என் மலர்
விளையாட்டு
- சீனியர் பிரிவில் 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம்.
- மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 103 பதக்கங்கள் வென்றுள்ளது.
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் 25 மீ சென்டர் ஃபயர் (25m centre fire) பிரிவில் இந்திய வீரர் ராஜ்கன்வார் சிங் சந்து தங்கப் பதக்கம் வென்றார். அன்குர் மிட்டல் டபுள் ட்ரப் பிரிவில் தங்கம் வென்றார்.
பெண்களுக்கான டபுள் டிரப் பிரிவில் அனுஷ்கா பாதி (93 புள்ளி) தங்கம், பிரனில் இங்க்லே (89) வெள்ளி, ஹபீஸ் கான்ட்ரக்டர் (87) வெண்கல பதக்கம் வென்றனர். மூன்று பேரும் அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினர்.
சீனியர் பிரிவில் இந்தியா 14 தங்கம், 8 சில்வர், 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம் பிடித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது.
ஒட்டுமொத்தமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் (சீனியர், ஜூனியர், இளையோர்) மூன்று பிரிவுகளில் 103 பதக்கங்கள் வென்றனர்.
- இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.டபிள்யூ மூலம் கிடைத்தது.
- இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலம் கிடைத்தது.
துலீப் கிரிக்கெட் காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 405 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஆயுஷ் படோனி அதிகபட்சமாக 76 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் உத்கார்ஷ் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். ரியான் பராக் 39 ரன்கள் அடித்தார். விராட் சிங் 69 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 230 ரன்னில் சுருண்டது.
வடக்கு மண்டல பந்து வீச்சாளர் அக்யூப் நபி அபாரமாக பந்து வீசி தொடர்ச்சியாக கடைசி நான்கு விக்கெட்டுகளையும் 4 பந்தில் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இந்தியாவில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்திய 4ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். அக்யூப் நபி 10.1 ஓவர்கள் வீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார். ஆட்டத்தின் 53ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4, 5, மற்றும் 6ஆவது பந்தில் விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 57ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழத்தினார். இரண்டு விக்கெட்டுகள் போல்டு மூலமாகவம், இரண்டு விக்கெட்டுகள் எல்.பி.ட.பிள்யூ மூலமாகவும் கிடைத்தது. கிழக்கு மண்டலம் ஆல்அவுட் ஆனதும், இன்றைய 2ஆவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மற்றொரு காலிறுதியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டலம் 532 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வடகிழக்கு மண்டலம் இன்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்துள்ளது. வடக்கு மண்டல அணியின் டேனிஷ் மாலேவர் 203 ரன்கள் விளாசினார். ரஜத் படிதார் 125 ரன்களும், யாஷ் ரதோட் ஆட்டமிழக்காமல் 87 ரன்களும் எடுத்தனர்.
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இவருக்கு 28 வயதாகிறது. 29 முதல்தர போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 29 லிஸ்ட் ஏ போட்டிகளில் 42 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- The Hundred கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி வருகிற 31ஆம் தேதி நடக்கிறது.
- இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணிக்காக ஆடம் ஜம்பா விளையாட இருக்கிறார்.
இங்கிலாந்தில் 100 பந்து கொண்ட ஆண்களுக்கான "The Hundred" கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். ஒரு அணியுடன் மட்டும் 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். அந்த வகையில் ஓவல் இன்பின்சிபிள்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இறுதிப் போட்டி நாளைமறுதினம் நடக்கிறது. எலிமினேட்டர் சுற்றில் நார்தன் சூப்பர் சார்ஜர்ஸ்- டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன. புள்ளிகள் பட்டியில் 2ஆவது மற்றும் 3 ஆவது இடம் பிடித்த அணிகள் இதில் மோதுகின்றன.
இறுதிப் போட்டியில் மோதும் இன்பின்சிபிள்ஸ் (Oval Invincibles) அணியில் ஆடம் ஜம்பா இடம் பிடித்துள்ளார். இவர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடுவதற்காக சென்று விட்டார். தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார்.
அணி நிர்வாகம் இறுதிப் போட்டியில் விளையாட இவரை அழைத்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்திற்கு பறக்க உள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் சுமார் 34 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது. விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் 30 மணி நேரம் ஆகுமாம். இதனால் 20 பந்துகள் வீச ஆடம் ஜம்பா 34 ஆயிரம் கி.மீ. பறந்து செல்ல உள்ளார். இந்தத் தொடரில் ஒரு பந்து வீச்சாளர் 20 பந்துகள் மட்டுமே வீச முடியும்.
ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்குகிறது. ஒருவேளை முதல் போட்டியில் ஜம்பா விளையாடுவதாக இருந்தால், லண்டனில் இருந்து உடனடியாக நியூசிலாந்துக்கு செல்ல வேண்டியதாக இருக்கும்.
- போட்டி முடிந்த பிறகு ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்தை தாக்கினார்.
- ஹர்பஜன் சிங் மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது.
ஐபிஎல் டி20 லீக் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த நிலையில், வீரர்கள் பரஸ்பர கைக்கலுக்களில் ஈடுபட்டனர். அப்போது ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையே தகராறு ஏற்பட்டது. ஹர்பஜன் சிங் ஸ்ரீசந்த் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. சீனியர் வீரரான ஹர்பஜன் சிங் நடத்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் ஸ்ரீசந்த் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைந்தது தொடர்பான வீடியோ வெளியாகவில்லை. இந்த நிலையில் ஸ்ரீசந்த்-ஐ ஹர்பஜன் சிங் தாக்கும் வீடியோவை லலித் மோடி வெளியிட்டுள்ளார்.
2008ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும்- மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராகவும் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு ஹர்பஜன் சிங்- ஸ்ரீசந்த் இடையில் என்ன நடந்தது என்பது 17 வருடமாக யாரும் பார்க்கவில்லை. இன்று வரை பார்க்கவில்லை என லலித் மோடி அந்த சம்பவ வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அப்போது லலித் மோடி ஐபிஎல் போட்டிக்கான தலைவராக இருந்தார். இவர் பணமோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து தப்பியோடி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 637 கிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
- 2ஆவதாக கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் ரோகித் சர்மா. பந்துகளை அடிக்கடி சிக்சருக்கு பறக்க விடுவதால், இவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைக்கிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பேட்டர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். தற்போது வரை 637 சிக்சர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக உள்ள கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள்தான் அடித்துள்ளார்.
இந்த நிலையில், நீங்கள் சிக்சர் அடிக்க விரும்பும் பந்து வீச்சாளர் யார்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அனைவரது பந்திலும் சிக்ஸ் அடிக்க விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை தேர்வு செய்து அடிக்க வேண்டும் என்பது கிடையாது.
என்னுடைய மனநிலை எப்போதும் ஒரே மாதிரியான நிலையில்தான் இருக்கும். வரனும் சிக்ஸ் அடிக்கனும். இதுதான் என்னுடைய மனநிலை. யார் எனக்கு பந்து வீசுகிறார்கள் என்பது பெரிய விசயம் அல்ல" எனத் தெரிவித்து்ளளார்.
அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட இருக்கிறது.
- லோதா கமிட்டி பரிந்துரையின்படி கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- தொடர்ந்து 6 ஆண்டுகள் அல்லது இடைவெளி விட்டு 9 ஆண்டுகள் வரை பதவி வகிக்கலாம்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா துணைத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிகிறது.
லோதா கமிட்டி பரிந்துரையின்படி உச்சநீதிமன்றம் பிசிசிஐ உறுப்பினர்கள் தேர்வுக்கான விதிமுறைகளை வகித்துள்ளது. அதன்படிதான் பிசிசிஐ செயல்பட்டு வருகிறது. லோதா கமிட்டி பரிந்துரையின்படி 70 வயதிற்கு உட்பட்டோர் தேர்வு செய்யப்பட்டால், பதவிக்கான தகுதி காலம் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்.
மேலும், தொடர்ந்து 6 வருடங்கள் பதவியில் நீடிக்கலாம் அல்லது 9 ஆண்டுகள் இடைவெளி விட்டு பதவி வகிக்கலாம். 9 ஆண்டுகள் நிறைவடைந்தால் அவர்கள் பதவியை கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு ரோஜன் பின்னி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சராக Dream11 இருந்து வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் Dream11 அதன் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. இதனால் அடுத்த மாதம் 9ஆம் தேதி நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி ஜெர்சி ஸ்பான்சர் இல்லாமல் விளையாடும் எனத் தெரிகிறது.
- இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது.
- வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இத்தொடர் 20 ஓவர் போட்டி முறையில் நடக்கிறது.
இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய அணிகள் உள்ளன.
இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் 10-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதுகிது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி 4-ந்தேதி துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது. இதற்கு முன்பு வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி புறப்பட்டு செல்வார்கள்.
ஆனால் இந்த முறை சில வீரர்கள் மட்டும் துபாய்க்கு புறப்படுவார்கள். மற்ற வீரர்கள் அவர்கள் இடங்களில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு வருவார்கள். வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "அனைத்து வீரர்களும் 4-ந்தேதி மாலைக்குள் துபாய்க்கு வருவார்கள். முதல் வலைப்பயிற்சி 5-ந் தேதி ஐ.சி.சி அகாடமியில் நடைபெறும். பயண வசதியைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் அந்தந்த நகரங்களில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிலர் மும்பையில் இருந்து பயணம் செய்வார்கள்.
மற்றவர்களை மும்பைக்கு அழைத்து வந்து பின்னர் துபாய்க்கு செல்ல சொல்வது அர்த்தமற்றது. துபாய் என்பது மற்ற சர்வதேச விமானங்களுடன் ஒப்பிடும்போது ஒரு குறுகிய கால பயணமாகும். எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- செர்பியாவின் ஜோகோவிச் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டாவை 6-7 (5-7), 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் 3-வது சுற்றை எட்டுவது இது 75-வது முறையாகும். இது புதிய சாதனை ஆகும். இதற்கு முன்பு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 74 தடவை 3-வது சுற்றுக்கு வந்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் மேட்டியா பெலூசி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-1, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரின்னை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தில் நடைபெற்றது.
- இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
சூரிச்:
டயமண்ட் லீக் கோப்பைக்கான இறுதிச்சுற்று சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் இன்று நடைபெற்றது.
இதில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா களமிறங்கினார். இறுதிச்சுற்றில் ஜூலியன் வெபர், முன்னாள் உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஜூலியஸ் யெகோ மற்றும் கெஷோர்ன் வால்காட் ஆகியோர் களமிறங்கினர்.
இந்நிலையில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 2-வது இடம் பிடித்தார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.51 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார். டிரின்பாகோவைச் சேர்ந்த கெஷோர்ன் வால்காட் 3வது இடம் பிடித்தார்.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
- இந்தியாவின் சாதவிக் சிராக் ஜோடி 2வது சுற்றிலும் வெற்றி பெற்றது.
பாரிஸ்:
29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி, சீனாவின் லியனக் வெய் காங்-வாங் சாங் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 19-21 என முதல் செட்டை இழந்தது. இதில் சுதாரித்துக் கொண்ட சாத்விக் சிராக் ஜோடி அடுத்த இரு செட்களை 21-15, 21-17 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- பெலாரசின் சபலென்கா 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் பெலாரசின் சபலென்கா, ரஷியாவின் பொலினா குடர்மெடோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 6-3, 6-1 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் அன்னா போந்தாரை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.






