என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்தது.

    துபாய்:

    வெஸ்ட் இண்டீஸ்-தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இங்கிலாந்து-பாகிஸ்தான் இடையிலான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்துள்ளன.இதில் வெஸ்ட் இண்டீஸ் 3-0 என்ற கணக்கிலும், இங்கிலாந்து 2-0 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றின.

    இந்நிலையில், டி20 போட்டிகளில் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. இதில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மாற்றமின்றி தொடருகின்றன.

    இதில் 6-வது இடத்தில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி கிடுகிடுவென முன்னேறி 4-வது இடம்பிடித்துள்ளது. நியூசிலாந்து மாற்றமின்றி 5-வது இடத்தில் தொடருகிறது. பாகிஸ்தான் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 3-இடம் சரிந்து 7-வது இடத்திலும் உள்ளது. கடைசி 3 இடங்களில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் செர்பியாவின் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ராபர்டோவுடன் மோதினார். இதில் 6-4, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செர்பியாவின் மியோமிருடன் மோதினார். இதில் மெத்வதேவ் முதல் செட்டை 6-1 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் 5-0 என முன்னிலை பெற்ற நிலையில், மியோமிர் காயத்தால் விலகினார்

    இதனால் மெத்வதேவ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் வருகிற 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை தொடங்குகிறது.
    • சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தொடங்குகிறது. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப் போட்டியில் மோதப்போகும் அணிகள் எவை? என்பது குறித்து விவாதம் தொடங்கியுள்ளது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் ஸ்பெஷலிஸ்ட் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நாதன் லயன் கூறுகையில் "டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பொறுத்தவரையில் ஒரு அணி எது என்றால் வெளிப்படையாக அது ஆஸ்திரேலியாதான். ஏனென்றால், நான் ஆஸ்திரேலியா சார்புடையவன். மற்றொரு அணி என்றால் அது பாகிஸ்தான் அணிதான். அங்குள்ள கண்டிசனை பொறுத்த வரையில் சுழற்பந்து வீச்சு எடுபடும். பாகிஸ்தான் அணியில் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். மேலும், பாபர் அசாம் போன்று எலக்ட்ரிக் பேட்டர்ஸ் உள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "இந்த தொடரில் மிட்செல் மார்ஷ் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. பேட்டிங் பவர் உடன், சிறப்பாக பந்து வீசும் திறனும் பெற்றுள்ளார்" என்றார்.

    இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர்.

    • விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
    • கம்பீர் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.

    இந்த சம்பவங்கள் குறித்து பேசிய விராட் கோலி, "கம்பீர் உடன் நான் சமரசத்தில் ஈடுபட்டது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. அவர்களுக்கு மசாலா தீர்ந்துவிட்டது என நினைக்கிறேன்" என்று கிண்டலாக தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் கோலி உடனான உறவு குறித்து கம்பீர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

    "விராட் கோலி உடனான எனது உறவை இந்த நாடு அறியத் தேவையில்லை. உங்களின் கணிப்புகள் எல்லாம் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன. அணியின் வெற்றிக்கு உதவுவதற்காக, உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்னைப்போல அவருக்கும் உரிமை உண்டு. எங்களின் உறவு மக்களுக்கு மசாலா கொடுக்கும் உறவாக இருக்காது" என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

    அண்மையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இது முதல் முறை.
    • தம்பியைத் தொடர்ந்து அக்காவும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர். பெண்கள் பிரிவில் இந்தியாவின் வைஷாலி, ஹம்பி உட்பட 6 பேர் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும்.

    இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.


    இந்நிலையில், மகளிருக்கான செஸ் பிரிவில் கிளாசிக்கல் ஆட்டத்தில் நட்சத்திர வீராங்கனை ஹம்பியை முதல் முறையாக வீழ்த்தி அசத்தினார் வைஷாலி. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் 5.5 புள்ளிகளுடன் வைஷாலி முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு பின் 2வது இடத்தில் 4.5 புள்ளிகளுடன் வென்ஜுன் 2வது இடத்தில் இருக்கிறார்.

    நார்வே செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தாவும், அவரது சகோதரி வைஷாலியும் முன்னிலையில் இருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஸ்பெயினின் அல்காரஸ் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்குடன் மோதினார்.

    இதில் அல்காரஸ் 6-3, 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மையருடன் மோதினார்.

    இதில் சிட்சிபாஸ் முதல் இரு செட்டை 6-3, 6-2 என எளிதில் கைப்பற்றினார். 3-வது செட்டை டேனியல் 7-6 (7-2) என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட சிட்சிபாஸ் 4-வது செட்டை 6-4 என கைப்பற்றி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
    • வரும் 9-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது.

    நியூயார்க்:

    9-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வரும் 5-ம் தேதி சந்திக்கிறது.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடக்கிறது.

    இந்நிலையில், அச்சுறுத்லை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன் டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்து இருந்ததாக தகவல் வெளியானது. பாகிஸ்தானில் இருந்து அச்சுறுத்தல் வந்ததாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் எதிரொலியாக இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நியூயார்க்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் மைதானம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத்துறையின் தகவல்படி இந்த நேரத்தில் நம்பகமான பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. ஆனாலும் அதிகப்படியான கண்காணிப்பு, முழுமையான சோதனைகள் உள்ளிட்ட உயர்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். பொது பாதுகாப்பே எனது முதன்மையான முன்னுரிமை. உலகக் கோப்பை போட்டி பாதுகாப்பான, மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
    • கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல் முறை ஆகும்.

    ஸ்டாவஞ்சர்:

    நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 5 முறை உலக சாம்பியனான நார்வேயின் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்கின்றனர்.

    ஒவ்வொரு சுற்றிலும் இருமுறை மோதவேண்டும். இதன் முதல் சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2-வது சுற்றில் டிங் லிரெனிடம் தோல்வி கண்டார்.

    இந்நிலையில், இன்று நடந்த 3-வது சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா கார்ல்சனை எதிர்கொண்டார். வெள்ளை காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா அபாரமாக விளையாடி கார்ல்சனை வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா 2-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. முதல் சுற்று முடிந்து 2வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 7-6 (7-1), 1-6, 7-5 என்ற செட் கணக்கில் வென்று ஒசாகாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    சிங்கப்பூர்:

    சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், டென்மார்க்கின் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 13-21, 21-16, 13-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    மற்றொரு வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், ஜப்பான் வீரர் நரோகாவுடன் மோதினார். இதில் கிடாம்பி 4-21 என முதல் செட்டை இழந்தார்.

    2வது செட்டில் 3-11 என பின்தங்கியிருந்த நிலையில், காயம் காரணமாக விலகினார். இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறினார்.

    சிங்கப்பூர் ஓபன் தொடரின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர்கள் 2 பேர் வெளியானது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.
    • இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விரைவில் துவங்குகிறது. டி20 உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள ஒவ்வொரு நாடும் தனது அணியை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. மேலும், உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா புறப்பட்டு சென்றது.

    முன்னதாக உலகக் கோப்பை தொடருக்காக இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

    • 2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது.
    • ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள்தான் அடித்திருந்தார். விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கிடையே ஒவ்வொரு அணிகளும் எப்படி விளையாட வேண்டும். எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என வீரர்களுக்கு கிரிக்கெட் விமர்சகர்கள் புத்திமதி சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தபோது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி செய்த தவறை மீண்டும் செய்யக் கூடாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் "இரண்டு வருடத்திற்கு முன்னதாக நடைபெற்ற கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 168 ரன்கள் சேர்த்தது. ஆனால் முதல் 10 ஓவரில் 62 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தது.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஏராளமான பந்துகளை சந்தித்தனர். ரோகித் சர்மா 28 பந்தில் 27 ரன்கள் அடித்தார். ஸ்டிரைக் ரேட் 96. விராட் கோலி 40 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 125. 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

    இந்த போட்டியில் (தொடரில்) இந்தியா தோல்வியடைந்தது. 33 பந்தில் 190 ஸ்டிரைக் ரேட்டுடன் 63 ரன்கள் அடித்த ஹர்திப் பாண்ட்யாவுக்கு நன்றி சொல்லனும். 10 ஓவரில் இங்கிலாந்து சேஸிங் செய்தது.

    இதில் இருந்து நாம் ஒன்றை உறுதியாக சொல்ல முடியும். அது என்னவென்றால் ரோகித் சர்மா, விராட் கோலி இந்த போட்டியில் செய்த அதே தவறை செய்யக் கூடாது. விராட் கோலி 2 வருடத்திற்கு முன்னதாக இருந்து அதே டி20 பிளேயர் அல்ல. வெளியில் இருந்து வந்த விமர்சனங்கள் அவரை இரண்டு வருடத்திற்கு முன்னதாக இருந்தை விட சிறந்த டி20 பேட்ஸ்மேனாக உருவாக்கியுள்ளது.

    இவ்வாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    ×