என் மலர்
நீங்கள் தேடியது "பாடிபில்டிங்"
- வாரத்திற்கு 2 முறை சிக்கன், மற்ற நாட்களில் மீன் எடுத்துக்கொள்ளலாம்!
- உடற்பயிற்சி செய்யும் பெண்கள் தினமும் 5 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம்!
தமிழகத்தில் பாடி பில்டிங்கில் கலக்கிவரும் துணிச்சல் மிக்க பெண்ணான ஷெனாஸ் பேகம் குறித்துதான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பின்னர் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஜிம்மில் சேர்ந்த ஷெனாஸ், எதிர்பாராத விதமாகத்தான் பாடி பில்டிங்கில் காலடி எடுத்து வைத்துள்ளார். பிறகு பாடி பில்டிங்கில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஷெனாஸ் பேகத்திற்கு இன்று அதுவே அடையாளமாக மாறிவிட்டது. ஷெனாஸ் பேகம், ராணி ஆன்லைனுக்கு அளித்துள்ள நேர்காணலின் ஒரு பகுதியை இங்கு காண்போம்...
பாடி பில்டிங் செய்யும் உங்களை மற்றவர்கள் வித்தியாசமாக பார்ப்பதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
இதில் எனக்கு பல அனுபவங்கள் உண்டு. பெரும்பாலானவர்கள் என்னை வித்தியாசமாகவே பார்ப்பார்கள். ஆனால் அதை எப்போதும் ஒரு நெகட்டிவாக நான் எடுத்துக்கொள்ளவே மாட்டேன். போட்டிகளின் சமயத்தில் தீவிரமாக டயட் இருக்கும்போது கொழுப்பு எல்லாம் இல்லாமல், இயல்பாகவே எனது முகம், கை எல்லாம் மாறுபடும். சாதாரண நாட்களில் இயல்பாக டயட் இருக்கும்போது அப்போது முகம் வேறுபடும். நம் ஊரில் பெண்கள் பலரும் என்ன நினைப்பார்கள் என்றால், புடவை கட்டிக்கொள்ள வேண்டும், உடல் மென்மையாக இருக்க வேண்டும் என்றுதான். பெண்களை மஸுல்ஸோடு பார்க்க விரும்பமாட்டார்கள். நான் பைக்கில் போகும்போது நிறையபேர், நீங்க பொண்ணா? பையனா? என சந்தேகமாகவே கேட்பார்கள். உங்களுக்கு எப்படி தசைகள் இப்படி இருக்கு? என கேட்பார்கள். அதை நான் பாசிட்டிவாகவே எடுத்துக்கொள்வேன்.
பாடி பில்டிங் செய்பவர்கள், சிக்கன் போன்றவற்றை பாதி வேகவைத்த நிலையில் சாப்பிடவேண்டும் என்பது உண்மையா?
சிக்கனே முதலில் சாப்பிடக்கூடாது. என்னிடம் பயிற்சி பெறுபவர்களிடம் நான் சொல்வது என்னவென்றால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டுமுறை மட்டும் சிக்கன் எடுத்துக் கொள்ளுங்கள். மற்ற நாட்கள் மீன் எடுத்துக் கொள்ளுங்கள் என்றுதான். மீன் உடலுக்கு மிகவும் நல்லது. சிக்கனில் புரோட்டீன் உள்ளது. பாடி பில்டர்களுக்கு ஒருநாளைக்கு இவ்வளவு புரோட்டீன் தேவை என்பதால் தினமும் சிக்கன் சாப்பிடுவோம். ஆனால் பாதி வேகவைத்த சிக்கனை சாப்பிடக்கூடாது. முழுமையாக வெந்திருக்க வேண்டும். எண்ணெய், மசாலா எல்லாம் இல்லாமல், வேகவைத்தது மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மீனைவிட சிக்கன் விலை குறைவாக இருக்கும். எனவே தினமும் மீன் எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் சிக்கன் எடுத்துக்கொள்வோம். அதேநேரம் சிக்கனில் மட்டும் புரோட்டீன் இல்லை. அதற்கு மாற்றாக காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ளலாம். முட்டை எடுத்துக் கொள்ளலாம். சிறுவர்கள் 3-4 முட்டைகள் ஒரு நாளைக்கு சாப்பிடலாம். பெண்கள் 5 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். 5 முட்டை எடுத்துக் கொள்ளும்போது 2 மட்டும் மஞ்சள் கருவுடன் எடுத்துக்கொண்டு, மற்ற மூன்றிலும் வெள்ளை பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். முட்டை மற்றும் தானியங்களில் புரோட்டீன் உள்ளது.
பாடி பில்டிங் குறித்து வீட்டில் இருப்பவர்களின் விருப்பம்?
நான் பாடி பில்டிங் செய்ய தொடங்கியபோது என் குழந்தைகள் சின்னப் பிள்ளைகள். இப்போது என் மகன் 12ஆம் வகுப்பு படிக்கிறான். மகள் 10ம் வகுப்பு. அவர்கள் எப்போதுமே என் பணியால் தாழ்வாக உணர்ந்ததில்லை. எனக்கு எப்போதும் சப்போர்ட் செய்வார்கள். பொதுவாகவே நமது ஊர்களில் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் இருக்கும். எங்கள் வீட்டில் முதலில் டிராக் பேண்ட், டி-சர்ட் போடவே அனுமதிக்கவில்லை. அவர்களை குறைசொல்ல முடியாது. காரணம் நமது கலாச்சாரம் அப்படி. மற்றவர்கள் என்னைப்பற்றி கேட்கும்போது அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது. பின் போகபோக புரிந்துகொண்டார்கள். முஸ்லிம் என்று இல்லை எந்த வீட்டிலும் பெண்கள் பிகினி உடை அணிந்து மேடையில் இருப்பதை குடும்பத்தினர் விரும்பமாட்டார்கள். ஆனால் பாடி பில்டிங்கிற்கான உடை அதுதான் என பின்னர் வீட்டில் புரிந்துகொண்டார்கள்.....
- பாடிபில்டிங் அமைப்பு தொடக்க விழா நடந்தது.
- அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
காரைக்குடி
காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி தாப்பா கார்டனில் பாடிபில்டிங்கின் சிவகங்கை மாவட்ட பிஸிக் அலையன்ஸ் தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட தலைவர் டாக்டர் பிரபு வரவேற்றார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமை தாங்கினார்.முன்னாள் மிஸ்டர் இந்தியா மற்றும் தமிழ்நாடு பிஸிக் அலை யன்ஸ் தலைவருமான பொன்னம்பலவாணன் முன்னிலை வகித்தார்.
நடிகரும் பாடிபில்டிங் பயிற்சியாளருமான பரத்ராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார்.
இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை பேசுகையில், விளையாட்டு வீரர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்தி ட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாவட்டந்தோரும் விளையாட்டு.மைதா னங்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றார்.
மாவட்ட தலைவர் டாக்டர்.பிரபு பேசும்போது, பாடிபில்டிங்கில் உச்ச போட்டியான ஒலிம்பி யாவில் கலந்து கொள்வதற்கு முதல்படி இந்த மாவட்ட பிஸிக் அலையன்ஸ் அமைப்பாகும்.இதன்மூலம் மாவட்ட, மாநில, தேசிய, உலக போட்டிகளில் வீரர்கள் கலந்துகொள்ள முடியும்.சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடந்த பாடிபில்டிங் போட்டிகளை நமது மாவட்டத்திலும் வரும் காலங்களில நடத்துவோம்.இதன்மூலம் பாடிபில்டி ங்கில் அதிகளவு இளைஞர் களை கவர முடியும்.மேலும் பாடிபில்டிங் வீரர்களுக்கு அரசு வேலைகளில் ஒதுக்கீடு வழங்க கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
தொழிலதிபர் பி.எல்.பி.பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.
இதில் துணை தலைவர் ராமசாமி, பொருளாளர் காளிதாசன், சட்ட ஆலோசகர் கமல்தயாளன், தொழிலதிபர்கள் விசாலம் சிட்பண்ட்ஸ் உமாபதி, மகரிஷி கல்வி குழுமம் அஜய்யுக்தேஷ், ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தர், சூர்யா அரிசி ஆலை கணேஷ் கிருஷ்ணன், மூன்ஸ்டார் லெட்சுமணன், எஸ்.எல்.பி பிரிண்டர்ஸ் சரவணன், நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், மல்லீஸ் கிச்சன் திருப்பதி, கங்க அம்பரீஷ், உள்பட அலையன்ஸின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் கார்த்திகேயன் கிருஷ்ணன் நன்றி கூறினார்.






