என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • நடப்பு தொடரில் மும்பையில் நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது.
    • புள்ளிப்பட்டியலில் மும்பை 3-வது இடத்திலும் குஜராத் 4-வது இடத்திலும் உள்ளது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் மும்பை அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்பியதால் கேப்டன்ஷிப் பற்றி முடிவெடுத்தேன்.
    • இந்தியாவுக்காக 7 - 8 வருடங்கள் கேப்டனாக இருந்த நான் பெங்களூருவை 9 வருடங்கள் தலைமைத் தாங்கினேன்.

    நடப்பு ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த முறை கோப்பையை வெல்ல கடுமையாக போராடி வருகிறது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 505 ரன்கள் விளாசி அதிக ரன்களை அடித்த வீரராக ஆரஞ்சு தொப்பியுடன் பங்காற்றி வருகிறார்.

    இந்நிலையில் இந்தியா, ஆர்சிபி கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து விராட் கோலி மவுனம் கலைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மற்ற அணிக்கு சென்று விளையாடினால் கோப்பையை வெல்ல முடியும் என்று என்னிடம் சொன்னார்கள். என்னுடைய கேரியரின் உச்சகட்ட சமயத்தில் வேறு அணிக்கு சென்று விளையாட எனக்கும் வாய்ப்புகள் இருந்தது. 2016 - 2019 காலங்களில் அந்தப் பரிந்துரைகள் ஏராளமாக வந்தன. ஒரு கட்டத்தில் அது எனக்கு மிகவும் கடினமானது.

    ஏனெனில் எனது கேரியரில் நிறைய நடந்தது. இந்தியாவுக்காக 7 - 8 வருடங்கள் கேப்டனாக இருந்த நான் பெங்களூருவை 9 வருடங்கள் தலைமைத் தாங்கினேன். பேட்டிங் ரீதியாக என் மீது ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்புகள் எழுந்தது. அதனால் 24 மணி நேரமும் என்னை நான் அம்பலப்படுத்தப்பட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.

    அப்போது எந்த மதிப்பீடும் இல்லாமல் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாட விரும்பியதால் கேப்டன்ஷிப் பற்றி முடிவெடுத்தேன்.

    ஆர்சிபி அணிக்கு தொடர்ந்து விளையாடலாமா என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். இருப்பினும் இந்தியாவுக்காக எனது கேரியரில் நிறைய வென்றுள்ள நான் ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுள்ளேன்.

    அதனால் பெங்களூருவை விட்டு வெளியேறி புதிய அணியில் சாதிக்க வேண்டுமா? என்ற முடிவெடுக்க வேண்டியிருந்தது. அது போன்ற சூழ்நிலையில் வேறு அணிகளை விட இத்தனை வருடங்களாக பெங்களூருவுக்கு விளையாடியதால் ரசிகர்களிடம் ஏற்பட்ட உறவு முக்கியம் என்று நினைத்தேன். அதனால் வெற்றி, தோல்வி பரவாயில்லை. இதுவே என்னுடைய வீடு.

    என்று விராட் கோலி கூறினார்.

    • நடப்பு ஐபிஎல் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர்.
    • அப்படிப்பட்ட 11 வீரர்களைத் தேர்வு செய்து ஐபிஎல் மோசடி லெவன் அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய அணிகள் வெளியேறி உள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் தடுமாறி வருகிறார்கள்.

    அதாவது நடப்பு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டு அல்லது தங்கள் அணிகளால் அதிக தொகைக்குத் தக்கவைக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் சரியாக ரன் குவிக்காமலும், விக்கெட் எடுக்காமலும் ஏமாற்றம் அளித்துள்ளனர்.

    அப்படிப்பட்ட 11 வீரர்களைத் தேர்வு செய்து ஐபிஎல் மோசடி லெவன் அணியை ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    அதன்படி இந்த மோசடி லெவன் அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டு இருக்கிறார். 2025 ஐபிஎல் தொடரில் பண்ட் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். இந்த ஆண்டு அவர் இதுவரை 11 போட்டிகளில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து மிக மோசமாக விளையாடி இருப்பதாகவும், அதனால்தான் அவர் இந்த அணியில் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஸ்லாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

    இந்த அணியின் தொடக்க வீரர்களாக சிஎஸ்கே அணியின் ராகுல் திரிபாதி மற்றும் ரச்சின் ரவீந்திரா இடம்பெற்றுள்ளனர். 3-ம் வரிசையில் ஐதராபாத் அணியின் இஷான் கிஷன் இடம்பெற்றுள்ளார். 4-ம் வரிசையில் கேப்டன் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

    5-ம் இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வெங்கடேஷ் ஐயர் தேர்வாகியுள்ளார். இவர் 2025 ஐபிஎல் ஏலத்தில் ரூ. 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். பல போட்டிகளில் டெஸ்ட் போட்டிகள் போலப் பந்துகளை வீணடித்துச் சோதித்தார் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

    6-ம் வரிசையில் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இடம்பெற்றுள்ளார். மீதமுள்ள பந்துவீச்சாளர்களாக/ஆல்ரவுண்டர்களாக லியாம் லிவிங்ஸ்டன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஷ்வின், மதீஷா பதிரானா, மற்றும் முகமது சமி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இம்பாக்ட் வீரராக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முகேஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தோனிக்கு இடம் அளிப்பதற்காக கடந்த ஏலத்திற்கு முன் வரம்பு 4 கோடியாக உயர்த்தப்பட்டது.
    • கடந்தக் காலங்களில் அன்கேப்ட் பிளேயர் பெரியத் தொகைக்கு வாங்கப்பட்டு தன்னுடைய திறமையை நிரூபித்ததாக எனக்கு நினைவில்லை.

    நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 9 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. குறிப்பாக காயமடைந்த ருதுராஜ்க்கு பதிலாக மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தலைமையிலும் சென்னை அணி எந்த மாற்றத்தையும் சந்திக்காமல் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்திற்கு முன்பாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை ரூபாய் 4 கோடி ரூபாய்க்கு அன்ட் கேப்டு வீரராக தக்க வைத்தது. இந்த சூழ்நிலையில் இதனால் ஏற்படும் சிக்கல் குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இளம் இந்திய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமலேயே பெரிய தொகைக்கு வாங்கப்பட்டால் அவர்களது வெற்றிக்கானப் பசி மற்றும் உந்துதல் தணிந்து மங்கி விடுவார்கள். ஐபிஎல் அணிகளை பொறுத்தவரை அது பொருட்டல்ல. ஏனெனில் அதை அவர்கள் நல்ல ஆட்டம் என்று உணரலாம். ஆனால் இளம் வயதிலேயே பெரியத் தொகைக்கு வாங்கப்படும் இந்திய வீரர்கள் வெற்றி பெறாவிட்டால் அது இந்திய கிரிக்கெட்டை கொஞ்சம் தோற்கடிக்கும்.

    மகேந்திர சிங் தோனிக்கு இடம் அளிப்பதற்காக கடந்த ஏலத்திற்கு முன் வரம்பு 4 கோடியாக உயர்த்தப்பட்டது. கடந்தக் காலங்களில் அன்கேப்ட் பிளேயர் பெரியத் தொகைக்கு வாங்கப்பட்டு தன்னுடைய திறமையை நிரூபித்ததாக எனக்கு நினைவில்லை. ஒருவேளை அடுத்த சில வருடங்களில் அது மாறலாம். இருப்பினும் அது போன்ற வீரர்களின் சம்பளம் அடுத்த ஏலத்தில் குறைந்தால் அவர்கள் மீதான எதிர்பார்ப்புகள் மற்றும் அழுத்தத்தை குறைக்கும். அது அவர் இன்னும் சிறப்பாக விளையாடுவதற்கு உதவும். இதனால் அன் கேப்டு வீரர் தொகையை குறைக்க வேண்டும்

    என்று கவாஸ்கர் கூறினார். 

    • விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை.
    • சிஎஸ்கே-க்கு எதிராக விளையாடியபோது கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விராட் கோலி விளையாடினார்.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது வரை சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் வெளியேறி உள்ளது. மீதமுள்ள 7 அணிகள் 4 இடங்களுக்கு போட்டி போட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் விராட் கோலியின் ஸ்ரைக் ரேட் குறைவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. மேலும் மீடியாவிலும் அதுபோன்ற கருத்துக்கள் வெளியாகியது.

    இந்நிலையில் விராட் கோலி ஆர்சிபி அணியின் Mr. Safety என அந்த அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் எப்போதும் ஆர்சிபி-க்காக இருந்தார். அவர்தான் ஆர்சிபி அணியின் Mr. Safety. விராட் இருக்கும்போது நீங்கள் எதற்கும் பயப்பட தேவையில்லை.

    நான் பத்திரிகை நண்பர்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன். உங்களை எனக்கு பிடிக்கும். ஆனால் விராட் மிகவும் மெதுவாக விளையாடுகிறார் என கூறும்போது ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், சமீபத்தில் சிஎஸ்கே-க்கு எதிராக விளையாடியபோது கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விராட் கோலி விளையாடினார்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    • பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும்.
    • பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள ஐ.பி.எல். தொடரில் நேற்றுடன் 55 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இதுவரை எந்த அணியும் இன்னும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இன்னும் 15 லீக் ஆட்டங்கள் எஞ்சியுள்ளன.

    முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தன. தற்போது பிளே ஆப் சுற்றின் 4 இடங்களுக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன.

    இதில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றில் எளிதாக நுழைந்து விடும். பஞ்சாப், குஜராத், மும்பை, டெல்லி ஆகிய அணிகள் இடையே 'பிளே ஆப்' சுற்றுக்கு கடும் போட்டியில் இருக்கின்றன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆர்.சி.பி.க்கு இன்னும் 3 போட்டிகள் (லக்னோ, ஐதராபாத், கொல்கத்தா) உள்ளது. இதில் 2 ஆட்டம் சொந்த மண்ணில் நடக்கிறது. இதில் ஒன்றில் வென்றாலே தகுதி பெற்று விடும். முதல் 2 இடத்தை பிடிப்பதை அந்த அணியின் இலக்காக உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ்: 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. டெல்லி, மும்பை, ராஜஸ்தான் அணிகளுடன் விளையாட வேண்டும். 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை உறுதி செய்யும். ஒன்றில் வென்றால் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்து பிளே ஆப் வாய்ப்பு அமையும்.

    மும்பை இந்தியன்ஸ்: 14 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் (குஜராத், பஞ்சாப், டெல்லி) எஞ்சியுள்ளது. இதில் 2 ஆட்டம் உள்ளூரில் இருக்கிறது. ரன் ரேட்டில் வலுவாக உள்ள அந்த அணி தொடர்ச்சியாக 6 போட்டி யில் வெற்றி பெற்றது. 2 வெற்றி பெற்றால் தகுதி பெற்றுவிடும். முதல் 2 இடங்களுக்குள் வர வாய்ப்பு உள்ளது.

    குஜராத் டைட்ன்ஸ்: குஜராத் அணிக்கு 4 ஆட்டம் உள்ளது. மும்பை, டெல்லி, லக்னோ, சென்னை அணிகளிடம் மோத வேண்டும். இதில் 2 போட்டிகள் உள்ளூ ரில் நடக்கிறது. 14 புள்ளிகளு டன் 4-வது இடத்தில் உள்ளது. மும்பைக்கு அடுத்தபடியாக ரன்ரேட்டில் நன்றாக இருக்கிறது. 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை பெறும். முதல் 2 இடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.4 போட்டிகளில் தோற்றதால் வெளியேறும்.

    டெல்லி கேபிடல்ஸ்: 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப், குஜராத், மும்பை அணிகளுடன் மோத வேண்டும். தொடக்கத்தில் முன்னேறி இருந்த அந்த அணிக்கு தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்துடன் தோற்க வேண்டிய நேற்றைய ஆட்டத்தில் அதிர்ஷ்ட வசமாக ஒரு புள்ளி கிடைத்தது. கடைசி 5 ஆட்டத்தில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றது. எஞ்சிய ஆட்டங்களில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் அணி உள்ளது. 17 புள்ளிகள் வரை பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. 3 ஆட்டம் இருக்கிறது. மூன்றிலும் வெற்றியை பெற்றால் மட்டுமே வாய்ப்பில் இருக்க இயலும். அதே சமயம் மற்ற முடிவுகள், ரன் ரேட்டை பொறுத்தே இருக்கிறது. முன்னறுவதற்கான வாய்ப்பு குறைவே.

    லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்: 10 புள்ளியுடன் 7-வது இடத்தில் உள்ள பெங்களூரு குஜராத், ஐதராபாத் அணிகளுடன் மோத வேண்டும். 3 ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேலும் அந்த அணியின் ரன்ரேட் மோசமாக இருக்கிறது ஒரு ஆட்டத்தில் தோற்றால் வெளியேறி விடும்.

    • சிவாலிக் சர்மா, 2023 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    • ராஜஸ்தான் போலீசார் சிவாலிக் சர்மாவை கைது செய்தனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவாலிக் சர்மா பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தன்னை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னுடன் உடல்ரீதியான உறவில் ஈடுபட்ட சிவாலிக் சர்மா, தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக அவரது காதலி புகார் கொடுத்திருந்தார்.

    சிவாலிக் சர்மாவின் காதலி கொடுத்த புகாரின் பேரில் ராஜஸ்தான் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் அவர் அடைக்கப்பட்டார்.

    26 வயதான சிவாலிக் சர்மா, 2023 ஆம் ஐபிஎல் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. கடந்த நவம்பரில் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக மும்பை அணி அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

    • வான்கடே மைதானத்தில் மும்பை - குஜராத் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை.

    ஐபிஎல் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்காக வான்கடே மைதானத்தில் மும்பை - குஜராத் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய குஜராத் வீரர் முகமது சிராஜ்க்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோதிரத்தை அணிவித்தார்.

    இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சிராஜ், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.

    அப்போது, சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, "சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. என்று தெரிவித்திருந்தார்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும். அதிகாரபூர்வமாக 'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 9 வெற்றிகள் தேவையாகும். தற்போது லீக் சுற்று விறுவிறுப்பான கட்டத்தை நெருங்குவதால், இனி ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவும் அதிக முக்கியத்துவம் பெறும்.

    இந்த தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    5 முறை சாம்பியனான மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வி என 14 புள்ளிகள் எடுத்து இருப்பதுடன், ரன்-ரேட் முன்னிலை அடிப்படையில் 3-வது இடம் வகிக்கிறது. முதலில் சற்று தடுமாறிய மும்பை அணி கடைசியாக 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வாகை சூடி வீறுநடைபோடுகிறது. முந்தைய 6 ஆட்டங்களிலும் அந்த அணி, எந்த அணியையும் 200 ரன்களை எட்டவிடவில்லை.

    மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (475 ரன்), ரையான் ரிக்கெல்டன் (334), ரோகித் சர்மா, திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (16 விக்கெட்), கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (13), ஜஸ்பிரித் பும்ரா (11), தீபக் சாஹர் (9) கலக்குகின்றனர்.

    முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    குஜராத் அணியில் பேட்டிங்கில் சாய் சுதர்சன் (504 ரன்), ஜோஸ் பட்லர் (470), கேப்டன் சுப்மன் கில் (465) ஆகியோர் சூப்பர் பார்மில் இருக்கின்றனர். இந்த மூவரையே அந்த அணி அதிகம் நம்பி இருக்கிறது. பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (19 விக்கெட்), முகமது சிராஜ் (14), சாய் கிஷோர் (12), ரஷித் கான் வலுசேர்க்கின்றனர்.

    தங்களது எஞ்சிய ஆட்டங்களில் இரண்டில் வெற்றி கண்டாலே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துவிடலாம் என்ற நிலையில் இரு அணிகளும் உள்ளன. அகமதாபாத்தில் நடந்த குஜராத்துக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 36 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த மும்பை அணி அதற்கு பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் மும்பை அணியின் தொடர்ச்சியான வெற்றிப்பயணத்துக்கு முடிவு கட்ட குஜராத் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. உள்ளூர் சூழல் மும்பை அணிக்கு அனுகூலமாக இருக்கும். நடப்பு தொடரில் இங்கு நடந்த 5 ஆட்டங்களில் 4-ல் அந்த அணி வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் 4 ஆட்டங்களிலும், மும்பை 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), வில் ஜாக்ஸ், திலக் வர்மா, நமன் திர், கார்பின் பாஷ் அல்லது மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    குஜராத்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், ராகுல் திவேதியா, ரஷித் கான், முகமது சிராஜ், ஜெரால்டு கோட்ஜீ, சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் ஷர்மா அல்லது ரபடா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • கன மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
    • இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதின . இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இம்பெக்ட் பிளேயர் அஷுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதன் விளைவாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து கன மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டது.

    இந்த போட்டி ரத்தானதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிகாரபூர்வமாக இந்த தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

    • ஊக்கமருந்து விவகாரத்தில் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அதனை தனிப்பட்ட பிரச்னை எனக் கூற மாட்டேன்.
    • ஊக்கமருந்து வழங்கியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதில் வெளிப்படை தன்மை வேண்டும்.

    தென் ஆப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர் ககிசோ ரபாடா. இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பினார்.

    இந்த நிலையில், போதைப் பொருள் பயன்படுத்தியன் காரணமாக தனக்கு அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் தனது செயலுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.

    இந்நிலையில் ரபாடா ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும், இது தொடர்பான முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் எனவும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது மிகவும் கேவலமானது. தனிப்பட்ட காரணங்கள் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு விஷயத்தை மறைப்பதற்காக முயற்சி செய்வது தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருக்கிறீர்கள். ஒரு தொடரின்போது, ஊக்கமருந்து விவகாரத்தில் உங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், அதனை தனிப்பட்ட பிரச்னை எனக் கூற மாட்டேன். நீங்கள் உங்களது ஒப்பந்தத்தை மீறியுள்ளீர்கள் என்றே கூறுவேன். இது தனிப்பட்ட பிரச்னை கிடையாது.

    ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதால் தடை விதிக்கப்பட்டது என்றால், அவர் என்ன மாதிரியான ஊக்கமருந்து எடுத்துக் கொண்டார். எப்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கு எவ்வாறு ஊக்கமருந்து கிடைத்தது. ஊக்கமருந்து வழங்கியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பதில் வெளிப்படை தன்மை வேண்டும்.

    என டிம் பெய்ன் கூறினார்.

    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • டெல்லி அணியில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா 41 ரன்கள் எடுத்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக கருண் நாயர்- டுபிளிசிஸ் களமிறங்கினர்.

    பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் கருண் நாயர் டக் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அவர் வீசிய 2-வது ஓவரில் டுபிளிசிஸ் 3 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து வந்த போரல் 8, கேப்டன் அக்சர் படேல் 6, கேஎல் ராகுல் 10 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனால் டெல்லி அணி 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ்- விப்ராஜ் நிகம் ஜோடி சிறிது நேரம் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். ஆனால் தேவையில்லாமல் இந்த ஜோடி ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். விப்ராஜ் 18 ரன்னில் அவுட் ஆகினர்.

    இதனை தொடர்ந்து டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உடன் இம்பெக்ட் பிளேயர் அஷுதோஷ் சர்மா ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 50+ ரன்களை குவித்தது.

    இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 133 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×