என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஸ்டப்ஸ் 106 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.
    • டோனி டி ஜோர்ஜி 141 ரன்களுடனும் டேவிட் பெடிங்காம் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஐடன் மார்க்ராம்- டோனி டி ஜோர்ஜி களமிறங்கினர். நிதானமாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 69 ரன்கள் குவித்தது. மார்க்ராம் 33 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து டோனி டி ஜோர்ஜி மற்றும் ஸ்டப்ஸ் ஜோடி வங்கதேச அணியின் பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு விளையாடினர். இதனால் இருவரும் சதம் அடித்து அசத்தினர். டெஸ்ட்டில் இருவருக்கும் இது முதல் சதம் ஆகும். ஸ்டப்ஸ் 106 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார்.

    இதனால் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் குவித்தது. டோனி டி ஜோர்ஜி 141 ரன்களுடனும் டேவிட் பெடிங்காம் 18 ரன்களுடன் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • பிரித்வி ஷா எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.
    • பிரித்வி ஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

    மும்பை:

    ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

    மும்பை அணியில் இடம் பெற்றிருந்த பிரித்வி ஷா அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அதிக எடையுடன் இருப்பதாலும், வலை பயிற்சியின் போது மெத்தனாக இருப்பதாகவும் கூறி அவரை அணியில் இருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், மும்பை அணியில் பிரித்வி ஷா நீக்கப்பட்ட முடிவை இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரஞ்சி அணியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதற்கு கலவையான காரணங்கள் செய்திகளாக காணப்படுகின்றன. ஒருவேளை அது அணுகுமுறை, நன்னடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டிருந்தால் அதை புரிந்து கொள்ளக்கூடியது. ஆனால் அவருடைய எடை காரணமாக நீக்கப்பட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

    ஏனெனில் அவரின் உடலில் 35 சதவீதம் கொழுப்பு இருப்பதாலேயே நீக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி பரிந்துரைக்கிறது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் ஆட்டத்தை நாம் பார்த்தோம்.

    அவருடைய உடல் எடை மற்றும் வடிவம் பற்றி பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் 150 ரன்கள் அடித்த அவர் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு பிட்னஸ், மெலிதான இடுப்பு மட்டுமே தேவையில்லை என்பதை காண்பித்தார். எனவே ஒரு வீரர் 150+ ரன்கள் அடித்தால் அல்லது ஒரு நாளில் 20 ஓவர் வீசினால் அதையே நாம் பிட்னஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பிரித்வி ஷா போன்ற உடலமைப்பை கொண்டுள்ள எத்தனை பேர் 379 ரன்கள் அடித்துள்ளார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றார்.
    • பாலோன் டி’ ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு தான் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

    கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள்.

    தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இவர்களுடைய பெயரும் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார்.

    பாலோன் டி' ஆர் விருதை இம்முறை வினிசியஸ் ஜூனியருக்கு கிடைக்கும் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால் வினிசியஸ்க்கு விருது இல்லை என தெரிய வந்தது ஆச்சரியத்தை எதிர்படுத்தியது. விருது அவருக்கு கிடைக்காததால் ரியல் மாட்ரிட் அணி நிர்வாகம், விழாவைப் புறக்கணித்தது.

    • பெங்கால் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது.
    • 2-வது போட்டியில் பெங்களுரூ-டெல்லி அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத்:

    11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-நடப்பு சாம்பியன் புனேரி பல்தான் அணிகள் மோதுகின்றன. பெங்கால் அணி 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி 32-29 என்ற கணக்கில் உ.பி. யை வென்றது. 34-39 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூரிடம் தோற்றது.

    புனே அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி அரியானா (35-25), பாட்னா (40-25), பெங்களுரூ (36-22) ஆகியவற்றை வீழ்த்தியது. தமிழ் தலைவாசிடம் (25-30) மட்டும் தோற்று இருந்தது.

    இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் பெங்களுரூ-டெல்லி அணிகள் மோதுகின்றன. பெங்களுரூ அணி தான் மோதிய 4 ஆட்டத்திலும் தோற்று உள்ளது. முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. டெல்லி அணி 3-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

    • இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்போது அவரது பெயர் கிடைக்கவில்லை.
    • விராட் கோலி என்னை பிளாக் செய்திருப்பார் என என்னால் நம்ப முடியவில்லை.

    சிட்னி:

    ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வருபவர் கிளென் மேக்ஸ்வெல். இவர் விராட் கோலியுடன் மிக நெருக்கமாக நட்பு கொண்டுள்ளவர்.

    சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கிளென் மேக்ஸ்வெல் பங்கேற்றார். அப்போது அவர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் தன்னை பிளாக் செய்தது குறித்து பேசியதாவது:

    நான் ஆர்.சி.பி. அணிக்கு வருவது உறுதியானதும் எனக்கு மெசேஜ் செய்து விராட் கோலிதான் முதலில் வரவேற்றார். பிறகு அவருடன் இணைந்து நான் முகாமில் பயிற்சி செய்தேன்.

    நாங்கள் கலந்து பேசுவதற்கு சிறப்பான நேரங்கள் அமைந்தது. பிறகு நான் அவரை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்ய தேடும்போது அவரது பெயர் கிடைக்கவில்லை. அதற்கு முன் அவரை பாலோ செய்ய எனக்கு தோன்றவில்லை.

    இன்ஸ்டாகிராமில் அவருடைய பெயரை நான் தேடி கிடைக்காதபோது, ஒருவர் என்னிடம் விராட் கோலி உங்களை பிளாக் செய்திருந்தால் மட்டுமே அவருடைய பெயரை நீங்கள் தேடும் பொழுது கிடைக்காது என கூறினார்.

    விராட் கோலி என்னை பிளாக் செய்திருப்பார் என என்னால் நம்ப முடியவில்லை.

    நான் இதை விராட் கோலியிடம் கேட்டபோது அதற்கு அவர், நீ டெஸ்ட் தொடரில் என்னிடம் கோபமாக நடந்துகொண்டாய். அதனால் உன்னை நான் இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருக்கலாம் என சொன்னார்.

    அது நியாயமான காரணம் என நினைத்தேன். அதன்பின், அவர் மீண்டும் என்னை அன்பிளாக் செய்துவிட்டார். அப்போதிலிருந்து நாங்கள் மீண்டும் நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம் என தெரிவித்தார்.

    • சீம், பவுன்ஸ், மூவ் என பந்து எந்த வகையில் சவால் கொடுத்தாலும் நான் எப்போதும் அதை விரும்புவேன்.
    • 30-க்கு 3, 20-க்கு 3 அல்லது 50-க்கு 3 என தத்தளித்த போதெல்லாம் நான் ரன்கள் குவித்துள்ளேன்.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ரகானே. குறிப்பாக வெளிநாடுகளில் வேகப்பந்து வீச்சை எளிதாக சமாளித்து ரன் சேர்க்கக் கூடியவர். இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் விரைவாக விக்கெட்டுகளை இழந்தாலும் தன்னுடைய சிறந்த ஆட்டத்தால் சவால்களை எதிர்கொண்டு அசத்தியவர்.

    கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர். விராட் கோலி முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் தொடரில் இருந்து சொந்த காரணமாக விலகினார். அதன்பின் அணியை வழிநடத்தி 2-1 என வெற்றி பெற வைத்தார்.

    எப்போதும் தனக்கு சவால் பிடிக்கும் என ரகானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரகானே கூறியிருப்பதாவது:-

    எங்கெல்லாம் அல்லது எப்போதெல்லாம் சாவல் ஏற்படுகிறதோ, அதை நான் விரும்புகிறேன். இந்திய அணி ஒரு கட்டத்தில் 30-க்கு 3, 20-க்கு 3 அல்லது 50-க்கு 3 என தத்தளித்த போதெல்லாம் நான் ரன்கள் குவித்துள்ளேன். அந்த இடத்தில் இருந்து அணி ஒரு கவுரமாக ஸ்கோரை எட்ட வேண்டிய நிலை அணிக்கு ஏற்பட்டுள்ளது. என்னுடைய கிரிக்கெட் வாழ்நாள் முழுவதும் அப்படிப்பட்ட சூழ்நிலையில் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.

    சீம், பவுன்ஸ், மூவ் என பந்து எந்த வகையில் சவால் கொடுத்தாலும் நான் எப்போதும் அதை விரும்புவேன்.

    இவ்வாறு ரகானே தெரிவித்துள்ளார்.

    85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரகானே 5077 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 38.46 ஆகும். 12 சதங்கள், 26 அரை சதங்கள் அடித்துள்ளார். தற்போதைய ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

    • 2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார்.
    • 2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்வதற்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி ஒரு அணி அதிகபட்சமாக தங்களது அணி யில் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.

    தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை இறுதி செய்து வருகின்றன.

    இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சுப்மன்கில் விலகுவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.

    அகமதாபாத் நகரை மையமாக கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி 2022-ம் ஆண்டு அறிமுகம் ஆன ஹர்திக்பாண்ட்யா தலைமையில் அறிமுக போட்டியில் அந்த அணி கோப்பையை வென்றது. 2023-ல் 2-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்.லில் ஹர்திக் பாண்ட்யா மும்பை அணிக்கு தாவினார்.

    இதனால் சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் குஜராத் அணி 'லீக்' சுற்றோடு வெளியேறியது.

    2025 ஐ.பி.எல். போட்டியில் சுப்மன்கில் தொடந்து கேப்டனாக நீடிக்கப்படுகிறார். குஜராத் அணி நிர்வாகம் அவரை தக்க வைத்துக் கொள்கிறது. இதே போல ரஷீத்கானும் அந்த அணியில் தக்க வைக்கப்படுகிறார்.

    இதற்கிடையே சுப்மன்கில் ஏலத்தில் வருவதற்கு மிக முக்கியமான அணிகள் விரும்புவதாக குஜராத் அணி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் குஜராத் அணியில் இருந்து வெளியேறலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையே லக்னோ அணி நிர்வாகம் நிக்கோலஸ் பூரண், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், மோஷின்கான், பதோனி ஆகிய 5 வீரர்களை தக்க வைத்துக் கொள்கிறது. ஒவ்வொருவரும் எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. 5 வீரர்களுக்கும் மொத்தம் ரூ.51 கோடி செலவழிக்கும் என்று தெரிகிறது.

    2025 ஐ.பி.எல்.லில் ஒவ்வொரு அணிக்கான மொத்த தொகை ரூ.120 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    லக்னோ அணியின் கேப்டனான கே.எல். ராகுலை தக்க வைத்துக் கொள்ள அந்த அணி நிர்வாகம் விரும்பவில்லை. ஒரு வேளை அவர் தேவைப்பட்டால் ஏலத்தில் ஆர்.டி.எம். கார்டை பயன்படுத்தி எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    • ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகம் ஆனார்.
    • 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியில் கடந்த 2011-ல் அறிமுகம் ஆன மேத்யூ வேட் 36 டெஸ்ட், 97 ஒருநாள், 92 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    கடைசியாக அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விளையாடினார்.

    ஓய்வு குறித்து மேத்யூ வேட் கூறியதாவது:-

    கடந்த டி20 உலகக் கோப்பையின் முடிவில் சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கான எனது நாட்கள் முடிந்துவிட்டதாக நான் முழுமையாக அறிந்தேன். என்னுடைய ஓய்வு மற்றும் பயற்சியாளர் பதவி உள்ளிட்டவைகள் குறித்து ஜார்ஜ் பெய்லி மற்றும் ஆண்ட்ரூ மெக்டொனால்டு ஆகியோரிடம் கடந்த ஆறு மாதங்களாக ஆலோசனை நடததி வந்தேன்.

    பயிற்சியாளர் என்பது எனது பார்வையில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது அந்த வாய்ப்பு அளித்ததற்கு நன்று தெரிவித்துக் கொள்கிறேன். பிக்பாஷ் உள்ளிட்ட பிரான்சிஸ் லீக் போட்டிகளில் விளையாடுவேன்.

    இவ்வாறு மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

    மேத் வேட் ஆஸ்திரேலிய அணியின் கோச்சிங் ஸ்டாஃப் ஆக பணியாற்ற இருக்கிறார்.

    • பெங்களூரு, புனே டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
    • இந்த இரண்டு போட்டிகளிலும் கேன் வில்லியம்சன் பங்கேற்காத நிலையில், 3-வது போட்டியிலும் விளையாடவில்லை.

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும்போது நியூசிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் காயம் அடைந்தார்.

    காயம் முழுமையாக குணமடையாததால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் களம் இறங்கவில்லை. 2-வது டெஸ்டில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புனேயில் நடைபெற்ற 2-வது டெஸ்டிலும் அவர் களம் இறங்கவில்லை.

    மும்பை வான்கடே மைதானத்தில் வருகிற 1-ந்தேதி 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் முழுவதும் கேன் வில்லியம்சன் இடம் பெறவில்லை.

    பெங்களூரு, புனே டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளதால் மும்பை வான்கடே போட்டியின் முடிவு அந்த அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

    அதேவேளையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மான்செஸ்டர் சிட்டி 4 முறை தொடர்ந்து பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணம்.
    • யூரோ கோப்பையில் ஸ்பெயின் இங்கிலாந்தை 2-1 என வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார்.

    கால்பந்து விளையாட்டில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதுகளில் ஒன்று பலோன் டி'ஆர் விருது. மெஸ்சி பார்சிலோனாவுக்கும், கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிய காலத்தில் இருவரும்தான் இந்த விருதை மாறிமாறி வாங்கியிருப்பார்கள்.

    அவர்கள் இருவருக்கிடையே கடும் போட்டி நிலவும். தற்போது மெஸ்சி அமெரிக்கா லீக்கில் விளையாடுகிறார். ரொனால்டோ சவுதி லீக்கில் விளையாடுகிறார். இந்த வருட விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இருவருடைய பெயரும் இடம் பெறவில்லை.

    இந்த நிலையில் இங்கிலீஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாடும் மிட் பீல்டர் ரோட்ரி பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். 2023-24 சீசனில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார். தொடர்ந்து நான்காவது முறையாக மான்செஸ்டர் சிட்டி இங்கிலீஷ் பிரீமியர் லீக்கை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

    2024 யூரோ கோப்பையில் தனது நாடான ஸ்பெயின் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 2-1 என ஸ்பெயின் வீழ்த்தியது. தொடரின் நாயகன் விருதையும் வென்றார். இந்த காலக்கட்டத்தில் 14 கோல்கள் அடிப்பதற்கு உதவி புரிந்துள்ளார். அதேவேளையில் 10 கோல்களும் அடித்துள்ளார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008-ல் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காக பலோன் டி'ஆர் விருதை வென்ற பிறகு இங்கிலீஷ் பிரீமியரில் விளையாடும் ஒரு வீரர் பலோன் டி'ஆர் விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

    • கேகேஆர் அணி தங்களுடைய முதல் வீரராக சுனில் நரைனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • ரசல் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    மும்பை:

    ஐபிஎல் 2025-ம் ஆண்டு மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த அணியில் இடம் பிடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் சற்று நாட்களில் தெரிந்துவிடும். வரும் அக்டோபர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்க போகிறார்கள் என்பதை அறிவித்து விடும்.

    அந்த வகையில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி மீதுதான் தற்போது அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது. கம்பீர் கொல்கத்தா அணியிலிருந்து தற்போது இந்திய அணிக்கு சென்றுள்ள நிலையில் கேகேஆர் அணியில் என்ன மாற்றம் நடக்கப்போகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

    இந்த சூழ்நிலையில் கேகேஆர் அணியில் முதல் வீரராக ரசல் தக்க வைக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் அவர் வேறு அணிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் கேகேஆர் அணி தங்களுடைய முதல் வீரராக சுனில் நரைனை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனையடுத்து ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா ஆகியோரை தக்கவைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மீது கேகேஆர் ஆர்வம் காட்டவில்லை. அவரை ஏலத்தில் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    முக்கியமாக வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் என நான்கு முக்கிய வீரர்களை தக்க வைத்துக்கொள்ள கேகேஆர் ஆர்வம் காட்டி வருகிறது.

    • மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் கியன்டியான்யியுடன் மோதினார்.
    • கியன்டியான்யி 11-8, 11-8, 12-10 என்ற செட் கணக்கில் மணிகா பத்ராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டின் மான்ட்பெல்லியர் நகரில் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில், உலகத் தரவரிசையில் 30-வது இடத்தில் உள்ள இந்தியாவின் மணிகா பத்ரா, சீனாவின் கியன் டியான்யியுடன் மோதினார்.

    இதில் கியன் டியான்யி 11-8, 11-8, 12-10 என்ற செட் கணக்கில் மணிகா பத்ராவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இந்தத் தொடரில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஜா அகுலா, முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினார்.

    ×