என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு மும்பை - ஐதராபாத் போட்டியில் மவுன அஞ்சலி
    X

    வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு மும்பை - ஐதராபாத் போட்டியில் மவுன அஞ்சலி

    • பஹல்காம் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர்.
    • பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் 60 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ஐதராபாத்:

    காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சூழலில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை-ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று நடந்து வருகிறது.

    முன்னதாக போட்டி தொடங்குவதற்கு முன்பு பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக மைதானத்தில் மும்பை, ஐதராபாத் அணி வீரர்கள், நடுவர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் 60 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர். இரு அணி வீரர்களும் தங்கல் இரங்கலை தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

    Next Story
    ×