search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bodybuilding"

    • பாடிபில்டிங் அமைப்பு தொடக்க விழா நடந்தது.
    • அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி தாப்பா கார்டனில் பாடிபில்டிங்கின் சிவகங்கை மாவட்ட பிஸிக் அலையன்ஸ் தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் டாக்டர் பிரபு வரவேற்றார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார்.முன்னாள் மிஸ்டர் இந்தியா மற்றும் தமிழ்நாடு பிஸிக் அலை யன்ஸ் தலைவருமான பொன்னம்பலவாணன் முன்னிலை வகித்தார்.

    நடிகரும் பாடிபில்டிங் பயிற்சியாளருமான பரத்ராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.

    இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை பேசுகையில், விளையாட்டு வீரர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோரும் விளையாட்டு.மைதா னங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார்.

    மாவட்ட தலைவர் டாக்டர்.பிரபு பேசும்போது, பாடிபில்டிங்கில் உச்ச போட்டியான ஒலிம்பி யாவில் கலந்து கொள்வதற்கு முதல்படி இந்த மாவட்ட பிஸிக் அலையன்ஸ் அமைப்பாகும்.இதன்மூலம் மாவட்ட, மாநில, தேசிய, உலக போட்டிகளில் வீரர்கள் கலந்துகொள்ள முடியும்.சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடந்த பாடிபில்டிங் போட்டிகளை நமது மாவட்டத்திலும் வரும் காலங்களில நடத்துவோம்.இதன்மூலம் பாடிபில்டி ங்கில் அதிகளவு இளைஞர் களை கவர முடியும்.மேலும் பாடிபில்டிங் வீரர்களுக்கு அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

    தொழிலதிபர் பி.எல்.பி.பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.

    இதில் துணை தலைவர் ராமசாமி, பொருளாளர் காளிதாசன், சட்ட ஆலோசகர் கமல்தயாளன், தொழிலதிபர்கள் விசாலம் சிட்பண்ட்ஸ் உமாபதி, மகரிஷி கல்வி குழுமம் அஜய்யுக்தேஷ், ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், சூர்யா அரிசி ஆலை கணேஷ் கிருஷ்ணன், மூன்ஸ்டார் லெட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், மல்லீஸ் கிச்சன் திருப்பதி, கங்க அம்பரீஷ், உள்பட அலையன்ஸின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×