என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்ததால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.
    • டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார். இதனால் ஐபிஎல் அணிகளுக்கு பயிற்சியாளராக முடியாமல் இருந்தது.

    சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பையுடன் அவரது தலைமை பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஏதாவது ஒரு அணிக்கு பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்ப்பு இருந்தது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • குண்டு எறிதலில் இந்திய வீரர் சச்சின் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    • இந்தியா இதுவரை 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என 21 பதக்கம் வென்றுள்ளது.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    இந்தியா இதுவரை 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என 20 பதக்கம் வென்றுள்ளது.

    இந்நிலையில், குண்டு எறிதலில் ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சச்சின் சர்ஜியாரோ கிலாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இவர் மொத்தம் 16.32 புள்ளிகள் எடுத்து 2வது இடம் பிடித்தார். இதன்மூலம் பாரா அதலெட்டிக்கில் இந்தியா 11பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    கனடா வீரர் தங்கப் பதக்கமும், குரோசிய வீரர் வெண்கலமும் வென்றார்.

    இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதன் காலிறுதி சுற்றில் சபலென்கா வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் குய்ன்வென் ஷெங் உடன் மோதினார்.

    இதில் சபலென்கா 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை மறுநாள் நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா இங்கிலாந்து வீரர் எம்மா நவாரோவை எதிர்கொள்கிறார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

    நியூயார்க்:

    நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-இந்தோனேசியாவின் அல்டிலா சுட்ஜியாடி ஜோடி, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட்-டொனால்ட் யங் ஜோடியுடன் மோதியது.

    இதில் போபண்ணா ஜோடி 3-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    • கருணாகரன் தாய்லாந்தை சேர்ந்த கன்ட்போன் வாங்சரோயனை 24-22, 23-21 என வீழ்த்தினார்.
    • சங்கர் சுப்ரமணியன் பின்லாந்தைச் சேர்ந்த ஜோகிம் ஓல்டோர்ஃப்-ஐ 21-12, 19-21, 21-11 என வீழ்த்தினார்.

    தைபே ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர்களான சதீஷ் குமார் கருணாகரன் மற்றும் சங்கர் சுப்ரமணியன் ஆகியோர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினர். அதவேளையில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வீராங்கனைகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கருணாகரன் தாய்லாந்தை சேர்ந்த கன்ட்போன் வாங்சரோயனை எதிர்கொண்டார். இதில் கருணாகரண் 24-22, 23-21 என வெற்றி பெற்றார்.

    சங்கர் சுப்ரமணியன் பின்லாந்தைச் சேர்ந்த ஜோகிம் ஓல்டோர்ஃப்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் கேம்-ஐ சுப்ரமணியன் 21-12 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது கேம்-ஐ 19-21 என இழந்தார். இருந்தபோதிலும் வெற்றிக்கான 3-வது கேமில் சிறப்பாக விளையாடி 21-11 எனக் கைப்பற்றினார்.

    மற்றொரு வீரரான கிரண் ஜார்ஜ் இந்தோனேசியாவின் யோகனஸ் சாயுட்டிடம் 21-15, 8-21, 16-21 என தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆகார்ஷி காஷ்யப் 19-21, 18-21 என தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

    தனியா ஹேமந்த் 11-21, 10-21 என எளிதில் தோல்வியடைந்ததார். சீன தைபே வீராங்கனை தை டிசு யிங் 27 நிமிடத்தில் வீழ்த்தினார்.

    அனுபமா உபத்யாயாவை அமெரிக்க வீராங்கனை 17-21, 21-19, 21-11 என வீழ்த்தினார். முதல் கேம்-ஐ அனுபமா கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு கேம்களையும் இழந்தார்.

    • இங்கிலாந்து தொடர் முழுவதும் விராட் கோலி விளையாடவில்லை.
    • கார் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் விளையாடி 600 நாட்களுக்கு மேல் ஆகிறது.

    இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இங்கிலாந்துக்கு எதிராக மார்ச் மாதத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியது.

    அதன்பின் தற்போது வருகிற 19-ந்தேதியில் இருந்து வங்கதேச அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

    இங்கிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் விராட் கோலி முழுமையாக விளையாடவில்லை. தனிப்பட்ட காரணத்திற்கான தொடரில் இருந்து விலகியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது. பின்னர் லண்டனில் அவரது மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்ததால் விலகியது தெரியவந்தது. இந்த நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்புகிறார்.

    ரிஷப் பண்ட் மோசமான கார் விபத்திற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளார். சுமார் 600 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

    இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய சர்பராஸ் கான், தேவ்தத் படிக்கல் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    துலீப் டிராபியில் நன்றாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களும் துலீப் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பைக்குப் பின் பும்ரா சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து மீண்டும் வரும் முகமது ஷமியும் இடம் பெற வாய்ப்பில்லை.

    ஆல்-ரவுண்டர் சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதனால் மூவரும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.

    வேகபந்து வீச்சில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பெறலாம்.

    வங்கதேச அணிக்கெதிராக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சர்பராஸ் அகமது, தேவ்தத் படிக்கல், ஜடேஜா, அக்சர் பட்டேல், அஸ்வின், ரிஷப் பண்ட், த்ருவ் ஜுரேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சாய் சுதர்சன், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்டோரும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடுவார்கள்.

    • 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டனர்
    • பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று பிரபலமானார்

    பிரேசிலை சேர்ந்த 19 வயது பாடி பில்டர் மத்தேயூஸ் பாவ்லக் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த வளர்ந்து வரும் பாடி பில்டிங் நட்சத்திரமான இருந்து வந்த மத்தேயூஸ் பாவ்லக் [Matheus Pavlak] 19 வயதிலேயே பயிற்சியின் மூலம் தேர்ந்த பாடி பில்டருக்கான உடல் வாகுவை கொண்டிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். 5 வருடங்களுக்கு முன்னர் நடந்த உடல் பருமன் கொண்டவர்கள் எடையை குறைக்கும் போட்டியில் பங்கெடுத்த மத்தேயூஸ் அதிலிருந்த்து தனது பாடி பில்டிங் ஆர்வத்தை பெற்றார்.

     

    பிரேசிலில் நடந்த பல்வேறு பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று புகழை சம்பாதித்த மத்தேயூஸ் பிரேசிலின் சாண்டா காத்ரீனா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த ஞாயிறு மதியம் மாரடைப்பு  ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மத்தேயூசின் மரணம், உடலை அசாதாரணமாக மாற்ற பாடி பில்டிங் பயிற்சியில் பயன்படுத்தப்படும் அனபாலிக் ஸ்டெராய்ட்களின் [ஊக்கமருந்துகளின்] பாதுகாப்புத் தன்மை மீதான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மத்தேயூசும் இவ்வளவு இளம்வயதில் அவரின் அசாதாரண உடல்வாகைப் பெற இதுபோன்ற ஸ்டெராய்ட்களை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
    • முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும்.

    ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை தொடங்கிய இரண்டு சீசன்கள் முடிவடைந்துள்ளன. முதல் சீசனில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

    அதன்பின் நடைபெற்ற 2-வது ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    3-வது முறையாக அடுத்த ஆண்டு மத்தியில் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக நாதன் லயன் உள்ளார். இவர் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிராக வென்ற ஐசிசி சாம்பியன்ஷிப் தனக்கு உலகக் கோப்பை போன்றது எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் முதல் போட்டியில் ஒரு அணி தோல்வியை சந்தித்தால் அடுத்த 2 போட்டிகளில் முன்னேறி ஆதிக்கத்தை வெளிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    2023 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நாதன் லயன் இந்தியாவுக்கு எதிராக முதல் இன்னிங்சில் 1 விக்கெட்டும் 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும் சாய்த்தார். இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வருடம் இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரு அணிகளுக்கும் முக்கியமான தொடராகும்.

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

    இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!

    தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மாரியப்பன் தங்கவேலு ரியோ (பிரேசில்), டோக்கியோ (ஜப்பான்) பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே பதக்கம் வென்றுள்ளார். தற்போது 3-வது பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டோக்கியோவில் 2021-ல் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் இந்தியா 20 பதக்கங்கள் வென்றது.
    • தற்போது 6-வது நாள் முடிவில் 20 பதக்கங்கள் பெற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய 6-ம் நாளான நேற்று இந்தியாவுக்கு பல பதக்கங்கள் கிடைத்தன. தீப்தி ஜீவன்ஜி, ஷரத் குமார், மாரியப்பன் தங்கவேலு, அஜீத் சிங், சுந்தர் குர்ஜார் பதக்கங்கள் வென்றனர்.

    இதன்மூலம் இந்தியா பாரா ஒலிம்பிக்கில் இதுவரை 20 பதங்கங்கள் வென்றுள்ளது. இதற்கு முன் டோக்கியோவில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் 19 பதக்கங்கள் வென்றதுதான் இதுவரை பாரா ஒலிம்பிக்கில் அதிக பக்கம் வென்றதாக இருந்தது. தற்போது பாரீஸ் பாரா ஒலிம்பிக்கில் முந்தைய சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. போட்டி முடிவதற்குள் இந்தியா 25 பதக்கங்கள் என்ற இலக்கை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பெண்களுக்கான குண்டு எறிதல் (எஃப் 34) இறுதிப் போட்டியில் பாக்யஸ்ரீ மஹாப் ராவ் 5-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார். 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் 50 மீட்டர் 3 பொசிசன் (எஸ்.ஹெச்.1) பிரிவில் அவானி லெகாரா 5-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

    பெண்களுக்கான 400 மீட்டர் (T20) ஓட்டத்தில் ஜீவன்ஜி வெண்கல பதக்கம் வென்றார்.

    ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F46) போட்டியில் அஜீத் சிங், சுந்தர் குர்ஜார் பதக்கம் வென்றனர். இவர்கள் முறையே வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றனர்.

    ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T63) போட்டியில் இந்தியாவின் ஷரத் குமார் வெள்ளி பதக்கமும், மாரியப்பன் தங்கவேலு வெண்கல பதக்கமும் வென்றனர்.

    இந்தியா 3 தங்கம், 7 சில்வர், 10 வெண்கலத்துடன் மொத்தம் 20 பதக்கங்கள் பெற்று 17-வது இடத்தில் உள்ளது.

    • 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.
    • பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார்

    உகாண்டா நாட்டை சேர்ந்த ஒலிம்பிக்ஸ் மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி [Rebecca Cheptegei] மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 சதவீத தீக்காயங்களுடன் கென்யாவில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் ரெபேக்கா.

     

     

    கடைசியாக உகாண்டா சார்பில் பாரீஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மாரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்த ரெபேக்கா சமீபத்தில் நாடு திரும்பியிருந்தார். இதன்பின் கென்யா நாட்டில் மேற்கு Trans Nzoia மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது காதலன் டேனியலுக்கும் [Daniel Ndiema] இடையில் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

    வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீவை வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 75 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டேனியலுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக உகாண்டா மற்றும் கென்ய நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

    • இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார்.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

    இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    ×