என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: குஜராத் அணியில் இணைந்த இலங்கை ஆல்ரவுண்டர்
- குஜராத் அணி இதுவரை 6 போட்டியில் விளையாடி நான்கில் வெற்றி பெற்றுள்ளது.
- நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார்.
அகமதாபாத்:
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரபாடா, கிளென் பிலிப்ஸ், ரூதர்போர்டு, பட்லர், கரிம் ஜனத், கோயட்சீ, ரஷித் கான் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய ரபாடா, சொந்த காரணத்திற்கான உடனடியாக தென்ஆப்பிரிக்கா புறப்பட்டார். அவர் எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கூறப்படவில்லை.
இதற்கிடையே, நியூசிலாந்தைச் சேர்ந்த கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார் என்றும், தொடர் முழுவதும் விளையாட மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு முன்னணி வீரர்கள் விலகியது குஜராத் அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
குஜராத் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடம் வகிக்கிறது.
இந்நிலையில், காயம் காரணமாக விலகிய கிளென் பிலிப்சுக்கு பதிலாக இலங்கை அணியின் ஆல் ரவுண்டரான டாசன் ஷனகா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






