என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும்.
    • இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்றிரவு நடத்திய 41-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் இஷான் கிஷன் அவுட் ஆனது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தீபக் சாஹர் பந்து வீச்சில் இஷான் கிஷன் பேட்டை உரசுவது போல் சென்றது. ஆனால் விக்கெட் கீப்பரோ, மும்பை வீரர்களோ யாரும் அப்பீல் செய்யவில்லை.

    நடுவர் இஷான் கிஷன் வெளியேறியதையடுத்து யோசித்து கொண்டே அவுட் கொடுத்தார். ஆனால் இஷான் கிஷன் ரிவ்யூவும் கேட்காமல் பெவிலியன் நோக்கி நடந்தார். ஆனால் ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசவில்லை என்பது தெரியவந்தது. களநடுவர் மற்றும் இஷான் கிஷனின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பல சமயங்களில், நமது மனம் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலை செய்யத் தவறிவிடும். அது மூளை மங்கிப்போனதைத்தான் குறிக்கிறது. இஷான் கிஷன் குறைந்த பட்சம் நடுவர் தனது முடிவை எடுக்கும் வரை காத்திருக்கலாம். நடுவரை அவரது வேலையை செய்ய விடுங்கள். அதற்காக அவர் பணமும் வாங்குகிறார்.

    இஷான் கிஷனின் நேர்மையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. பந்து பேட்டில் பட்டிருந்தால் கூட அது புரிந்துகொள்ளத்தக்கதாக இருந்திருக்கும். ஆனால் அது அவுட்டும் இல்லை. நடுவரும் உறுதியற்றவராக இருந்தார். ஆனால் திடீரென இஷான் ஆடுகளத்தை விட்டு வெளியேறியது குழப்பமானது.

    என்று கூறினார்.

    • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் போட்டியில் பெங்களூரு- ராஜஸ்தான் மோதுகிறது.
    • டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்தார்.

    18-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயமடைந்ததுடன், ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் அவரது வலி தீவிரமடைந்தததை தொடர்ந்து மேற்கொண்டு அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து சஞ்சு சாம்சனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சஞ்சு சாம்சனின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    டெல்லிக்கு எதிரான போட்டியில் சஞ்சுவுக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்ததுன்னு நினைக்கிறேன். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். எங்கள் மருத்துவக் குழு அவரை விளையாட அனுமதிக்கவில்லை.

    எனவே மேலும் அவர் பயணம் செய்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ குழு ஆலோசனை வழங்கியது. அதேசமயம் இன்னும் இரண்டு விமானங்கள் பயணம் செய்ய வேண்டும் என்பதால் கூட அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அவருக்கு சிகிச்சை அளித்து, விரைவில் அவரைத் திரும்பக் கொண்டுவர முயற்சிப்பதற்காக, பிசியோவை அவருடன் வைத்திருந்தோம். அவர் குணமடைவதை நாங்கள் தினமும் கண்காணித்து வருகிறோம்.

    அவர் எப்போது அணிக்கு திரும்புவார் என்பதற்கான குறிப்பிட்ட காலக்கெடு என்னிடம் இல்லை. ஆனால் எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம். இப்போதைக்கு, ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார். அதனால்தான் அவர் பெங்களூருக்கு பயணம் செய்யவில்லை.

    என்று சஞ்சு சாம்சன் கூறினார்.

    • இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் காவல் நிலையத்தில் கம்பீர் அளித்துள்ளார்.
    • கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் பா.ஜ.க. எம்.பி.-யுமான கவுதம் கம்பீருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராஜீந்தர் நகர் காவல் நிலையத்தில் கம்பீர் புகார் அளித்துள்ளார்.

    'ஐ.எஸ்.ஐ.எஸ். காஷ்மீர்' என்ற அமைப்பிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கம்பீர் புகார் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

    தனது புகாரில், தனக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்ததாகவும், இரண்டிலும் "IKillU" என்று எழுதப்பட்டுள்ளதாகவும் கூறினார். கம்பீருக்கு இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டும் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.

    26 இந்தியர்களின் உயிரைப் பறித்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அச்சுறுத்தல் உடனடியாக வந்துள்ளது. இந்தக் கொடூரமான தாக்குதலைக் கண்டித்த விளையாட்டு வீரர்களில் கம்பீரும் ஒருவர்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "இதை செய்தவர்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
    • ரியான் பராக் மீண்டும் அணியை வழிநடத்துகிறார்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (வியாழக்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

    ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி வெளியூரில் நடந்த 5 ஆட்டங்களிலும் (கொல்கத்தா, சென்னை, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக) வெற்றியையும், சொந்த மைதானத்தில் நடந்த 3 ஆட்டங்களிலும் (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியையும் சந்தித்துள்ளது. சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆடிய 3 ஆட்டங்களில் முறையே 169, 163, 95 ரன்களே (மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட ஆட்டம்) எடுத்துள்ளது. வெளியூரில் ஒரு ஓவரில் 9-10 ரன் சேர்க்கும் அந்த அணி சொந்த மைதானத்தில் 7-8 ரன்னை தாண்ட முடியாமல் பரிதவிக்கிறது.

    பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட் கோலி (322 ரன்) நல்ல நிலையில் இருக்கிறார். கேப்டன் ரஜத் படிதார் (221), பில் சால்ட் (213), தேவ்தத் படிக்கல் (180) இன்னும் அதிக ரன் எடுக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி இந்த சீசனில் வெகுவாக தடுமாறுகிறது. 8 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக), 6 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு, டெல்லி, லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது. முதல் இரு ஆட்டங்களிலும், முந்தைய 4 ஆட்டங்களிலும் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது.

    எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 'பிளே-ஆப்' சுற்றை பற்றி நினைத்து பார்க்க முடியும் என்பதால் ராஜஸ்தானுக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாக அமைந்துள்ளது.

    வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆட்டத்தை தவறவிட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார். இதனால் ரியான் பராக் மீண்டும் அணியை வழிநடத்துகிறார். ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் (307 ரன்), ரியான் பராக் (212), துருவ் ஜூரெல், ஹெட்மயர், நிதிஷ் ராணா நம்பிக்கை அளிக்கின்றனர். கடந்த ஆட்டத்தில் அறிமுகமான 14 வயது வைபவ் சூர்யவன்ஷி அதிரடிகாட்டி 34 ரன்கள் எடுத்து கவனத்தை ஈர்த்தார். அந்த அணியின் பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கமில்லை. ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா ஓரளவு நன்றாக பந்து வீசுகிறார்கள்.

    உள்ளூரில் முதல் வெற்றியை பதிவு செய்ய பெங்களூரு அணி முழு பலத்தையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் பெங்களூருக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட ராஜஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்க தீவிரமாக முயற்சிக்கும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டத்தில் பெங்களூருவும், 14 ஆட்டத்தில் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பெங்களூரு: பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஹேசில் வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.

    ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரெல், ஹெட்மயர், சுபம் துபே, ஹசரங்கா, ஜோப்ரா ஆர்ச்சர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா அல்லது ஆகாஷ் மத்வால்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து வென்றது.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், தோல்வி குறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:

    நாங்கள் 5 விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்துவிட்டோம். அதன்பிறகு கிளாசனும், அபினவும் அபாரமாக விளையாடி ஒரு கவுரவமான இலக்கை எட்ட உதவினார்கள்.

    இரண்டு விக்கெட்டுகள் விழுந்த பிறகு அணியை சரிவிலிருந்து மீட்க வழியை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி எங்களுக்கு நடக்கவில்லை. தொடர்ந்து சரிவிலே நாங்கள் சென்று விட்டோம்.

    முதல் போட்டியில் நாங்கள் 280 ரன்களுக்கு மேல் அடித்தோம். ஆனால் அதன்பிறகு சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய சரிவு. ஆனால் டி20 போட்டி என்பது இப்படித்தான் இருக்கும்.

    எங்கே தவறு நடக்கிறது என்று உங்களால் சொல்லமுடியாது. இந்த சீசன் எங்களுக்கு எதுவும் சரியாக நடக்கவில்லை. தற்போது எங்களுக்கு சில வெளியூரில் நடைபெறும் போட்டிகள் இருக்கிறது. அங்கு செல்லும்போது ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணித்து, அதன்பிறகு ரன்கள் சேர்க்க வேண்டும்.

    சில நாள் முதல் பந்தில் இருந்து அதிரடியாக ஆடும் நிலைக்கு தள்ளப்படலாம். சில நாள் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டி வரும் என தெரிவித்துள்ளார்.

    • ரோகித் சர்மா 456 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • இவர் டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களைக் கடந்த 8-வது வீரரானார்.

    ஐதராபாத்:

    ஐதராபாத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

    இதுவரை 456 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 12,000 ரன்களைக் கடந்த 8-வது வீரராக உள்ளார்.

    இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிஸ் கெயில் 463 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

    இந்திய வீரர்களின் வரிசையில் விராட் கோலி 407 போட்டிகளில் விளையாடி 13,208 ரன்கள் குவித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்.

    ஐதராபாத்:

    நடப்பு ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் அவுட்டானார்.

    மும்பை அணியின் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விக்கு பிறகு எழுச்சி பெற்றுள்ள மும்பை அணி தொடர்ந்து 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    கடந்த வாரம் புள்ளிப்பட்டியலில் கடைசி இரு இடங்களில் மும்பை அணி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சனரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி டிரண்ட் போல்டின் துல்லிய பந்து வீச்சில் சிக்கியது. இதனால் முன்னணி வீரர்கள்

    விரைவில் அவுட்டாகினர்.

    ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அவுட்டாகி 35 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது.

    6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன்-அபினவ் மனோகர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.

    மும்பை அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 11 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 22 ரன்னில் வெளியேறினார்.

    தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 70 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

    இது மும்பை அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். ஐதராபாத் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.

    • பஹல்காம் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.
    • பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் 60 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஐதராபாத்:

    காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடந்து வருகிறது.

    முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் 60 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இரு அணி வீரர்களும் தங்கல் இரங்கலை தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

    • 35 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது.
    • கிளாசன் 71 ரன்னிலும் அபினவ் 43 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். அதில் ஹெட் 0, இஷான் கிஷன் 1, அபிஷேக் சர்மா 8, நிதிஷ் குமார் 2, அன்கிட் வர்மா 12 என அடுத்தடுத்து வெளியேறினர்.

    இதனால் 35 ரன்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. இதனையடுத்து கிளாசன் மற்றும் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபினவ் மனோகர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    அதிரடியாக விளையாடிய கிளாசன் 71 ரன்னில் ஆட்டமிழந்தார். அபினவ் 43 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 150 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • தீபக் சாஹர் வீசிய பந்து இஷான் கிஷனின் பேட்டில் படவில்லை.
    • இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

    ஐதராபாத்:

    ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இதில் போல்ட் வீசிய 2-வது ஓவரிலேயே டிராவிஸ் ஹெட் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த இஷான் கிஷன் களமிறங்கினார்.

    இந்நிலையில் தீபக் சஹர் வீசிய 3-வது ஓவரின் முதல் பந்து இஷான் கிஷனுக்கு பின் பக்கமாக சென்றது. அதனை விக்கெட் கீப்பர் ரிக்கல்டன் எளிதாக பிடித்தார். அப்போது நடுவர் ஒய்டு கொடுப்பதற்காக கைகளை உயர்த்திய போது, திடீரென இஷான் கிஷன் நடக்க தொடங்கினார்.

    இதனால் உடனடியாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பவுலர் தீபக் சாஹர் ஆகியோர் அவுட் கோரிக்கை வைத்தனர். அதன்பின் நடுவர் யோசித்து கொண்டே அவரது கையை உயர்த்தி அவுட் கொடுத்தார்.

    சந்தேகத்தின் அடிப்படையில் இஷான் டிஆர்எஸ் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் அதை கேட்காமல் உடனடியாக பெவிலியன் சென்றார்.

    இதனையடுத்து இஷான் கிஷனுக்கு வீசப்பட்ட பந்தை ஸ்னிக்கோமீட்டரில் சோதனை செய்தனர். அப்போது தீபக் சஹர் வீசிய பந்து இஷான் கிஷனின் பேட்டில் மற்றும் அவரது உடம்பில் கூட படவில்லை என்பது தெரிய வந்தது. இதனை ஓய்வு அறையில் பார்த்து கொண்டிருந்த இஷான் கிஷன் தலையில் அடித்துக் கொண்டார்.

    பேட்டில் படாமல் இஷான் கிஷன் எதற்காக நடந்து சென்றார், எதற்காக டிஆர்எஸ் அப்பீல் கூட செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் இஷான் கிஷனின் விஸ்வாசம் எப்போதும் அம்பானிக்கு தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர். 

    • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
    • இனிமேல் உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வி, இரண்டில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளது.

    டெல்லி அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. லக்னோனிக்கு எதிராக இரண்டு ரன்களில் வெற்றியை நழுவ விட்டது.

    நாளை ஆர்.சி.பி. அணியை எதிர்கொள்ள உள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் எட்டு போட்டியில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று 8ஆவது இடத்தில் உள்ளது.

    இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால் இனிமேல் விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் (6) வெற்றிபெற வேண்டும்.

    இந்த நிலையில் அந்த அணியின் ஆலோசகரான ராகுல் டிராவிட் இனிமேல் தப்பு செய்ய முடியாது. அனைத்து போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராகுல் டிராவிட் கூறியதாவது:-

    ஆர்.சி.பி.க்கு எதிரான நாளைய ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். உண்மையில், நாங்கள் இருக்கும் நிலையில் இங்கிருந்து ஒவ்வொரு ஆட்டத்திலும் அதிக தவறுகளைச் செய்ய முடியாது. தொடரின் தற்போதைய நிலையில் பாதி தூரம் தாண்டிய நிலையில் நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கீழ் பாதியில் இருக்கிறோம்.

    நாங்களில் புள்ளிகள் பட்டியலில் விரைவாக முன்னேற தொடங்க வேண்டும், மேலும் ஆட்டங்களில் விரைவாக வெற்றி பெறவும் வேண்டும். இனிமேல் சறுக்குவதற்கான எந்த வழியும் வாய்ப்பும் இல்லை.

    இந்த தொடரில் இன்னும் நிலைத்திருக்க நாங்கள் நன்றாக விளையாட வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். இப்போது, இதற்கு முன்பு இரண்டு நெருக்கமான ஆட்டங்களில் தோற்றுள்ளோம், ஆனால் நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டையும் விளையாடியுள்ளோம்.

    இவ்வாறு ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    ×