என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆர்சிபி டீசர்ட் வாங்குவதால் தங்களின் பிடித்த பிளேயருடன் பெரிய பேனரில் இடம் பெற ரசிகர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
    • விராட் கோலி மட்டுமல்ல இன்னும் சில ஆர்சிபி பிளேயர்களுடனும் நீங்கள் அந்த பேனரில் இடம்பெறலாம்.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகிறது. இப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது.

    இந்நிலையில் ஆர்சிபி ரசிகர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகியுள்ளது. ஒரு டீசர்ட் வாங்குவதால் ஆர்சிபி ரசிகர்கள் தங்களின் பிடித்த பிளேயருடன் பெரிய பேனரில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக புமா தெரிவித்துள்ளது. விராட் கோலி மட்டுமல்ல இன்னும் சில ஆர்சிபி பிளேயர்களுடனும் நீங்கள் அந்த பேனரில் இடம்பெறலாம்.

    இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது ஆர்சிபி அணியுடன் ஒப்பந்தம் வைத்துள்ள புமா (PUMA) நிறுவனம் ஆகும். பெங்களூருவில் இருக்கும் 100 அடி சாலை, இந்திராநகர் அல்லது பிரிகேட் சாலையில் உள்ள புமா ஸ்டோர்களில் ஆர்சிபி - புமா டீ சர்ட் வாங்கும் ரசிகர்களுக்கே இந்த வாய்ப்பு கிடைக்கும்.

    இந்த ஸ்டோர்களில் டீ சர்ட் வாங்கும் ரசிகர்கள் ரஜத் படிதார், விராட் கோலி, குர்ணால் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், புவனேஷ்வர் குமார் மற்றும் சால்ட் ஆகியோருடன் VR photo booths மூலம் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

    • டெல்லி அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
    • குஜராத் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடக்கும் 35-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. டெல்லி அணியில் கேப்டன் அக்சர் பட்டேல், கே.எல்.ராகுல், போரல், ஸ்டேப்ஸ், மிட் செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    குஜராத் 6 ஆட்டத்தில் 4 வெற்றி, 2 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியில் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன், ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ரஷித்கான் ஆகிய வீரர்கள் உள்ளனர். அந்த அணி 5-வது வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    லக்னோ 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் ரிஷப் பண்ட், மிட்செல் மார்ஷ், நிகோலஸ் பூரன், மார்க்ரம், டேவிட் மில்லர், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான் உள்ளிட்ட வீரர்கள் உள்ளனர்.

    ராஜஸ்தான் 7 ஆட்டத்தில் 2 வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. இந்த சீசனில் ராஜஸ்தான் திணறி வருகிறது. கடந்த 3 போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. இதனால் அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, ஹெட் மயர், ஹசரங்கா, ஆர்ச்சர், துருவ் ஜூரல் ஆகிய வீரர்கள் ராஜஸ்தான் அணியில் உள்ளனர்.

    • சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார்.
    • அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரரை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.

    சென்னை:

    ஐபிஎல் தொடரில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக இருந்த ருதுராஜ் காயம் காரணமாக இந்த தொடரை விட்டு வெளியேறிய நிலையில் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலையிலான சென்னை அணி 1 போட்டியில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸை சிஎஸ்கே ஒப்பந்தம் செய்துள்ளது.

    21 வயது வீரரான பிரவீஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பத்து போட்டிகளில் விளையாடி உள்ளார். குட்டி ஏபி டிவில்லியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட பிரவீஸ் அண்மையில் நடைபெற்ற எஸ்ஏ டி20 தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 291 ரன்கள் குவித்து இருந்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 184 என்ற அளவிலும் சராசரி 48 என்ற அளவில் இருந்தது குறிப்பிடதக்கது.

    • இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர்.
    • பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை அனயா என மாற்றிக்கொண்டார்.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர். இவர் முன்னதாக ஆர்யன் என்று அழைக்கப்பட்டார். இவர் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை அனயா என மாற்றிக்கொண்டார். 2023-ல், பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக்கொண்டார். 23 வயதான அவர், இடது கை பேட்டர் ஆவார் மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவர். 

    இப்போது அனயா, மான்செஸ்டரில் வசிப்பதாகவும், கிரிக்கெட் விளையாடுவதாகவும், மேலும் பல சமூக ஊடகங்களில் தனது பயணத்தைப் பற்றிய வீடியோக்களைப் பதிவிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் எனது பாலின மாற்றத்திற்குப் பிறகு சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினார்கள் என அனன்யா பங்கர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பினர். அவர்களுடைய மோசமான பக்கங்களில் நான் இடம்பெற விரும்பவில்லை. அதனால் நான் அந்த முழு சூழ்நிலையையும் தவிர்த்துவிட்டேன். ஆரம்பத்தில் என்னை ஆதரித்த சிலர் காலப்போக்கில் தங்கள் நடத்தையை மாற்றிக்கொண்டனர்.

    என அனன்யா கூறினார்.

    • யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும்.
    • ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும்.

    மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா. இவர் தற்போது மோசமான பார்மில் உள்ளார். பவர்பிளேயில் அதிரடியாக விளையாடி விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.

    ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக தொடங்கிய ரோகித் சர்மா, 3 சிக்சர்களை விளாசியதால் பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் 16 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இந்த சீசனில் ரோகித் சர்மா இதுவரை ஆடிய 6 இன்னிங்ஸ்களில் 82 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார்.

    இந்நிலையில் இந்த சீசனோடு ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறியதாவது:-

    ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் போது ரோகித் சர்மா விலகுவது நல்லது. ஏனென்றால் வரும் காலங்களில் ரசிகர்களே, போதும்.. ஓய்வு பெறுங்கள் என்று கூற தொடங்கிவிடுவார்கள்.

    கடந்த 10 ஆண்டுகளில் ரோகித் சர்மா ஒரேயொரு முறை மட்டுமே 400 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கிறார். அவர் ஒவ்வொரு சீசனில் 500 முதல் 700 ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கும் வீரரும் அல்ல. இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது, பவர் பிளேவில் அட்டாக் செய்து ரன்களை குவிக்க வேண்டும் என்று ஆடினார். அணிக்காக தியாகம் செய்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ரன்களை சேர்க்கவில்லை என்றால், அவரின் இத்தனை நாட்கள் கட்டி காத்த லெகசி பாதிப்படையும்.

    யாராவது அவரிடம் சென்று முதல் 10 பந்துகளை பொறுமையாக விளையாடுமாறு கூற வேண்டும். ஏதாவது ஒரு இன்னிங்ஸில் ரோகித் சர்மா புல் ஷாட் விளையாட கூடாது என்று களமிறங்க வேண்டும். நான் விளையாடும் போது, பார்மில் இல்லாத போது சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி உள்ளிட்டோர் கொஞ்சம் நிதானமாக விளையாடுமாறு கூறியுள்ளனர். அதனை ரோகித் சர்மாவுக்கு யாராவது சொல்ல வேண்டும்.

    என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத்- மும்பை அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இந்த போட்டியின் நடுவே நகைச்சுவையான சம்பவம் அரங்கேறியது. கடந்த 12-ந் தேதி ஐதராபாத் - பஞ்சாப் அணிகள் மோதின. அந்த போட்டியில் ஐதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா சதம் விளாசியவுடன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்துக்காட்டி தனது சதத்தை கொண்டாடினார். அவர் அனைத்து போட்டியிலும் அதனை எடுத்து வந்ததாகவும் இந்த போட்டியில் தான் அதனை எடுத்துகாட்டியதாகவும் சக அணி வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தான் சூர்யகுமார் யாதவ், இன்னைக்கு என்னடா எழுதி கொண்டு வந்திருக்க என்பது போல அவர் பாக்கெட்டை சோதனையிட்டார். ஆனால் அவர் பாக்கெட்டில் எதுவும் கிடைக்கவில்லை. உடனே இருவரும் சிரித்தப்படி கடந்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.
    • இந்த போட்டியில் ரோகித் சர்மா 3 சிக்சர்களை விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் மும்பை அணிக்காக விளையாடிய ரோகித் சர்மா 16 பந்தில் 26 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 102 சிக்சர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக வான்கடே மைதானத்தில் 19 சிக்சர்களை விளாசி உள்ளார். இரண்டாவது இடத்தில் அந்த அணியின் முன்னாள் வீரர் பொல்லார்ட் (85) உள்ளார்.

    ஒரு மைதானத்தில் 100-க்கும் மேற்பட்ட சிக்சர்களை பறக்கவிட்டவர்கள் பட்டியலில் விராட் கோலி (130 சிக்சர்) முதல் இடத்தில் உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

    அதே மைதானத்தில் கிறிஸ் கெய்ல் 127 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும் ஏபி டிவில்லியர்ஸ் 118 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 4-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

    மேலும் ஒரு அணிக்காக 250 -க்கும் அதிகமாக சிக்சர் விளாசிய 6-வது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்துள்ளார். அந்த பட்டியலின் முதல் இடத்தில் விராட் (296), கெய்ல் (263), பொல்லார்ட் (258), தோனி (256), ரோகித் (251) ஆகியோர் உள்ளனர்.

    • நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.
    • குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை என்ற ஆவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதுவரை 33 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் முடிவில் முதல் 4 இடங்களில் டெல்லி, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை, சென்னை, ஐதராபாத் ஆகிய அணிகள் பின் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் குஜராத் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து வீரர் பிலிப்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இவர் நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் தசுன் ஷனகா குஜராத் அணியில் இடம் பிடித்துள்ளார்.



    அவர் தனது அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு டைட்டன்ஸ் அணியில் இணைந்துள்ளார். இலங்கைக்காக 102 டி20 போட்டிகளில் ஷனகா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 5-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் எனலாம்.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (குஜராத், டெல்லி அணியிடம்) என 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. வெளியூரில் நடந்த 4 ஆட்டங்களிலும் வாகை சூடிய பெங்களூரு அணி சொந்த மண்ணில் (பெங்களூரு மைதானம்) நடந்த 2 ஆட்டங்களிலும் பேட்டிங் தடுமாற்றத்தால் தோல்வியை தழுவியது. முந்தைய ஆட்டத்தில் ராஜஸ்தானை பந்தாடிய பெங்களூரு அணி உள்ளூரிலும் எழுச்சி காணும் உத்வேகத்துடன் ஆயத்தமாகிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (248 ரன்), பில் சால்ட் (208), கேப்டன் ரஜத் படிதார், தேவ்தத் படிக்கல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். டிம் டேவிட், லிவிங்ஸ்டனிடம் இருந்து அதிரடி வெளிப்படவில்லை. பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார் பலம் சேர்க்கிறார்கள்.

    பஞ்சாப் அணியும் 6 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி (குஜராத், லக்னோ, சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (ராஜஸ்தான், ஐதராபாத் அணியிடம்) 8 புள்ளிகளை பெற்றுள்ளது. கடந்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 111 ரன்கள் மட்டுமே எடுத்த பஞ்சாப் அணி, அடுத்து ஆடிய கொல்கத்தாவை 95 ரன்னில் சுருட்டி வியக்க வைத்தது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த ரன்னை இலக்காக நிர்ணயித்து வெற்றியை வசப்படுத்திய அணி என்ற சாதனையை தனதாக்கியது. பஞ்சாப் அணி அந்த உற்சாகத்துடன் இந்த ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

    பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (250 ரன்), பிரியான்ஷ் ஆர்யா (216), பிரப்சிம்ரன் சிங், நேஹல் வதேரா, ஷசாங் சிங் நல்ல நிலையில் உள்ளனர். மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல்லின் பேட்டிங் சூடுபிடிக்கவில்லை. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென், வலுசேர்க்கின்றனர்.

    5-வது வெற்றியை குறிவைத்து இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் எனலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப்பும், 16-ல் பெங்களூருவும் வெற்றி பெற்று இருக்கின்றன. கடந்த ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக மோதிய இரண்டு ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்றது நினைவு கூரத்தக்கது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஜோஷ் இங்லிஸ், நேஹல் வதேரா, மேக்ஸ்வெல் அல்லது ஸ்டோனிஸ், சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷசாங் சிங், மார்கோ யான்சென், சேவியர் பார்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • இது கடினமான ஆடுகளம்தான். நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.
    • ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சுலபமானதாக இல்லை என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

    மும்பை:

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

    இதையடுத்து, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய மும்பை அணி 18.1 ஓவர்களில் மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    இந்நிலையில், போட்டிக்கு பிறகு ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியதாவது:

    இது கடினமான ஆடுகளம்தான். இந்த ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை. நாங்கள் இன்னும் கூடுதலாக சில ரன்கள் அடித்திருக்க வேண்டும்.

    மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் 160 ரன்கள் என்பது இந்த ஆட்டத்தில் குறைவான இலக்காக மாறிவிட்டது.

    இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற விக்கெட்டுகள் தேவை. இம்பாக்ட் வீரர் ஒன்று அல்லது இரண்டு ஓவர் தான் வீசமுடியும் என எனக்கு தெரியும். இதனால் தான் நாங்கள் ராகுலை தேர்வு செய்தோம். இந்த சூழலில் இருந்து இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

    துரதிர்ஷ்டவசமாக இந்த சீசனில் எங்களுக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தற்போது எங்களுக்கு சிறிய ஒரு பிரேக் கிடைத்துள்ளது. நாங்கள் எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்துவோம் என தெரிவித்தார்.

    • குஜராத் அணி இதுவரை 6 போட்டியில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
    • நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.

    அகமதாபாத்:

    குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்டு, பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.

    இதற்கிடையே, நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் என்றும், தொடர் முழுவதும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு முன்னணி வீரர்கள் விலகியது குஜராத் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    குஜராத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடம் வகிக்கிறது.

    இந்நிலையில், காயம் காரணமாக விலகிய கிளென் பிலிப்சுக்கு பதிலாக இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான டாசன் ஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • முதலில் ஆடிய ஐதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
    • அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 33-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ரன்னும், கிளாசன் 28 பந்தில் 37 ரன்னும், டிராவிஸ் ஹெட் 28 ரன்னும் எடுத்தனர். அனிகெட் வர்மா 8 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. ரோகித் சர்மா 26 ரன்னும், ரிக்கல்டன் 31 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். வில் ஜாக்ஸ் 36 ரன் எடுத்து அவுட்டானார். பாண்ட்யா 21 ரன் எடுத்தார்.

    இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் மும்பை அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.

    ×