்தப் போக்கை கைவிட்டு, மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ-டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுகின்றனர்.
- தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க அரசு படிப்படியாக செய்யும்.
சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதலமைச்சர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
* ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை.
* சென்னையை தூய்மையாக வைத்திருக்க காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள்.
* ஊரெல்லாம் உறங்கிய பின்னர், உறங்காமல் பணி செய்பவர்கள் தூய்மை பணியாளர்கள்.
* தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை.
* தூய்மை பணியாளர்களின் சுயமரியாதையை காக்கவே உணவு வழங்கும் திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
* வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர தூய்மை பணியாளர்கள் உதவுகின்றனர்.
* தூய்மை பணியாளர்களுக்கு அனைவரும் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும்.
* தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தையும் தி.மு.க அரசு படிப்படியாக செய்யும்.
* சென்னையில் 200 வார்டுகளிலும் ஓய்வறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
- ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
மண்டபம்:
வங்கக்கடலில் பலத்த சூறைக்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுபடகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
அதன்படி இன்று ராமேசுவரம், மண்டபம் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கான அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதையொட்டி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
ராமேசுவரம் துறைமுக பகுதியில் திடீர் மீன்பிடி தடையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இன்று காலை ராமேசுரம், ராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.
சூறாவளி காற்று காரணமாக தனுஷ்கோடியில் வழக்கத்தை விட அதிகமாக கடல் கொந்தளிப்புடன் இருந்தது. அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
- தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம்.
- தூய்மை பணியாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்கள்.
சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவை முதலமைச்சர் ருசி பார்த்து நன்றாக இருப்பதாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தூய்மை பணியாளருக்கான வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
மேலும், பணியின்போது உயிரிழந்த தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கான நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கினார்.
தூய்மை பணியாளர் குழந்தைகளின் உயர்கல்வி உதவித்தொகை, சுயதொழில் மானிய திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியின் 31,373 தூய்மை பணியாளர்களுக்கான இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு ரூ.64,73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
- 58-ம் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஆண்டிபட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவை சேர்ந்த 58 கிராமங்கள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் வசதி உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 67 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே கால்வாய், மதகுகள் வழியாக அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த காரணத்தால் அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 29ந் தேதி 69.46 அடியாக இருந்தது. இதனையடுத்து 58-ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடிநீர் வீதம் திறந்து விடப்பட்டது. ஏற்கனவே ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்கு ஆற்றின் வழியாகவும், கால்வாய் வழியாகவும், தண்ணீர் வெளியேறியதால் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இன்று காலை நிலவரப்படி 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66.90 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1402 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2299 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5063 மி.கன அடியாக உள்ளது. இதன் காரணமாக 58-ம் கால்வாய் வழியாக வெளியேறிய தண்ணீர் நின்றுபோனது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால் தொடர்ந்து சரியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக 58-ம் கால்வாய் பாசனத்தை நம்பி இருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.10 அடியாக உள்ளது. வரத்து 1051 கன அடி. திறப்பு 1711 கன அடி. இருப்பு 5656 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 45 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிப்பதால் அணைக்கு வரும் 37 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
பெரியாறு அணை 9.4, உத்தமபாளையம் 3, வீரபாண்டி 2.2. மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
- பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது.
பழனி:
தமிழகத்திலேயே அதிக பக்தர்கள் வரும் கோவில்களில் முதன்மையானதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவில் கட்டுப்பாட்டின் கீழ் 49 உப கோவில்கள் உள்ளன. இவற்றில் முதன்மையானது பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோவில் ஆகும். 3-ம் படை வீடாக அறியப்படும் இந்த கோவிலில்தான் பங்குனிஉத்திரம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களுக்கு கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். பழனி மலைக்கோவிலுக்கு வரும் ஏராளமான கேரள பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலுக்கு வந்தபின்னரே மலைக்கோவிலுக்கு செல்வார்கள்.
மேலும் உள்ளூர் பக்தர்களும் அதிக அளவு இந்த கோவிலுக்கு வருவது வழக்கம். இங்கு மூலவராக குழந்தை வேலாயுத சுவாமி உள்ளார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்ய விரும்பும் பக்தர்களும் திருஆவினன்குடி கோவிலிலேயே திருமாங்கல்யம் மாற்றிக்கொள்வது வழக்கம்.
இங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். இந்நிலையில் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பால் தரமற்றவையாக உள்ளது என புகார் எழுந்துள்ளது. இதனால் சுவாமி சிலைகள் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் கருதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் இதர பரிவார தெய்வங்களுக்கு பக்தர்களால் கொண்டு வரப்படும் பால் உணவு பாதுகாப்புத்துறையின் தரச்சான்றான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தரக்குறியீடு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பலகைகள் திருஆவினன்குடி கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்த நிலையில், கடந்த 10-ந் தேதியில் இருந்து தொடர்ந்து ஏறுமுகத்தை கண்டு வந்தது. நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 அதிகரித்திருந்தது. இதன் மூலம் மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை பயணிக்க தொடங்கிவிட்டதோ? என்று பேசும் அளவுக்கு விலை உயர்வு இருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம், பிற்பகலில் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் குறைந்து இருந்தது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 190 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,550-க்கும் சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.92,400 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 175 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஐந்தாயிரம் குறைந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,920
13-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.95,200
12-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
11-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,600
10-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-11-2025- ஒரு கிராம் ரூ.180
13-11-2025- ஒரு கிராம் ரூ.183
12-11-2025- ஒரு கிராம் ரூ.173
11-11-2025- ஒரு கிராம் ரூ.170
10-11-2025- ஒரு கிராம் ரூ.169






