என் மலர்
விளையாட்டு
- சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- பாரிஸ் நகரின் ஈபிள் டவர் முன் அவர்களுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
பாரிஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யஸ்ரீ ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளனர்.
இந்நிலையில் பாரிஸ் நகரில் தமிழக வீராங்கனைகள் உள்ளிட்ட பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பாரிஸ் நகரின் ஈபிள் டவர் முன் அவர்களுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
- இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதில் நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் அஜித் சிங் 65.62 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் 64.96 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இந்தியா இதுவரை 16 பதக்கங்களை வென்றுள்ளது.
- திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் "பாராலிம்பிக்ஸ் 2024 ல் பெண்கள் 400 மீட்டர் டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். அவர் எண்ணற்ற மக்களுக்கு உத்வேகத்தின் ஆதாரமாக இருக்கிறார். அவருடைய திறமையும் விடாமுயற்சியும் பாராட்டுக்குரியவை என பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில் "பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக்கில் பெண்கள் 400 மீ - டி20 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜிக்கு வாழ்த்துகள். பல துன்பங்களை எதிர்கொண்டாலும் அவர் உறுதியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். அவர் இன்னும் உயர்ந்த சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இன்று நடந்த பாரீஸ் 2024 பாரா ஒலிம்பிக் 400 மீட்டர் டி20 போட்டியில் தீப்தி ஜீவன்ஜி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.
- துப்பாக்கிச் சுடுதலில் இன்று அவனி லெகரா பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இன்று நடந்த பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா 7வது இடம் பிடித்து, இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
இந்நிலையில், இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அவனி லெகரா 420.6 புள்ளிகள் எடுத்து 5-வது இடம்பிடித்தார். இதன்மூலம் பதக்கம் பெறும் வாய்ப்பை தவறவிட்டார்.
ஏற்கனவே, துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்தின் ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து மேத்யூ மோட் விலகினார்.
- மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.
2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். மெக்கல்லம் வந்த பிறகு 'பேஸ்பால்' என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது.
அண்மையில், , இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளர் பதவியின் இருந்து ஜூலை 30 ஆம் தேதி மேத்யூ மோட் விலகினார்.
இந்நிலையில், இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக பிரென்டன் மெக்கல்லம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் மெக்கல்லம்.
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசம் கைப்பற்றியது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்துக்கு முன்னேறியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி சரித்திர சாதனை படைத்தது.
இதைத் தொடர்ந்து வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் 4வது இடத்துக்கு முன்னேறியது. தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8வது இடத்துக்கு சரிந்தது.
இந்நிலையில், தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால், நம்மை எப்படி மேம்படுத்தலாம் என்றும், நமது டெஸ்ட் பக்கத்தை முன்னோக்கி கொண்டுசெல்வது என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும் என நினைக்கிறேன்.
சுமார் 10 மாத இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எளிதான காரியம் அல்ல.
இந்தத் தொடரை இழப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். வீரர்கள் சிறப்பாகச் செயல்பட விரும்பினர் என்பதும் உண்மை.
ஆனால் நாங்கள் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தயாராக இல்லை. நாம் முன்னேற வேண்டுமானால் சில தோல்விகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.
அதில், முதல் படியாக நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க அணி முயற்சிக்க வேண்டும்.
முக்கிய விஷயம் என்னவென்றால், வேகப்பந்துவீச்சில் நமது பங்குகளை உருவாக்க வேண்டும். தொடர்ந்து சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடும் பந்துவீச்சாளர்களுக்கு ஊக்கமளித்து நிலையான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என வென்றது.
- டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் புள்ளிப் பட்டியலில் கடும் சரிவை சந்தித்தது.
துபாய்:
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 2-0 என வென்று முன்னிலையில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வங்கதேசம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் 8-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வங்கதேசம் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 6 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 74 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் இடத்திலும் உள்ளது.
டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற்ற இங்கிலாந்து கிடுகிடுவென முன்னேறி 5வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- இந்தியா 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களை வென்றுள்ளது.
- துப்பாக்கிச் சுடுதலில் இன்று அவனி லெகரா மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
இதன்மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று நடந்த பெண்கள் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா 7வது இடம் பிடித்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். இன்று இரவு இறுதிப்போட்டி நடைபெறுகிறது.
ஏற்கனவே, துப்பாக்கிச் சுடுதலில் பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அந்த மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
- நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தேதி மற்றும் நடைபெறும் இடம் பற்றிய தகவல்களை தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்-ஆஃப்ட் டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி துவங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஜூன் 16 ஆம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சவுதாம்ப்டன் மைதானத்திலும், 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டி ஓவல் மைதானத்திலும் நடைபெற்றன. இவற்றில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முறையே சாம்பியன் பட்டம் வென்று அசத்தின.
இரு பிரிவுகளில் முதல் இடத்தை பிடிக்கும் இரு அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. தற்போது இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இந்த இரு அணிகளைத் தொடர்ந்து நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
- 2வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் பாகிஸ்தான் 172 ரன்கள் எடுத்தது.
- வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்துசெய்யப்பட்டது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷான் மசூத், தொடக்க ஆட்டக்காரர் சயீம் அயூப் அரை சதம் கடந்தனர். ஷான் மசூத் 58 ரன்னிலும், சயீம் அயூப் 57 ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஆகா சல்மான் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார்.
வங்கதேசம் அணி சார்பில் மெஹிதி ஹசன் 5 விக்கெட்டும், தஸ்கின் அகமது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினர் துல்லியமாக பந்துவீசினர். இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 26 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து வங்கதேசம் திணறியது. அடுத்து இறங்கிய லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்து 138 ரன்னிலும், மெஹிதி ஹசன் 78 ரன்னிலும் அவுட்டாகினர்.
இறுதியில், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பாகிஸ்தான் சார்பில் குர்ரம் ஷசாத் 6 விக்கெட்டும், மீர் ஹம்சா, ஆகா சல்மான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
12 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆகா சல்மான் 47 ரன்னும், முகமது ரிஸ்வான் 43 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டும், நஹித் ரானா 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாகிர் ஹசன், ஷட்மன் இஸ்லாம் ஜோடி நிதானமாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்த நிலையில் ஜாகிர் ஹசன் 40 ரன்னில் வெளியேறினார். ஷட்மன் இஸ்லாம் 24 ரன்னிலும், கேப்டன் ஷண்டோ 38 ரன்னிலும், மொமினுல் ஹக் 34 ரன்னிலும் அவுட்டாகினர்.
முஷ்பிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், வங்கதேசம் 2-வது இன்னிங்சில் 185 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
- ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு தொடர்களில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை.
- இது மிகவும் நிண்ட இடைவெளி காலம் ஆகும். இந்த முறை இதை மாற்றுவோம்.
இந்தியா ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இரண்டு முறை விளையாடியுள்ளது. இரண்டு முறையும் தோல்வியை சந்தித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையை தொடர்ந்து இந்தியா இன்னும் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் உள்ளது. இந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது.
வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும் நிலையில், ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது.
ஏற்கனவே இதற்கு முன்னதாக இரண்டு தொடர்களை ஆஸ்திரேலியா மண்ணில் அடுத்தடுத்து வென்றுள்ளது. இந்த முறை தொடரை கைப்பற்றினால் 3-வது முறையாக, அதுவும் ஹாட்ரிக் ஆகும்.
ஆனால் இந்த முறை ஆஸ்திரேலியாதான் வெற்றி பெறும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் பார்டர்- கவாஸ்கர் டிராபிக்கான வாய்ப்பு 50-50 எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட் கம்மின்ஸ் கூறுகையில் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடுநிலையான கண்டிசனில் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் நிச்சயமாக நாங்கள் முன்னிலை பெற்றுள்ளோம். இரு அணிகளுக்கு இடையிலான தொடரின்போது எப்போதும் கடும் போட்டி நிலவும். நான் இந்த தொடரை வெல்வதற்கான வாய்ப்பை 50-50 என கருதுகிறேன். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் 10-க்கும் 10-ல் டிக் ஆக ஆர்வமாக உள்ளேன்.
ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு தொடர்களில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை. இது மிகவும் நிண்ட இடைவெளி காலம் ஆகும். இந்த முறை இதை மாற்றுவோம். நீண்ட காலம் எங்களுக்கு எதிராக விளையாடி அவர்கள் எங்களை வீழ்த்தியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதிராக நாங்கள் ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அதில் இருந்து நாங்கள் நம்பிக்கை பெறுவோம் " என்றார்.






