என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா:
ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரகானே 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரசல் 38 ரன்னும், மனீஷ் பாண்டே 36 ரன்னும், சுனில் நரைன் 26 ரன்னும் எடுத்தனர்.
சிஎஸ்கே சார்பில் நூர் அகமது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
அடுத்து இறங்கிய உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அஷ்வின் 8 ரன்னும், ஜடேஜா 19 ரன்னும் எடுத்தனர்.
அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.
6வது விக்கெட்டுக்கு ஷிவம் துபேவுடன் எம்.எஸ்.தோனி இணைந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.
- ரகானே 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- நூர் அகமது 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி அந்த அணியின் குர்பாஸ், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். 2ஆவது ஓவரை கம்போஜ் வீசினார். இந்த ஓவரின் 3ஆவது பந்தில் குர்பாஸ் 9 பந்தில் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து சுனில் நரைன் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. இதனால் பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்திருந்தது. 8ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் சுனில் நரைன் (17 பந்தில் 26) ரன், ரகுவன்ஷி (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். மறுமுனையில் விளையாடிய ரகானே 33 பந்தில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரகானே ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்திருந்தது.
5ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் அந்த்ரே ரசல் ஜோடி சேர்ந்தார். அந்தரே ரசல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 17ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். ரசல் 21 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.
6ஆவது விக்கெட்டுக்கு மணிஷ் பாண்டே உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். கொல்கத்தாவுக்கு 18ஆவது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. 19ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். மொத்தமாக 4 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்தார். 19 ஓவர் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்தது.
கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க கொல்கத்தா 179 ரன்கள் குவித்துள்ளது. மணிஷ் பாண்டே 28 பந்தில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- டி20 உலகக் கோப்பையை வென்றதும், டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி கேப்டனாக நீடிக்க வாய்ப்பு இல்லை எனத் தகவல் வெளியானது.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். டி20 உலகக் கோப்பையை வென்றபின், டி20 வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்ததால் அவரது டெஸ்ட் கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதால் அதன்பின் கேப்டன் பதவி குறித்து பேசப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ரோகித் சர்மா இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 சதங்களும், 18 அரைசதங்களும் அடங்கும். சராசரி 40.57 ஆகும். 16 இன்னிங்சில் 383 பந்து வீசி 224 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீ்ழ்த்தியுள்ளார்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6ஆவது இடத்தில் உள்ளது.
- சிஎஸ்கே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் 2025 சீசனின் 57ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வெங்கடேஷ் அய்யர் இடம் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
- பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் இடையே நடைபெற இருந்த போட்டியும், வரும் 11ம் தேதி தர்மசாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும்.
இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றை உறுதி செய்யவில்லை. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதால் இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் இன்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அரங்கேறும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது.
கொல்கத்தா அணி நடப்பு தொடரில் சீரற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள அந்த அணி 5 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகள் எடுத்து 6-வது இடம் வகிக்கிறது. முந்தைய 2 ஆட்டங்களில் டெல்லி, ராஜஸ்தானை அடுத்தடுத்து வீழ்த்தியதால் அவர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
கொல்கத்தா அணிக்கு எஞ்சிய 3 ஆட்டங்களும் முக்கியமானதாகும். மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெறுவதுடன், ரன்ரேட்டையும் வலுப்படுத்தி மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் தான் அந்த அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாயில் கதவு திறக்கும். ஒன்றில் தோற்றாலும் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே (327 ரன்கள்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல் நம்பிக்கை அளிக்கின்றனர். வெங்கடேஷ் அய்யர், ரமனுல்லா குர்பாசும் பார்முக்கு திரும்பினால் பேட்டிங் வலுவடையும். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரின் மிரட்டுகிறார்கள்.
சென்னை அணி வழக்கத்துக்கு மாறாக இந்த சீசனில் தகிடுதத்தம் போடுகிறது. 11 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (மும்பை, லக்னோவுக்கு எதிராக), 9 தோல்வியுடன் 4 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருப்பதுடன், ஏற்கனவே அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டது.
கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்ட சென்னை அணி முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவுக்கு எதிராக 214 ரன் இலக்கை விரட்டுகையில் 211 ரன்களே எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. அந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே (94 ரன்), ரவீந்திர ஜடேஜா (77 ரன்) அதிரடி காட்டி அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்தனர். ஆனால் கடைசி ஓவரில் 15 ரன் தேவையாக இருந்த போது டோனி ஆட்டமிழந்தது தோல்விக்கு வழிவகுத்தது.
இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் எஞ்சிய ஆட்டங்களில் அச்சமின்றி செயல்பட்டு ஆறுதல் வெற்றி பெறுவதுடன், புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க சென்னை அணி தீவிரம் காட்டும். அத்துடன் கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 103 ரன்னில் அடங்கி 8 விக்கெட் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முயற்சிக்கும். அதே நேரத்தில் 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க கொல்கத்தா அணி வரிந்து கட்டும்.
இவ்விரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை 19 ஆட்டங்களிலும், கொல்கத்தா 11 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மற்றொரு வகையிலும் இந்த ஆட்டம் கவனத்தை ஈர்க்கிறது. டோனிக்கு பிடித்தமான மைதானங்களில் ஈடன் கார்டனும் ஒன்று. இங்கு தான் முதல் தர கிரிக்கெட்டில் தனது 'கன்னி' சதத்தை பதிவு செய்தார், இரண்டு டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். 43 வயதான டோனி கொல்கத்தா ஈடன்கார்டனில் விளையாடும் கடைசி போட்டியாக இது இருக்கலாம் என்று கருதப்படுவதால், மஞ்சள் படையினரின் படையெடுப்பும், ஆரவாரமும் மைதானத்தில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், ரஹானே (கேப்டன்), ரகுவன்ஷி, ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர், ரமன்தீப் சிங், மொயீன் அலி, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
சென்னை: ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத் அல்லது உர்வில் பட்டேல், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, டிவால்ட் பிரேவிஸ், ஷிவம் துபே, டோனி (கேப்டன்), தீபக் ஹூடா, நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷூல் கம்போஜ், பதிரானா.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி திரில் வெற்றி பெற்றது.
- இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது குஜராத் அணி.
மும்பை:
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56-வது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை 20 ஓவரில் 155 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 18 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது.
இதையடுத்து, குஜராத் வெற்றிபெற ஒரு ஓவரில் 15 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. குஜராத் கடைசி ஓவரில் 15 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.
2வது இடத்தில் ஆர்.சி.பி.யும், 3வது இடத்தில் பஞ்சாப் கிங்சும், 4வது இடத்தை மும்பை இந்தியன்சும், 5வது இடத்தை டெல்லியும், 6வது இடத்தை கொல்கத்தாவும், 7வது இடத்தை லக்னோவும் பிடித்துள்ளன.
- டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது.
மும்பை:
ஐ.பி.எல். தொடரின் 56வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்தது.
ரிக்கெல்டன் 2 ரன்னிலும், ரோகித் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3வது விக்கெட்டுக்கு வில் ஜாக்ஸ்-சூர்யகுமார் யாதவ் இணைந்து அதிரடியாக விளையாடினர். சிறப்பாக ஆடிய வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
குஜராத் சார்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றவர்கள் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களமிறங்கியது. சாய் சுதர்சன் 5 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் ஜாஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லர் 30 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கில்லுடன் ரதர்போர்டு ஜோடி சேர்ந்தார். ரதர்போர்டு அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தார். 14 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் சிறிது தடைபட்டது.
மழை நின்று ஆட்டம் தொடங்கிய நிலையில் சுப்மன் கில், ரதர்போர்டு, ஷாருக் கான், ரஷீத் கான் விக்கெட்டுகள் வீழ்ந்தன. மழை மீண்டும் பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஒரு ஓவரில்15 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், குஜராத் அணி வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்தது. 8வது வெற்றியைப் பதிவு செய்துள்ள குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
மும்பை அணியின் தொடர் வெற்றிக்கு குஜராத் அணி முற்றுப்புள்ளி வைத்தது. மும்பை அணியின் 5வது தோல்வி இதுவாகும்.
- டி20 போட்டியில் விராட் கோலி, ரோகித் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர்.
- தற்போது இருவரும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இதன்மூலம் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகவும் இது அமைந்தது.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருடன் ரோகித், விராட், ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர். தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். ஒருநாள் தொடரில் விராட், ரோகித் சர்மாவுக்கு ஓய்வு வழங்கப்பட்டு உள்ளது. டெஸ்ட் தொடரில் மட்டும் இருவரும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மவுனம் கலைத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தேர்வுக்குழுவே வீரர்களை தேர்வு செய்கிறது. அவர்கள் சிறப்பாகச் செயல்படும் வரை, அவர்கள் அணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். எந்த பயிற்சியாளரோ, தேர்வாளரோ அல்லது பிசிசிஐ-யோ உங்களை விளையாடுவதை நிறுத்தச் சொல்ல முடியாது. நன்றாக விளையாடுவது மட்டுமே ஒரு வீரரின் தேர்வை உறுதி செய்கிறது.
என கம்பீர் கூறினார்.
- மும்பை அணியின் வில் ஜாக்ஸ் அரை சதம் விளாசினார்.
- குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை - குஜராத் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோகித்- ரிக்கெல்டன் களமிறங்கினர். முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரிக்கெல்டன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வில் ஜாக்ஸ் முதல் பந்திலேயே கேட்ச் மிஸ் ஆனார். தடுமாறிய ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட் ஆனார்.
இதனையடுத்து வில் ஜாக்ஸ் - சூர்யகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிரடியாக விளையாடிய வில் ஜாக்ஸ் அரைசதம் விளாசினார்.
அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 35 ரன்னில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் வில் ஜாக்ஸ் 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து வந்த வீரர்கள் திலக் வர்மா 7, பாண்ட்யா 1, நமன் தீர் 7 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதியில் கார்பின் பாஷ் அதிரடியாக விளையாடினர். குறிப்பாக கடைசி ஓவரில் 2 சிக்சர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இதனால் மும்பை அணி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
- முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இதுவரை 55 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்த ஆட்டங்களின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, குஜராத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சமி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில், முகமது சமியிடம் ரூ. 1 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, முகமது சமிக்கு ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும், அதில் ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் உங்களை கொன்றுவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக முகமது சமி உடனடியாக தனது சகோதரர் முகமது ஹசீப் அம்ரோஹா மூலம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கொலை மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.
- நடப்பு தொடரில் மும்பையில் நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது.
- புள்ளிப்பட்டியலில் மும்பை 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






