என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- அபிஷேக் சர்மா 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- கிளாசன் 37 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடரின் 33ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாடினார்.
அணியின் ஸ்கோர் 7.3 ஓவரில் 59 ரன்னாக இருக்கும்போது அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 2 ரன்னில் வெளியேறினார்.
டிராவிஸ் ஹெட் 29 பந்தில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் 11.1 ஓவரில் 82 ரன்கள் எடுத்திருந்தது.
அதன்பின் வந்த நிதிஷ் ரெட்டி 19 ரன்களும், கிளாசன் 37 ரன்களும் சேர்த்தனர். கடைசி ஓவரில் அனிகெட் சர்மா 2 சிக்சரும், கம்மின்ஸ் ஒரு சிக்சரும் அடித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்துள்ளது. அனிகெட் சர்மா 8 பந்தில் 18 ரன்கள் எடுத்தும், கம்மின்ஸ் 4 பந்தில் 8 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழாக்கமல் இருந்தனர்.
- புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9ஆவது இடத்தில் உள்ளது.
ஐபிஎல் தொடரின் 33ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், முகமது சமி, ஜீசன் அன்சாரி, எஷான் மலிங்கா.
மும்பை இந்தியன்ஸ்:-
ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், பும்ரா, கரண் சர்மா.
- நான் எச்சில் பயன்படுத்துவதில்லை. இது கட்டுக்கதை என நினைக்கிறேன்.
- வியர்வைக்கும், எச்சிலுக்கும் என்ன வித்தியாசம் என்பது எனக்குத் தெரியவில்லை.
கொரோனா தொற்று காலத்தில், பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த ஐசிசி தடைவிதித்தது. இந்த தடையை நிரந்தரமாக்கியுள்ளது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பந்து பளபளப்பாக இருக்கும் வரை நன்றாக ஸ்விங் ஆகும். இதன்மூலம் தொடக்க ஓவர்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என வேகப்பந்து வீச்சாளர்கள் நினைக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரில் எச்சில் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று கூடுதல் சாதகமாக இருப்பதாக ஒரு சிலர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவ்வாறு சாதகமாக இருக்கும் என நினைக்கவில்லை என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் இது தொடர்பாக கூறியதாவது:-
நான் எச்சில் பயன்படுத்துவதில்லை. இது கட்டுக்கதை என நினைக்கிறேன். சிலர் இது சாதகமாக இருக்கும் என சத்தியம் செய்கிறார்கள். வியர்வைக்கும், எச்சிலுக்கும் என்ன வித்தியாசம் என்பது எனக்குத் தெரியவில்லை. இது வேறுபாட்டை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை. இது ரெட் பாலில் (டெஸ்ட் போட்டி) வேறுபாட்டை ஏற்படுத்தலாம். ஒயிட்பாலில் வேறுபாட்டை ஏற்படுத்தும் என நான் கருதவில்லை.
இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
- சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது.
- ஆஸ்திரேலியாவில் 1-3 என 5 போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என இழந்தது.
இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. தோல்வி குறித்து பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை தேர்வாளர் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.
பின்னர் ஐபிஎல் தொடங்கியதால் ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று துணை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளரை அதிரடியாக நீக்கியுள்ளது. அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை முறித்துள்ளது.
துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப், strength and conditioning பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது.
- ஐதராபாத் தொழில் அதிபர் ஒருவர் சூதாட்ட கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளார்.
- ரசிகர் என்ற போர்வையில் வீரர்களை அணுக வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க பிசிசிஐ உஷார்.
உலக அளவில் நடைபெறும் டி20 லீக்கில் சிறப்பு வாய்ந்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளங்குகிறது. இதில் ஏராளமான சர்வதேச வீரர்கள் விளையாடுகிறார்கள். கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விளையாட்டாக இது உள்ளது.
ஐபிஎல் தொடரை வைத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெறுகிறது. சூதாட்ட கும்பல் உடன் தொடர்புள்ள சில தொழில் அதிபர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் போன்று அறிமுகமாகி, அவர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்கி நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் போட்டி தொடர்பான சில தகவல்களை பெற்று சூதாட்டக்காரர்களுக்கு அதை வழங்கி விடுவார்கள்.
இதுபோன்ற நபர்களிடம் வீரர்கள், அணி உரிமையாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்டோர் சிக்கிவிடக் கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக உள்ளது.
இதற்காக ஊழல் தடுப்பு பாதுகாப்பு குழுவை {Anti-Corruption Security Unit (ACSU)} அமைத்துள்ளது. இந்த குழு சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது வீரர்களை அணுகுகின்றனரா? என ரகசியமாக கண்காணிப்பார்கள்.
இந்த நிலையில் சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த ஒரு தொழில் அதிபர், வீரர்களை அணுக முயற்சி செய்வதாக இந்த குழு எச்சரித்துள்ளது.
இதனால் வீரர்கள் மற்றும் அணியில் உள்ள அனைவரும் ரசிகர்கள் போர்வையில் தங்களை தனி நபர் யாராவது அணுகினால் உஷாராக இருங்கள். அது தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்கவும். அவர்கள் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தினருக்கும் பரிசு போன்ற பொருட்கள் கொடுத்து வலை விரிப்பார்கள். இதனால் உஷாராக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- சூப்பர் ஓவரில் டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் சார்பில் ஹெட்மயர், பராக், ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நிதிஷ் ராணா ஏன் சூப்பர் ஓவரில் களமிறக்கப்படவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக பேசிய நிதிஷ் ராணா, " சூப்பர் ஓவரில் யாரை அனுப்ப வேண்டும் என்று அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். இது தனிப்பட்ட நபரின் முடிவு அல்ல. ஹெட்மயர் மற்றும் பராக்கை அனுப்பியது நல்ல முடிவு தான். ஹெட்மயர் எங்கள் அணியின் ஃபினிஷர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார்.
- 5 முறை சாம்பியனான மும்பை அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்னும் செயல்படவில்லை.
- முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியும் நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
5 முறை சாம்பியனான மும்பை அணி எதிர்பார்ப்புக்கு ஏற்ப இன்னும் செயல்படவில்லை. இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (கொல்கத்தா, டெல்லி அணிக்கு எதிராக), 4 தோல்வி (சென்னை, குஜராத், லக்னோ, பெங்களூரு அணிகளிடம்) கண்டுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த மும்பை 3-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2 ஆட்டங்களில் உதை வாங்கிய அந்த அணி முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்து 205 ரன்கள் குவித்த மும்பை அணி 193 ரன்னில் டெல்லியை ஆல்-அவுட் செய்து வெற்றியை வசப்படுத்தியது.
மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (239 ரன்), திலக் வர்மா (210 ரன்) சூப்பர் பார்மில் இருக்கின்றனர். திலக் வர்மா கடந்த 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக அரைசதம் விளாசியுள்ளார். ரையான் ரிக்கெல்டன், நமன் திர் நல்ல பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தடுமாறுகிறார். அவர் 5 ஆட்டங்களில் ஆடி 56 ரன்களே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது முக்கியமானதாகும். பந்து வீச்சில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், விக்னேஷ் புத்தூர் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் கால்பதித்த சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா 3 விக்கெட் வீழ்த்தி கலக்கினார். காயத்தில் இருந்து திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முந்தைய இரு ஆட்டங்களில் ஆடி ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். அவர் பழைய நிலைக்கு திரும்புவதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியும் நிலையற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. 6 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (ராஜஸ்தான், பஞ்சாப் அணிக்கு எதிராக), 4 தோல்விகளை (லக்னோ, டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளிடம்) சந்தித்துள்ளது. வெற்றியோடு தொடங்கிய ஐதராபாத் அணி அதன் பிறகு வரிசையாக 4 ஆட்டங்களில் தோற்றது. கடந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்தது. அதுவும் 246 ரன் இலக்கை ஐதராபாத் 9 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து பிரமிக்க வைத்தது. அபிஷேக் ஷர்மா (55 பந்தில் 141 ரன்), டிராவிஸ் ஹெட் (66 ரன்) அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ஐதராபாத் அணியின் பலமே பேட்டிங் தான். டிராவிஸ் ஹெட் (214 ரன்), அபிஷேக் ஷர்மா (192), இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி என்று தடாலடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. அவர்கள் நிலைத்து நின்று விட்டால் எதிரணியின் பாடு திண்டாட்டம் தான். மாறாக விரைவில் நடையை கட்டினால் அது எதிரணிக்கு கொண்டாட்டமாக மாறிவிடும். பந்து வீச்சில் ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, கம்மின்ஸ், ஜீஷன் அன்சாரி நம்பிக்கை அளிக்கிறார்கள். இருப்பினும் பந்து வீச்சில் கணிசமாக ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
வலுவான பேட்டிங் வரிசை கொண்ட அணிகள் களம் காண்பதால் ரன் மழையை எதிர்பார்க்கலாம். இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 13-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை: ரோகித் சர்மா, ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ் அல்லது கார்பின் பாஷ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா அல்லது விக்னேஷ் புத்தூர்.
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி, இஷான் மலிங்கா அல்லது வியான் முல்டெர். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார்.
- மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி விளையாடி வருகிறார்.
இந்நிலையில், வான்கடே மைதானத்தின் திவேச்சா பெவிலியன் லெவல் 3 பகுதிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் பெயர் சூட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
மும்பை கிரிக்கெட் சங்கத்தின் 86வது கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 கோப்பைகளை ரோகித் வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார்.
- அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா ஐபிஎல் வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார். அந்த ஓவரில் 4 வைடுகள், ஒரு நோ பால் என மொத்தமாக 11 பந்துகள் வீசினார்.
இதற்கு முன்னதாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் ஒரே ஓவரில் 11 பந்துகள் வீசியுள்ளனர்.
- டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
- இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான் என தெரிவித்தார் சஞ்சு சாம்சன்.
புதுடெல்லி:
டெல்லியில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால், நிதிஷ் ரானா அரை சதம் கடந்து அவுட்டாகினர்.
இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், தோல்விக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:
காயம் ஏற்பட்டதால் என்னால் பேட் செய்ய முடியவில்லை. இதனால் நான் களத்திற்கு மீண்டும் வரவில்லை. தற்போது நல்ல முறையில் உணர்கின்றேன். என் உடல் நலம் எவ்வாறு இருக்கிறது என்று பார்த்துவிட்டு அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
உண்மையில் நாங்கள் நன்றாகத்தான் பந்து வீசினோம். போட்டியின் சில கட்டத்தில் டெல்லி அணி அபாரமாக விளையாடினார்கள். எனினும் அதையும் சமாளித்து நாங்கள் பேட்டிங் செய்தோம்.
என்னுடைய பீல்டர்களுக்கும், பவுலர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் அணி வீரர்கள் இன்று களத்தில் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த இலக்கு என்பது எட்டக்கூடிய இலக்குதான். அந்த அளவுக்கு எங்கள் அணியில் பலமான பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். நாங்கள் பவர் பிளேவிலும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தோம்.
ஆனால் டெல்லி அணியில் இடம் பெற்றிருக்கும் மிட்செல் ஸ்டார்க் என்ற ஒரே வீரரால் தான் நாங்கள் தோற்றோம். உலகின் மிகச் சிறந்த பவுலர் என்று மீண்டும் ஸ்டார்க் நிரூபித்து இருக்கின்றார். இதனால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். டெல்லி அணிக்கு 20-வது ஓவரில் நின்று மிட்செல் ஸ்டார்க் தான் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்.
நாங்கள் பேட்டை கடுமையாக சுற்றி ரன்கள் அடிக்க வேண்டும் என நினைத்தோம். ஆனால் போட்டியை எங்களிடமிருந்து ஸ்டார்க் கவர்ந்து சென்று விட்டார். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் எங்கள் அணியில் ஒரு நல்ல உத்வேகம் கிடைத்திருக்கும். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். 2025 தொடரின் 32-வது போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்னும், கே.எல்.ராகுல் 38 ரன்னும், அக்சர் பட்டேல், ஸ்டப்ஸ் தலா 34 ரன்னும் எடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் 31 ரன்னில் ரிட்டயர்டு ஹர்ட் ஆனார். நிதிஷ் ரானா பொறுப்புடன் ஆடி அரை சதம் எடுத்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் டெல்லி அணி பெற்ற 5வது வெற்றி இதுவாகும். புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்தது டெல்லி. ராஜஸ்தான் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.
- அக்சர் பட்டேல் 14 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் விளாசினார்.
- அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் 2025 தொடரின் 32ஆவது போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி டெல்லி அணியின் மெக்கர்க்- அபிஷேக் பொரேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் வழக்கம்போல் சொற்ப ரன்னில் (9) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் ரன்ஏதும் எடுக்காமல் ரன்அவுட்டானார்.
ஒரு பக்கம் இரண்டு விக்கெட் இழந்தாலும் மறுபக்கம் அபிஷேக் பொரேல் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆனால் ஓவர் செல்ல செல்ல ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது.
3ஆவது விக்கெட்டுக்கு அபிஷேக் பொரோல் உடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார். கே.எல். ராகுல் 32 பந்தில் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார். அபிஷேக் பொரேல் 37 பந்தில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அக்சர் பட்டேல் 14 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்கள் விளாசினார்.
ஸ்டப்ஸ் 34 ரன்களும், அஷுடோஷ் சர்மா 15 ரன்களும் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழபபிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டும் தீக்ஷனா, ஹசரங்கா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.






