என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இந்திய இளைஞர் அணி,16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி கசகஸ்தானில் நடைபெற்றது.
    • இந்த நான்கு ஷூட்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியது.

    இந்திய இளைஞர் அணி, கசகஸ்தானில் நடைபெற்ற 16வது ஆசியன் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் அபார வெற்றி பெற்று, பல்வேறு பதக்கங்களை கைப்பற்றியது.

    டிராப் யூத் மகளிர் தனிநபர் பிரிவு

    தனிஷ்கா – தங்கப் பதக்கம்

    நிலா ராஜா பாலு – வெள்ளிப் பதக்கம்

    அந்த்ரா ராஜ்சேகர் – வெண்கலப் பதக்கம்

    டிராப் யூத் மகளிர் அணி – தங்கப் பதக்கம்

    டிராப் யூத் ஆண்கள் தனிநபர் பிரிவு

    யுகன் S M – தங்கப் பதக்கம்

    டிராப் யூத் ஆண்கள் அணி – தங்கப் பதக்கம்

    இந்த வெற்றியின் சிறப்பம்சம், இந்த நான்கு ஷூட்டர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியது.

    மேலும், நிலா, தமிழ்நாடு மாநில அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி. ராஜா அவர்களின் மகள்.

    அந்த்ரா ராஜ்சேகர், பிரபல தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் அவர்களின் மகள்.

    இளம் வீரர்கள் பெற்ற இந்த அற்புத சாதனை, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.

    • சீனா வீராங்கனையுடன் இதுவரை 5 முறை மோதி 3-ல் வெற்றி பெற்றுள்ளார்.
    • காலிறுதியில் இந்தோனேசியா வீராங்கனையை எதிர்கொள்கிறார்.

    உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரவரிசையில் 15ஆவது இடம்) உலகத் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ள சீனாவின் வாங் ஜி யி-யை எதிர்கொண்டார்.

    இதில் பி.வி. சிந்து 21-19, 21-15 என எளிதாக வெற்றி பெற்றார். இருவரும் நேருக்குநேர் மோதியதில் பி.வி. சிந்து 3-2 என வெற்றி பெற்றுள்ளார்.

    30 வயதான பி.வி. சிந்து காலிறுதியில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உலகத் தரவரிசையில் 9ஆவது இடத்தில் இருக்கும் புத்ரி குசுமா வர்தானியை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் உலக சாம்பியன்ஷிப்பில் 6 பதக்கம் வென்றவர் என்ற சாதனையை சமன் செய்வார்.

    இந்தியாவின் துருவ் கபிலா- தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-11, 21-16 என அயர்லாந்து ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது.
    • முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கி செப்டம்பர் 7ஆம் தேதி வரை நடக்கிறது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் "ஏ" பிரிவில் இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன.

    இந்த போட்டிக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன.

    இத்தொடர் நாளை தொடங்கி 7ஆம் தேதி வரை நடக்கிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும். முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். போட்டிகள் அனைத்தும் சார்ஜாவில் நடத்தப்பட இருக்கின்றன.

    முத்தரப்பு தொடர் நாளை தொடங்கும் நிலையில், மூன்று அணிகளின் கேப்டன்களான முகமது வாசீம், சல்மான் ஆகா, ரஷித் கான் ஆகியோர் கோப்பையுடன் போஸ் கொடுத்துள்ளனர்.

    • மத்திய மண்டலம் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.
    • வடக்கு மண்டலம் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்துள்ளது.

    துலீப் டிராபி காலிறுதி போட்டிகள் இன்று தொடங்கின. பெங்களூருவில் நடைபெற்று வரும் ஒரு காலிறுதி போட்டியில் மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மத்திய மண்டல அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஆயுஷ் பாண்டே 3 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஆர்யன் ஜுயல் 60 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து டேனிஷ் மாலேவார் உடன் கேப்டன் ரஜத் படிதார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரஜத் படிதார் 96 பந்தில் 21 பவுண்டரி, 3 சிக்சருடன் 125 ரன்கள் விளாசினார். மறுமுனையில் விளையாடிய டேனிஸ் வாலேவார் சதம் அடித்ததுடன், இரட்டை சதம் நோக்கி முன்னேறினார். அவர் 219 பந்தில் 198 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அவருடைய ஸ்கோரில் 35 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். முதல்நாள் ஆட்ட முடிவில் மத்திய மண்டலம் 2 விக்கெட் இழப்பிற்கு 432 ரன்கள் குவித்துள்ளது.

    பெங்களூருவில் நடைபெற்று வரும் மற்றொரு காலிறுதியில் வடக்கு மண்டலம்- கிழக்க மண்டலம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    வடக்கு மண்டல அணி வீரர்கள் அதிக ரன்கள் குவிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் ரன்கள் சேர்த்தனர். அதேவேளையில் விக்கெட்டுகளையும் இழந்தனர்.

    ஷுபம் கஜூரியா 26 ரன்களும், அன்கித் குமார் 30 ரன்களும், யாஷ் துல் 39 ரன்களும், ஆயுஷ் படோனி 68 ரன்களும், நிஷாந்த் சிந்து 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். வடக்கு மண்டலம் 75.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீடு செய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறை இத்துடன் முதல்நாள் ஆட்ட நிறைவடைய வாய்ப்புள்ளது. கணையா வதாவன் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். கிழக்கு மண்டலம் அணி சார்பில் மணிஷி 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    • துலீப் டிராபி காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின.
    • பிசிசிஐ இப்போட்டிகளை டெலிகாஸ்ட் செய்யாததால் ரசிகர்கள் ஆதங்கம்.

    இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் முதல்-தர போட்டியான ரஞ்சி டிராபிக்குப் பிறகு மிகப்பெரிய போட்டியாக தூலீப் டிராபி பார்க்கப்படுகிறது. இதில் இந்திய அணியில் விளையாடும் முன்னணி வீரர்கள் கலந்து கொள்வார்கள்.

    வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு மண்டலம், வடக்கு மண்டலம் என 6 அணிகளாக இதில் பங்கேற்றுள்ளன.

    வடக்கு மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், வடக்கு மண்டலம்- கிழக்கு மண்டலம், மத்திய மண்டலம்- வடகிழக்கு மண்டலம் இடையிலான காலிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது.

    4 நாட்கள் கொண்ட இந்த போட்டிகளை ரசிகர்கள் பார்க்க விரும்பின. ஆனால் பிசிசிஐ போட்டிகளை லைவ்-ஸ்ட்ரீம் செய்யவில்லை. மேலும் ஒளிப்பரப்பும் செய்யவில்லை.

    பணக்கார கிரிக்கெட் வாரியமாக விளங்கும் பிசிசிஐ-யால், உள்நாட்டின் முக்கிய போட்டிகளை ஒளிபரப்ப முடியவில்லையா? என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    ஒரு ரசிகர், துலீப் டிராபி காலிறுதி போடடிகள் டெலிகாஸ்ட் செய்யப்படவில்லை. பிசிசிஐ-யிடம் இருந்து மீண்டும் ஒருமுறை அவமானகரமான செயல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு ரசிகர், உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழும் பிசிசிஐ-யால் முக்கியமான உள்ளூர் தொடர்களை டெலிகாஸ்ட் கூட செய்ய முடியவில்லை என கடிந்துள்ளார்.

    தற்போதைய காலக்கட்டத்தில் சிறிய வகையிலான டென்னிஸ் பால் தொடர் கூட லைவ் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு முதன்மையான முதல் தரப் போட்டியான துலீப் டிராபியை பிசிசிஐ ஒளிபரப்பாதது மூர்க்கத்தனமானது. உண்மையிலேயே மோசமானது என இன்னொரு ரசிகர் விமர்சித்துள்ளார்.

    • ரம்ஜான் மாதத்தின்போது நடைபெற்ற போட்டியின்போது, எனர்ஜிக்காக பானம் அருந்தியதை ரசிகர்கள் விமர்சித்தினர்.
    • சமூக வலைத்தளங்களில் வெறுப்பு கருத்துகளை பதிவிட்டதுடன், ட்ரோல் செய்து வந்தனர்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின், சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது. அப்போது ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    ஆனால், முகமது ஷமி போட்டியின்போது எனர்ஜிக் பானம் அருந்தினார். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முகமது ஷமி, நோன்பு நேரத்தின்போது எப்படி பானம் அருந்தலாம் என இணைய தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தினர். அவருக்கு எதிராக வெறுப்பு கருத்து பதிவிட்டு, ட்ரோல் செய்தனர்.

    இதை தான் எப்படி எதிர்கொண்டேன் என்பது முகமது ஷமி விவரித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-

    நாங்கள் 42 அல்லது 45 டிகிரி வெயில் வெப்பத்தில் விளையாடி கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களை தியாகம் செய்கிறோம். நாட்டிற்காக ஏதாவது செய்தல் அல்லது பயணம் போன்றவைகளுக்கு, எங்களுடைய சட்டத்தில் (இஸ்லாம்) விதிவிலக்கு உள்ளது. இந்த விசயங்களை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் மற்றும் மக்கள் மற்றவர்களை முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அந்த நபர் என்ன செய்கிறார், யாருக்காக செய்கிறார் என்பதையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    நமது சட்டம் கூட சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. அதற்காக நாம் அபராதம் செலுத்தலாம் அல்லது பின்னர் அதற்கு ஈடுசெய்யலாம். அதை நான் செய்தேன்.

    சிலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள, இதுபோன்ற விசயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள். நான் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் படிப்பதில்லை. என்னுடைய குழு எனது கணக்குகளை நிர்வகிக்கிறது.

    இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    • முதல் சுற்றில் பிரான்ஸ் வீரரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    • ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார்.

    2025ஆம் ஆண்டுக்கான கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் கடந்த 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்றில் 13ஆம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ், தரநிலை பெறாத பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெஞ்சமின் போன்சியை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பெஞ்சமின் போன்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மெட்வெதேவ் ஐந்து செட் வரை மல்லுக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது.

    மல்லுக்கட்டியும் பயனில்லை. 3-6, 5-7, 7(7)-6(5), 6-0, 4-6 என தோல்வியடைந்தார்.

    3ஆவது செட் டைபிரேக்கர் வரை சென்றது. டை பிரேக்கரில் மேட்ச் பாயின்ட் 5-4 என இருந்தபோது மைதானத்திற்குள் (Court) போட்டோகிராபர் வந்தார். இதனால் மெட்வெதேவ் கடும் கோபம் அடைந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டார்.

    தோல்வியடைந்த பின்னர் ராக்கெட்டை சேரில் அடித்து உடைத்தார். மெட்வெதேவின் செயல் போட்டியை நேரில் பார்த்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போட்டி முடிந்த பின்னர், கடுமையான அபராதத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறேன் என மெட்வெதேவ் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மெட்வெதேவுக்கு 42,500 டாலர் அபராதமாக விதித்துள்ளது. இது இந்திய பண மதிப்பில் 37.24 லட்சம் ரூபாய் ஆகும். ஒழுங்கீனமாக நடந்ததற்காக 30 ஆயிரம் டாலரும், சேரில் அடித்து ராக்கெட்டை உடைத்ததற்காக 12,500 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர் முதல் சுற்றுக்காக வாங்கிய சம்பளத்தின் 40 சதவீதம் ஆகும்.

    • சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதால் பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
    • சஞ்சு சாம்சன் இடம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது விமர்சகர்கள் கருத்து.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ளது. இதே பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான், ஓமன் அணிகள் இடம் பிடித்துள்ளன. இந்தியா முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை செப்டம்பர் 10ஆம் தேதி எதிர்கொள்கிறது.

    இந்திய அணி கடந்த 19ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டதற்கு கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக், மூன்று வீரர்கள் இந்திய அணிக்கு கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். அதில் சுப்மன் கில் பெயர் இடம் பெறவில்லை.

    இது தொடர்பாக சேவாக் கூறியதாவது:-

    அபிஷேக் சர்மா கேம் கேஞ்சராக இருக்க முடியும் என நினைக்கிறேன். பும்ரா எப்போதும் கேம் சேஞ்சர்தான். பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி, அவருடைய மந்திர (mystery) பந்து வீச்சால் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 வடிவில் மிகவும் பயனுள்ளவராக இருந்தார். ஆகவே, இவர்கள் தொடரை வெல்ல முக்கிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்.

    பந்து வீச்சாளர்கள் என வரும்போது பணிச்சுமை என்பது முக்கியமானது என நினைக்கிறேன். பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில் பணிச்சுமை (Workload) என்பது பிரச்சினை இல்லை. ஏனென்றால் அவர்களால் விளையாட முடியும், அதிகப்படியான போட்டிகளில் விளையாட வேண்டியதில்லை. எனவே, இது முக்கியமாக பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியமானது என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு சேவாக் தெரிவித்துள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் அய்யருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. சுப்மன் கில் துணைக் கேப்டனாக இடம் பிடித்துள்ளதால், சஞ்சு சாம்சனின் தொடக்க வீரர் இடம் பறிபோக வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம்.
    • ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது.

    அண்மையில் நடந்து முடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது.

    ஐ.பி.எல். தொடர் அறிமுகமான கடந்த 2008-ம் ஆண்டு முதல் விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ஆண்டுகள் ஏக்கமான கோப்பையை இத்தொடரில் கைப்பற்றி அசத்தியது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவத்திற்கு ஆர்சிபி அணியின் நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசின் பொறுப்பற்ற நிர்வாகமே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

    இந்த சோக சம்பவத்துக்கு பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவித பதிவும் போடாமல் இருந்தது.

    இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இன்று ஒரு அறிக்கையை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் கடைசியாக இங்கு பதிவிட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிறது. மௌனம் என்பது இல்லாமை அல்ல. அது துக்கம். இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிரம்பியிருந்தது.

    ஆனால் ஜூன் 4 ஆம் தேதி எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது. அன்றிலிருந்து மௌனம் எங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் வழியாக இருந்து வருகிறது. அந்த மௌனத்தில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்டல், கற்றல், மெதுவாக, வெறும் பதிலை விட வேறு ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்று.

    அப்படித்தான் RCB CARES உருவானது. இது எங்கள் ரசிகர்களுடன் இருக்கவும், கவுரவிக்கவும், குணப்படுத்தவும், அர்த்தமுள்ள செயலுக்காக எங்கள் சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மேடை. நாங்கள் இன்று இந்த இடத்திற்கு மகிழ்ச்சியுடன் திரும்பவில்லை. ஆனால் அக்கறையுடன் திரும்புகிறோம். உங்களுடன் பகிர்ந்து கொள்ள, ஒன்றாக நிற்க... ஒன்றாக முன்னேற... கர்நாடகாவின் பெருமையாக தொடர ஆர்.சி.பி கேர்ஸ். எப்போதும் அப்படியே இருக்கும். விரைவில் மேலும் விவரங்கள்... என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது.
    • இதில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார். ரோகித் சர்மா, விராட் கோலி 2 மற்றும் 4-வது இடத்தில் நீடிக்கின்றனர்.

    சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (669 புள்ளி 11வது இடத்திலும், மிட்சல் மார்ஷ் 44வது இடத்திலும் உள்ளார்.

    அதிரடியாக சதமடித்த கேமரூன் கிரீன் கிடுகிடுவென 40 இடங்கள் முன்னேறி 78வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 650 புள்ளியுடன் 3வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 616 புள்ளியுடன் 9-வது இடத்திலும் உள்ளனர்.

    முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் நீடிக்கிறார். இலங்கையின் மகேஷ் தீக்ஷனாவும் முதல் இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
    • அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    நியூயார்க்:

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் சஜாரி ஸ்வஜ்டா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-6, 7-6 (7-3), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் லாய்டு ஹாரிசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    பாரிஸ்:

    29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, மலேசியாவின் லெச்சனா கருப்பதேவன் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

    ×