என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் தொடரில் படுதோல்வி: துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை நீக்கியது பிசிசிஐ
    X

    டெஸ்ட் தொடரில் படுதோல்வி: துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயரை நீக்கியது பிசிசிஐ

    • சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது.
    • ஆஸ்திரேலியாவில் 1-3 என 5 போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை 1-3 என இழந்தது.

    இதனால் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. தோல்வி குறித்து பிசிசிஐ இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா, தலைமை தேர்வாளர் அகர்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது.

    பின்னர் ஐபிஎல் தொடங்கியதால் ஆலோசனைக்குப் பின் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று துணை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங் பயிற்சியாளரை அதிரடியாக நீக்கியுள்ளது. அவர்களுடைய ஒப்பந்தம் முடிவடையாத நிலையில், இடையிலேயே ஒப்பந்தத்தை முறித்துள்ளது.

    துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலிப், strength and conditioning பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது.

    Next Story
    ×